Sunday, October 14, 2012

புத்த விநாயகர் - வேத விநாயகராக்கப்பட்ட மோசடி வரலாறு (2)


பேராசிரியர் அ.கருணானந்தன்,
வரலாற்றுத் துறைத் தலைவர் (ஓய்வு)
விவேகானந்தா கல்லூரி, சென்னை.

கருவுற்றிருந்த மாயாதேவியின் கனவில் ஒரு யானை அவரது வயிற் றுக்குள் புகுவதைப் போலக் கண் டாராம். கனவு நிமித்தம் என்னவென்று வினவ கனவியல் நிபுணர்கள் பிறக்கப்போவது ஒரு சக்கரவர்த்தி யாகவோ அல்லது ஒரு புத்தராகவோ ஆகப்போகிறது என்று கூறினார்களாம். பௌத்த பக்தர்களுக்கு கருவிலே நுழைந்த யானை புனிதப் பொருளா யிற்று. கஜேந்திரன், கஜபதி பெயர்களின் மூலமும் அதுவே.
அது மட்டுமா?
பிறந்தவுடனேயே அக்குழந்தை தனது பாதங்களால் ஏழு அடிகள் வைத்து முன் சென்று பின்வந்ததாம். அந்த தெய்வீகக் குழந்தை எடுத்து வைத்த பாதங்கள் பின்னர் தர்ம பாதங் களாகின. புத்தரை ஒரு விஷ்ணு அவ தாரமாகப் பார்க்கும் வைஷ்ணவர்கள் தங்கள் ஆண் குழந்தைகளுக்கு தர்ம பாதம் என்ற பெயரைச் சூட்டுவதுண்டு.
உலகின் துன்பத்தைப் போக்கும் மார்க்கத்தைத்தேடி சித்தார்த்தன் என்னும் அரசன் அல்லது ராஜன் தனது அரசையும், குடும்பத்தையும் தியாகம் செய்து துறவுக் கோலம் பூண்டதால் அவருக்குத் தியாகராஜன் என்னும் பெயரையும் பௌத்த மரபுகள் தந்தன. ஆனால் அதே பெயர் இன்று அது பிராமணீயமாக்கப்பட்ட சிவனைக் குறிக்கிறதாம். பாற்கடலில் கடைந்த போது முதலில் தோன்றிய ஆலகால விஷத்தால் தேவர்கள் சாகாமல் காப் பாற்ற, அதனை சிவனே விழுங்கினராம். உடனிருந்த பார்வதி பதறிப்போய் தன் பர்த்தாவின் குரல்வளையை இறுகப் பிடித்து முறுக்கியதால் அந்த ஆல காலவிஷம் சிவன் தொண்டையிலேயே நின்று நீலகண்டன் ஆனாராம் நீலகண்டன் சரி. எதையும் தியாகம் செய்யாமல் தொண்டையிலேயே விஷத்தைத் தேக்கி கொண்ட பரமசிவன் ஈசன் தானே? எப்படி ராஜன் ஆக முடியும்?
வேத விநாயகர் அதாவது பிராமணீய விநாயகர் தோன்றுவதற்கு முன்னே விநாயகம்-கணபதி-விக்னேசுவரன்-தியாக ராஜன் போன்ற வழி படு பெயர்கள் இருந் தன. அவையாவும் புத்தனைக் குறித்தன. ஏதாவது முதலில் இருந்தது புத்த விநாயகர், புத்த கணபதியே.
புத்தர் தமது வாழ் நாளில் கடவுளை ஏற்றதில்லை. தம்மைக் கடவுளாக்கு வதையும் ஒப்புக் கொண்டதில்லை.
அவரது மறைவுக்கு அவரது நினைவைப் போற்ற விரும்பியவர்கள் அவரது சின்னங்களையே பயன்படுத் தினர்.
யானை ஏற்கெனவே புனிதமாக்கப் பட்டு விட்டது.
புத்தர் தெளிவடைந்தது அரச மரத் தடியில் அதாவது போதிமரத்தடியில், அதனால் அரசமரம் அல்லது போதி மரம் வழிபாட்டுப் பொருளாயிற்று. அரசனாயிருந்த புத்தன் ஞானம் பெற்ற மரம் என்பதால் அது அரசமரம், போதம் (ஞானம்) பெற்ற மரமென் பதால் போதிமரம். அரச மரத்தடிகளில், அதுவும் குறிப்பாக ஆற்றங்கரை அரச மரத்தடிகளில் (புத்தர் தியானம் செய்து ஞானம் பெற்ற அரசமரம் நிரஞ்சனா நதிக்கரையில் இருந்தது) யானை உருவம் வைக்கப்பட்டால் அது மும்மடங்கு சிறப்பு பெறுவதாக ஆயிற்று.
புத்தரைக் குறிக்கும் மற்றொரு சின்னம் சக்கரம். சாரநாத்தில் புத்தர் ஆற்றிய முதல் பேருரை தம்ம சக்க பவத்தன (தர்ம சக்கர பரிவர்த்தன அதாவது, புத்தநெறி உலகெங்கும் பரவுவதற்காக சக்கரம் போல் இயங்கத் துவங்கிற்று என்று பொருள்) என்பர். சக்கரம் புத்தநெறியைக் குறிக்கலாயிற்று. (அதனால்தான் சுதந்திரம் அடைந்த பின்னர், அரசியலமைப்பு சபையின் உட்குழு தேசியக் கொடியில் அசோக சக்கரம் அதாவது, பௌத்த சக்கரத்தை வைப்பது என்று முடிவெடுத்தபோது இந்து மகாசபை போன்ற இந்துத்துவ வாதிகள், காந்தியின் ராட்டையை வேண்டுமென்றாலும் போட்டுக் கொள் ளுங்கள். அசோக சக்கரம் தேசியக் கொடியில் இடம்பெறக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தனர்).
வேறொரு பௌத்த சின்னம் பாதங்கள் (தர்ம பாதம்) பௌத்த துறவிகள் இந்தியாவெங்கும் பரவினர். பரவிய இடங்களிலெல்லாம் யானை உருவங்களும், அரச மரங்களும், தர்ம பாதங்களும் பௌத்த வழிபாட்டுத் தலங்களாயின.
இமயத்திலிருந்து கன்னியாகுமரி வரை பாறைகளில் பொறிக்கப்பட்ட பாதங்களைக் காணமுடியும். அரச மரத்தடிகளிலெல்லாம் யானை உருவங்கள் வைக்கப்பட்டன.
புத்தம் மதமானது, மூடநம்பிக்கைகள் பெருகின, நேர்த்திக்கடன்களும் பெருகின.
பக்தி இயக்கம் என்ற போர்வையில் பிராமணீயம் பௌத்தத்தை வேரறுக்க சைவ-வைணவ  வெறிகளைப் பரப்பிய போது பல பௌத்த-சமணக் கோயில் கள் பிராமணீயமாக்கப்பட்டன. கொடுங்கலூர், சபரிமலை, உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கோயில்கள் மதமாற்றம் செய்யப்பட்டன.
திகம்பர அருகதர் பழனியாண்டவரானார். ஜேஷ்டாதேவி என்னும் மூத்தோள் மூதேவி என இழிவுபடுத்தி விரட்டப் பட்டாள்.
யானை உருவங்களுக்கு தொப்பையும், சுணங்கயி கைகால்களுடனான மனித உடல்கள் தரப்பட்டு தொந்தி விநாயகராக்கினர்.
புத்தர் பிறந்த விசாக நட்சத்திரம், கார்த்திகையில் பிறந்தவரெனப்படும் முருகனுக்கு சிறப்பு நாளாயிற்று.
புத்தரது தர்ம சக்கரம், விஷ்ணுவின் சக்கராயுதமாயிற்று.
வீடுகளில் போற்றப்ட்ட பௌத்த யானை உருவங்கள் களிமண், சாணி உருவாங்களாகின. முற்றத்தில் வைக்கப் பட்டவை பின்னர் நீரில் கரைக்கப்பட் டன. புத்தரின் மீதான பிராமணீய வெறுப்பு விநாயகரைச் சாணியாக்கிற்று, கணிமண்ணாக்கிற்று. கொம்பை ஒடித் தது, தெருவோரச் சிறு தெய்வமாக் கிற்று, அழுக்கிலிருந்து பிறந்தவராக கதை கற்பித்தது. கோமாளித்தனமான எலி வாகனம் தந்தது. ஞானத்திற்காக ஆற்றங்கரை அரசமரத்தடியில் தியானம் செய்த புத்தர் அழயான பெண்களை எதிர்பார்த்து ஆற்றங்கரையில் அமர்ந்துள்ளவராகச் சித்தரிக்கப்பட்டார்.
புத்தரது தர்ம பாதங்கள் ராம பாதங்களாகவும், தேவி பாதங்களாகவும், பீம-அனுமன் பாதங்களாகவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டன. இந்தியாவெங்கும், மக்களிடையே பிரபலமாக இருந்து வந்த புத்த யானை - புத்த அரச மரம் - புத்த தர்ம சக்கரம் - புத்த தர்மபாதம் போன்றவற்றை இழிவுபடுத்தி, ஓரங்கட்ட முயன்ற பிராமணீயம், அது வெகுமக்களிடம் எடுபடாது எனத் தெரிந்த பிறகு அவற்றையே பிராமணீயப்படுத்தினர். புத்த சின்னங்களைத் திரிபு செய்தே புத்தத்தின் தர்மத்தை அழித்தனர்.
இதற்கு பக்தி இயக்கம் வசதியாக இருந்தது.
கணாபத்தியம் உருவானது; கணபதி சிவனின் அல்லது அவரது மனைவியின் மகனானார் கந்தனின் தமையனானார்.
தெற்கே கட்டை பிரம்மச்சாரியாக வும், வடக்கே கலியாண விநாயகராகவும் இரட்டை வேடம் அணிந்தார்.
வேத எதிர்ப்பு - கடவுள் எதிர்ப்பு - சனாதன எதிர்ப்பு புத்த விநாயகர் வேத விநாயகரானார்;பிராமணப் பூசகர்களின் வடமொழி மந்திரங்களில் பூணூலுடன் புல்லரித்துப் போனார்.
புத்த எதிர்ப்பு வெறியர்களால் ஒழிக்கப்பட்ட ஒரு கொம்பு, வியாசரும் படிக்கும் மகாபாரதத்தை, அவரது எழுத்தராக இருந்து விநாயகர் பனையோலைகளில் எழுதுவதற்கான எழுத்தாணி என்ற புண்ணியம் தரப் பட்டது. அகத்தியரின் கமண்டலத்தை காக்கை உருவில் வந்து கவிழ்த்து காவி ரியை உற்பத்தி செய்த மகாத்மியமும் வேத விநாயகருக்கு அளிக்கப்பட்டது.
வைணவர்கள் ஒரு படி மேலே சென்று, வைதீகத்தை ஏற்காத அசுரர் கூட்டத்தில் மித்திரபேதம் செய்வ தற்காகவே நாத்திகம் பேசும் புத்த அவதாரமாக விஷ்ணுவின் தசாவதாரப் பட்டியலில் இடம் பெறச் செய்தனர்.
அழிக்க முடியாமலிருந்த புத்தர் நினைவுகளை, சின்னங்களை பிரா மணீயம் அணைத்து, போற்றி, திரிபுகள் செய்து, சனாதனத்திற்குச் சாதக மாக்கியது.
இத்தகை கலை-பண்பாட்டு-தத்துவ மோசடிகளை நமது அறிவாளர்கள் உரிய வண்ணம் புரிந்துள்ளனரா?
பக்திகால சைவர்களும் விஷ்ணு பெரிதா, சிவன் பெரிதா போராட்டத் தில் ஈடுபட்டபோது உருவான ஒரு கதை சிவனின் அடி முடியை விஷ்ணு வும் பிரம்மனும் தேடிய ஒன்றாகும். பன்றி உருவிற் சென்ற மாலும், அன்னப் பறவை உருவில் முடி தேடிச் சென்ற பிரம்மனும் தோல்வியடைந்தனர் ஆனாலும், பிரமன் தான் முடியைக் கண்டுவிட்டதாகப் பொய் சொன்னார், தாழம்பூ பொய்ச் சாட்சியம் கூறியது. விளைவு, பிரமனுக்குக் கோயில் இல்லை என்று ஆயிற்றாம். மற்றொரு சிவக்கதை சைவர்கள் திருப்திபட்டுக் கொள்வதற் காக உருவாக்கப்பட்ட கதை பிரமனின் அய்ந்தாவது தலையை சிவபெருமான் கிள்ளியெறிந்த கதையாகும். பிரணவ மந்திரம் தெரியாத பிரமன் முருகனிடம் குட்டுப்பட்ட கதையும் உள்ளது. பிரம்மனுக்கு கோவில் இல்லாததற்கு சைவ சிவனின் சாபம்தான் காரணமா? சைவர்கள் தங்களைத் தாங்களே சொறிந்துகொள்ள மட்டுமே இக்கதைகள் பயன்படும். உண்மை நிலவரம் வேறு. சங்கரர் உருவாக்கிய சண்(ஆறு) மதங்களில் பிரம்மன் ஏன் தவிர்க்கப்பட்டார். மற்ற கடவுளர்களை பிராமணர் அல்லாத மற்றவர்களுக் காகப் பட்டியலிட்டவர். வேதம் கூறும் பிரம்மனுக்கு ஏன் ஒரு வழிபாட்டு அடையாளத்தைத் தரவில்லை. பிரம் மன் அல்லது பிரம்மம் பிராமணர் களுக்கே உரியவன். பிராமணனே பிரம்மமாகிறான். அவனை மற்றவர்கள் நெருங்காமல், அவனது தனித்தன்மை பாதுகாக்க வேண்டும், பிராமணீய புனிதத்தை, தனித்துவத்தை நீர்த்துப் போகச் செய்யக்கூடாது என்பதற் காகவே சண்மத (சைவம்-வைஷ்ணவம்-சாக்தம்-சௌரபம்-கௌமாரம்-கணபத்யம்)ப் பட்டியலிலிருந்து பிரம்மனை விலக்கி வைத்தனர். ஆனாலும், ஆகமத்திற்குரிய கோவில் களில் பூசகர் உரிமைகளையும், அரசவை யாகங்களுட்கான யக்ஞ உரிமை களையும், ஸ்மிருதி-ஸ்ருதி விளக்க உரிமைகளை ஏகபோகமாக பிராமணர் களும் வைத்துக்கொண்டனர். இந்த ஆறு மதங்களும், வேத-பிராமண-யாக முறைகளும் முதன்மைப்படுத்திப் பாது காத்தன. சங்கரக் கதியில் பிராமணனும் பிரம்மமும் தனியாகவும், உயர்வாகவும் வைக்கப்பட்டனர். சண்மதக் கடவுளர்களுக்காவது சுயமரியாதை இருக்க வேண்டாமா?
எது எப்படியாயினும் ஒன்றை நினைவிற்கொள்ளுங்கள்!
18 புராணங்களில் விநாயகருக்கு என்று எதுவுமில்லை
18 உபபுராணங்களில் கணேசனுக்கு ஒன்றுமில்லை
ஆகமங்கள் சிவனுக்கும், விஷ்ணுவுக் கும், சக்திக்கும் தானே தவிர விநாய கருக்கு என்று எதுவுமில்லை.
புத்த மூலத்தைக் கொண்டிருந்த விநாயகருக்கு வைதீகம் தந்த மரியாதை இதுதான்.
பிறரது உழைப்பை மட்டுமல்ல, பண்பாட்டையும், நம்பிக்கையையும், படைப்பாற்றலையும், கற்பனைகளைக் கூட பிராமணீயம் மோசடியாக தனது லாபத்திற்காக மோசடியாக எடுத்து திரிபு செய்யும் என்பதற்கு விநாயகர் விவகாரம் மற்றுமோர் எடுத்துக்காட்டு.
எதுவும் அற்புதங்களாகத் தரப் பட்டால், கடவுளாக்கப்பட்டால் விபரீதவிளைவுகளே ஏற்படும். புத்தரும் அதற்கு விதிவிலக்கல்ல.
பிராமண மோசடியிலிருந்து உண்மைகளை வெளிக்கொணர பகுத் தறிவு வரலாற்றாளர்கள் இனியும் பணியாற்றுவர் என எதிர்பார்க்கிறோம்.

No comments:

Post a Comment