Saturday, November 17, 2012

பாரதிராஜாவா இப்படி?


புரட்சி இயக்குநர் என்று திராவிடர் கழகத்தால் புரட்சிக் கவிஞர் விழாவில் பட்டம் அளிக்கப்பட்ட பாரதிராஜா அவர் களின் பேட்டி ஒன்று (ஆனந்தவிகடன் 14.11.2012) ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. புருவத்தை நெளியவும் வைத்தது.
என்ன ஆனார் நமது பாரதிராஜா என்ற கேள்வியும் செங்குத்தாக எழுந்தது.
வைகோ ஒரு அற்புதமான பேச்சாளி, இலக்கியவாதி, அறிவாளி. அவர்கிட்ட நான் கேக்கறது ஒண்ணே ஒண்ணுதான். திராவிடம்... திராவிடம்னு பேசி தமிழ்நாட்டை அழிச்சது போதும். ஒரு தமிழனா மாறுங்க... திராவிடம்னா அதைத் திருவனந்தபுரத்துலயோ, பெங்களூ ருலயோ, ஹைதராபாத்லயோ நின்னு பேச வேண்டியது தானே? எதுக்கு தமிழ் நாட்டுல மட்டும் பேசறீங்க? எவனாவது ஒரு தமிழன் மற்ற மாநிலங்கள் எதை யாவது ஆள முடியுமா? தமிழ்நாட்டை தமிழன்தான்யா ஆளணும்... நான் பிறந்து வளர்ந்த இந்த மண்ணுக்காகத்தான் நான் பேசறேன். வைகோ தமிழன்தானே... அப்புறம் ஏன் தன் கட்சி பேர்ல திராவிடத்தை வெச்சுக்கணும்? அதை மாத்தச் சொல்லுங்க.. திராவிடன் பிராமண எதிர்ப்புனு சொல்லி ஊரை ஏமாத்துனது போதும். பிராமணனும் தமிழன்தானே? அவன் தமிழ் தானே பேசறான்? பார்ப் பனீய எதிர்ப்புனு சொல்லி இன்னமும் ஏமாத்தாதீங்க. இதனால, கலைஞர் கோவிச்சுக்கிட்டாலும் பரவாயில்லை. அவருக்கு இதுல உள்ள நியாயம் புரியும். அவர் என்னை விமர்சித்தால் விமர்சிக் கட்டும். ஆனால், நான் பின்வாங்க மாட்டேன். நான் திராவிடத்துக்கு எதிரி தான், எனக்குத் தமிழன்தான் முக்கியம்
(ஆனந்தவிகடன் 14.11.2012 பக்கம் 177-_178)
பாரதிராஜாவின் இந்தப் பேட்டிதான் ஆச்சரியத்தையும் தூண்டியது....
பொதுவாக தமிழனுக்குப் பணமும், பக்தியும் வந்தால் எதிரி கால்களைத் தேடு வான் என்று சொன்னார் தந்தை பெரியார்.
இப்பொழுது பாரதி ராஜாவுக்கு என்ன வந்தது? என்ன சேர்ந்தது என்றும் தெரியவில்லை. ஒரு நிகழ்ச்சியை நினை வூட்டினால் நமத்துப் போன பாரதிராஜா வின் சிந்தனை கொஞ்சம் சூடேற வாய்ப்புண்டு.
வேதம் புதிது என்ற மிகச் சிறப்பான படம் ஒன்றைத் தயாரித்தார் பாரதிராஜா.
ஆனால் அந்தப் படத்தை வெளியிடு வதில் தடங்கல்; படம் ஒன்றை எடுத்து உரிய காலத்தில் அதனைத் திரையிட வில்லையென்றால் தயாரிப்பாளன் நெற்றியில் நாமம்தானே.
படத்தில் பார்ப்பான் ஒருவன் பூணூலை அறுத்து எறிவது போன்ற காட்சி, ஆச்சாரமான அய்யர் குடும்பத்தில் பிறந்த ஒரு சிறுவன், தோப்பனார் இறந்த பிறகு தேவர் குடும்பத்தில் வளரும் சூழல்.
தேவர் வேடத்தில் நடித்த சத்யராஜ் சக்கைப் போடு போட்டார். நக்கல் ஏகடி யம் எல்லாம் உண்டு.
பார்ப்பனர்கள் வட்டாரத்திலே சல சலப்பு! அப்பொழுது குடியரசு தலைவரோ பட்டுக்கோட்டை ஆர். வெங்கட்ராமய்யர்; முதல் அமைச்சரோ எம்.ஜி.ஆர். அவர்கள்.
முதல் அமைச்சரின் கதவைத் தட்டினார்கள். முதல் அமைச்சர் எந்தத் துருப்பைப் பயன்படுத்தினார், குடியரசு தலைவரிடம் தெரியுமா?
இந்தப் படத்தை உடனடியாகத் திரையிட அனுமதிக்காவிட்டால், பிரச் சினையை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கையிலே எடுத்துக் கொள் வதாக இருக்கிறார் என்று போட்டாரே ஒரு போடு! அப்புறம் என்ன? வேதம் புதிது திரையரங்குகளில் ஓட ஆரம்பித்து விட்டது.
இவை எல்லாம் மாஜி ராஜாக்களுக்கு வசதியாக மறந்து போய் விட்டதா? இப்பொழுது அவாளின் நேசமும், பாசமும் இரட்டைக் குதிரைகளாக வாசலில் வந்து நிற்கிறதா?
டி.வி. நேஷனல் புரோகிராமில் முதல் மரியாதை இடம் பெறுவதாகப் பரவலாகப் பேசப்பட்டு, பிறகு அது இடம் பெறாமல் போய் விட்டது. இதுகுறித்துப் பலர் பலவிதமாகக் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். ஏன் இடம் பெறவில்லை என்பது எனக்கும் புரியாத மர்மம். டி.வி.யில் முதல் மரியாதையைப் போடப் போவதாகத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு என்னுடைய இண்டர்வூவியூ வேண்டும் என்று சொல்லி ஸ்ரீ வித்யாவைக் கொண்டு என்னை ஒரு இண்டர் வியூவும் எடுத்தார்கள். குறிப்பிடப்பிட்டி ருந்த தேதியில் முதல் மரியாதை ஒளிபரப்பாகவில்லை. விசாரித்தேன். படத்தை இரண்டு மணி நேரத்திற்குக் குறைக்க வேண்டியிருப்பதாகச் சொன் னார்கள். படத்தில் நீங்கள் கை வைத்து விட வேண்டாம். நானே குறைத்துத் தருகிறேன் என்று படத்தைத் தருவித்து, நானே இரண்டு மணி நேரத்துக்கு எடிட் பண்ணிக் குறைத்துக் கொடுத்தேன். மறுபடியும் குறிப்பிட்ட தேதியில் படம் ஒளிபரப்பாகவில்லை.
என்ன காரணம் என்று கேட்டுப் பார்த்ததில், நீங்க மேலே போய் ட்ரை பண்ணுங்க சார் என்று சொன்னார்கள். இங்கே இருக்கிறவர்கள்தான் அப்படிச் சொன் னார்கள். ட்ரை பண்ணுங்கள் என்றால் எப்படி? எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்னவோ லாபியாம். அப்படியெல்லாம் போக நான் விரும்பவில்லை; அது எனக்கு அவசியமும் இல்லை.
(தமிழ்நாடு திரைப்படப் பத்திரிக் கையாளர் சங்கத்தில் நடைபெற்ற கலந் துரையாடலில் பாரதிராஜா உதிர்த்த சில கருத்துக்கள்)
வெள்ளிமணி (தினமணி இணைப்பு) 9.1.1987 பக்கம் 2
இன்னொரு சேதியும் உண்டு.  அது என்னவாம்? பாரதிராஜா பூடக மாகச் சொன்னாரே - அந்த லாபி என்பது என்ன? சங்கராச்சாரியார் வரை வால் நீண்டு கொண்டு போகுமே - அந்த அக்ரகார லாபிபற்றி எப்படி எல்லாம் அவருக்கே உரித்தான முறையில் பற்களை நறநற என்று கடித்து இருப்பார்? - இவையெல்லாம் மறந்து போயிற்றா?
இன்றைக்குத் தமிழர்களுக்கு வந்த வாழ்வெல்லாம் தந்தை பெரியாரும் திராவிடர் இயக்கமும் ஊட்டி வளர்த்த பார்ப்பன எதிர்ப்புதான் என்பதை மறந்து விடலாமா?
பார்ப்பன எதிர்ப்பு என்னும் பாம்பின் நச்சுக்கடிக்கு ஆளாவது பெரியாரும் - திரா விடர் இயக்கமும்; அவற்றின் பலனைக் கூசாமல் நெளியாமல் அனுபவிப்ப வர்களோ பாரதிராஜா உள்ளிட்ட பார்ப்பனர் அல்லாதார் என்பதை மறந்து விட்டால் அதன் பொருள் பார்ப்பனப் போதை அவர்களின் தலையில் ஏறி விட்டதுதான் பழசை மறந்து விட்டதுதான்!
பாரதிராஜா என்ன சொல்லுகிறார்?
திராவிடன், பிராமணன் எதிர்ப்புனு சொல்லி ஊரை ஏமாத்தினது போதும்; பிரா மணனும் தமிழன்தானே? அவன் தமிழ்தானே பேசறான்? பார்ப்பனீய எதிர்ப்புனு சொல்லி இன்னமும் ஏமாத்தா தீங்க - என்று வரலாற்று அறிஞர் பாரதி ராஜாவே கூறி விட்டார். நம்ப வேண்டியது தான்.
இவர் கூற்றுப்படி தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்ற நம்மினத் தலைவர்கள் ஏமாத்துக்காரர்கள் என்று சொல்லும் பொழுது பார்ப்பனர்களுக்குப் பால் பாயாசம் சாப்பிட்டது மாதிரி இருக் கும். இப்படி சொன்னதற்காக பாரதி ராஜாக் களுக்கு ஆழ்வார் பட்டம் கிடைத்தாலும் கிடைக்கக் கூடும்.
மலம் எடுப்பவர்களுக்கு அதன் வாடை மரத்து விட்டது போல. ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலமாக சூத்திர இழிவில் மூழ்கிக் கிடந்தவர்களுக்கு அந்த இழிவு என்பது ருசியாகக்கூட இருக்கும்.
ஈரோட்டிலே இன்றைக்கு 73 ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் யோக்கியதையை எடுத்துச் சொன்னார் தந்தை பெரியார் (11.11.1939 அன்று)
இன்று பார்ப்பன விஷ நோய் நம் நாட்டில் பெருகியதற்கும் நம் மக்கள் அதற்குப் பலியாவதற்கும் காரணம் பார்ப்பனர்கள் அல்ல; நாம்தான்; நம் முடைய அறிவீனம் என்ற அசுத்தத் தால் அந்நோய்க்கு ஆதாரமான பூச்சியை வளர்த்துக் கொண்டோம். அந்த அசுத்தம்தான் தமிழன் ஆரியப் பார்ப்பன மதத்தைத் தழுவியதாகும்.
தமிழன் என்று ஆரிய மதமாற்றம் அடைந்தானோ ஆரியனை (பார்ப் பானை) தமிழன் என்று தன்னுடைய நாட்டான் என்று கருதினானோ, அன்றே தமிழனுக்கு உள மாற்றமும் பிளேக்கும் ஏற்பட்டு விட்டன. அன்று முதலே தமிழனுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மானமும் வீரமும், அறிவும், ஆற்றலும் அடியோடு அழிந்து ஆரியனுக்கு தமிழன் ஆண் பெண் அடங்கலும் உண்மை வைப் பாட்டி மக்கள் ஆக இருக்கும்படி மத ஆதாரங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆதாரங்களே தமிழனுக்கு அரசியல் சட்டமாகவும் ஆயின என்று ஈரோட்டிலே இனவுணர்வுடன் சுட்டிக் காட்டினார். ஈரோட்டு ஏந்தல் (11.11.1939).
எப்பொழுது பாரதிராஜா வாயால் பிராமணன் என்று வந்ததோ, அந்தக் கணமே தன்னை சூத்திரன் என்று ஒப்புக் கொண்டு விட்டார் என்று பொருள்.
தமிழர்களே உங்கள் சூத்திரப் பட்டம் ஒழிய பார்ப்பானைப் பிராமணன் என்று அழைக்காதே! என்று தந்தை பெரியார் அவர்கள் எச்சரித்தது என்ன விளை யாட்டா?
பார்ப்பான் தமிழ் பேசுகிறானாம் - அதனால் அவன் தமிழனாம்.
அறிஞர் அண்ணா தான் மிக அழகாகச் சொன்னார். ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்திரி ஆங்கிலேயர்களைவிட அழகாக ஆங்கிலம் பேசுவார் -அவரை சில்வர் டங்க் சீனிவாசய்யர் என்று கூடச் சொல்லுவதுண்டு - அதற்காக அவர் என்ன ஆங்கிலேயர் ஆகி விட்டாரா? என்று கேட்டதைத்தான் மெத்த படித்த பாரதிராஜா அவர்களுக்கு நினைவூட்டு கிறோம்.
பாரதிராஜாக்களை கேட்கிறோம். நெடுஞ்செழியன் என்றும், கரிகாலன் என்றும், அறிவுடை நம்பி என்றும், அன்பழகன் என்றும், அறிவழகன் என்றும், எழிலரசன் என்றும், குலோத் துங்கன், தமிழரசன் என்றும், தமிழில் பெயர் சூட்டிக் கொண்டுள்ள ஒரே ஒரு பார்ப்பானைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம்.
வேண்மா என்றும், தமிழ்ச்செல்வி என்றும், கலைச் செல்வி என்றும், செந்தாமரை என்றும், அன்பரசி என்றும் பெயர் சூட்டிக் கொண்டுள்ள ஒரே ஒரு பார்ப்பனப் பெண்ணை கொண்டு வந்து நிறுத்த முடியுமா?
தமிழ் செம்மொழியாக அறிவிக்கப் பட்டபோது தினமலர் என்ன எழுதியது தெரியுமா -_ பாரதிராஜா அவர்களே?
காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். ஏழை நெசவாளர் வீட்டுத் தறி நிற்காமல் இயங்கும். ஒரு வேளை கஞ்சிக்கே வழி இல்லாதவருக்கு மூன்று வேளையும் மட்டன் பிரியாணி கிடைக்கும் (தினமலர் வாரமலர் 13.6.2004) என்று பார்ப்பன ஏடு எழுதியதை அறிவாரா பாரதிராஜா?
பெங்களூர் திருவள்ளுவர் சிலை திறக்கப்படுவதன் மூலம் கன்னடர் தமிழர் இடையே நல்லுறவு ஏற்படும் என்று எடியூரப்பா கூறியுள்ளாரே? என்பது கேள்வி.
அதற்குத் துக்ளக் பார்ப்பனனின் பதில் என்ன தெரியுமா?
நல்லுறவா? நல்ல உறவுதான். யாராவது கன்னட வெறியர்கள் ஒரு சமயம் பார்த்து அந்தச் சிலையை அவ மதிக்காமல் இருந்தால் போதுமே (துக்ளக் 18.8.2009) என்று எழுதினாரே - தெரியுமா பாரதிராஜாக்களுக்கு?
அந்தச் சிலை அவமதிக்கப்பட வேண்டும் என்ற உள்ளக் கிடக்கையைத் தானே வேறு வார்த்தைகளில் கூறியுள்ளார் சோ!
சென்னை மாநகர மேயர் வணக்கத்துக்குரிய மா. சுப்பிரமணியம் அவர்கள் சென்னை - கடை வீதிகளில் வணிக நிறுவனங்களில் விளம்பரப் பலகைகளில் தமிழ் இடம் பெற வேண்டும் என்ற ஆணை பிறப்பித்து, அவரே வீதியில் இறங்கிப் பணியாற்றிய போது அதனை மொழி நக்சலிசம் என்று சொன்ன துக்ளக் சோ ராமசாமிகள் தமிழரே என்று நம்பச் சொல்லுகிறாரா அன்புக்கும், பாராட்டுக்கும் உரிய பாரதிராஜா?
இயக்குநர் பாரதிராஜா அவர்களே! காமராசரை - ஆச்சாரியார் கறுப்புக் காக்கை என்று சொன்னது எந்த அர்த் தத்தில்? அதே காமராசரை பச்சைத் தமிழர் என்று தந்தை பெரியார் சொன் னது எந்தப் பொருளில்? இரண்டுக்கும் இடையே இழைந்தோடும் அந்த மெல்லிய இழையைக் காண ஈரோட்டுக் கண்ணாடி தேவைப்படும்.
இன்றும்கூட கோயில்களில் வழி பாட்டு உரிமை தமிழில் என்றால் எதிர்த்து நீதிமன்றம் செல்பவர்கள் யார்? அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்று சட்டம் கொண்டு வந் தால் அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றவர்கள் - _ இப்பொழுது சென்று சட்டத்தை முடக்கியவர்கள் முப்புரிப் பார்ப்பனர்கள் என்பது பச்சைத் தமி ழரான பாரதிராஜாக்கள் தெரிந்து கொள்ளா விட்டால் நாம் என்ன செய்ய முடியும்?
திராவிட இயக்கத்தைக் கொச்சைப் படுத்தும் ராஜாக்களே! பொது வீதிகளில் தாழ்த்தப்பட்டவர் நடக்கும் உரிமைக்கு வழி செய்தது யார்?
அரசு பதிவேடுகளில் சூத்திரர்கள் (பார்ப்பனர்கள் வேசி மகன் மனு தர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415) என்று இருந்ததை நீக்கியது யார்?
சென்னையில் அன்றைய மவுண்ட் ரோட்டிலும், ஜார்ஜ் டவுனிலும் இருந்த உணவு விடுதிகளில் பறையர்களும், நாய்களும், குஷ்ட ரோகிகளும் உள்ளே நுழையக் கூடாது என்று போர்டு வைத்திருந்தது தெரியுமா? அதனை மாற்றியது யார்?
மருத்துவக் கல்லூரிகளில் சேர சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்று வைத்திருந்த நிபந்தனையை தூக்கி எறிந்தது எந்தக் கட்சி ஆட்சி யில்?
பள்ளிகளில் தாழ்த்தப்பட்டவர்களைச் சேர்க்கா விட்டால் மானியம் கிடையாது; பேருந்துகளில் தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்கா விட்டால் உரிமம் ரத்து என்ற ஆணை பிறப்பித்தது திராவிடர் இயக்க ஆட்சி என்ற அரிச்சுவடியாவது தெரியுமா?
தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிற்படுத்தப் பட்டவர்களுக்கும் கல்வி கற்க இட ஒதுக்கீடு சட்டத்தை முதன் முதலில் கொண்டு வந்தது எந்த அமைச்சரவை?
இன்றைக்குத் தமிழ் நாட்டில் 69 விழுக்காடு இடம் வந்தது யாராலே?
இதெல்லாம் தான் திராவிடர் இயக்கம் -_ அதன் தலைவர்கள் _ ஆட்சி _ மக்களை ஏமாற்றிய காரியங்களா?
சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி என்ற தன்மான உணர்வை ஊட்டிய தந்தை பெரியார் ஏமாற்றுக் காரரா?
அடக்கம் வேண்டாமா? நாக்கு இருக் கிறது என்பதற்காக எதை வேண்டும் என்றாலும் பேசுவீர்களா?
தந்தை பெரியார் மறைந்தபோது தலையங்கம் தீட்டாத ஒரே பார்ப்பன ஏடு இந்து என்பதை அறிவீர்களா?
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். அன்னை மணியம்மையார் மறைவுகளை மரணக் குறிப்பு வெளியிடும் (Obituary) பகுதியில் வெளியிட்டு அவமானப்படுத் திய இந்து வகையறாக்கள் தமிழர்கள் ஆகி விட்டார்களா?
பத்திரிகை உலகில் ஜாம்பவனாகிய சி.பா. ஆதித்தனார் இறந்ததை உள்ளே மறைவு செய்தியாக வெளியிட்ட மவுண்ட் ரோடு மகாவிஷ்ணுவான இந்து ஏடு, அதே நாளில் மறைந்த மிருதங்க வித்வான் பாலக்காட்டு மணி அய்யர் பற்றி முதல் பக்கத்தில் வரிந்து தள்ளியிருந்தது தெரியுமா?
திராவிடர்கள் என்றாலும் தமிழர்கள் என்றாலும் எந்த வகையிலும் பொருள் வேறுபாடு கிடையாது. திராவிடர்கள் என்பது ஆரியர்கள் இயக்கத்திற்குள் உள்ளே நுழையக் கூடாது என்கிற தற் காப்பு ஏற்பாடு - எத்தனை விளக்கங் களைக் கூறி விளக்கி இருப்பவர் வெண் தாடி வேந்தரான தந்தை பெரியார்.
ஒரு குடும்பத்தில் பிறந்தவர்கள் வேறு வேறு இடங்களுக்குச் சென்று விட்டால் அவர்களின் குடும்பப் பெயரோ, பெற் றோர்களின் பெயர்களும் மாறி விடுமா?
ஆரிய ஏடுகளை படித்து விட்டு அரைகுறையாகத் தெரிந்து கொண்டு வரலாற்றுத் திருப்பத்தை ஏற்படுத்திய திராவிடர் இயக்கத்தையோ, அதன் ஒப்பற்ற பெருமை மிகுந்த தலைவர் களையோ இழிவுபடுத்த வேண்டாம்!
பாரதிராஜாக்களிடம் இதனை எதிர் பார்க்கவில்லை. வருத்தம்தான்! என்ன செய்வது? தந்தை பெரியாரையும் அவர்தம் திராவிட இயக்கத்தையும் ஏமாற்றுக்காரர்கள் என்று சொன்ன பிறகு சொரணையற்றவர்களாக நாம் இருக்க முடியாதே!
பாரதிராஜாக்கள் மீண்டும் மனுதர்மத் துக்கு முத்தமிட ஆசைப்பட வேண்டாம். இனம் எது? பகை எது என்று தெரிந்து கொள்வதில்கூட தடுமாற்றமா? தமிழர் உணர்வு இதுதானா?
- மின்சாரம்-(விடுதலை ஞாயிறு மலர்  17.11.2012) 

Sunday, October 14, 2012

புத்த விநாயகர் - வேத விநாயகராக்கப்பட்ட மோசடி வரலாறு (2)


பேராசிரியர் அ.கருணானந்தன்,
வரலாற்றுத் துறைத் தலைவர் (ஓய்வு)
விவேகானந்தா கல்லூரி, சென்னை.

கருவுற்றிருந்த மாயாதேவியின் கனவில் ஒரு யானை அவரது வயிற் றுக்குள் புகுவதைப் போலக் கண் டாராம். கனவு நிமித்தம் என்னவென்று வினவ கனவியல் நிபுணர்கள் பிறக்கப்போவது ஒரு சக்கரவர்த்தி யாகவோ அல்லது ஒரு புத்தராகவோ ஆகப்போகிறது என்று கூறினார்களாம். பௌத்த பக்தர்களுக்கு கருவிலே நுழைந்த யானை புனிதப் பொருளா யிற்று. கஜேந்திரன், கஜபதி பெயர்களின் மூலமும் அதுவே.
அது மட்டுமா?
பிறந்தவுடனேயே அக்குழந்தை தனது பாதங்களால் ஏழு அடிகள் வைத்து முன் சென்று பின்வந்ததாம். அந்த தெய்வீகக் குழந்தை எடுத்து வைத்த பாதங்கள் பின்னர் தர்ம பாதங் களாகின. புத்தரை ஒரு விஷ்ணு அவ தாரமாகப் பார்க்கும் வைஷ்ணவர்கள் தங்கள் ஆண் குழந்தைகளுக்கு தர்ம பாதம் என்ற பெயரைச் சூட்டுவதுண்டு.
உலகின் துன்பத்தைப் போக்கும் மார்க்கத்தைத்தேடி சித்தார்த்தன் என்னும் அரசன் அல்லது ராஜன் தனது அரசையும், குடும்பத்தையும் தியாகம் செய்து துறவுக் கோலம் பூண்டதால் அவருக்குத் தியாகராஜன் என்னும் பெயரையும் பௌத்த மரபுகள் தந்தன. ஆனால் அதே பெயர் இன்று அது பிராமணீயமாக்கப்பட்ட சிவனைக் குறிக்கிறதாம். பாற்கடலில் கடைந்த போது முதலில் தோன்றிய ஆலகால விஷத்தால் தேவர்கள் சாகாமல் காப் பாற்ற, அதனை சிவனே விழுங்கினராம். உடனிருந்த பார்வதி பதறிப்போய் தன் பர்த்தாவின் குரல்வளையை இறுகப் பிடித்து முறுக்கியதால் அந்த ஆல காலவிஷம் சிவன் தொண்டையிலேயே நின்று நீலகண்டன் ஆனாராம் நீலகண்டன் சரி. எதையும் தியாகம் செய்யாமல் தொண்டையிலேயே விஷத்தைத் தேக்கி கொண்ட பரமசிவன் ஈசன் தானே? எப்படி ராஜன் ஆக முடியும்?
வேத விநாயகர் அதாவது பிராமணீய விநாயகர் தோன்றுவதற்கு முன்னே விநாயகம்-கணபதி-விக்னேசுவரன்-தியாக ராஜன் போன்ற வழி படு பெயர்கள் இருந் தன. அவையாவும் புத்தனைக் குறித்தன. ஏதாவது முதலில் இருந்தது புத்த விநாயகர், புத்த கணபதியே.
புத்தர் தமது வாழ் நாளில் கடவுளை ஏற்றதில்லை. தம்மைக் கடவுளாக்கு வதையும் ஒப்புக் கொண்டதில்லை.
அவரது மறைவுக்கு அவரது நினைவைப் போற்ற விரும்பியவர்கள் அவரது சின்னங்களையே பயன்படுத் தினர்.
யானை ஏற்கெனவே புனிதமாக்கப் பட்டு விட்டது.
புத்தர் தெளிவடைந்தது அரச மரத் தடியில் அதாவது போதிமரத்தடியில், அதனால் அரசமரம் அல்லது போதி மரம் வழிபாட்டுப் பொருளாயிற்று. அரசனாயிருந்த புத்தன் ஞானம் பெற்ற மரம் என்பதால் அது அரசமரம், போதம் (ஞானம்) பெற்ற மரமென் பதால் போதிமரம். அரச மரத்தடிகளில், அதுவும் குறிப்பாக ஆற்றங்கரை அரச மரத்தடிகளில் (புத்தர் தியானம் செய்து ஞானம் பெற்ற அரசமரம் நிரஞ்சனா நதிக்கரையில் இருந்தது) யானை உருவம் வைக்கப்பட்டால் அது மும்மடங்கு சிறப்பு பெறுவதாக ஆயிற்று.
புத்தரைக் குறிக்கும் மற்றொரு சின்னம் சக்கரம். சாரநாத்தில் புத்தர் ஆற்றிய முதல் பேருரை தம்ம சக்க பவத்தன (தர்ம சக்கர பரிவர்த்தன அதாவது, புத்தநெறி உலகெங்கும் பரவுவதற்காக சக்கரம் போல் இயங்கத் துவங்கிற்று என்று பொருள்) என்பர். சக்கரம் புத்தநெறியைக் குறிக்கலாயிற்று. (அதனால்தான் சுதந்திரம் அடைந்த பின்னர், அரசியலமைப்பு சபையின் உட்குழு தேசியக் கொடியில் அசோக சக்கரம் அதாவது, பௌத்த சக்கரத்தை வைப்பது என்று முடிவெடுத்தபோது இந்து மகாசபை போன்ற இந்துத்துவ வாதிகள், காந்தியின் ராட்டையை வேண்டுமென்றாலும் போட்டுக் கொள் ளுங்கள். அசோக சக்கரம் தேசியக் கொடியில் இடம்பெறக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தனர்).
வேறொரு பௌத்த சின்னம் பாதங்கள் (தர்ம பாதம்) பௌத்த துறவிகள் இந்தியாவெங்கும் பரவினர். பரவிய இடங்களிலெல்லாம் யானை உருவங்களும், அரச மரங்களும், தர்ம பாதங்களும் பௌத்த வழிபாட்டுத் தலங்களாயின.
இமயத்திலிருந்து கன்னியாகுமரி வரை பாறைகளில் பொறிக்கப்பட்ட பாதங்களைக் காணமுடியும். அரச மரத்தடிகளிலெல்லாம் யானை உருவங்கள் வைக்கப்பட்டன.
புத்தம் மதமானது, மூடநம்பிக்கைகள் பெருகின, நேர்த்திக்கடன்களும் பெருகின.
பக்தி இயக்கம் என்ற போர்வையில் பிராமணீயம் பௌத்தத்தை வேரறுக்க சைவ-வைணவ  வெறிகளைப் பரப்பிய போது பல பௌத்த-சமணக் கோயில் கள் பிராமணீயமாக்கப்பட்டன. கொடுங்கலூர், சபரிமலை, உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கோயில்கள் மதமாற்றம் செய்யப்பட்டன.
திகம்பர அருகதர் பழனியாண்டவரானார். ஜேஷ்டாதேவி என்னும் மூத்தோள் மூதேவி என இழிவுபடுத்தி விரட்டப் பட்டாள்.
யானை உருவங்களுக்கு தொப்பையும், சுணங்கயி கைகால்களுடனான மனித உடல்கள் தரப்பட்டு தொந்தி விநாயகராக்கினர்.
புத்தர் பிறந்த விசாக நட்சத்திரம், கார்த்திகையில் பிறந்தவரெனப்படும் முருகனுக்கு சிறப்பு நாளாயிற்று.
புத்தரது தர்ம சக்கரம், விஷ்ணுவின் சக்கராயுதமாயிற்று.
வீடுகளில் போற்றப்ட்ட பௌத்த யானை உருவங்கள் களிமண், சாணி உருவாங்களாகின. முற்றத்தில் வைக்கப் பட்டவை பின்னர் நீரில் கரைக்கப்பட் டன. புத்தரின் மீதான பிராமணீய வெறுப்பு விநாயகரைச் சாணியாக்கிற்று, கணிமண்ணாக்கிற்று. கொம்பை ஒடித் தது, தெருவோரச் சிறு தெய்வமாக் கிற்று, அழுக்கிலிருந்து பிறந்தவராக கதை கற்பித்தது. கோமாளித்தனமான எலி வாகனம் தந்தது. ஞானத்திற்காக ஆற்றங்கரை அரசமரத்தடியில் தியானம் செய்த புத்தர் அழயான பெண்களை எதிர்பார்த்து ஆற்றங்கரையில் அமர்ந்துள்ளவராகச் சித்தரிக்கப்பட்டார்.
புத்தரது தர்ம பாதங்கள் ராம பாதங்களாகவும், தேவி பாதங்களாகவும், பீம-அனுமன் பாதங்களாகவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டன. இந்தியாவெங்கும், மக்களிடையே பிரபலமாக இருந்து வந்த புத்த யானை - புத்த அரச மரம் - புத்த தர்ம சக்கரம் - புத்த தர்மபாதம் போன்றவற்றை இழிவுபடுத்தி, ஓரங்கட்ட முயன்ற பிராமணீயம், அது வெகுமக்களிடம் எடுபடாது எனத் தெரிந்த பிறகு அவற்றையே பிராமணீயப்படுத்தினர். புத்த சின்னங்களைத் திரிபு செய்தே புத்தத்தின் தர்மத்தை அழித்தனர்.
இதற்கு பக்தி இயக்கம் வசதியாக இருந்தது.
கணாபத்தியம் உருவானது; கணபதி சிவனின் அல்லது அவரது மனைவியின் மகனானார் கந்தனின் தமையனானார்.
தெற்கே கட்டை பிரம்மச்சாரியாக வும், வடக்கே கலியாண விநாயகராகவும் இரட்டை வேடம் அணிந்தார்.
வேத எதிர்ப்பு - கடவுள் எதிர்ப்பு - சனாதன எதிர்ப்பு புத்த விநாயகர் வேத விநாயகரானார்;பிராமணப் பூசகர்களின் வடமொழி மந்திரங்களில் பூணூலுடன் புல்லரித்துப் போனார்.
புத்த எதிர்ப்பு வெறியர்களால் ஒழிக்கப்பட்ட ஒரு கொம்பு, வியாசரும் படிக்கும் மகாபாரதத்தை, அவரது எழுத்தராக இருந்து விநாயகர் பனையோலைகளில் எழுதுவதற்கான எழுத்தாணி என்ற புண்ணியம் தரப் பட்டது. அகத்தியரின் கமண்டலத்தை காக்கை உருவில் வந்து கவிழ்த்து காவி ரியை உற்பத்தி செய்த மகாத்மியமும் வேத விநாயகருக்கு அளிக்கப்பட்டது.
வைணவர்கள் ஒரு படி மேலே சென்று, வைதீகத்தை ஏற்காத அசுரர் கூட்டத்தில் மித்திரபேதம் செய்வ தற்காகவே நாத்திகம் பேசும் புத்த அவதாரமாக விஷ்ணுவின் தசாவதாரப் பட்டியலில் இடம் பெறச் செய்தனர்.
அழிக்க முடியாமலிருந்த புத்தர் நினைவுகளை, சின்னங்களை பிரா மணீயம் அணைத்து, போற்றி, திரிபுகள் செய்து, சனாதனத்திற்குச் சாதக மாக்கியது.
இத்தகை கலை-பண்பாட்டு-தத்துவ மோசடிகளை நமது அறிவாளர்கள் உரிய வண்ணம் புரிந்துள்ளனரா?
பக்திகால சைவர்களும் விஷ்ணு பெரிதா, சிவன் பெரிதா போராட்டத் தில் ஈடுபட்டபோது உருவான ஒரு கதை சிவனின் அடி முடியை விஷ்ணு வும் பிரம்மனும் தேடிய ஒன்றாகும். பன்றி உருவிற் சென்ற மாலும், அன்னப் பறவை உருவில் முடி தேடிச் சென்ற பிரம்மனும் தோல்வியடைந்தனர் ஆனாலும், பிரமன் தான் முடியைக் கண்டுவிட்டதாகப் பொய் சொன்னார், தாழம்பூ பொய்ச் சாட்சியம் கூறியது. விளைவு, பிரமனுக்குக் கோயில் இல்லை என்று ஆயிற்றாம். மற்றொரு சிவக்கதை சைவர்கள் திருப்திபட்டுக் கொள்வதற் காக உருவாக்கப்பட்ட கதை பிரமனின் அய்ந்தாவது தலையை சிவபெருமான் கிள்ளியெறிந்த கதையாகும். பிரணவ மந்திரம் தெரியாத பிரமன் முருகனிடம் குட்டுப்பட்ட கதையும் உள்ளது. பிரம்மனுக்கு கோவில் இல்லாததற்கு சைவ சிவனின் சாபம்தான் காரணமா? சைவர்கள் தங்களைத் தாங்களே சொறிந்துகொள்ள மட்டுமே இக்கதைகள் பயன்படும். உண்மை நிலவரம் வேறு. சங்கரர் உருவாக்கிய சண்(ஆறு) மதங்களில் பிரம்மன் ஏன் தவிர்க்கப்பட்டார். மற்ற கடவுளர்களை பிராமணர் அல்லாத மற்றவர்களுக் காகப் பட்டியலிட்டவர். வேதம் கூறும் பிரம்மனுக்கு ஏன் ஒரு வழிபாட்டு அடையாளத்தைத் தரவில்லை. பிரம் மன் அல்லது பிரம்மம் பிராமணர் களுக்கே உரியவன். பிராமணனே பிரம்மமாகிறான். அவனை மற்றவர்கள் நெருங்காமல், அவனது தனித்தன்மை பாதுகாக்க வேண்டும், பிராமணீய புனிதத்தை, தனித்துவத்தை நீர்த்துப் போகச் செய்யக்கூடாது என்பதற் காகவே சண்மத (சைவம்-வைஷ்ணவம்-சாக்தம்-சௌரபம்-கௌமாரம்-கணபத்யம்)ப் பட்டியலிலிருந்து பிரம்மனை விலக்கி வைத்தனர். ஆனாலும், ஆகமத்திற்குரிய கோவில் களில் பூசகர் உரிமைகளையும், அரசவை யாகங்களுட்கான யக்ஞ உரிமை களையும், ஸ்மிருதி-ஸ்ருதி விளக்க உரிமைகளை ஏகபோகமாக பிராமணர் களும் வைத்துக்கொண்டனர். இந்த ஆறு மதங்களும், வேத-பிராமண-யாக முறைகளும் முதன்மைப்படுத்திப் பாது காத்தன. சங்கரக் கதியில் பிராமணனும் பிரம்மமும் தனியாகவும், உயர்வாகவும் வைக்கப்பட்டனர். சண்மதக் கடவுளர்களுக்காவது சுயமரியாதை இருக்க வேண்டாமா?
எது எப்படியாயினும் ஒன்றை நினைவிற்கொள்ளுங்கள்!
18 புராணங்களில் விநாயகருக்கு என்று எதுவுமில்லை
18 உபபுராணங்களில் கணேசனுக்கு ஒன்றுமில்லை
ஆகமங்கள் சிவனுக்கும், விஷ்ணுவுக் கும், சக்திக்கும் தானே தவிர விநாய கருக்கு என்று எதுவுமில்லை.
புத்த மூலத்தைக் கொண்டிருந்த விநாயகருக்கு வைதீகம் தந்த மரியாதை இதுதான்.
பிறரது உழைப்பை மட்டுமல்ல, பண்பாட்டையும், நம்பிக்கையையும், படைப்பாற்றலையும், கற்பனைகளைக் கூட பிராமணீயம் மோசடியாக தனது லாபத்திற்காக மோசடியாக எடுத்து திரிபு செய்யும் என்பதற்கு விநாயகர் விவகாரம் மற்றுமோர் எடுத்துக்காட்டு.
எதுவும் அற்புதங்களாகத் தரப் பட்டால், கடவுளாக்கப்பட்டால் விபரீதவிளைவுகளே ஏற்படும். புத்தரும் அதற்கு விதிவிலக்கல்ல.
பிராமண மோசடியிலிருந்து உண்மைகளை வெளிக்கொணர பகுத் தறிவு வரலாற்றாளர்கள் இனியும் பணியாற்றுவர் என எதிர்பார்க்கிறோம்.

Sunday, October 7, 2012


புத்த விநாயகர் - வேத விநாயகராக்கப்பட்ட மோசடி வரலாறு (1)


பேராசிரியர் அ.கருணானந்தன்,
வரலாற்றுத் துறைத் தலைவர் (ஓய்வு)
விவேகானந்தா கல்லூரி, சென்னை.

...... இந்துக்கள் என்போர்களின் தெய்வங்கள் என்பவை முழுவதும், அதாவது பிள்ளையார் முதல் பிரணவ சொரூபம் வரை அப்புராணக் கூற்றில் கற்பிக்கப்பட்ட தெய்வங்களாகவும், அவைகளினுடைய நாமங்களும், ரூபங்களும், குணங்களும், செய்கைகளும் எல்லாம் அப்புராணக் கூற்றைக் கொண்டதாகவும் காணப்படுவதும் அதற்கு மக்கள் செய்யும் பூசனை, வேண்டுதல், உற்சவம் முதலிய யாவும் கற்பனைகளையே ஆதாரமாகக் கொண்டதாக ...... பொதுநோக்கில் நன்று சுருதி, யுக்தி, அனுபவம், சையன்ஸ் ஆகியவைகளுக்கு ஒத்த முறையில் நின்று புராணக் கூற்றை ஆராய்வோம்.

பெரியார், புராணம் என்பதன் முன்னுரையில் திராவிடர் கழக வெளியீடு, பத்தாம் பதிப்பு 1999.
கிராமத்து வீடுகளின் முற்றங்களில் சாணிப் பிள்ளையாராக இருந்த ஒன்றை அரசியல் பிள்ளையாராக, தேசியப் பிள்ளையாராக, இந்து வகுப்புவாதப் பிள்ளையாராக மாற்றியவர் தீவிரவாதி என்று புகழப்படும் (?) பாலகங்காதர திலகர். 1898 ஆம் ஆண்டு அவர் விநாயக சதுர்த்தியை அரசியல் கணேச பூஜையாக மாற்றியமைத்து பாமரர் களுக்கு மதஉணர்வை வெறியாக மாற்றி, இந்துத்துவ அரசியலுக்கு அச்சார மிட்டார். இதைத் தொடர்ந்து சிவாஜி விழா, பசுபாதுகாப்பு அமைப்பு, தடி பயிற்சி அமைப்பு போன்றவையும் அமைக்கப்பட்டன.
விநாயகரின் வாகனமாம் எலிகள்
பம்பாய் மாநிலத்தில் பிளேக் நோய் பரவி நூற்றுக்கணக்கானவர்கள் இறந்தபோது பிளேக் நோய் (தடுப்பு) கமிஷன் ஒன்று பம்பாய் அரசால் உரு வாக்கப்பட்டது. அந்தக் கமிஷன், பிளேக் நோய் பரவுவதற்கு சுகாதார மற்ற இருண்ட இடங்களில் நடமாடும் எலிகளே காரணம் என்று கண்டறிந்து பிளேக் நோயைக் கட்டுப்படுத்த எலிகளை ஒழிப்பது அவசியம் என்று கூறியது. எலிகளைப் பிடித்து அழிப் பதற்காக பிளேக் கமிஷன் அதிகாரி களும், அலுவலர்களும் வீடுவீடாகச் சென்றனர். விநாயகப் பெருமானின் வாகனமான எலிகளைக் கொல்வது இந்துமத உணர்வைப் புண்படுத்துவ தாக அரசியல் விநாயகர்களின் பக்தர்களால் பிரச்சாரம் செய்யப் பட்டது. திலகரின் கேசரி பத்திரிகை பிளேக் கமிஷனைச் சாடியது. கலவ ரங்கள் வெடித்தன. பிளேக் கமிஷனர் ர்ண்ட் என்பவரும் அவரது துணை அதிகாரி அயர்ஸ்ட் என்பவரும் கொலை செய்யப்பட்டனர். 1897இல் திலகர் கைது செய்யப்பட்டார். 18 மாதக் கடுங்காவல் தண்டனைக்கு ஆளானார்.
அன்று கணேசர்-கணேச பூஜை அதிகாரிகளைக் கொலை செய்வதற்கு மட்டுமல்ல, முஸ்லீம் எதிர்ப்பு வகுப்புக் கலவரங்களுக்கும் வன்முறை அரசிய லுக்கும் காரணமாக அமைந்தன. இவ்வாறு அரசியல் பிள்ளையார் 1893இல் அவதாரமெடுத்தார். இதற்கு 60 ஆண்டுகள் கழித்து 1953இல் தந்தை பெரியார் அவர்கள் பிள்ளையார் சிலைகளை உடைக்கும் போராட் டத்தை நடத்தினார். மூடநம்பிக்கை களின் பிடியிலிருந்து மக்களை மீட்கும் போராட்டமாக அது இருந்தது.
மராட்டியத்தில் திலகர் கொண்டு வந்த விநாயகர் விபரீதம் சமீப காலமாக தமிழ் மண்ணிலும் பரிசோதிக்கப் படுகிறது. பிரம்மாண்டமான விநாயகர் சிலைகள், ஊர்வலங்கள், சிலைகளை கடலில் கரைக்கும் நிகழ்ச்சிகள், வகுப்புக் கலவரம் சட்டம்-ஒழுங்குப் பிரச்சி னைகளுக்காக, காரணிகளாக மாற்றப்படுகின்றன. 2011ஆம் ஆண்டு விநாயக சதுர்த்தி சிலைகள் கரைப்ப தற்கான ஊர்வலங்கள் வன்முறைக் கலவரங்களின்றி அமைதி யாக முடிந் திருந்தன என்று நாளேடுகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டன. ஆனால் 2011 செப்டம்பர் 5 ஆம் தேதி நாளேடு ஒன்று பிள்ளையார் சிலைகளைக் கரைப்பதற்குப் போதுமான ஏரி, குளம், குட்டைகள் இல்லாமல் நில ஆக்கிர மிப்புகள் நடந்துள்ளதைப்பற்றி சிறப்புச் செய்தி ஒன்றை வெளியிட்டது.
வக்கிர மனம்
மக்களுக்கு-மனித சமூகத்திற்குத் தேவையான நீர்வளம் வரம்பற்ற, முறையற்ற நில ஆக்கிரமிப்புகளால் சிதைக்கப்படுகிறதே என்றுசமூக ஆர்வலர்கள்-சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலைப்படுகின்ற வேளையில், நில ஆக்கிரமிப்புகளால் பிள்ளையார் சிலை கரைப்புக்கு ஏற்படும் தடைகளைப் பற்றிய கவலைக்கு முன்னுரிமை தருகின்ற வக்கிரமனம் கொண்ட மதவாதிகளின் விநாயக நேயத்தை என்னவென்பது?
தியாகராய நகரில் வெடிப்புகையுடன் நள்ளிரவில்  வெளிவந்த திடீர் பிள்ளை யாரும், பால் குடிக்கும் விநாயகர்களும் அவ்வப்போது அவதரித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இந்துஸ் தானத்தில் கொலையும் கூட ஒரு மதச் சடங்கே-கொடுமையான வழிபாட்டு முறையின், சீரழிவான நிலையை அது எவ்வாறு வெளிப்படுத்துகிறது என்றால், அங்கே இயற்கையின் அதிபதியான மனிதன் (வழிபாட்டின் பெயரால் அனுமன் என்ற குரங்கு மற்றும் சபலா என்று பகு ஆகிய விலங்குகளின் முன்னால் பரவசத்துடன் மண்டியிடுகிறான்.
                                                                                                                                                                             - கார்ல் மார்க்ஸ்
இர்பான் ஹமீபிள் இந்திய வரலாறு மீதான கட்டுரைகள் என்ற புத்தகம், பக்கம் 150.
மதத்தின் பெயரால் ஆறறிவுள்ள மனிதன் ஐந்தறிவுகூட இல்லாதவற்றினை, நீண்ட பருந்தினையும் நெடிய குரங்கினையும் யானை, புலி, சிறுத்தை, சிங்கம் போன்றவற்றையும், பசு, எருது, மயில், கோழி, ஏன் எலியையும் கூட தன்னைவிட பல மடங்கு சிறந்த தெய்வங்களாக ஏற்று மண்டியிட்டும், நெடுஞ்சாண் கிடையாக விழுந்தும் வணங்குவதில் அருவருப்புக் கொண்ட மார்க்கம், அவரது முன்னோடி ஏகலும் பிராமணீயச் சடங்குகளை, பிராமணீயத் தால் பாமர மக்களிடையே புகுத்தப் படும் மூடநம்பிக்கைகளை சீரழிவுச் சின்னங்களாகவே பார்த்தனர்.
இத்தகைய உருவ வழிபாட்டை நியாயப்படுத்தி பிராமணீயம் கூறுவது என்ன? ராமகிருஷ்ண மடத்து சுவா ஹானந்தரால் எழுதி வெளியிடப் பட்டுள்ள இந்து உருவகங்கள் (Hindu Symbology) என்ற புத்தகத்தின் சில வரிகளைப் பார்ப்போம்.
“Images are the forms of god visulised by saints and seers in their hours of communion (voith god). Art has also contributed to their beauty and richness. ..... As the image is the production of the saintly artist, every single detail of the form is expressive of some deeper universal truth.’’
துறவிகளும் ரிஷிகளும் கடவுளுடன் இணையும்போது அவர்களால் காணப்பட்ட கடவுளின் வடிவங்களே (விக்கிரக) உருவங்கள் ஆகும். கலை அதற்கு அழகையும், செழுமையையும் தந்துள்ளது...... இந்த உருவங்கள் துறவிக் கலைஞர்களின் படைப்புகளாக இருப்பதால், அவற்றின் ஒவ்வொரு நுண்ணிய அம்சமும், மிக ஆழமான உலகளாவிய உண்மையை வெளிப்படுத்துவதாக உள்ளன.
அதாவது விசித்திரமான இக்கடவு ளர் சுயம்புகள் (தன்னைத்தானே தோற்றுவித்தவர்கள்) அல்ல. துறவிகள், ரிஷிகள் போன்றவர்களால் உருவகப் படுத்தப்பட்டவர்கள். அந்த கற்பனை உருவங்களின் ஒவ்வொரு பகுதியும் ஓர் உள் தத்துவத்தை விளக்குவதாக உள்ளதாம். மனிதன் படைத்த கடவுளரைப்பற்றி பகுத்தறிவாளர் இங்கர்சால் பின்வருமாறு கூறுகிறார்:
ஒவ்வொரு தேசமும் ஒரு கடவுளை உருவாக்கியது, அந்தக் கடவுள் அதனைப் படைத்தவர்கள் சாயலில் இருந்தது .........
இந்தக் கடவுளர்கள் எண்ணற்ற மாதிரிகளில், மிகவும் விசித்திரமான கோமாளித்தனமான வடிவங்களில் உற்பத்தி செய்யப்பட்டனர். சிலருக்கு ஆயிரம் கைகள் இருந்தன. சிலருக்கு நூற்றுக்கணக்கான தலைகள் இருந்தன, சிலர் உயிருள்ள பாம்புகளை கழுத்தில் ஆபரணங்களாகக் கொண்டிருந்தனர், சிலரது கைகளில் குண்டாந்தடிகள் இருந்தன, சிலருக்கோ வாட்களும் கவசங்களும் இருந்தன, வேறுசிலருக்கு கேடயங்கள் இருந்தன, சிலருக்கு சிறகுடைய தேவதூதர்கள் இருந்தனர், சிலர் பார்வைக்குத் தெரியாமல் இருந் தனர், சிலர் எங்கும் பரவி நின்றனர், சிலர் முதுகுப் புறத்தைக் காட்டியே நின்றனர், சிலர் பொறாமைக்காரர் களாக இருந்தனர், சிலர் முட்டாள் களாக இருந்தனர், சிலர் மனிதர்களாக உருவம் ஏற்றனர், சிலர் அன்னப் பறவைகளாக மாறினர், சிலர் எருது களாயினர், சிலர் புறாக்களாயினர், சிலர் புனிதப் பிசாசுகளாயினர், சிலர் மனிதர்களின் அழகிய பெண்களுடன் மையல் கொண்டு புணர்ந்தனர். அனை வருமே மணம் புரிந்திருக்க வேண்டு மென்றாலும் சிலர் மட்டும் மணம் செய்துகொண்டனர், சிலர் ஆதியி லிருந்தே பழைய பிரம்மச்சாரிகளாக இருந்தனர், சிலருக்குக் குழந்தைகள் பிறந்திருந்தன, அந்தக் குழந்தைகளும் கடவுளராக மாற்றப்பட்டு அவர்களின் தந்தையரைப் போலவே வழிபாடு பெறு பவனாயினர். பெரும்பாலான கடவுளர் பழிஉணர்ச்சி கொண்டவர்களாகவும், கொடுமைக்காரர்களாக, காமம் மிகுந் தவர்களாகவும், அறிவிலிகளாகவும் இருந்தனர். பொதுவாகக் இக்கடவுளர் கள் செய்திகளுக்காக அவர்களது பூசகர்களையே நம்பியிருந்ததால் அவர்களது அறியாமை நம்மை ஆச்சரியப்படுத்தவில்லை.
இந்தக் கடவுளருக்கு அவர்கள் படைத்த உலகங்களின் வடிவங்கள் கூடத் தெரியாது, அவையனைத்துமே முழுமையாகத் தட்டையாக இருப்பதாக நினைத்தனர். சிலர் சூரியனை நிறுத் துவதனால் பகற்பொழுதை நீட்டிக்க முடியும் என நம்பினர்; கொம்புகளை ஊதுவதால் (கோட்டை) நகர மதில் களை இடிக்கலாமென நினைத்தனர். ஏறக்குறைய அனைத்துக் கடவுளரும் அவர்கள் படைத்த மனிதர்களின் உண்மையான இயல்புபற்றி அறிந் திருக்கவில்லை. ஆகவே தம்மை நேசிக் கும்படி அம்மக்களிடமே வலியுறுத் தினர்...... இச்சிறிய பூமியின் தோற்றம் குறித்து கூறக்கூடிய நிலையில் எந்த ஒரு கடவுளும் இருக்கவில்லை. அனைத்து கடவுளரும், கவலையளிக்கும் வகையில் மண்ணியல் (geology)   மற்றும் வானியல் ஞானமற்றவர்களாகவே இருந்தனர்.பொதுவாகவே அவர்கள் சட்டமியற்றுவதில் மிகவும் இழிந்த வர்களாகவும் நிர்வாகிகள் என்ற முறையில் சராசரி அமெரிக்க ஜனாதி பதிகளை விட தரங்குறைந்தவர் களாகவுமே இருந்தனர். .......... ஆமாம், அவர்கள் எப்போதுமே தங்களைப் படைத்தவர்களிடம் சார்பு கொண்ட வர்களாகவே இருந்தனர். அந்த ஒரு தலைச் சார்பினால் மற்றவர்களை கொள்ளையடிக்கவும், அழிக்கவும், அவர்களது மனைவியரையும் பெண் களையும் சீரழிக்கவும் தம்மைப் படைத்தவர்களுக்கு உதவினர்.
தங்களை நம்பாதவர்களைக் கொன்று கூறுபோடுவதைப் போன்று மகிழ்ச்சியளிக்கும் வேறு எதுவும் இக்கடவுளருக்கு இருப்பதில்லை. அதுபோன்று இவர்கள் இருக்கிறார்கள் என்பதையோ மறுப்பதைப் போன்று சினம் ஊட்டும் வேறு எதுவும் இருப்பதில்லை.
சில தேசங்கள் ஒரே கடவுளையே வைத்துக் கொள்ளுமளவிற்கு மிகவும் ஏழ்மையாக இருந்தன. கடவுளர்கள் மிக எளிதாகப் படைக்கப்பட்டனர்; அவர்களைப் படைப்பதற்கான கச்சாப் பொருள்கள் மிக மலிவாக இருந்தன; பொதுவாக இந்தப் போலி உருவங் களின் நெரிசலால் கடவுள் அங்காடிகள் பெருத்தும் போயிருந்தன.
- இங்கர்சால்: ‘The Gods’
கடவுளர் மனிதக் கற்பனையின் வீச்சின் அளவிலேதான் அமைந்தன. காலத்தைக் கடந்த உருவக் கடவுளைக் காண முடியாது. மனிதர்கள் இக்கடவுளரைப் படைத்தபோது எதையெல்லாம் அறிந்திருந்தார்களோ, அதன் அடிப்படையில்தான் கடவுளரின் உருவங்கள் படைக்கப்பட்டன.
அவர்கள் அன்று படைத்த தொன்மைக் கடவுளுக்கு கற்கால ஆயுதங்களே இருந்தன. முக்காலமும் அறிந்தவராக சிறப்பிக்கப்படும் அக் கடவுளர்கள் ஏ.கே. 47 துப்பாக்கியையும், பீரங்கியையும், லேசர் ஆயுதங்களையும் தாங்கியிருக்கவில்லை. புலித்தோல், மான்தோல் போர்த்திய கடவுளரையும் படைத்தார்களேதவிர தைத்த சட்டை, பனியன், ஜட்டி, டிரௌசர் அணிந்த கடவுளர் இங்கே வரவில்லை. மாடு, புலி, எலியின் மீதும், புறா, மயில், கழுகு போன்றவற்றின் மீதும் பயணித்த கடவுளருக்கு, சைக்கிள் போன்றவை கூட இருக்கவில்லை. கார், பைக், டாங்க் போன்றவற்றை ஞானக்கண்ணால்கூட அறிந்திருக்கவில்லை. கோயில்களில் மறைக்கப்படாத மார்பகங்களுடன் காணப்பட்ட பெண் கடவுளருக்கு, தற்காலத்து ரவிவர்மா ஓவியங்களில் ஜாக்கட்டும், 16 முழுப் புடவையும் கிடைத்தன. எனவே, ஞானியர் கடவுளரிடம் ஒன்றியபோது பார்த்த தோற்றத்தில் உருவங்கள் படைக்கப்பட்டன என்று கதைக்கப்படும் போது, அது தெய் வீகத்தை வெளிப்படுத்தவில்லை. அவர்களது கற்பனைகளின் சுருங்கிய எல்லைகளைத்தான் வெளிப்படுத்து கிறது. (ராமகிருஷ்ண மடத்து சுவாமி வாகானந்தா எழுதிய Hindu Symbology).
இங்கே கடவுளர்கள் கோமாளித் தனமாக, காட்டுமிராண்டிகளாக, வேடிக்கையாக உருவப்படுத்தப்படுதற்கு தத்துவார்த்தம், உள்ளார்த்தம் என்று பதவுரை பொழிப்புரை கூறுவது தெரிந்தே செய்யப்படுகின்ற மோசடி யாகும். சுவாமி சுவாஹானந்தா சிவன் கடவுளுக்குத் தரும் தத்துவார்த்தத்தைப் பார்ப்போம்.
சிவனது திரிசூலம் திரிபுராசுரனை அழித்ததாகும். அதன் தத்துவார்த்தம் ஸ்தூல, சூட்சும், நடைமுறை நாள் என்ற அகங்காரத்தை வெற்றி கொள்வதாகுமாம்.
அவரது நெற்றிக்கண் அறிவுக்கண். முக்கண்களால் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் மூன்றையும் பார்க்கிறாராம்.
அவர் பயணிக்கும் எருதின் நான்கு கால்கள் உண்மை, தூய்மை, பரிவு, கொடை இவற்றைக் குறிக்கிறதாம். (சிவனது இரண்டு கால்களும், இரண்டு கண்களும், நான்கு கைகளும் எந்தத் தத்துவங்களைக் குறிக்கின்றனவோ?)
அவர் சிகை மீது உள்ள நிலவு காலத்தையும் குறிக்கும், அழிவதையும் குறிக்குமாம். அதுமட்டுமல்ல ஞானத் தின் தோற்றத்தையும் குறிப்பதாகக் கொள்ளமுடியுமாம். (எது எதைக் குறிக்கிறது என்பதில் அவர்களுக்கே குழப்பமிருக்கிறது என்பது மட்டும் தெளிவாகிறது) சில வழிபாடு வேதங் களில் (ருத்ர வழிபாடாக) இருப்பதாகச் சொல்பவர்களும் சிந்து சமவெளி முத்திரைகளிலும் காணப்படுவதை ஏற்றுக் கொள்கிறார்கள்.
சிந்துவெளி முத்திரையில் காணப் படும் சிவனுக்கு (?) முக்கண் இல்லை, கங்கையில்லை, உடுக்கையில்லை, கையில் நெருப்பு இல்லை. தலையில் பிறையும் இல்லை. மாறாக இரண்டு கொம்புகள் உள்ளன. குறைகண்ட வர்கள் ஆதியில் விலங்கின் கொம்பு கூடுதல் வலிமையைக் குறிப்பதாகக் கொண்டனர். எனவே அவர்கள் அனுமா னுஷ்யமான கடவுளரைப் படைக்கும் போது அவற்றைக் கொம்புகளுடன் வரைந்தனர். கொம்புகளை இணைத்து பிறையாக மாற்றியது பல நூறாண்டுக் கற்பனை விரிவாக்கத்தின் விளைவே. மனிதர் படைத்த கடவுளர் எப்படிக் கற்பனையோ அதைப்போலவே மதவாதிகள் கூறும் த்த்துவார்த்த விளக்கங்களும் கற்பனைகளே.
இத்தகைய பசப்பலான தத்து வார்த்தங்களைக் குறித்து கைவல்ய சாமியார் கூறியிருப்பதை நினைவிற் கொள்வோம். 
(உண்மை இந்து மதம்-பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு 2008 பக்கம் 9-10)

எதற்கும் தத்துவம் சொல்லலாம்.... எதற்கும் உள்ளது உள்ளபடி அர்த்தம் வந்துவிட்டால் மேலல்லவா? நாய்க்குப் பிறந்த நாயே என்று ஒருவனைத் திட்டினால், திட்டினவன், திட்டைக் கேட்டவன் மனதில் திட்டின வார்த்தை ஊடுருவிப் பாய்ந்ததென்று மனம் திருப்தியடையும்போதும், திட்டைக் கேட்டவன் கோபிக்கும் போதும் தத்துவ அர்த்தம் பிரயோஜனப்படுமா? தத்துவ அர்த்தம் அதிலுண்டா? இரண்டு பேர்களும் தத்துவ அர்த்தத்தை நினைத்தார்களா?......... பஞ்சாட்சரமான பரமசிவனால் படைக்கப்பட்ட நீங்கள் ஞ பஞ்சாட்சர முதலெழுத்தும், ய என்கிற கடையெழுத்தும் சேர்த்துப் பிடித்த பெயரை உடையதும், பரமசிவனுக்குப் படைத்துணையான பைரவரின் வாகனமுமான நாயைப் போன்று நன்றியுடையவராயிருங்கள் என்ற அர்த்தம்தான் அதற்கு உங்கள் அறிவிற்குத் தக்கவாறு பெரியவர்கள் அமைத்தார்கள். தத்துவார்த்தம் உள்ளே அடங்கிக் கிடப்பது உனக்கு விளங்கவில்லையா? என்று சொன்னால் அதை யார் ஒப்புக் கொள்வார்கள்? பிள்ளையார் தோற்றத்தைப்பற்றிய கதைகளை பகுத்தறிவாளர்கள் ஏற்கெ னவே தோலுரித்துக் காட்டியுள்ளனர். தந்தை பெரியார் அவர்கள் பிள்ளையார் பிறப்பு குறித்து மூன்று அருவருப்பான அடல்ட்ஸ் ஒன்லி கதைகளின் கோமாளித்தனத்தையும், ஆபாசத்தையும் வெட்டவெளிச்சமாக்கியுள்ளார். (Hindu Festivals-Periyar E.V. Ramasami, Periyar Self-Respect Propaganda Institution, Madras-1983 PP 17-20)  புராணங்கள் வரலாறுகளல்ல என்பதை பகுத்தறி வுள்ள அறிவியல் நோக்குக்கொண்ட வரலாற்றாளர்கள் அறிவார்கள். ஆயினும் வரலாற்றில் விநாயகர் தோற்றுவிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட வரலாற்றைப்பற்றி ஒரு சில தகவல்களை வாசகர்கள் சிந்தனைக்கு வைக்கவே இந்தக் கட்டுரை.
வரலாற்றில் விநாயகர்:
ரிக் வேத ஆரியர்கள் ஹோம குண்டங்களை உருவாக்கி, நெருப்பில் நெய் சொரிந்து பலிகளை இட்டு மானசீகக் கடவுளரை தமது வேண்டு தலுக்கு இணங்குமாறு தோத்திரம்பாடி வணங்கினர். ஹோத்திரி போன்ற யாக மந்திரங்களை உச்சரித்து யாகங்களை நடத்தும் பூசகர்கள், மந்திரங்களால் தமது மானசீகக் கடவுளர்களின் கவனம் ஈர்க்கப்படும் என நம்ப வைத்தனர். உயிர்ப்பலிகளுக்கோ எல்லையில்லை. ஆனால் அங்கே சிலை வழிபாடோ, கோயில் கலாச்சாரமோ இருக்கவில்லை. எனவேதான் ஆரிய சமாஜத்தை நிறுவி வேதகாலத்திற்குத் திரும்புங்கள் (Back to Vedas) என்று  கூறிய தயானந்த சரசு வதி, உருவ வழிபாட்டை எதிர்த்தார், சடங்குகள் புராணங்களை ஏற்க மறுத்தார்.
ஆனால் வேத காலத்திற்கு முன்பே இங்கு தழைத்திருந்த சிந்து சமவெளி நாகரிகத்தில் உருவ வழிபாடு, லிங்க வழிபாடு, சிவ வழிபாடு, சக்தி வழிபாடு ஆகியவை இருந்ததாக அகழ்வாராய்ச் சிகள் குறிப்பாக அங்கு கண்டெடுக்கப் பட்ட முத்திரைகள் உறுதி செய்கின்றன. சில நூற்றாண்டுகள் வரை சிவலிங்க (சீசனத் தேவர்) வழிபாடுகளை எதிரிகளின் இழிந்த வழிபாட்டு முறைகளாக பழித்துக் கூறி வந்தனர். பின்னர் ஆரியரல்லாதவர்கள் சிலை வழிபாட்டு முறையை படிப்படியாக ஏற்றுக் கொண்டு அவற்றை பிராமணீய மயப்படுத்தினர். வேதகால கடவுளர் சிலருக்கு உருவங்கள் தந்ததோடு, ஆரிய ரல்லாதவர்களிடம் மிகப் பிரபலமாக இருந்த சில கடவுளர்களையும் சுவீ கரித்துக் கொண்டனர். சிவனுக்கும், கந்தனுக்கும், பிள்ளையாருக்கும் திருநீறு பூசப்பட்டு பூணூல்க்ளும் அணிவிக்கப் பட்டன. அந்தக் கடவுளரை வேத-பிராமண பாதுகாவலர்களாகவும் மாற்றினர். பூணூல் அணிந்துகொண்ட வள்ளிமணாளன், தேவசேனாவை (தெய்வானையை)யும் மணந்து பிரா மணருக்கு இனியவன், பிராமணரின் புரவலன் என்ற முறையில் சுப்பிர மணியனுமானான் (சு-பிராமண்ய) பக்தி இயக்கம் இத்தகைய ஒட்டு வேலையை மிக அற்புதமாகச் செய்தது. ஸ்கந்தன், குமாரன் என்று (ஸ்கந்த புராணம், குமார சம்பவம்) வடநாட்டில் பிரபல மான பெயர்களின் பட்டியலில் முருகன் என்பதையோ, சேயோன் என்பதையோ பார்க்கமுடியாமல் போனதில் வியப் பில்லை. ஆனால் சுப்ரமண்யா என்ற பெயர் தென்னாட்டில் மட்டுமே சுருங்கிப் போனது ஏன்? ஏனென்றால் பிராமணனை, பிராமணீயத்தை ஏற்கச் செய்ய வேண்டிய அந்த தேவை, தென்னகத்தில்தான் உணரப்பட்டது; அதைத்தான் பக்தியும் நிறைவேற்றியது.
இந்தப் பின்னணியில் பார்க்கும்போது பிள்ளையார் எப்போது எவ்விடத்தில் தோற்றுவிக்கப்பட்டார் என்பதைச் சற்று பார்ப்போம்.
தந்தை பெரியார் அவர்கள் பிள்ளையார் வடநாட்டிலிருந்து தென்னாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட கடவுள் என்றார் (புராணம்)
அப்டியென்றால் விநாயகர் வேதகாலத்துக் கடவுளா? ஆரியர்களின் ஆதிக்கடவுளரில் ஒருவரா? ரிக் வேதகால ஆரியர்கள் என்ற நூலின் பதினைந்தாவது அத்தியாயம் [தேவர் கள் (மதம்)] என்ற தலைப்பினலானது. அதில் நூலாசிரியர் புகழ்பெற்ற வர லாற்றாசிரியர் ராகுல சாஸ்கிருத்தியா யன் ரிக்வேதக் கடவுளர்களைப் பட்டியலிட்டுள்ளார். முப்பத்து முக்கோடி தேவர்கள் என்றும், 3339 கடவுளர் எனினும் ஓரிருமுறை பொத் தாம் பொதுவாகக் கூறப்பட்டாலும், குறிப்பிடப்படும் தேவர்கள் (கடவுளர்) எண்ணிக்கை 33ஐத் தாண்டவில்லை. அதிதி, வருண, மித்ர, அக்னி, அர்யமா, சவிதா, ரோத்ளி, அஸ்வினிகள், தேயுஸ், ப்ருதிவி, வாயு, பர்ஜன்ய, சரசுவதி, உஷஸ், சோம, இந்திரா, ருத்ர, பிரம்ம, சூர்ய, விஷ்ணு, பூஷன் போன்ற பெயர்களிடையே, சிவனைப் போன்று, கந்தனைப் போன்று, விநாயகரும் இடம்பெறவில்லை.
எனவே விநாயகர் ஆதியில் இருந்த கடவுளல்ல, பாதியில் படைக்கப்பட்ட கடவுளரே. விஷ்ணு வழிபாட்டின், சிவ வழிபாட்டின் ஆரம்ப நூற்றாண்டு களில்கூட (கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை) விநாயகக் கடவுள் அவதரிக்க வில்லை. தமிழகத்தில் சங்க நூற்களில் சேயோன்-மாயோன்-வேந்தன்-வருணன் பட்டியலில் பிள்ளையார் இடம் பெறவில்லை. சங்கம் மருவிய சிலப்பதி காரத்திலும், சூரியனையும், திங்களையும், மாமழையையும் போற்றிப் பாடிய போதும் அங்கு விநாயகர் இடம் பெற வில்லை. சிலம்பில் கூறப்படும் சதுக் கத்துப் பூதம் பிள்ளையார்தான் என்று சிலர் ஆர்வ மிகுதியால் கூறினாலும் சதுக்கத்து பூதம் பெததுவிடக் கடவுள் (பூதம்-சிறுதேவதை என்ற பொருளைத் தரும்) என்று விளக்க முடியும். எனவே சிலப்பதிகார க்லத்திலும் கூட விநாயகர் வழிபாடு இங்கே இருக்கவில்லை. பாலும் தெளிதேனும் பாகும் பருப்பு மிவை நாலும் லஞ்சமாகக் கொடுத்து சங்கத் தமிழ் மூன்றும் த் என்று துங்கக் கரிமுகத்தானிடம் வியாபாரம் பேசிய அவ்வை சங்ககாலத்து அதியனைப் பாடிய அவ்வை அல்ல. சங்க காலத் திற்கு பின்னர் வந்த அவ்வைதான் சங்கத் தமிழை குறிப்பிட்டிருக்க முடியும். சங்க என்ற சொல்லை சங்கப் புலவர்கள் கையாண்டது இல்லை.
புத்த விநாயகர் - வேத விநாயகராக்கப்பட்ட மோசடி வரலாறு (2)
நரசிம்மவர்மன் என்றும் ஏழாம் நூற்றாண்டுப் பல்லவன், சாளுக்கியப் புலிகேசியைப் பழிவாங்க பரஞ்சோதி தலைமையில் படையனுப்பினார் எனவும் அப்படை சாளுக்கியப் படையை வென்று சாளுக்கியத் தலை நகரைச் சூரையாடியது என்றும், இப்போரிலே இரண்டாம் புலிகேசி இறந்தான் என்றும் தமிழக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. வ்தாபியும், அதன் அருகிலிருந்த அய்கோளும் சாளுக்கிய சிற்ப கட்டிடக்கலைகளின் சிகரங்களாக இருந்தன என்றும், வாதாபியில் காணப்பட்ட யானைத்தலையும் மனித உடலும் கொண்ட கணபதிக் கடவுளின் கலை யழகு சிறுத்தொண்ட நாயனார் என்று பின்னர் அறியப்பட்ட பரஞ்சோதியை பரவசப்படுத்தியது. எனவே அந்த கணபதி சிலையை பெயர்த்து வந்து சோழநாட்டிலிருந்த தனது ஊரில் நிறுவி கோவிலமைந்தான் என்றும் கூறப்படுகிறது. அந்த வாதாபி கணபதி தான் தமிழ்நாட்டில் கணபதி வழிபாட்டுக்கு அச்சாரமிட்டது என்றும் கூறப்படுகிறது. அதாவது தக்காணப்பகுதியில் ஏற்கெனவே அறிமுகமாகியிருந்த ஒரு பிராமணீயக் கடவுள் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தில் நுழைக்கப்பட்டார். படிப்படியாக அனைத்து மக்களில் உள்ளம் கவர்ந்த கடவுளானார் என்ற கருத்து இங்கு நம்முன் வைக்கப்படுகிறது.
நமது கேள்விகளில் ஒரு சில:
விநாயகர் பிராமணக் கடவுள் தானா? வடக்கில் யானைமுகன் (கஜமுகன்) வழிபாடு எப்போது துவங்கியது?
இந்தியத் துணைக் கண்டத்தின் மிகப் புராதனமான சமயக் கட்டிடங்கள் சிற்பங்கள் பௌத்தத்திற்கு உரியவை.
இன்றைய அளவில் அசோகரால் நிறுவப்பட்ட (பௌத்த) ஸ்தூபிகளும் தூண்களும்தான் மிகத் தொன்மை யானவை. பௌத்த கட்டிடங்கள் பெரும்பாலும் மூன்று வகைப்படும்: 1) ஸ்தூபம் 2) விகாரம் மற்றும் 3) சைத்தியம் என்பவை.
ஸ்தூபம் அல்லது ஸ்தூபி நடுகல், வீரக்கல் போன்ற நினைவுச் சின்னம். புத்தர் அல்லது அவரதுமுக்கிய சீடர் களின் உடற்பகுதிகள் புதைக்கப்பட்டு அவற்றின் மீது எழுப்பப்படும் கட்ட டங்கள். இவைகளை நினைவுச் சின்னங் களாக, மரியாதைக்குரிய சின்னங்களாக எடுத்துக் கொள்ளவேண்டும். பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் அவற்றில் சில வழிபாட்டுக் கோயில்கள் என்று மாற்றம் பெற்றன. விகாரம் என்பது துறவியர் வாழ்விடம். அவரது மக்கள் தொண் டிற்கான அறப்பணிகளின் மய்யம் என்பதாக அவை அமைந்தன.
சைத்தியம் என்பது தியான (மன ஒருமைப்பாட்டுப்) பயிற்சிக்கான இடம் பின்னர் இவை சமூகப் பிரார்த்தனை மய்யங்களாகவும் மாறின. இத்தகைய கட்டடங்களில் ஏராளமான சிற்ப வேலைப்பாடுகள் உள்ளன. அசோகரது தூண்களிலும் பல்வேறு மனித-விலங்கு உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
கி.மு. முதலாம் நூற்றாண்டிற்கு பிறகுதான் கருடச் சின்னங்கள் விஷ்ணு வுடன் தொடர்புபடுத்தி சிற்பங்களில் இடம் பெறலாயின. காளை (ரிஷபம்) சிந்துவெளி நாகரிகத்தில் மட்டுமல்ல, ஜைனமத மரபுகளிலும் ரிஷபதேவர் ஏறும் ஆதிநாதருடனும் தொடர்பு படுத்தி சித்தரிக்கப்பட்டது.
ஆனால் யானைமுகனை குப்தர் காலம் வரையில் காணமுடியவில்லை. அதுவரையில் அஸ்வமேதம், வாஜ பேயம், ராஜசூயம் போன்ற யாகங் களையே மய்யப்படுத்தியிருந்த பிரா மணீயம் குப்தர் காலத்திலிருந்துதான் சிலைகளையும் கோயில்களையும் மய்யப்படுத்துவதாக மாறியது. இதனால் யாகங்களால் புறக்கணிக்கப்பட்டிருந்த பலர், சிலை வழிபாட்டுப் பண்பாட்டை உடையவராக இருந்த பிராமணீயத்திற்கு வெளியே இருந்த வெகு மக்கள் மீது சமயத்தின் பெயரால் பிராமணீயத்தின் ஆதிக்கத்தை நிறுவ முடிந்தது. இந்தப் போக்கின் தென்னகப் பதிப்புதான் ஆழ்வார்களும் நாயன்மார்களும் நடத்திய பக்தி இயக்கம். பிராமணர்கள் புதிய கடவுளரைப் படைப்பதைவிட, ஏற்கெனவே மற்றவர்களால் படைக்கப் பட்டிருந்த உருவக் கடவுளரை ஏற்று அவற்றை பிராமணீயப்படுத்துவதே எளிதானது, வீரியமுள்ளது என்று உணர்ந்து அத்தகைய தத்து எடுக்கும் பணியில் மும்முரமானார்கள். சிவன் - வேதங்களைக் காப்பாற்றும் சிவனா னான்.  பிரணவ மந்திரத்தின் நாயகன் - சாம்பலுடன் பூணூலையும் அணி வித்தார்கள் கொற்றவை - காளி சிவனுக்கு உடலில் ஒரு பாதியானாள். அவளைக் கொண்டே அவளைப் படைத்தவர்களை (மகிஷாசுரன் போன்ற மேய்ச்சல் நாகரிகத் தலைவர்களை) கொலை செய்வித்தனர். மாலவன்-திருமால்-விஷ்ணு என பரிணாம மாற்றம் பெற்றார். ரிக் வேதத்தின் கருமைநிற அன்னியர்களான (கிருஷ்ண)வரின் மேய்ச்சல் நாகரிகத்தின் கண்ணன் என்ற மாயோன், விஷ்ணு வின் அவதாரக் கிருஷ்ணனாக்கப்பட் டான். நப்பின்னை ராதையாக மாறி னாள். அவன் மூலமாகவே அவனை உருவாக்கி வழிபட்டு வந்தவர்களை சூத்திரர்களாக்கினான். ஜைன ரிஷபதேவரின் கைலாயம் சிவனது தலை மையகம் ஆக்கப்பட்டது. ரிஷபதேவரின், ரிஷபச் சின்னம் சிவனது நந்தியானது.
சரி, விநாயகர் விவகாரம் எப்படி?
அதை அறிவதற்கு முன் ஒரு சில தகவல்கள்:
சங்கராச்சாரியார் அகச் சமயம் என்று ஆறு வழிபாட்டு முறைகளுக்கு அங்கீகாரமளித்தார் (ஷண்மதம்) (1) சிவ வழிபாட்டைக் கொண்ட சைவம் (2) விஷ்ணு வழிபாட்டைக் கொண் வைஷ் ணவம் (3) சக்தி வழிபாட்டைக் கொண்ட சாக்தம் (4) தூய வழி பாட்டைக் கொண்ட சௌரமம் (5) குமாரஸ் (குமரன்-கந்தன்) வழிபாட் டைக் கொண்ட கௌமாரம் மற்றும் (6) கணபதி வழிபாட்டைக் கொண்ட கணபதியம்.
பிராமணீயமே படைத்த பிரம்மனும், பிரம்மமும் இதில் இல்லை. பிராமணர் அல்லாத கடவுள் பட்டியலில் பிரம்மன் இருக்கவில்லை. சூரிய வழிபாடு வேதத்தில் இருந்தாலும் அது பாப்புலர் கடவுளாகவில்லை. சூரியனைத் தவிர்த்துவிட்டாலும் மற்ற அய்ந்து கடவுளரும் பிராமணர் அல்லாதவர் களால் படைக்கப்பட்டிருந்த கடவுளர் கள். மற்ற கடவுளருக்கு முந்தைய காலத்தில் குறிப்புகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ காணப்பட்டன. ஆனால் கணபதிக்கு அப்படிப்பட்ட பூர்வாசிரமக் குறிப்புகள் எங்கே? மற்றொன்று,
பல்லவர் சோழர் காலத்தில் சிவ னுக்கு, திருமாலுக்கு எனக் கோயில்கள் எழுப்பப்பட்ட அளவிற்கு மற்ற நான்கு கடவுளருக்கும் எழுப்பப்படவில்லை. மற்ற கடவுளர்கள் சிவன் கோயில்களில் துணைப் பிரகாரங்களில் உப தேவதைகளாக்கப்பட்டனர். முருகனது படைவீடுகளைக் குறிப்பிடும் திருமுரு காற்றுப் படையின் காலத்தைப்பற்றிய குழப்பம் இனியும் தீரவில்லை. ஆனா லும் அவரது படைவீடுகள், (அவை விஜயநகர காலத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டன) தமிழக எல்லைக் குள்ளேயே முடங்கிப் போயின. ஆனால் அந்தக் கடவுளும் பிராமணியத்தை, வைதீகத்தைக் காப்பாற்றி (அ) சூர பத்மர்களை (பத்மாசூரனை = பத்மா+அசுரன் மாற்றிப் போட்டார் சூரபத்மன்) அசுரர்களைக் கொல்கிறான்.
சங்கரர் வாழ்ந்த 8ஆம் நூற்றாண் டில் கணபதி வழிபாடு துவங்கிவிட்டது என்பது விளங்குகிறது. ஆனால் அவருக்கு (படை) வீடு எதுவுமில்லை. தெருமுனை, ஆற்றங்கரை, அரச மரத்தடி, பிடித்துவைத்த சாணி இவையே அவரது வாசஸ்தலங்கள். கணேச சதுர்த்தி எனப்படும் விநாயகர் பிறந்தநாளில், சாணியாலும், களிமண் ணாலும் ஆன பிள்ளையார்கள் குளம், கிணறு, ஏரி, கடல் போன்ற நீர் நிலை களில் அழிக்கப்படுவார்கள். ஆடிப் பெருக்கில் ஏடுகள் அழிக்கப்பட்டதைப் போல. சிவனுக்கு எருதையும், விஷ்ணு வுக்கு கருடனையும், சக்திக்கு சிங்கத் தையும், சூரியனுக்கு குதிரைகளையும், கந்தனுக்கு மயிலையும் வாகனப் படுத்தியவர்கள், அழுக்கிலே உருவாக்கப் பட்டதாக புராணிப்பட்ட கஜமுகனுக்கு மட்டும் இழிவான இருட்டிலே வாழும் எலியை வாகனமாக்கினர். யானைத் தலை-பானை வயிறு, ஒடிந்த கொம்பு, ஒரு கோமாளித்தனமான கலவை (மற்ற ஐந்து கடவுளருக்கும் ஒட்டு உருவம் இல்லை. அழகிய முகம், பரந்த மார்பு, நெடிய உடல், இரண்டுக்கு மேற்பட்ட கரங்கள், ஒட்டிய வயிறு) ஏன் இப்படி?
ஒரு ஒதுக்கப்பட்ட, விரட்டப்பட்ட நிலையில் பிள்ளையார் எப்படி நீண்ட காலம் தொடர்ந்தார்?
சிவனுக்குப் பிள்ளை, கந்தனுக்குத் தமையன், சுந்தரரின் சின்ன வீட்டிற்கு சிவபெருமான தூது சென்றதைப்போல, கந்தனின் காதலுக்கு பிள்ளையார் உதவி செய்வது எல்லாம் பிற்சேர்க்கை.
இதை விளங்குவதற்கு பௌத்த வழிபாட்டு வரலாற்றைப் புரட்ட வேண்டும்.
பெயர் விளக்கம் : ஒப்பீடு:
பிள்ளையாருக்கு விநாயகர், விக் னேஸ்வரன், கணபதி, கணேசன், கஜமுகன், கஜபதி என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்.
கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பு வரையில் இப்பெயர்களில் எந்த பிராமணீயக் கடவுளும் இல்லை. ஆனால் இப்பெயர்கள் எல்லாம் தேரவாத, மகாயான பௌத்த நூற்களிலும், மரபுகளிலும் இடம் பெற்றன. இப்பெயர்கள் அனைத்தும் கௌதம புத்தரைக் குறித்தன.
நாயக் என்றால் தலைவன், விநாய கன் என்றால் மிகச்சிறந்த உன்னதமான தலைவன். மகாயானம் தோன்றும்வரை புத்தர் கடவுளாக்கப்படவில்லை. மாறாக நல்ல தலைவன், நல்லாசிரியர் என்றே அறியப்பட்டார்.
புத்தரது தத்துவங்கள் துக்க உண்மையை விளக்குகிறது. உலகில் மனிதர் அனுபவிக்கும் துன்பங்கள் மாயை அல்ல, உண்மையே என்றார். துன்பத்திற்கு காரணம் விதியோ ஆண்டவன் கட்டளையோ அல்ல; மனிதனின் துன்பத்திற்கு மனிதனே காரணம்; காரணங்களைத் தெளிந்து அவற்றை நீக்கிவிட்டால், துன்பத்திலி ருந்து, வினைகளின் விளைவுகளுக்கு அதாவது விக்கினத்திலிருந்து விடுதலை பெறமுடியும் என்று உபதேசித்தவர் புத்தர். விக்கினத்தை நீக்கும் ஈசன்-ஈசுவரன் என்ற பொருளில் விக்னேஸ் வரன் என்றும் அழைக்கப்பட்டார்.
கணபதி: கணம் என்றால் இனக்குழு என்று பொருள்படும். வேதங்களிலேயே இரண்டுவிதமான அரசியல்: சமூக அமைப்புகளைக் காண்கிறோம். பிரா மணனால் அங்கீகரிக்கப்பட்ட மரபுவழி மன்னரை மய்யமாகக் கொண்ட பிரிவு ஜனம் எனப்பட்டது. குல குடும்பத் தலைவர்களது கூட்டு சபையால் தேர்வு செய்யப்பட்ட தலைவர்களால் ஆளப்படும் பிரிவு (ஒருவகைக் குடியரசு அல்லது பிரபுக்கள் ஆட்சி) கணம் எனப்பட்டது. கணத்தின் தலைமைக்கு உரியவர்கள் கணத்தின் அதிபதி, கணத்தின் பதி என்ற பொருளைத்தரும் கணபதி என்ற சிறப்பைப் பெற்றனர். புத்தர் பிறந்த சாக்கியப் பிரிவு குடியரசு முறையைக் கொண்ட கணம் ஆகும். கணத்தின் தலைவர் என்ற முறையிலும், பௌத்த பிட்சுக்கள் என்ற கணத்தின் தலைவர் என்ற முறையிலும் புத்தரை கணபதி என்றும் அழைத்தனர். ஈசன் என்பதும் தலைவன் அல்லது கடவுள் என்ற பொருளில் வருவது. கணத்தின் ஈசன் கணேசன் ஆவார். கஜபதி: கஜமுகன் என்பதற்கான விளக்கத்தை பௌத்தத் தொன் மங்களிலிருந்து பெறமுடியும். கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில்தான் பௌத்த பீடகங்களுக்கு எழுத்து வடிவம் தரப்பட்டது. அதுபோன்றே மகாயான மும் உருவாகி, புத்தரை கடவுளாக்க முனைந்தது. கடவுளாக்கப்பட்டால் அற் புதங்களை இணைக்க வேண்டுமல் லவா? புத்தர் மரிக்கப் போவதை எங்கோ இருந்த அச்த முனிவர் ஞானத்தால் அறிந்து மாயா தேவியிடம் கூறினாராம்.




Monday, September 17, 2012

சிவன் கன்னத்தில் உதித்தவனாம் வினாயகன்!


                                                    - உடுமலை சித்தன் என்கிற பி.வி. ராமசாமி
இந்த அகோர விநாயகர் விழாவிற்குப் பெயர்தான் விநாயகர் சதுர்த்தி முற்காலப் பெண்கள் இதனை விநாயக சவுத்தி - என்பர். இதற்கு வேதியப் புரோகிதர் இட்ட பெயர் சங்கட ஹரசதுர்த்தி விரதம். ஆவணி மாதம், சதுர்த்தி விரதம், ஆவணி மாதம், கிருஷ்ண பட்சம் சதுர்த் தியில் கைக்கொள்ள வேண்டியது.
பொன் முதலியவற்றால், (இப்போது களிமண்) கணேச திருவுருவம் செய்து, கலசம் வைத்து, ஆவாகித்து விநாயகர் (சக்தி), அந்தச் செம்புக்குள் புகுந்து கொள்ளச் செய்து, சந்திரனுக்கு அர்க்கியம் கொடுத்து, பூசித்து, கணேசரை நோக்கி, தமது சங்கஷ்டம் (சங்கடம் - கஷ்டங்கள்) நீக்க வேண்டி, பலகாரங்களும் மற்றும் கொழுக் கட்டை, சுண்டல், வடை, பொறி கடலை, பழம், தேங்காய் வைத்துப் பூசிப்பது.
இப்படி கந்தமூர்த்தியால் (விநாயகர் தம்பி கந்தன் அண்ணனுக்கு பிரச்சாரம்) ரிஷிகளுக்குக் கூறப்பட்டது. பின்னர் கிருஷ்ணனால் (மாமன் மருமக னுக்குப் பிரச்சாரம்) பாண்டவருக்குக் கூறப்பட்டது - இது புராண விளக்கம்.
கொழுக்கட்டை ஏன்?
விநாயகன் சிறுவனாக இருந்தபோது, சில ரிஷிகளிடம் விஷமம் செய்தானாம். அவர்கள் இவனைப் பிடித்து, தூணில் கட்டிப் போட்டனராம். பின்னர் அவர் யாரென அறிந்து, விடுவித்து மோதகம் (கொழுக்கட்டை) கொடுத்து அனுப்பின ராம். அது முதல் விநாயகருக்கு கொழுக் கட்டைப் படையல் போட்டு பூசை செய்யப்படுகிறதாம்.
யானைக்குப் பச்சரிசி, தேங்காய் வெல்லம் கலந்து உருண்டை உருண்டை யாக உருட்டி கவளம் கவளமாய் கொடுத்து, விழுங்கச் செய்வது வழக்கமாயிற்றே. இதன்படி திருகல் தேங்காய், வறுகடலைத் தூள், வெல்லக் கூட்டு (பூரணம்) வைத்து பச்சரிசி மாவுக் கொழுக்கட்டைகள் யானைத் தலைப் பிள்ளையாருக்கும் விருப்ப உணவாக்கப்பட்டதா?
இவர் பெருச்சாளியை வாகனமாகக் கொண்ட மர்மம் என்ன? யானைப் பசி என்பது அடங்காத பெருந்திண்டிப்பசி. யானை வயிற்றுப் பிள்ளையாருக்கு பெரும் திண்டி ஓயாது தேவைப்பட்டதா? இதனைச் சமாளிக்க, கள்ளக் கடத்தலில் வல்லதான பெருச்சாளியின் உதவியைத் தேடிக் கொண்டாரோ? கஜாயர் என்பதும் இவருக்குப் பட்டம் - கச்சாயம் என்ற வெல்லக் கூட்டு அரிசி மாவு பணியாரத் துக்கும் கஜாயர் என்ற பெயருக்கும் தொடர்புண்டோ?
தோப்புக்கரணம்
பிள்ளையார் முன், பக்தர்கள் எனப்படுபவர்கள் நின்று காதுகளை, கைமாறிப் பிடித்துக் கொண்டுத் தோப்புக்கரணம் போடுவதும், நெற்றியில் (தலையில்) குட்டிக் கொள்வதும் முன்னர் வழக்கம். (இப்போது மிக சொற்பமானவர்) இப்படி ஏன் செய்கிறார்கள் என்பதற்குரிய ஒரு புராணப் புனைச் சுருட்டுக் கதை -கஜமுகாசுரன் (இவனும் விநாயகருக்குப் போட்டியாக, யானை முகத்துடன் பிறந்த வனா?) இந்திரன் முதலிய தேவர்களைப் பிடித்து, தன் முன் நிற்க வைத்து, தலையில் குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் போடச் செய்தானாம். விநாயகர் அந்த கஜமுகா சுரனை அழித்தாராம்.
இந்த அசுரன் சாகும் முன் - தன் முன் இந்திரன் முதலியவர்கள் தோப்புக்கரணம் போட்டதும், தலையில் குட்டிக் கொண் டதும் நீடிக்கச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டானாம். (தேவர்களுக்கு அவமான நினைவுக்குறி!) இதன்படி விநாயகர், தன்னைக் கும்பிடுபவர்கள் இப்படித் தன் முன் தோப்புக்கரணம் போடவும் தலையில் குட்டிக் கொள்ளவும் கேட்டுக் கொண்டாராம்.
இதனால் விநாயக பக்தர்களும் இப்படிச் செய்து வருகிறார்களாம். இது தோல்வி அடிமைத் தனத்தை ஒப்புக் கொள்ளும் அவமான - தண்டனையல்லவா? இதைச் செய்வதால், இதில் என்ன பக்தியும், மனிதர்களுக்குத் தொடர்பும் இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்.
அசுரன், இந்திராதிகளை அவமானப் படுத்த, தண்டிக்க தோப்புக்கரணம் போடச் செய்தான். மனித பக்தர்கள் இப்படித் தோப்புக்கரணம் போட்டு, தலையில் குட்டிக் கொண்டால், தங்களைத் தாங் களே அவமானப்படுத்திக் கொள்வதும், தண்டித்துக் கொள்வதும் ஆகாதா?
இந்திரன் முதலிய தேவர்கள் கஜமுகா சுரன் முன் இப்படிச் செய்ததை விநாயகர் முன் பக்தர்கள் என்பவர்கள் செய்வதென் றால், விநாயகரையும் அசுரனையும் ஒன்றாக் கருதுகின்றனரா?
இந்தப் பிள்ளையார் தன்னைக் கும் பிடும் மாணவர்களுக்கு முத்தமிழ் அறிவு ஊட்டுவது வெறும் கட்டுக்கதை என்பது உலகறிந்த உண்மை. இப்படித் தமிழறிவுக் குப் பதிலாக, மாணவர்களுக்கு அவமான, தண்டனை முறைதானா பிள்ளையாரால் மாணவர்களுக்குக் கிடைத்த பலன்? பிள்ளையாரிடம் தமிழ் கற்றுக் கொடுக்கக் கேட்டதற்கு, தண்டனை போலும், துவக்கப் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள், மாணவர்களை இப்படிக் காதுகளைப் பிடித்துக் கொண்டு தோப்புக் கரணம் போடச் செய்வது!
சதுர்த்தி என்றால்...?
சதுர்த்தி என்ற சொல்லுக்கு, அகராதிப் பொருள் - நான்காம் திதி (நாள்); திரும ணத்தில் நான்காம் நாள் அனுஷ்டிக்கும் நோன்பு.
சதுர்த்தி அறை - திருமணத்தில் நான் காம் நாள் இரவு மணமகனும் மணமகளும் கூடும் அறை.
அருள்பெற குறுக்கு வழி
கணபதி தானம் - நூறு கழஞ்சு பொன்னில் கணபதியின் திருவுருவம் விதிப்படி செய்வித்து, வித்தியேசுவரர், (படிப்புச்சாமி) திக்குப்பாலகர்கள் இவர்களுக்கு நடுவில் சிவலிங்கம் தாபித்து, பூசித்து, எட்டு குண்டம் அமைத்து, அக்கினி காரியம் செய்து (ஓமத்தீ வளர்த்து, தூபதீபம் காட்டுதல்); எழுவர் பிராமண ஸ்திரீகளை அவர்கள் புருடருடன் பூசித்து, ஆடையணி கொடுத்து, பிராமணருக்கு (பொன்சிலை) தானம் செய்வதாகும்.
(இதனால் வரவுக் கணக்கு பார்ப்பனப் பெண்களுக்கும் அவர்கள் மூலம் புருடர்களுக்கும், செலவுக் கணக்கு இப்படிப் பொன்சிலை செய்து பூசைகள் நடத்தியவர்களுக்கு)
திடீர்ப் பிள்ளையார்
கணபதிபற்றிய விஷயம் ஆரிய மத வேதங்களிலோ, தமிழகத்தில் சங்க நூல்களிலோ இல்லை.
பவுத்தாயண தர்ம சூத்திரம் போன்ற ஆரிய மொழி நூல்களில் இந்த விநாயகரை மனிதருக்கு இடையூறுகளை உண்டாக் கும் பூதம் (வேதாளம், பிரம்ம ராட்சசன், இருளன், மாடன், கருப்பன்) என்றுள்ளது. இது விளைக்கும் கேடுகளிலிருந்து தப்ப வழி சாந்தியாகம் என்றும் கூறப்பட் டுள்ளது.
விநாயகருக்கு தூமகேது என்றும் பெயர். தூமகேது நட்சத்திரம் தோன்றி னால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் கேடு விளையும் என்பர் இந்த பவு ராணிகர்களே. இதிலிருந்து இந்த விநாயகரைக் கும்பிட்டால் - பார்த்தால் கேடு விளையும் என்று அவர்களே ஒப்புக் கொள்வதாகவில்லையா?
இவ்விதம் முதலில் விக்கினம் செய்ப வராகக் கற்பனை செய்யப்பட்ட உருவமே, பின்னர் விக்கினத்தை நீக்கும் சாமி யாகவும் அறிவிற்கும் படிப்புக்கும் ஆதிகர்த் தாவாகவும் கருதப்பட்டார். இது உறுதிப் பட்ட - பண்பட்ட அறிவாளர் செயலாகுமா?
பக்த தமிழர்கள் கடிதம் கணக்கு முதலியவை எழுதத் துவங்கினாலும் தலைப்பில் பிள்ளையார் சுழி போடுகிறார் களே - எதற்கு? எழுதுவதற்கு இந்த விநாயகர் விக்கினம் (தடை) செய்வார் - அறிவுத் தடுமாற்றத்தை உண்டாக்குவார் என்ற கற்பனை பயத்தாலா? இப்படிப் பிள்ளையார் சுழி போடாமல், பிற மதத் தினர் - இந்துக்களில் சைவர்கள் என்பவர் களிலும் கூட கோடானுகோடி பேர் கடிதங் களும், கணக்குகளும் எழுதுகிறார்களே - தப்பும் தவறும் நேரிடுகிறதே?
தோன்றிய காலம்
கணபதியின் சிற்பம் முதல் இரண்டாம் நூற்றாண்டில்தான் அரைகுறையாக உருவகப்படுத்தப்பட்டது. நான்காம் நூற்றாண்டில்தான் முழு உருவமும், உறுப்புகளும் அளித்தனர் என்பது சிற்பக் கலைஞர் கணிப்பு, பின்னர் பலவகை உருவங்களில் - உட்கார்த்திருத்தல், நடனமாடுதல், பெண்களைத் தழுவிக் கொண்டிருத்தல் முதலிய உருவங்களில் தீட்டப்பட்டன.
முதலில் வடக்கில், அய்ந்து வெவ்வேறு உருவப் பிள்ளையாக இருந்து பின்னர் அய்ந்து தலைப் பிள்ளையாராக்கப்பட்டார். கணேசனி என்ற பெண் உருவத்தோடும் (விஷ்ணு பெண்ணாகி - ரிஷிகளிடம் பிள்ளைகள் பெற்ற கதைக்கு இது திறமைப் போட்டி போலும்) சில சமயம் பைரவ அம்சத்தோடும் (பைரவன் என்று பெயருள்ள அப்பனான சிவனுக்குப் போட்டி?) பெருச்சாளி வாகனத்தின் மேல் உட்கார்ந்திராமல் மயில் (தம்பி கந்தனுக்குப் போட்டி?) தவளை, ஆமை முதலிய வாகனங்களிலும் அமர்ந்தும் உருவமாக அமைத்தனர். பிள்ளைக்கறி சமைத்து பார்ப்பனத் துறவிக்கு விருந்து வைத்த சிறுத் தொண்ட நாயனாரின் மாமியார் ஊரான திருச்செங்காட்டாங்குடி விநாயகருக்கோ, யானை முகம் நீக்கப்பட்டு மனித முகம் தரப்பட்டுள்ளது.
விநாயகர் யானைமுகம் பெற்ற கதையை நம்பாமலோ, பிற மதத்தினர் நையாண்டி செய்ததைக் கண்டோ, இப்படி மனிதமுகப் பிள்ளையார் சிலை செய்து வைத்துக் கொண்டனர் போலும்.
பெரும்குடும்பி பிரம்மச்சாரி
கணபதி நிரந்தர பிரம்மச்சாரி - தாயைப் போல அழகான பெண்ணைத் தேடியபடி, பெண்கள் தண்ணீருக்கு வரும் கிணற்று மேட்டிலும், ஆற்று மேட்டிலும் உட்கார்ந்திருக்கிறார் என்பது ஊரார் பேச்சுக்கதை. ஆனால் அவர் மடிமேல், சக்தியை அமர்த்திக் கொண்டு, வல்லப (சக்தி) கணபதியாக இருக்கிறார் என்றே அவரது அத்தியந்த பக்தி மதத்தினராக காணபதர் கூறுகிறார்.
கணபதி அறிவையும் பயனையும் தருவதால், அவருக்கு புத்தி, சித்தி என்ற தேவிகளும் க்ஷேமம், லாபம் என்று புதல்வர்களும் இருக்கிறார்கள் என்கிறது மற்றொரு புராணம், தென்னாட்டில் சித்தி - புத்தி ஆலிங்கன விநாயகருக்கு ஆலயங்கள் இருக்கின்றனவாம். இந்த கணபதி - பிள்ளையார் எல்லா இடங்களி லும் - கிணறு - குளம் - ஆற்றங்கரைகளி லும், சந்துக்கள், தெருக்கள், கோவில் முன்னணியிலும் இருப்பதால், மற்ற சாமிகளைவிட அதிகமான பூசையும் பெறுவதாக பக்தர்கள் பெருமைப்பட்டுக் கொள்வர். அர்ச்சகர் - தட்சணைத் தொல்லை இல்லாமல் இலவச தரிசன சாமி என்பதால் தாராளமாக பலர் கும்பிட வாய்க்கிறது போலும்!
இத்துடன், ஆவணி மாத வளர்பிறை நான்காம் நாள் (சதுர்த்தி) விநாயகர் (இயற்கைக்கு முரணான முறையில்) பிறந்து வைத்த நாளாகக் கொண்டு பண்டிகை நடத்துகிறார்கள். இவரை அன்று கும்பிடுகிறவர்களுக்குக் கிடைக் கும் பலன் எப்படியிருந்தாலும் இவரது அலங்கோலக் களிமண் பொம்மைகளால் களிமண் பாண்டத் தொழிலாளர்களுக்கும் கடலை, பொரி, தேங்காய், பூ வியாபாரி களுக்கும் கொழுத்த வருவாய் கிடைக் கிறது - கண் கண்ட பலன்? - அவ்வளவு தான். பூசை போட்டவர்களுக்கோ, ஆற்றில், குளத்தில் கடலில் காசைக் கரைக்கின் றனர் - மண்ணுப் பிள்ளையார்களை அவற் றில் போட்டுக் கரைத்துவிடு கிறார்கள். குழந்தைகளுக்கு கொழுக் கட்டை கடலை, பொரி, பழம் கூடுதல் வருமானம்.
பிறந்த கதைகள்! சிரிப்பானி!
ஒரு காலத்தில் சிவமூர்த்தியும் பிராட்டி யும் நந்தவனத்துச் சித்திர மண்டபத்தில் எழுதியிருந்த ஆண் - பெண் யானை களைப் பார்க்க அவற்றினின்றும் கசமுகர் தோன்றினார்.
(அபிதான சிந்தாமணி)
(கண்ணால் பார்த்தாலும் கற்றுச் சித்திரம் மனிதப் பிள்ளை பெறச் செய்யும் மாயமந்திரமா?) பிரதம மகா சிருட்டியில் சிவமூர்த்தியின் திருக்கண்டத்து உதித் தவர் பிள்ளையார்.
(அபிதான சிந்தாமணி)

Saturday, July 7, 2012

பகுத்தறிவு வினாக்கள்



  • உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்?
  • நடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா?
  • குழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்? ஏன்?
  • எல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்?
  • எல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்?
  • ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்?
  • அவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்?
  • அன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு?
  • முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்?
  • ஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்?
  • மயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்?
  • நோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்?
  • எல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா? தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை?
  • அய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே! தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்?
  • அக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்?
  • பச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா?
  • சிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா?