Showing posts with label மனுதர்மம். Show all posts
Showing posts with label மனுதர்மம். Show all posts

Wednesday, December 22, 2010

ஞான சூரியன் - 23

என்பன முதலிய வேத வாக்கியங்களில் இதே கருத்து அடங்கியிருக்கிறது. இக்காலத்தில் பெண் மக்கள் இத்தகைய விதிகளை அறியாதவர்களாயிருப்பது ஸ்திரீ சூத்ரௌ நாதீயேதாம் என்ற விதியில் கல்வி பயிலப் பெண்களுக்கு அதிகாரமில்லை என்று சொல்லியிருப்பது, இந்து ஆண் மக்களின் அதிர்ஷ்டவசமென்றறிய வேண்டும். இக்காலத்தில் நடைபெற்று வருகிற விவாக கருமங்களையும் அவைகளுக்குரிய மந்திர - தந்திரங்களைக் குறித்தும் நன்றாக ஆராய்ச்சி செய்யவேண்டும். விரிக்கிற் பெருகும்.
நான்கு வருணத்தினரின் பெண்களையும், பிராமணன் விரும்பியவாறு மணம் முடித்துக் கொள்ளலாம் என்று ஸ்மிருதிகளிலும், அங்ஙனமே நடந்து வந்திருப்பதைப் புராணங்களிலும் அப்படியே மலையாளத்தில் இப்போதும் நடந்து வருவதையும் பார்க்கலாம். மணப் பெண்களால் அனுஷ்டிக்கத் தகுந்த கருமங்களுள் ஒன்று 2ஸ்பத்நீ பாதனம் என்பதாகும். பதினாறாயிரத்தெட்டுப் பெண் களுக்குக் கணவனான கடவுளை 3அவனை வழிபடுகிற ஒருவனை மணந்துகொள்ள நினைக்கிற கன்னிகை ஆபிசாரத்தி(சூனியம் முதலிய மந்திர வித்தை)யினாலே யினும் தனது சக்களத்திகளை எதிர்த்து நிற்பதில் குற்றம் ஒன்றுமில்லை. 4ஆரோஹோரும் 1. இம்முறை உடற்கூறும், உடல் தொழிலும் நன் குணர்ந்தவர்களால் வகுத்தது. இதனால் உடல் வலிவு, புத்திக் கூர்மை உள்ள புதல்வரைப் பெறலாம். இல்லையேல் பலவகையிலும் கெடுதலே (பிஞ்சில் பழுத்தது)
2. இச்சொல்லிற்குச் சக்களத்தியைத் துன்புறுத்துதல் என்பது பொருளாகிறது.
3. கிருஷ்ணன்.
4. பிறப்பிலாவது இடையிலாவது ஆண் தன்மை இல்லாமை.
தொடைமீது ஏறு முதலிய வேதமந்திரங்களைக் கற்றுக் கொள்ளுகிற மாணக்கன் குருவினிடத்தில் பணிவுடன் நடந்து கொள்வானானால், அது இக்காலத்தில் அர்த்த ஞானமில்லாத (பொருளையுணராத) அத்தியயனத்தினால் உண்டான நன்மையேயாகும். இத்தகைய மந்திரங்களும் அவைகளின் பொருளும் பெற்றோரிடத்தில் தெளிவாகக் கூறப்படும்.
விவாஹேஷ் வன்ருதம் ப்ரூயாத்
விவாக காலங்களில் பொய் சொல்லலாம் என்றும் விதியுள்ளது. புத்திரப்பேறில்லாமல் கணவன் இறந்துபோன ஸ்திரீயானவள் புத்திரனை விரும்பியவளாய், திருதராட்டிர னுடையவும் பாண்டுவினுடையவும் தாய்களைப் போல நடந்து கொள்ளலாமென்றும் விதியிருக்கிறது.
அபுத்ரா குர்வனுஜ்ஞாதாதேவரம் புத்ரகாம்யயா:
ஸபிண்டம்வா ஸகோத்ரம் வாக்ருதாப்யக்தம் ருதரவிராத் (யாக்ஞவல்கியர்)
பொருள்: தனது நாயகன் இறந்துவிட்டால் அல்லது புத்திரனை உண்டு பண்ணத் தகுதியில்லாவிட்டால், புத்திரப் பேற்றை விரும்புகிற ஸ்திரீயானவள் பெரியோர்களின்1 அனுமதியைப் பெற்று ருதுகாலத் தில் உடம்பில் நெய்யைப் பூசித் தன் கணவனது சகோ தரன் அல்லது அந்தக் குலத்தில் யாரையே னும் புணர்ந்து கொள்ள லாம்.
இவ்விதம் அசர்ப்பஸம்ப வாத கருத்தரிக்கிற வரைக்கும் செய்து கொள்ளலாம். இத னால், கற்புக்கு அழி வில்லையென்றும், ஸ்மிருதி கூறுகின்றது. நாகரிகத்தின் முன்னணியில் நிற்கிற வகுப்பார்களுள் முதன்மையானவர்கள் என்று தங்கள் மூதாதைகளைப் பேசுகிற பார்ப்பனரின் கூற்றையும், மேற்குறித்த பிரமாண வாக்கியங்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இங்ஙனமிருக்க, வியபிசாரம் என்று இவர்கள் கூறுவது எத்தகைய தீய ஒழுக்கத்தையோ, நாமறியோம் வியபிசாரத்திற்கும் பிராயச்சித்தம் விதித்திருக்கிறார்கள்.
1. தமிழர்கள் இதனை முற்றும் அருவருப்பார்கள். - இதற்காகவே திண்டுக்கல்லையடுத்த சிறுமலையில் அவிசாரிக் கணவாயென்று ஒன்றுள்ளது. அதில், அவிசாரியாய்ப் போனவளை நிற்கவைத்துத் தள்ளி விடுவது வழக்கம். இன்னும் அப்பெயர் வழங்கி வருகிறது.
ஹ்ருதாதிகாரம் மலிணாம் பிண்டமாத்ரோப ஜிவினீம்;
ப்ரிபூதாமத: சய்யாம் வாஸயேத் வ்யபிசாரிணீம் (யாக்ஞவல்கியர்)
பொருள்: வியபிசாரம் பண்ணினவளின் ஹிமையை எடுத்துவிட்டு, ஓர் உருண்டைச் சோறு மட்டும் கொடுத்து வெறுந்தரையில் படுக்கச் செய்ய வேண்டும். இவ்விதம் ஓர் ஆண்டு வரையில் செய்தால் குற்றமற்றவளாவாள். (இத்தகைய பிராயச்சித்தத்தினால், வியபிசார தோஷம் நீங்கும் என்ற நம்பிக்கையுள்ளவர்கள் கற்பைக் குறித்துக் கவலைப்படவும் வேண்டியதில்லை.)
அன்றியும், சுலபமான பிராயச்சித்தத்தினால் எத்தகைய குற்றமும் நீங்கிவிடுமென்று விதிக்கிற சமய நூற்கள் மனிதர்களுக்குத் தீமையையே பயப்பனவாம். இந்தப் பிரமாணங்களை நம்பி எண்ணிறந்த தீமைகளை ஒவ்வொரு நாளும் செய்து வருகிறார்கள் என்பது நிச்சயம். கீதை மஹாத்மியம், பிரதோஷ மஹாத்மியம், ஏகாதசி மஹாத்மியம், காயத்திரி மஹாத்மியம் முதலிய புண்ணிய கருமங்களை விரித்துரைக்கிற புராணங்களில் எதைப் பார்த்தாலும் அவைகளில் ஒவ்வொன்றிலும் பார்ப்பனக் கொலை, குரு மனைவியைப் புணர்தல் முதலிய கொடும்பாவங்களைக்கூட போக்கடிக்க வல்லமையுள்ளதாகச் சொல்லப்படுகிறது. சில பண்டிதர்கள் இதை அர்த்தவாதம் என்று சொல்லு கிறார்கள். (பொய் என்பதற்கு அர்த்தவாதம் என்ற பரிபாஷைச் சொல்லை உபயோகிக்கிறார்கள் போலும்) 
-(தொடரும்).
நன்றி:விடுதலை(22-12-2010)www.viduthalai.com 

ஞானசூரியன் - 22

அவைகளைப் பிரமாணத்துடன் ஈண்டுக் கூறுவோம்.
1. பிராமண விவாகமும் அதன் இலக்கணமும்
ப்ராஹ்மே விவாஹ அஹூய தீயதே சக்த்யலங்க்ருதா;
தஜ்ஜ: புனாத்யுபதய; புருஷானேகவிம்ச திம்
பொருள்: தகுந்த வரனைத்தேடி அவனுக்குத் தன் பெண்ணைத் தன்னாலியன்றவாறு அணிகலனால் அலங்கரித்து விதிப்படி விவாகம் செய்துகொடுத்தல் பிராம்மண விவாகம். இந்தப் பெண் வயிற்றிற் பிறக்கிற புத்திரன் இருபத்தொன்று தலைமுறைகளைப் பரிசுத்தம் பண்ணுவான்.
2.தெய்வ விவாகம், 3. ஆர்ஷ விவாகம் இவை இரண்டின் இலக்கணங்கள்
யஜ்ஞஸ்த ரித்விஜே தைல
ஆதாயார்ஷஸ்து கோத்வயம்:
சதுர்க்த சப்ரதமஜ:
புனாத்யுத்தரஜஸ் சஷட் (யாக்ஞவல்கியர்)
பொருள்: யாகம் செய்விக்கிற ருத்விக்குகளுக்குள் (புரோகிதர்களுக்குள்) ஒருவனுக்குக் கன்னிகையைக் கொடுப்பது தெய்வ விவாகம். வரனிடத்தில் இரண்டு பசுக்களைப் பெற்றுக்கொண்டு கன்னிகையைக் கொடுப்பது ஆர்ஷ விவாகம். இந்த விவாகங்களிலிருந்து பிறக்கிற புத்திரர்கள முறையே பதினான்கு அல்லது ஆறு தலைமுறையைப் பரிசுத்தம் பண்ணுவார்கள்.
4. பிரஜாபத்திய விவாகமும், அதன் இலக்கணமும் ஸஹதர்மஸ்சர்ய தாமித் யுக்த்வா
யாதீய தேர்த்திஸே;
ஸ்காய: பாவயத்யாத்ய:
ஷட்ஷட்வம்ஸ்யான் ஸஹாத்மனா (யாக்ஞவல்கியர்)
பொருள்: பெண்ணை விரும்பிக் கேட்கிற வரனுக்குப் பெண்ணைக் கொடுப்பது பிரஜாபத்தியம். இதிலுண்டாகும் புதல்வன் ஏழு தலைமுறையைப் பரிசுத்தமாக்குவான்.
5. ஆசுர விவாகமும், அதன் இலக்கணமும்
ஜ்ஞாதிப் யோத்ரவிணம் தத்வா
கன்யாயாஸ்சைவ சக்தித;
கன்யாதானம் துஸ்வாச்சந்தி
யாதாஸுரோதர்ம உச்யதே (யாக்ஞவல்கியர்)
பொருள்: சுற்றத்தார்களுக்குப் பணம் கொடுத்து கன்னிகையைப் பெற்றுக்கொள்ளுதல் ஆசுரவிவாகம்.
6. காந்தர்வ விவாகமும், அதன் இலக்கணமும்
இச்சயான்யோன் யஸம்பந்த;
கன்யாயஸ்ச; வாஸ்யச;
காந்தர்வ: ஸ்விதிர் ஜ்ஞேயோ
மைதுன்ய காமஸம்பவ
பொருள்: ஆணும், பெண்ணும் ஒருவருக்கொருவர் விருப்பத்தினால் கலந்துகொள்ளு தலே காந்தர்வ விவாகம்.
7. இராக்ஷஸ விவாகமும், அதன் இலக்கணமும்
ஹத்வா, சித்வாச பித்வாச
க்ரோசந்தீம் ருததீம் க்ருஹாத்;
ப்ரஸஹ்ய கன்யாஹரணம்
ராக்ஷஸோ விதிருச்யதே (மனு)
பொருள்: வீட்டிற்குள் புகுந்து அங்குள்ளவர்களைச் கொன்றும் பயமுறுத்தியும் பெண்ணைத் தூக்கிக் கொண்டு போவதே இராட்சச விவாகம்.
8. பைசாச விவாகமும், அதன் இலக்கணமும்
ஸுப்தாம் மத்தாம் ப்ரமத்தாம் வா
ரஹோ யத் ரோபகச் சதி;
............................................. பைசாச:
ப்ரதிகோஷ்டம் (மனு)
பொருள்: தனிப்பட்ட இடத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் போதோ, மூர்ச்சித்து விழுந்திருக்கும் போதோ, புணர்ச்சி செய்தல் பைசாச விவாகம்.
இத்தகைய எண் வகை 1மணங்களுள் விரும்பியவாறு ஏதேனும் ஒன்றின் முறையைப் பின்பற்றி நடந்து கொள்ளலாம். இதனால், அக்காலத்தில் நடந்துவந்த விவாக முறையை ஊகித்து உணருவதே நலம். இம்முறைகளைக் கண்டிக்க இந்துக்களுக்கு உரிமையில்லை. போதாயனனுடைய விதியையும் கேளுங்கள்.
த்ரீணி வர்ஷாண் யருதுமதீ
சாங்க்ஷேத பிதிர் சாசனம்
ததஸ் சதுர்த்தே மாஸேத்
விந்தேத ஸத்ருசம் பதிம்.
1. தமிழ் நூற்களில் களவியல் எனவும், கற்பியல் எனவும் இரண்டே
அல்ப்ய மானே ஸத்ருசே
குணஹீனம் ஸமாஸ்ரயேத் (போதாயனர்)
பொருள்: ருதுமதியான கன்னிகையானவள் 1மூன்று ஆண்டுகள் வரையிலும் பிதாவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும். பிறகு தானாகவே தக்க வரனைத் தேடி அடையலாம். தன் மனத்திற்கேற்றவாறு வரன் கிடைக்காதவிடத்து எத்தகைய புருஷனை யேனும் மணந்து கொள்ளலாம்.
உதவையாசன் தாதாரம் லபத ஏவ,
அதேச பார்த்தா பார்யாம்
(தொடரும்).
நன்றி:விடுதலை(21-12-2010)
-

Sunday, December 19, 2010

ஞான சூரியன் - 21

ஆசீர்வாதத்திலும் வேற்றுமை பாராட்ட வேண்டுமென்று பிரத்திய பிவாதே சூத்ரே என்ற சூத்திரத்தினால் வடமொழி இலக்கண ஆசிரிய ராகிய பாணினி என்பவர் விதித்திருக்கிறார். பரவித்தையைப் போதிக்கிற பகவத்கீதையிலும் இவ்வேற்றுமை காணப்படுகிறது.
யேபிஸ்யு பாபயோனய (கீதை. அத். 9 சுலோ. 32) என்று தொடங்கிய வாக்கியங்களாலும் மற்றும் சூத்தி ரர்களைப் பாவிகள் என்று சொல்லுகிற இடங்களையும் பாருங்கள். வேதாந்த சூத்திரத்திற்குப் பாஷியம் செய்ய வந்த சங்கராச்சாரியார், சூத்திரன் சந்நியாசத்திற்கும், சிரவணத்
1. சூத்திரனிடத்தில் பிராமணன் க்ஷேமம் விசாரிப்பது, நீ நோயில்லாமல் இருக்கிறாயா? என்று மட்டுமே. வேறு, குசலம், அனாமயமா, க்ஷேமமா? என்று கேட்கக்கூடாது. நோயில்லாமல் இருந்தாலல்லவோ தின ராத்திரியும் பார்ப்பனர்கட்கு வேலை செய்யலாம். இதுவே கருத்து.
திற்கும், ஞானத்திற்கும் உரியவனன்று என்கிற தனது பொறாமைக் கொள்கையை நிலைநிறுத்தும் பொருட்டு அபசூத்ராதிக்ரணத்தில்,
பர்ஹமசூத்திர - ச்ரவணாத்ய யனார்த்த
ப்ரதிஷேதாத் ஸ்ம்ருதேஸ்ச
(அ. 1 பாகம் 3, சூத்திரம் 38)
இந்தச் சூத்திரங்களின் பாஷியத்தில் மேற்கோளாக எடுத்துக்காட்டிய ஸ்மிருதி வாக்கியங்கள் வருமாறு:-
1அதஹாஸ்ய வேதமுபஸ்ருண்வத; ஸரோத்ரௌத்ர
புஜதுப்யாம் பூரயேத பூரயேத (கோதமதர்ம சூத்திரம்)
பொருள்: வேதம் ஓதுங்கால், அதைக் காதால் கேட்கிற சூத்திரனது காதுகளில் ஈயத்தையும் மெழுகையும் உருக்கிவிட வேண்டும்.
பத்யுஹவா ஏதத் ஸ்மசானம் வைசூத்ரஸ்த
ஸ்மாத் சூத்ரஸ் மீபே நாத்யேதவ்யம்
பொருள்: சூத்திரன் நடமாடுகிற இடம் சுடுகாடானதால், அவன் பக்கத்தில் வேதமோதலாகாது2
உச்சாரணே ஜிஹ்வாச்சேதோ தாரணே சரீரபேத:
பொருள்: சூத்திரன் வேதத்தை வாயினால் சொன்னால், நாக்கை அறுக்கவேண்டும். உணர்ந்து வைத்திருந்தால், நெஞ்சைப் பிளக்க வேண்டும்.
1. சூத்திரத்தில் அதஹ என்றும் பூரயேத பூரயேத என்றும் மீண்டும் மீண்டும் கூறியிருப்பது கோதமனுக்குச் சூத்திரர்களிடத்திலிருக்கிற பகையை வெளிப்படுத்துகிறது. இவ்விதம் பார்ப்பனன் இங்கிலீஷாவது பைபிளையாவது வாசித்தால், இவ்விதத் தண்டனையுண்டு என்று சொல்லுவதுடன், இந்திய நாட்டிலுள்ள எந்தப் பாஷையும் வாசிக்க வசதியும், இந்தக் கிறிஸ்தவ கவர்ன்மெண்டு கொடாவிடில், இப்பார்ப்பனர்க்கு எவ்வளவு வருத்தம் உண்டாகுமோ, அவ்வளவு வருத்தம் பாக்கியுள்ள அப்பிராஹ்மண சமூகத்திற்கு உண்டென்று நினைத்துக் கொள்ள அறிவுறுத்துகிறேன்.
2. ஆதலால்தான், அய்யங்கார் வீட்டுக்கு அய்யர் போனாலும், அய்யர் வீட்டுக்கு அப்பிராமணன் போனாலும் இவர்கள் குடியிருக் கும் தெருவுக்கு நாடார்கள், பறை யர்கள் வந்தாலும், மயானத்துக் கொப் பிட்டுச் சாணித் தண் ணீர் கொட்டுகிறார் கள். இது ஒரு பரம் பரை வழக்கம்.
நசூத்ராய மதிம் தத்யாத்
பொருள்: சூத்திரனுக்குப் பகுத்தறிவு உண்டாகும்படி யாதுஞ் செய்யலாகாது (யாது ஞான நூலும் கற்பிக்க லாகாது) இவை முதலியன.
பிரமாண வசனங்கள் இப்படியிருக்க, இக்காலத்தில் பார்ப்பனரல்லாதாரில் 1சிலர் சந்நியாசி வேஷம் போட்டுக் கொண்டவர்களும், ஏனையோரும் பகுத்தறிவில்லாது சங்கராச்சாரியார் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லித் திரிகின்றார்களேயெனில், இது இவர்களின் அறியாமையையும், இதனால் இவர்கள் உயிருக்கு ஆபத்து இல்லாமல் வாழ்ந்து வருவது பிரிட்டிஷ் ஆட்சியின் கருணையும் விளக்குகிறது. தங்களின் கட்டளைப்படி நடக்காத பார்ப்பனரல்லாதாரைத் தண்டிக்க, மனுவின் சட்டப்படி பார்ப்பனருக்கு உரிமை இருந்தாலும் பிரிட்டிஷ் ஆட்சியின் பீரங்கி முனையிலும், கத்தி முனையிலும் அது செல்லாது.
பார்ப்பனன் ஒருவன் எதிர்ப்பட்டதும் பார்ப்பனரல்லா தவர் எழுந்து வணங்குவதை இப்போதும் பார்க்கிறோம். இது பார்ப்பனரிடத்தில் தங்களுக்கிருக்கிற பேரன்பைப் பொறுத்தல்லவென்றும், வெகு நாள்களாகப் பார்ப்பனரால் துன்புறுத்தப்பட்டு, வழி வழியாக வந்த பயமே இதற்குக் காரணம் என்றும் அறியவேண்டும். இதைப்போலவே பார்ப்பனரல்லாதாருக்குள்ளேயே உயர்ந்த ஜாதியா னொருவனைக் கண்ட தாழ்ந்த ஜாதியானும் எழுந்து வணங்குவது பயத்தினாலேயாகும். இறந்துபோய் 2பிரேதங்களான பிறகுங்கூட இவ்வேற்றுமைகள் ஒழிந்தபாடில்லை. சூத்திர பிரேதத்தால் உண்டான துன்பம் வைசியப் பிரேதத்திற்குப் பூசை போடுவதாலும் வைசியப் பிரேதத்தின் உபத்திரவம், க்ஷத்திரியப் பிரேதத்திற்குப் பூசை போடுவதாலும், க்ஷத்திரியப் பிரேதத்தின் துன்பம் பிரம்மராக்ஷசுக்குப் பூசை போடுவதாலும் நீங்குவதைக் கண்கூடாகக் காணலாம். பாலக்காட்டிற்கு அருகில் ஒரு கோயில் இருக்கிறது. 1. தென்னாட்டில் காவி கட்டியிருந்தாலும், வெள்ளை கட்டியிருந்தாலும், சூத்திரனைப் பதேசி, பண்டாரம் என்பர். இல்லறத்திலுள்ள பார்ப்பானைச் சாமி சாமியென்று அழைப்பது சகஜமாகிவிட்டது. வேதத்தில் கருமம், பக்தி, ஞானம் என்னும் முக்காண்டங்கள் உள்ளன. கரும காண்டத்தில் ஒரு சிறிதும் அதிகாரமில்லாதவர்கள் ஞான காண்டத்தைப் படிக்கவோ, சந்நியாசம் செய்து கொள்ளவோ உரிமை கிடையாதென்பதை மறந்து கதறுகின்றார்கள். இவர்களுக்கு நல்லுணர்வை இறைவன் அருள் புரிவானாக.   
-(தொடரும்)
ஆக்கம்: சுவாமி சிவானந்த சரஸ்வதி, வெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் முதல் பதிப்பு: 1927 30 ஆம் பதிப்பு : 2010
நன்றி:விடுதலை(19-12-2010) 

Saturday, December 18, 2010

ஞான சூரியன் - 20

எப்படியென்றால், அடிப்பதற்குக் கையேனும், கோலேனும் ஓங்கினால் கையை வெட்டுதல்; காலால் உதைக்க முயன்றால் காலை வாங்குதல்; ஒரே ஆசனத்தில் இருக்க விரும்பினால், பிருஷ்ட பாகத்தை அரிந்துவிடவோ, சூடுபோட்டு நாட்டை விட்டுத் துரத்தி விடவோ செய்தல்; எச்சில் உமிழ்ந்தால், உதடுகளைத் துண்டித்துவிடுதல்; பிராமணன் அருகிலிருக்க மலத்தையோ, மூத்திரத்தையோ விட்டால் அந்த அங்கங்களைத் துண்டித்து விடுதல்; தலைமயிர், தாடி, கழுத்து விருஷணம் (விரைக்கொட்டை) இந்த அங்கங்களைப் பற்றி இழுத்தால், கையை வெட்டுதல் -இவ்வகையான தண்டனைகள் விதிப்பதோடு, சூத்தி ரனைப் பிராமணன் துன்புறுத்தினால், சூத்திரன் சரீரத்தில் தோலைப் பிளந்தால், நூறுபொன் அபராதமும், தசைக்குக் கேடு நேர்ந்தால், ஆறு நிஷ்கம் (ஒருவகை நாணயம்) அபராதமும், தசைக்குக் கேடு நேர்ந்தால், ஆறு நிஷ்கம் அபராதமும் விதித்தல், எலும்புக்குக் கேடுவரின் நாட்டை விட்டுத் துரத்தல் முதலியன செய்யத்தக்கன.
இந்தியாவின் பழைய நற்காலம் நமக்கு ஏற்பட வேண்டும். அதன் பொருட்டு ஹோம்ரூல் வேண்டும் என்கிற திலகர் முதலிய தலைவர்களை ஆதரிக்கிற நம்மவர்கள மேற்குறித்த விஷயங்களை ஞாபகப்படுத்த கடமைப்பட்டிருக்கிறார்கள். ஹோம்ரூல்வாதிகளின் அரசாட்சி மனுவின் அரசாட்சியே. மனுவின் ஆட்சியில் சூத்திரனுடைய நிலையை இன்னும் கேளுங்கள்.
1. நீதியானதால் அதனையே தருமச் சட்டம் என்று கூறுகின்றனர். ஆ! கொடுமை! சூத்திரனை எவ்விதத் துன்பங்களும் செய்யலாம். அதைப் பார்த்தும், கேட்டும் பொறுக்க முடியாத சூத்திரர்கள் யாதாகிலும் சொல்லவோ, தடுக்கவோ செய்தால், அதற்குள்ள தண்டனைகள் ஜனங் களுக்குத் தெரியும் பொருட்டு இங்குக் கூறினேன். இவ்வாறே ரோம் அரசாட்சி நடந்தபோது, யெஹூதிகளும் ரோமன் ஜனங்களும் கலந்து, அந்நாட்டுக் குடிகளை வதைத்து வந்தனர். அத்தருணத்தில் யேசு என்பவர் இந்தியாவில் கல்வி கற்றுத் திரும்பிச் சென்று ஆங்குப் புத்தமதம் போதித்த காரணத்தால், அவரையும் இக்கொடுங் கோல் சட்டமும், இச்சட்டத்தாருடைய மதமும் வேரோடழிய வேண்டியது.
சூத்ரந்து காரயேத் தாஸ்யம் க்ரீதமக்ரீ தமேவவா;
தாஸ்யாயைவ ஹிஸ்ருஷ்டோஸௌப்ராஹ்
மணஸ்ய ஸ்வயம்புவா (மனு)
பொருள்: கூலி கொடுத்தாகிலும், இல்லாவிடிலும் சூத்திரனை வேலை வாங்கலாம். ஏனென்றால், பிராமணனுக்குப் பணிவிடை செய்யும் பொருட்டே இவன் ஸ்வயம்பூ (பிரம்மன்) வினால் சிருஷ்டிக்கப்பட்டான். பின்னும்,
நஸ்வாமினா நிஸ்ருஷ்டோபி சூத்ரோதாஸ்யாத் பிமுச்யதே;
நிஸர்க்கஜம் ஹிதத்தஸ்ய கஸ்மாத்தஸ்மாத போஹதி (மனு)
பொருள்: எஜமான் விட்டுவிட்டாலும் சூத்திரனின் அடிமைத்தனம் அவனை விட்டொழியாது. இது 1இயற்கையானதால் எங்ஙனம் ஒழியும்?*
சக்தேனாபிஹி சூத்ரேண
நகார்யோதன ஸஞ்சய
சூத்ரேண தனமா ஸாத்ய
பராஹ்மணானேவ பாததே (மனு)
பொருள்: பொருளீட்டத் திறமையிருந்தாலும், சூத்திரன் அங்ஙனம் செய்யலாகாது. சூத்திரனுக்குப் பொருள் சேர்த்தால், பிராமணன் துன்புறுவான்.
1.இயற்கையென்று நூல் கூறினும், அடையாள மொன்றும் காணாததனால், எல்லோரும் ஒரேவித உரிமையைப் பெறத்தக்க மனிதர்களேயன்றிச் சூத்திர னென்று தனிப்பட்ட ஒருவகையினர் இல்லையென்பது திண்ணம். சமஸ்காரம் செய்து கொண்டால் யாவரும் துவிஜரே. இது சூத்திரனுக்குக் கூடாதாம்.
*. ஹே, பார்ப்பனரே! இன்னும் சில காலம் போக ஆங்கில அரசாட்சியார், கிறிஸ்தவர்கள் ஆனால் மட்டும் உத்தியோகமும் இங்கிலீஷ் படிப்பும் கொடுக்கப்படும் என்று விதிவெளிப்படுத்தி 7 கோடி ஜனங்கள் அவ்விதிப்படி உத்தியோகத்திற்கும், படிப்புக்கும் ஆசைப்பட்டுக் கிறிஸ்துவ மதத்தில் சேர்ந்தபின், கிறிஸ்துவ மதத்திற்கு இனிமேல் இந்துக்களைச் சேர்ப்பதில்லை யென்று மற்றொரு ஆக்டை பாஸ் பண்ணினால், இந்த மனு உன்னையும் அப்படியே செய்துவிடும். யூரோப்பியன் பிராமணனும், யூரோஷியன் க்ஷத்திரியனும், நேட்டிவ் கிறிஸ்தவன் வைசியனும், இந்தியன் சூத்திரனுமாய் விடுவர்.
உச்சிஷ்ட மன்னன் தாதவ்யம், ஜீர்ணானி வஸனானிச;
புலறகாஸ் சைவதான்யானாம் ஜீர்ணாஸ்சைவ பரிச்சதா
பொருள்: சூத்திரனுக்கு எச்சிலும், கிழிந்துபோன பழைய ஆடையும், நல்ல தானியங்களை எடுத்துக்கொண்டு பதரும் வைக்கோலும் கொடுக்க வேண்டும். இத்தோடு நில்லாமல்
சூத்ரஸ்யது ஜூகுப்ஸிதம் (மனு)
காதில் விழும்போதே அருவருப்பை உண்டு பண்ணத்தக்க பெயர்தான் சூத்திரனுக்கு இடவேண்டும். ஒருவருக்கொருவர் க்ஷேமம் விசாரிப்பதிலும் வேற்றுமை யுண்டு.
ப்ராஹ்மணம் குசலம்ப்ருச்சேத் க்ஷத்ரபந்து மனாமயம்;வைச்ய க்ஷேமம் ஸமாகம்ய
சூத்ரமா ரோக்யமேவச (மனு)
பொருள்: குசலமா? அனாமயமா? க்ஷேமமா? ஆரோக்கியமா? 1(நோயில்லாமல் இருக்கிறாயா?) என்று முறையே பிராமணன் முதலிய வருணத்தினரை விசாரிக்கவேண்டும்.
 - (தொடரும்)
ஆக்கம்: சுவாமி சிவானந்த சரஸ்வதி, வெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் 
முதல் பதிப்பு: 1927 30 ஆம் பதிப்பு : 2010
நன்றி:விடுதலை(18-12-2010)


Thursday, December 16, 2010

ஞான சூரியன் - 19

மகாராஷ்டிர தேசத்தைச் சிவாஜிக்கு முன் துலுக்கர்கள் ஆட்சிபுரிந்து வந்தார்கள். அக்காலத்து வேத சாஸ்திரங் களைக் கற்றறிந்த அவ்வூர்ப் பண்டிதர்களுள் நாற்பதுபேர் பிராமணரல்லாதவர்கள். துலுக்க ஆட்சி சிவாஜியின் ஆட்சியாக மாறினதும், பார்ப்பனர்கள் மனுவின் சட்டத்தைக் சிவாஜிக்கு எடுத்துக்காட்டி, மேற்சொன்ன நாற்பதின்மரையும்
1. குமாரிலப்பட்டரும், திருஞான சம்பந்தரும், மாணிக்க வாசகருமென்று ஏட்டில் காணப்படுகிறது. இவர்கள் சமண புத்தர்களைப்பற்றிச் சொல்லும் கெடுதிகளைக் கேட்டால், இக்கெடுதிக்காக அப்புத்தர்களையும் சமணர்களையும் கொலை புரிந்தது பெரும் பிசகென்று சொல்லத்தகும்.
கொல்வித்தனர். இந்தத் துன்பத்தைப் பொறுக்க முடியாத அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த எழுநூறு பேர்கள் அரசனாகிய சிவாஜியிடம் போய் முறையிடவே, அந்த எழுநூறு பேர்களையும் இரக்கம் காட்டாமல் 1வெட்டியெறியச் செய்தனர்.
அன்றியும் மதுரையில் திருமலை நாயக்கர் ஆட்சி புரிந்து வருங்கால், ஸஹஸ்ர சீர்ஷா புருஷ என்ற வேத வாக்கியத்திற்குப் பொருள் தெரிவிக்கும் படி பார்ப் பனரல்லாதானொருவன் அரசனது குருவைக் கேட்கவும், இரக்க மென்பது சிறிதுமில்லாத பார்ப்பனராகிய குரு வானவர், அரசனிடம் சென்று ஒரு முகூர்த்த காலத்திற்குச் 2செங்கோலைத் தன்னிடம் ஒப்புவிக்கும்படி கேட்டுப் பெற்றுக்கொண்டு தன்னிடம் வேதத்திற்குப் பொருள் கேட்டவனை வரவழைத்து, அவனது ஆசனத்துவார வழியாக ஒரு கழுவூசியை உச்சிக்குமேல் பத்து அங்குலம் எழும்பியிருக்கும்படி ஏற்றி, இந்தச் சூத்திரப்பயல் வேதத்திற்குப் பொருள் கேட்டான். சூத்திரர்களுக்கு வேதத்தின் பொருள் இத்தன்மையேயாகும் என்று கூறியதையும், இதைப்போல் நிகழ்ந்த பற்பல கொடுமை களையும் பரம்பரையாகத் தெரிந்து வைத்திருக்கிற அந்தந்த நாட்டுக் குடிகள் இன்னும் நினைத்து வருந்துகின்றார்கள்.
இவ்விதமாகப் பார்ப்பனர்களின் கொடுஞ்செயல்களில் சிலவற்றையும் நாதர்ஷா, மகமது கஜனி, தைமூர் முதலிய துலுக்க அரசர்களின் கொடுஞ் செய்கைகளையும் ஒப் பிட்டுப் பார்த்தால், பார்ப்பனக் கொடுமையின் முன்னால், துலுக்கக் கொடுமைகள் சூரியனுக்குமுன் சிறு மின்மினி போல் தெரியுமென் பதில் சந்தேகமில்லை. சிறிது காலத்திற்குமுன் நம் நாட்டில் பிரிட்டிஷார் ஏற்படுத்திய ரவுலட் சட்டமும் இதற்கு முன் எம்மாத்திரம்? சூத்திரர் களை ஒடுக்கும் பொருட்டுப் பார்ப்பனர்கள் கையாண்டு வந்த ரவுலட் சட்டத்தை சனாதன தருமம் என்ற பெயரால் மறைத்து வைத்துத் தருணத்திற்கேற்றவாறு கையாண்டு வந்தார்கள். பிரிட்டிஷ் ஆட்சியாகிய இக்காலத்தில் உண்மை சிறிதாக வெளிப்பட்டு வரவே, தயானந்த சரஸ்வதி யென்ற பிராமணத் துறவி வெளியில் வந்து, அய்யர் முன்னோர் கள் வேதங்களினுடையவும் ஸ்மிருதி களினுடையவும் உண்மைக் கருத்துகளை 1. இத்தகைய உத்தம நீதி மனு அதருமச் சட்டத்தை நிலைநாட்ட வேண்டுமென்று பேராசையை மனத்தில வைத்துக்கொண்டல்லவா ஹோம்ரூல் வேண்டுமென்று கதறுகிறார்கள்? இச் சூதினை ஒரு சிறிதும் உணராத நம்மவர் களும் சேர்ந்து கொண்டு கூத்தாடுகி றார்களே!
2. அரசுரிமை, அதாவது அரசனது அதிகாரம்.
உணரத்தக்க ஆற்றல் படைத்தவர் களென்று. அவைகளை உணர்ந்தவன் நான் ஒருவனே என்று கூறி ஜனங்களை ஏமாற்றும்படியாகப் பொருள்களை வேதத் திற்குக் கற்பித்து ஆரிய சமாஜம் என்கிற பெயரால் பிரச்சாரம் நடத்தி வருகிறார். சகோதரர்களே! அன்னாரின் உபதேச மொழிகளைக் கேட்டு மோசம் போகவேண்டாம்.
பின்னும்,
யேனகேன சிதங்கேன
ஹிம்ஸ்யாச் சேச்ரேஷ்ட மந்த்யஜ;
சேத்தவ்யம் தத்த தேவாஸ்யதன்
மனோரனுசாஸனம்
பாணிமுத்தமய தண்டம்வா
பாணிச் சேதனமர்ஹதி;
பாதேன ப்ரஹரன் கோபத்
பாதஸ்யச் சேதமர் ஹதி.
ஸஹாஸன மபிப்ரேப்ஸு ருத்க்ரிஷ்ட்டஸ்யா
பக்ரிஷ்டஜ;
கட்யாம் க்ருதாங்கோ நிர்வாஸ்ய:
ஸ்பிசம்வாஸ்யா பகர்த்தயேத்.
அவநிஷ்டீபிதோ தர்ப்பாத்
த்வா வோஷ்டௌ கேதயேந்த்ருப;
அவமூத்ரயதோ மேட்ரமவமர்
சயதோ குதம்.
கேசேஷுக்ருஹ்ணதோ ஹஸ்தௌ
சேதயேதவிசாரயன்;
பாதயோர் தாடி காயாம்ச
க்ரீவாயாம் வ்ருஷணேஹுச
த்வக்பேதக: சதம் தண்ட்யோ
லோஹிதஸ்ய சதர்சக;
மாமஸபேத்தாது ஷண்ணிஷ்கான்
ப்ரவாஸ்யஸத் வஸதி பேதக (மனு)
பொருள்: சூத்திரன் உயர்குலத்தோனை எந்தெந்த அவயவங்களில்
துன்புறுத்துகிறானோ அவனது அந்தந்த அவயவங்களை வெட்டி எறிந்திட வேண்டும். இது மனுவின் 1கட்டளையாகும்.
- (தொடரும்)
ஆக்கம்: சுவாமி சிவானந்த சரஸ்வதி, வெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் முதல் பதிப்பு: 1927 30 ஆம் பதிப்பு : 2010
நன்றி:விடுதலை 16-12-2010

Wednesday, December 15, 2010

ஞான சூரியன் - 18

பார்ப்பனரல்லாதார் முன்னேற்றமடைய விரும்புவார் களாயின், முதன் முதல் பார்ப்பனர்கள் நம்மைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் என்கிற எண்ணத்தையும், அவர்களின் சமயத்தையும் உதறித்தள்ள வேண்டும். தங்களது முன்னேற்ற வழியை மறித்து வைத்திருக்கிற இப்பெருங் கற்பாறைகளைப் பார்ப்பனரல்லாதார் ஒன்று சேர்ந்து உடைத்துப் பொடி பண்ணிவிட வேண்டும் (இதற்காகவே சாம்மியவாதம் தோன்றியது)
முற்காலத்தில் பார்ப்பனரல்லாதார், பார்ப்பனர் செய்யும் கொடுமைக்கு ஏதேனும் திருப்பிச் செய்தால், தண்டனை விதித்து வந்த வேடிக்கையையுங் கேளுங்கள்.
சதம் ப்ராஹ்மணமாக்ருச்ய,
க்ஷத்ரியோ தண்டமர்ஹதி:
வைச்ய: ஸார்த்தசதம் சைவ
சூத்ரஸ்து வதமர்ஹதி (மனு)
இதன் பொருள்: பிராமணனது மனம் நோகும்படி க்ஷத்திரியன் ஏதேனும் மொழிந்தால் அவனுக்கு நூறு பொன்னும், வைசியன் அங்ஙனம் செய்தால், அவனுக்கு நூற்றைம்பது பொன்னும் அபராதம் விதிக்க வேண்டும். பிராமணர்களைத் திட்டுகிற சூத்திரனைக் கொன்றுவிட வேண்டும்.
மற்றும்,
ஆர்யஸ்த்ர்ய பிகமனே லிங்கோத்தார:
ஸ்வஹ ரணஞ்ச (கோதமதர்மசூத்திரம்)
பொருள்: மூன்று வருணத்தாருடைய பெண்களில் எவளையேனும் சூத்திரன் கைப்பற்றினால், அவனது பொருளைக் கொள்ளையிடுவதோடு, ஆண் குறியையும் அறுத்துவிட வேண்டும். எதிர்மறையாக,
ஸ்த்ரீ ரத்தம் துஷ்குலாதபி
சூத்திரனது அழகிய பெண்ணை த்விஜர்கள் கைப்பற்றிக் கொள்ளலாம் என்றும் பிரமாணமுண்டு. மற்றும், ஏகஜாதிர் த்விஜாதீம்ஸ்து
வாசா தாருணயாக்ஷிபன்
ஜிஹ்வாயா: ப்ராப் நுயாச்தேசம்
ஜகன் யப்ரபவோ ஹிஸ: (மனு)
பொருள்: மூன்று வருணத்தினரில் யாரையேனும் சூத்திரன் திட்டினால், அவனது நாக்கை அறுத்துவிட வேண்டும். ஏனெனில், அவன் தாழ்ந்த அங்கத்தினின்றும் பிறந்தவனன்றோ?
முற்காலங்களில் இந்தச் சட்டத்தின்படி பலரைக் கொன்றும், நாக்கறுத்தும் பயமுறுத்தியதன் வாயிலாகவே இன்றும் இவர்களைப் பார்த்தவுடன் பயந்து எழுந்து நின்று, சுவாமி என வணங்குவது 1ப்ராஹ்மணா யமகாதக என்ற பழமொழியும் இதற்குச் சான்றாம். பார்ப்பனர்கள் மலையாளத்தில் செய்த தீச்செயல்கள் அளவிறந்தன. மனுஸ்மிருதியின் படிக்குள்ள உரிமை போதாதென்று பேராசையினால், சங்கரஸ்மிருதி எனத் தங்களுக்கு மட்டும் ஒரு ஸ்மிருதி எழுதி வைத்துக் கொண்டு, அங்குள்ள நாயர் பிரபுக்களை மயக்கி, அவர் களைத் தங்களின் துணைக்கருவியாக வைத்துக்கொண்டு ஏழைகளைத் துன் புறுத்தி வருகிறார்கள். ஆனால், இந்த நாயர் பிரபுக்களையா வது ஒழுங்காக வாழச் செய்தார் களா? 2ஊராண்மை முதலிய அய்ந்து ஆண்மைகளும், கோன்மையும் எங்களுக்குச் சொந்தம். இந்த நாட்டிற்கே நாங்கள்தான் தலைவர்கள் என்று வீரம் பேசுகிற இப்பிரபுக்களின் குடும்ப ஒழுக்கங்களைப் பற்றிக் கேட்கிற மறுநாட்டார் யார்தான் அருவருப்படைய மாட்டார்கள்?
இக்காலத்தில் நம்மவர்கள் அடைந்து வருகிற கஷ்டங்களுக் கெல்லாம் முதற்காரணம், புத்த பகவானுடைய கொள்கைகளைக் கைநழுவ விட்டதோடு, கருணையே உருவாய் விளங்கிய அம்மதத் துறவிகளையும் இரக்க மின்றிக் கொலை புரிந்ததுவேயாகும். புத்தமதக் கொள்கை களையும் துறவிகளையும் நாசம் பண்ணிய பல பார்ப்பனர் களுள், சங்கராச்சாரியார் 1. எமனைப் போல் உயிர்களை வதைக்கிறவர்கள்.
2. ஊராண்மை, நகராண்மை, வேளாண்மை, ஆசாண்மை, நாட்டாண்மை என்பதுடன் கோன்மை என்பது அரசுரிமையாம்.
1முதன்மையானவராவார். இவர்களின் சூழ்ச்சியாகிய வஞ்சகச் செய்கையினால் வருந்தும் இக்காலமே நமது நற்காலமென்றறிய வேண்டும்.
கும்பகோணக் கிருதம் பாபம்
கும்பகோணே வினஸ்யதி
கும்பகோணத்தில் செய்த பாபம் கும்பகோணத்திலேயே ஒழியும் என்றவாறு நமதுநாட்டில் நடந்த இந்தச் செயலுக்கு நமது நாட்டிலேயே பிராயச்சித்தம் செய்தாக வேண்டும். (பார்ப்பனச் சமயத்தையும் அறவே ஒழித்து, விடுதலை யடைவதே தக்க பிராயச்சித்தமாம்)
சூத்திரனும், தண்டனையும்
நாம ஜாதிக்ரஹம் த்வேஷாமபித்ரோ
ஹேணகுர்வத:
நிக்ஷேப்யோ யோமய: சங்கு
ஜ்வலன்னாஸ்யே தசாங்குலம்:
தர்மோபதேசம் தர்ப்பேண
விப்ராணா மஸ்யகுர்வத:
தப்தமாஸே சயேத்தைலம்
வக்த்ரே ஸ்ரோத்ரே சபார்த்திவ: (மனு)
பொருள்: பிராமணனுடைய பெயரோ, அவனது குலப்பெயரோ கேட்கிற சூத்திரனுடைய வாயில் பத்து அங்குல அளவுள்ள இரும்பாணியைப் பழுக்கக் காய்ச்சிச் செலுத்த வேண்டும். பிராமணனுக்கு ஒழுக்கத்தைப் போதிக்கிற சூத்திரனுடைய காதுகளில் எண்ணெயைக் காய்ச்சிவிட வேண்டும்.
இத்தகைய தண்டனைகள் முற்காலத்தில் ஆங்காங்கு நடந்திருக்கின்றன. (தொடரும்)
ஆக்கம்: சுவாமி சிவானந்த சரஸ்வதி, வெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் முதல் பதிப்பு: 1927 30 ஆம் பதிப்பு : 2010
நன்றி:விடுதலை 15-12-2010

Tuesday, December 14, 2010

ஞானசூரியன் -17

அரசும், அமைச்சும்
அக்காலத்தில் சுயராஜ்யம் கேட்ட நமது பார்ப்பனத் தலைவர்கள் அருவருக்கத் தகுந்த தங்கள் சமயத்தைப் பாட்டிற் பொதிந்து, நமது வேதத்தில் அரசு முறையைக் குறித்து வெகுவாகக் கூறியிருக்கிறது. கவுடில்யர் தமது அர்த்த சாஸ்திரத்தில் குடிகளுக்கு இணங்கியே அரசன் நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். முற்காலத்திய அரசர்களும் குடிகளின் கருத்துக்கிணங்கிய ஆட்சிபுரிந்து வந்தார்கள். கவுடில்யர் ராஜ்யம் அல்லது இராம ராஜ்யம்தான் நமக்குத் தேவை என்று கூறு கிறார்களே; நம்மவர்களிற் சிலரும் இவர்களின் பாட்டிற்கு இசைந்து கூத்தாடுகிறார்களே!
இது முறையன்று. நமது நிலைமை 1சீர்படாதவரையில் (பிறப்பினால் உயர்வு - தாழ்வு என்கிற வேற்றுமை ஒழிந்து போமளவும்) பிரிட்டிஷ் ஆட்சியே தேவை. கவுடில்ய ராஜ்யமும், ராமராஜ்ஜியமும் பார்ப்பனர்களுக்கே இருக்கட்டும்.
அமைச்சுத் தன்மைக்கு உரியவன் பார்ப்பனனே என்பதற்கு மனுவின் கூற்று வருமாறு:
ஜாதிமாத்ரோபஜீவீவா காமம்ஸ்யாத் ப்ராஹ் மணப்ருவ;
1. கல்வியிலும், மக்கள் சமூகத்திலும், சமயத்திலும் (கொள்கையிலும்) கோவில்களிலும் சமத்துவமாகிய சீர்திருத்தம் ஏற்படாத வரையிலும் ராஜாங்கச் சீர்திருத்தம் மெல்ல மெல்லப் பெறுவதற்காக வேண்டிய வேலை செய்வதே ஜஸ்டிஸ் கட்சியாகும். தமிழர் கட்சி (சாம்மியவாத கட்சி) அதையே கேட்கிறது.
தர்மப்ரவக்தா, ந்ருபதேர்
நது சூத்ர; கதாசன (மனு)
பொருள்: (பஞ்சமா பாதகங்களுக்கு விளை நிலமாயிருந்தாலும்) பிறவியினாலேனும் பிராமண குலத்தில் பிறந்த ஒருவனை அரசன் மந்திரியாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அறிவில் மிகுந்தவனாயினும், சூத்திரன் ஒருபோதும் அரச சபைக்கு உரியவனாகமாட்டான். இதை மீறிச் சூத்திரன் மந்திரியாயிருந்தால், அந்நாடு சீர்கெடு மென்பதற்கு மனு கூறியதாவது:-
யஸ்ய சூத்ரஸ்து குருதே
ராஜ்யே தர்ம விவேசனம்
தஸ்ய ஸீததிதத்ராஷ்ட்ரம்
பங்கே கௌரிவ பஸ்யத;
யத்ராஜ்யம் சூத்ர பூயிஷ்டம் நாஸ்தி காக்ராந்தமத்விஜயம்,
வினஸ்யத்யாசு தத்ச்ரித்ஸ்னம்
துர்ப்பிக்ஷம் வ்யாதி பீடிதம்
பொருள்: எந்த நாட்டில் சூத்திரன் மந்திரியாகயிருக்கி றானோ, அந்த நாடு சேற்றில் முழுகின பசுவைப்போலப் பார்த்துக் கொண்டிருகுக்கம் போதே அழிந்துபோகும். எந்த இடம் சூத்திரர்களாலும், வேதத்தை நம்பாதவர்களாலும் நிறைந்து 1வேதியர்கள் இல்லாததாகவும் இருக்கிறதோ, அந்தநாடு பஞ்சநோய் முதலிய கேடுகளால் விரைவில் அழிந்து போகும். கல்வியை விரும்புகிற சூத்திரன் மனுவின் சட்டப்படி தண்டிக்கத்தக்க வனாவான். இத்தகைய சட்டம் அமலில் இருக்கு மிடத்து, எங்ஙனம் முன்னேற்றம் அடைய முடியும்? சூத்திரன் என்கின்ற சொல்லிலேயே தாழ்ந்தோன்; அடிமை, முன்னேற் றத்திற்கு உரிமை யில்லாதவன் இவை முதலிய இழிவுப் பொருட்களும் மற்றும் அடங்கி யிருக்கின்றன.
ந சூத்திர ராஜயே நிவஸேந் நதார்மிக ஜனாவ்ருதே;
1. பார்பனர்களாகிய ஆரியர்களை என்க.
ந பாஷண்டி ஜனாக்ராந்தே
நாபஸ்ருஷடேந்த்ய ஜேந்ருபே (மனு)
பொருள்: சூத்திரன் ஆட்சிபுரிகிற நாட்டிலும் குடியிருக்கலாகாது.
இக்கருத்தின்படி பார்ப்பனரல்லாதார் ஆட்சிபுரியும் நாட்டில் பார்ப்பனர்கள் குடியிருக்கலாகாதே? இக்குறை தீர்க்கும் பொருட்டு அரசர்களை 2ஹிரண்ய கருப்பம் என்ற விதியினால் க்ஷத்திரியர்களாகச் செய்துகொள்ள வேண்டியது என்கிற தந்திரத்தையும் செய்தார்கள்; செய்து கொண்டு வருகிறார்கள். இது திருவாங்கூர் சமஸ் தானத்தில் இப்போதும் நடைபெற்று வருகிறது. இவ்விதம் க்ஷத்திரியத் தன்மையை அடைந்த அரசனைத் தங்கள் சுயநலத்தைச் சாதிக்க ஒரு கருவியாகவும் வைத்துக் கொள்ளுகிறார்கள். ஓணான் பெருத்தது உடும்பு, உடும்பு பெருத்தது முதலை என்று மலையாளத் தில் ஒரு பழமொழியுண்டு. அதைப்போலச் செய்கை. க்ஷத்திரியர் களும் தங்களை உயர்ந்தோர்களென்றும், சூத்திரர்கள் இயற்கையாகவே தாழ்ந்தவர்களாகையால், மனுஸ்மிருதிப் படி அவர்களை முன்னுக்கு வரவொட்டாமல் ஒடுக்குவதே தங்கள் கடமை என்றும் நினைக்கிறார்கள். இத்தகைய செயற்கைச் சனியன்கள் இல்லாவிடில், நம்மினத்தவர் என்கிற அபிமானத்திலேனும் சற்று இரக்கங் காட்டுவார் களல்லவா? இவ்வாறு க்ஷத்திரியர்கள் என்று சொல்லி, அவர்களையும் ஏமாற்றிப் பணத்தையும் பறித்து வருகிறார்கள். இச்சூதினை இன்னம் உணராமலிருப்பதே பெரும் வியப்பு!
ஆனால், இங்கு ஒரு அய்யம் நிகழுகின்றது. இவர்களின் நீதி அனுபவத்திற்குப் பொருந்தவில்லை. அய்ரோப்பா, அமெரிக்கா, ஜப்பான், சைனா முதலிய பிற நாடுகளில் பிராமணர்களும் அவர்களின் சமயமும் கிடையாது. அங்ஙனமிருந்தும், அந்நாடுகள் முன்னேற்ற மடைந்தும், பிராமணர்கள் இருக்கிற இந்நாட்டின் குடிகளும் செல்வமும், அறிவும் வரவரத் தாழ்வடைந்து வருவது என்ன காரணம் பற்றியோ? இதைப் பற்றிப் 2. தங்கத்தால் பசுவின் உருவைச் செய்து, அதன் வயிற்றுள் புகுந்து வெளிப்படுதல் இரணிய கருப்பம். இத்தங்கப் பசுவைப் பார்ப்பனர்களுக்குத் தானம் கொடுக்க வேண்டுமாம். (திருவனந்தபுரம் முதலிய) சில ராஜாக்களைப் பட்டத்திற்கு வருமளவும் சூத்திர ஜாதியாகவேயிருந்து பட்டத்திற்கு வந்தவுடன், ஷத்திரிய ஜன்மமெடுக்கச் செய்கிறது என்பது பொருள்.
பிராமணக் கடவுளையோ,மனுவையோ நேரில் கண்டுதான் கேட்க வேண்டும்!
-(தொடரும்)
ஆக்கம்: சுவாமி சிவானந்த சரஸ்வதி, வெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் முதல் பதிப்பு: 1927 30 ஆம் பதிப்பு : 2010