Sunday, October 7, 2012

புத்த விநாயகர் - வேத விநாயகராக்கப்பட்ட மோசடி வரலாறு (1)


பேராசிரியர் அ.கருணானந்தன்,
வரலாற்றுத் துறைத் தலைவர் (ஓய்வு)
விவேகானந்தா கல்லூரி, சென்னை.

...... இந்துக்கள் என்போர்களின் தெய்வங்கள் என்பவை முழுவதும், அதாவது பிள்ளையார் முதல் பிரணவ சொரூபம் வரை அப்புராணக் கூற்றில் கற்பிக்கப்பட்ட தெய்வங்களாகவும், அவைகளினுடைய நாமங்களும், ரூபங்களும், குணங்களும், செய்கைகளும் எல்லாம் அப்புராணக் கூற்றைக் கொண்டதாகவும் காணப்படுவதும் அதற்கு மக்கள் செய்யும் பூசனை, வேண்டுதல், உற்சவம் முதலிய யாவும் கற்பனைகளையே ஆதாரமாகக் கொண்டதாக ...... பொதுநோக்கில் நன்று சுருதி, யுக்தி, அனுபவம், சையன்ஸ் ஆகியவைகளுக்கு ஒத்த முறையில் நின்று புராணக் கூற்றை ஆராய்வோம்.

பெரியார், புராணம் என்பதன் முன்னுரையில் திராவிடர் கழக வெளியீடு, பத்தாம் பதிப்பு 1999.
கிராமத்து வீடுகளின் முற்றங்களில் சாணிப் பிள்ளையாராக இருந்த ஒன்றை அரசியல் பிள்ளையாராக, தேசியப் பிள்ளையாராக, இந்து வகுப்புவாதப் பிள்ளையாராக மாற்றியவர் தீவிரவாதி என்று புகழப்படும் (?) பாலகங்காதர திலகர். 1898 ஆம் ஆண்டு அவர் விநாயக சதுர்த்தியை அரசியல் கணேச பூஜையாக மாற்றியமைத்து பாமரர் களுக்கு மதஉணர்வை வெறியாக மாற்றி, இந்துத்துவ அரசியலுக்கு அச்சார மிட்டார். இதைத் தொடர்ந்து சிவாஜி விழா, பசுபாதுகாப்பு அமைப்பு, தடி பயிற்சி அமைப்பு போன்றவையும் அமைக்கப்பட்டன.
விநாயகரின் வாகனமாம் எலிகள்
பம்பாய் மாநிலத்தில் பிளேக் நோய் பரவி நூற்றுக்கணக்கானவர்கள் இறந்தபோது பிளேக் நோய் (தடுப்பு) கமிஷன் ஒன்று பம்பாய் அரசால் உரு வாக்கப்பட்டது. அந்தக் கமிஷன், பிளேக் நோய் பரவுவதற்கு சுகாதார மற்ற இருண்ட இடங்களில் நடமாடும் எலிகளே காரணம் என்று கண்டறிந்து பிளேக் நோயைக் கட்டுப்படுத்த எலிகளை ஒழிப்பது அவசியம் என்று கூறியது. எலிகளைப் பிடித்து அழிப் பதற்காக பிளேக் கமிஷன் அதிகாரி களும், அலுவலர்களும் வீடுவீடாகச் சென்றனர். விநாயகப் பெருமானின் வாகனமான எலிகளைக் கொல்வது இந்துமத உணர்வைப் புண்படுத்துவ தாக அரசியல் விநாயகர்களின் பக்தர்களால் பிரச்சாரம் செய்யப் பட்டது. திலகரின் கேசரி பத்திரிகை பிளேக் கமிஷனைச் சாடியது. கலவ ரங்கள் வெடித்தன. பிளேக் கமிஷனர் ர்ண்ட் என்பவரும் அவரது துணை அதிகாரி அயர்ஸ்ட் என்பவரும் கொலை செய்யப்பட்டனர். 1897இல் திலகர் கைது செய்யப்பட்டார். 18 மாதக் கடுங்காவல் தண்டனைக்கு ஆளானார்.
அன்று கணேசர்-கணேச பூஜை அதிகாரிகளைக் கொலை செய்வதற்கு மட்டுமல்ல, முஸ்லீம் எதிர்ப்பு வகுப்புக் கலவரங்களுக்கும் வன்முறை அரசிய லுக்கும் காரணமாக அமைந்தன. இவ்வாறு அரசியல் பிள்ளையார் 1893இல் அவதாரமெடுத்தார். இதற்கு 60 ஆண்டுகள் கழித்து 1953இல் தந்தை பெரியார் அவர்கள் பிள்ளையார் சிலைகளை உடைக்கும் போராட் டத்தை நடத்தினார். மூடநம்பிக்கை களின் பிடியிலிருந்து மக்களை மீட்கும் போராட்டமாக அது இருந்தது.
மராட்டியத்தில் திலகர் கொண்டு வந்த விநாயகர் விபரீதம் சமீப காலமாக தமிழ் மண்ணிலும் பரிசோதிக்கப் படுகிறது. பிரம்மாண்டமான விநாயகர் சிலைகள், ஊர்வலங்கள், சிலைகளை கடலில் கரைக்கும் நிகழ்ச்சிகள், வகுப்புக் கலவரம் சட்டம்-ஒழுங்குப் பிரச்சி னைகளுக்காக, காரணிகளாக மாற்றப்படுகின்றன. 2011ஆம் ஆண்டு விநாயக சதுர்த்தி சிலைகள் கரைப்ப தற்கான ஊர்வலங்கள் வன்முறைக் கலவரங்களின்றி அமைதி யாக முடிந் திருந்தன என்று நாளேடுகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டன. ஆனால் 2011 செப்டம்பர் 5 ஆம் தேதி நாளேடு ஒன்று பிள்ளையார் சிலைகளைக் கரைப்பதற்குப் போதுமான ஏரி, குளம், குட்டைகள் இல்லாமல் நில ஆக்கிர மிப்புகள் நடந்துள்ளதைப்பற்றி சிறப்புச் செய்தி ஒன்றை வெளியிட்டது.
வக்கிர மனம்
மக்களுக்கு-மனித சமூகத்திற்குத் தேவையான நீர்வளம் வரம்பற்ற, முறையற்ற நில ஆக்கிரமிப்புகளால் சிதைக்கப்படுகிறதே என்றுசமூக ஆர்வலர்கள்-சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலைப்படுகின்ற வேளையில், நில ஆக்கிரமிப்புகளால் பிள்ளையார் சிலை கரைப்புக்கு ஏற்படும் தடைகளைப் பற்றிய கவலைக்கு முன்னுரிமை தருகின்ற வக்கிரமனம் கொண்ட மதவாதிகளின் விநாயக நேயத்தை என்னவென்பது?
தியாகராய நகரில் வெடிப்புகையுடன் நள்ளிரவில்  வெளிவந்த திடீர் பிள்ளை யாரும், பால் குடிக்கும் விநாயகர்களும் அவ்வப்போது அவதரித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இந்துஸ் தானத்தில் கொலையும் கூட ஒரு மதச் சடங்கே-கொடுமையான வழிபாட்டு முறையின், சீரழிவான நிலையை அது எவ்வாறு வெளிப்படுத்துகிறது என்றால், அங்கே இயற்கையின் அதிபதியான மனிதன் (வழிபாட்டின் பெயரால் அனுமன் என்ற குரங்கு மற்றும் சபலா என்று பகு ஆகிய விலங்குகளின் முன்னால் பரவசத்துடன் மண்டியிடுகிறான்.
                                                                                                                                                                             - கார்ல் மார்க்ஸ்
இர்பான் ஹமீபிள் இந்திய வரலாறு மீதான கட்டுரைகள் என்ற புத்தகம், பக்கம் 150.
மதத்தின் பெயரால் ஆறறிவுள்ள மனிதன் ஐந்தறிவுகூட இல்லாதவற்றினை, நீண்ட பருந்தினையும் நெடிய குரங்கினையும் யானை, புலி, சிறுத்தை, சிங்கம் போன்றவற்றையும், பசு, எருது, மயில், கோழி, ஏன் எலியையும் கூட தன்னைவிட பல மடங்கு சிறந்த தெய்வங்களாக ஏற்று மண்டியிட்டும், நெடுஞ்சாண் கிடையாக விழுந்தும் வணங்குவதில் அருவருப்புக் கொண்ட மார்க்கம், அவரது முன்னோடி ஏகலும் பிராமணீயச் சடங்குகளை, பிராமணீயத் தால் பாமர மக்களிடையே புகுத்தப் படும் மூடநம்பிக்கைகளை சீரழிவுச் சின்னங்களாகவே பார்த்தனர்.
இத்தகைய உருவ வழிபாட்டை நியாயப்படுத்தி பிராமணீயம் கூறுவது என்ன? ராமகிருஷ்ண மடத்து சுவா ஹானந்தரால் எழுதி வெளியிடப் பட்டுள்ள இந்து உருவகங்கள் (Hindu Symbology) என்ற புத்தகத்தின் சில வரிகளைப் பார்ப்போம்.
“Images are the forms of god visulised by saints and seers in their hours of communion (voith god). Art has also contributed to their beauty and richness. ..... As the image is the production of the saintly artist, every single detail of the form is expressive of some deeper universal truth.’’
துறவிகளும் ரிஷிகளும் கடவுளுடன் இணையும்போது அவர்களால் காணப்பட்ட கடவுளின் வடிவங்களே (விக்கிரக) உருவங்கள் ஆகும். கலை அதற்கு அழகையும், செழுமையையும் தந்துள்ளது...... இந்த உருவங்கள் துறவிக் கலைஞர்களின் படைப்புகளாக இருப்பதால், அவற்றின் ஒவ்வொரு நுண்ணிய அம்சமும், மிக ஆழமான உலகளாவிய உண்மையை வெளிப்படுத்துவதாக உள்ளன.
அதாவது விசித்திரமான இக்கடவு ளர் சுயம்புகள் (தன்னைத்தானே தோற்றுவித்தவர்கள்) அல்ல. துறவிகள், ரிஷிகள் போன்றவர்களால் உருவகப் படுத்தப்பட்டவர்கள். அந்த கற்பனை உருவங்களின் ஒவ்வொரு பகுதியும் ஓர் உள் தத்துவத்தை விளக்குவதாக உள்ளதாம். மனிதன் படைத்த கடவுளரைப்பற்றி பகுத்தறிவாளர் இங்கர்சால் பின்வருமாறு கூறுகிறார்:
ஒவ்வொரு தேசமும் ஒரு கடவுளை உருவாக்கியது, அந்தக் கடவுள் அதனைப் படைத்தவர்கள் சாயலில் இருந்தது .........
இந்தக் கடவுளர்கள் எண்ணற்ற மாதிரிகளில், மிகவும் விசித்திரமான கோமாளித்தனமான வடிவங்களில் உற்பத்தி செய்யப்பட்டனர். சிலருக்கு ஆயிரம் கைகள் இருந்தன. சிலருக்கு நூற்றுக்கணக்கான தலைகள் இருந்தன, சிலர் உயிருள்ள பாம்புகளை கழுத்தில் ஆபரணங்களாகக் கொண்டிருந்தனர், சிலரது கைகளில் குண்டாந்தடிகள் இருந்தன, சிலருக்கோ வாட்களும் கவசங்களும் இருந்தன, வேறுசிலருக்கு கேடயங்கள் இருந்தன, சிலருக்கு சிறகுடைய தேவதூதர்கள் இருந்தனர், சிலர் பார்வைக்குத் தெரியாமல் இருந் தனர், சிலர் எங்கும் பரவி நின்றனர், சிலர் முதுகுப் புறத்தைக் காட்டியே நின்றனர், சிலர் பொறாமைக்காரர் களாக இருந்தனர், சிலர் முட்டாள் களாக இருந்தனர், சிலர் மனிதர்களாக உருவம் ஏற்றனர், சிலர் அன்னப் பறவைகளாக மாறினர், சிலர் எருது களாயினர், சிலர் புறாக்களாயினர், சிலர் புனிதப் பிசாசுகளாயினர், சிலர் மனிதர்களின் அழகிய பெண்களுடன் மையல் கொண்டு புணர்ந்தனர். அனை வருமே மணம் புரிந்திருக்க வேண்டு மென்றாலும் சிலர் மட்டும் மணம் செய்துகொண்டனர், சிலர் ஆதியி லிருந்தே பழைய பிரம்மச்சாரிகளாக இருந்தனர், சிலருக்குக் குழந்தைகள் பிறந்திருந்தன, அந்தக் குழந்தைகளும் கடவுளராக மாற்றப்பட்டு அவர்களின் தந்தையரைப் போலவே வழிபாடு பெறு பவனாயினர். பெரும்பாலான கடவுளர் பழிஉணர்ச்சி கொண்டவர்களாகவும், கொடுமைக்காரர்களாக, காமம் மிகுந் தவர்களாகவும், அறிவிலிகளாகவும் இருந்தனர். பொதுவாகக் இக்கடவுளர் கள் செய்திகளுக்காக அவர்களது பூசகர்களையே நம்பியிருந்ததால் அவர்களது அறியாமை நம்மை ஆச்சரியப்படுத்தவில்லை.
இந்தக் கடவுளருக்கு அவர்கள் படைத்த உலகங்களின் வடிவங்கள் கூடத் தெரியாது, அவையனைத்துமே முழுமையாகத் தட்டையாக இருப்பதாக நினைத்தனர். சிலர் சூரியனை நிறுத் துவதனால் பகற்பொழுதை நீட்டிக்க முடியும் என நம்பினர்; கொம்புகளை ஊதுவதால் (கோட்டை) நகர மதில் களை இடிக்கலாமென நினைத்தனர். ஏறக்குறைய அனைத்துக் கடவுளரும் அவர்கள் படைத்த மனிதர்களின் உண்மையான இயல்புபற்றி அறிந் திருக்கவில்லை. ஆகவே தம்மை நேசிக் கும்படி அம்மக்களிடமே வலியுறுத் தினர்...... இச்சிறிய பூமியின் தோற்றம் குறித்து கூறக்கூடிய நிலையில் எந்த ஒரு கடவுளும் இருக்கவில்லை. அனைத்து கடவுளரும், கவலையளிக்கும் வகையில் மண்ணியல் (geology)   மற்றும் வானியல் ஞானமற்றவர்களாகவே இருந்தனர்.பொதுவாகவே அவர்கள் சட்டமியற்றுவதில் மிகவும் இழிந்த வர்களாகவும் நிர்வாகிகள் என்ற முறையில் சராசரி அமெரிக்க ஜனாதி பதிகளை விட தரங்குறைந்தவர் களாகவுமே இருந்தனர். .......... ஆமாம், அவர்கள் எப்போதுமே தங்களைப் படைத்தவர்களிடம் சார்பு கொண்ட வர்களாகவே இருந்தனர். அந்த ஒரு தலைச் சார்பினால் மற்றவர்களை கொள்ளையடிக்கவும், அழிக்கவும், அவர்களது மனைவியரையும் பெண் களையும் சீரழிக்கவும் தம்மைப் படைத்தவர்களுக்கு உதவினர்.
தங்களை நம்பாதவர்களைக் கொன்று கூறுபோடுவதைப் போன்று மகிழ்ச்சியளிக்கும் வேறு எதுவும் இக்கடவுளருக்கு இருப்பதில்லை. அதுபோன்று இவர்கள் இருக்கிறார்கள் என்பதையோ மறுப்பதைப் போன்று சினம் ஊட்டும் வேறு எதுவும் இருப்பதில்லை.
சில தேசங்கள் ஒரே கடவுளையே வைத்துக் கொள்ளுமளவிற்கு மிகவும் ஏழ்மையாக இருந்தன. கடவுளர்கள் மிக எளிதாகப் படைக்கப்பட்டனர்; அவர்களைப் படைப்பதற்கான கச்சாப் பொருள்கள் மிக மலிவாக இருந்தன; பொதுவாக இந்தப் போலி உருவங் களின் நெரிசலால் கடவுள் அங்காடிகள் பெருத்தும் போயிருந்தன.
- இங்கர்சால்: ‘The Gods’
கடவுளர் மனிதக் கற்பனையின் வீச்சின் அளவிலேதான் அமைந்தன. காலத்தைக் கடந்த உருவக் கடவுளைக் காண முடியாது. மனிதர்கள் இக்கடவுளரைப் படைத்தபோது எதையெல்லாம் அறிந்திருந்தார்களோ, அதன் அடிப்படையில்தான் கடவுளரின் உருவங்கள் படைக்கப்பட்டன.
அவர்கள் அன்று படைத்த தொன்மைக் கடவுளுக்கு கற்கால ஆயுதங்களே இருந்தன. முக்காலமும் அறிந்தவராக சிறப்பிக்கப்படும் அக் கடவுளர்கள் ஏ.கே. 47 துப்பாக்கியையும், பீரங்கியையும், லேசர் ஆயுதங்களையும் தாங்கியிருக்கவில்லை. புலித்தோல், மான்தோல் போர்த்திய கடவுளரையும் படைத்தார்களேதவிர தைத்த சட்டை, பனியன், ஜட்டி, டிரௌசர் அணிந்த கடவுளர் இங்கே வரவில்லை. மாடு, புலி, எலியின் மீதும், புறா, மயில், கழுகு போன்றவற்றின் மீதும் பயணித்த கடவுளருக்கு, சைக்கிள் போன்றவை கூட இருக்கவில்லை. கார், பைக், டாங்க் போன்றவற்றை ஞானக்கண்ணால்கூட அறிந்திருக்கவில்லை. கோயில்களில் மறைக்கப்படாத மார்பகங்களுடன் காணப்பட்ட பெண் கடவுளருக்கு, தற்காலத்து ரவிவர்மா ஓவியங்களில் ஜாக்கட்டும், 16 முழுப் புடவையும் கிடைத்தன. எனவே, ஞானியர் கடவுளரிடம் ஒன்றியபோது பார்த்த தோற்றத்தில் உருவங்கள் படைக்கப்பட்டன என்று கதைக்கப்படும் போது, அது தெய் வீகத்தை வெளிப்படுத்தவில்லை. அவர்களது கற்பனைகளின் சுருங்கிய எல்லைகளைத்தான் வெளிப்படுத்து கிறது. (ராமகிருஷ்ண மடத்து சுவாமி வாகானந்தா எழுதிய Hindu Symbology).
இங்கே கடவுளர்கள் கோமாளித் தனமாக, காட்டுமிராண்டிகளாக, வேடிக்கையாக உருவப்படுத்தப்படுதற்கு தத்துவார்த்தம், உள்ளார்த்தம் என்று பதவுரை பொழிப்புரை கூறுவது தெரிந்தே செய்யப்படுகின்ற மோசடி யாகும். சுவாமி சுவாஹானந்தா சிவன் கடவுளுக்குத் தரும் தத்துவார்த்தத்தைப் பார்ப்போம்.
சிவனது திரிசூலம் திரிபுராசுரனை அழித்ததாகும். அதன் தத்துவார்த்தம் ஸ்தூல, சூட்சும், நடைமுறை நாள் என்ற அகங்காரத்தை வெற்றி கொள்வதாகுமாம்.
அவரது நெற்றிக்கண் அறிவுக்கண். முக்கண்களால் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் மூன்றையும் பார்க்கிறாராம்.
அவர் பயணிக்கும் எருதின் நான்கு கால்கள் உண்மை, தூய்மை, பரிவு, கொடை இவற்றைக் குறிக்கிறதாம். (சிவனது இரண்டு கால்களும், இரண்டு கண்களும், நான்கு கைகளும் எந்தத் தத்துவங்களைக் குறிக்கின்றனவோ?)
அவர் சிகை மீது உள்ள நிலவு காலத்தையும் குறிக்கும், அழிவதையும் குறிக்குமாம். அதுமட்டுமல்ல ஞானத் தின் தோற்றத்தையும் குறிப்பதாகக் கொள்ளமுடியுமாம். (எது எதைக் குறிக்கிறது என்பதில் அவர்களுக்கே குழப்பமிருக்கிறது என்பது மட்டும் தெளிவாகிறது) சில வழிபாடு வேதங் களில் (ருத்ர வழிபாடாக) இருப்பதாகச் சொல்பவர்களும் சிந்து சமவெளி முத்திரைகளிலும் காணப்படுவதை ஏற்றுக் கொள்கிறார்கள்.
சிந்துவெளி முத்திரையில் காணப் படும் சிவனுக்கு (?) முக்கண் இல்லை, கங்கையில்லை, உடுக்கையில்லை, கையில் நெருப்பு இல்லை. தலையில் பிறையும் இல்லை. மாறாக இரண்டு கொம்புகள் உள்ளன. குறைகண்ட வர்கள் ஆதியில் விலங்கின் கொம்பு கூடுதல் வலிமையைக் குறிப்பதாகக் கொண்டனர். எனவே அவர்கள் அனுமா னுஷ்யமான கடவுளரைப் படைக்கும் போது அவற்றைக் கொம்புகளுடன் வரைந்தனர். கொம்புகளை இணைத்து பிறையாக மாற்றியது பல நூறாண்டுக் கற்பனை விரிவாக்கத்தின் விளைவே. மனிதர் படைத்த கடவுளர் எப்படிக் கற்பனையோ அதைப்போலவே மதவாதிகள் கூறும் த்த்துவார்த்த விளக்கங்களும் கற்பனைகளே.
இத்தகைய பசப்பலான தத்து வார்த்தங்களைக் குறித்து கைவல்ய சாமியார் கூறியிருப்பதை நினைவிற் கொள்வோம். 
(உண்மை இந்து மதம்-பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு 2008 பக்கம் 9-10)

எதற்கும் தத்துவம் சொல்லலாம்.... எதற்கும் உள்ளது உள்ளபடி அர்த்தம் வந்துவிட்டால் மேலல்லவா? நாய்க்குப் பிறந்த நாயே என்று ஒருவனைத் திட்டினால், திட்டினவன், திட்டைக் கேட்டவன் மனதில் திட்டின வார்த்தை ஊடுருவிப் பாய்ந்ததென்று மனம் திருப்தியடையும்போதும், திட்டைக் கேட்டவன் கோபிக்கும் போதும் தத்துவ அர்த்தம் பிரயோஜனப்படுமா? தத்துவ அர்த்தம் அதிலுண்டா? இரண்டு பேர்களும் தத்துவ அர்த்தத்தை நினைத்தார்களா?......... பஞ்சாட்சரமான பரமசிவனால் படைக்கப்பட்ட நீங்கள் ஞ பஞ்சாட்சர முதலெழுத்தும், ய என்கிற கடையெழுத்தும் சேர்த்துப் பிடித்த பெயரை உடையதும், பரமசிவனுக்குப் படைத்துணையான பைரவரின் வாகனமுமான நாயைப் போன்று நன்றியுடையவராயிருங்கள் என்ற அர்த்தம்தான் அதற்கு உங்கள் அறிவிற்குத் தக்கவாறு பெரியவர்கள் அமைத்தார்கள். தத்துவார்த்தம் உள்ளே அடங்கிக் கிடப்பது உனக்கு விளங்கவில்லையா? என்று சொன்னால் அதை யார் ஒப்புக் கொள்வார்கள்? பிள்ளையார் தோற்றத்தைப்பற்றிய கதைகளை பகுத்தறிவாளர்கள் ஏற்கெ னவே தோலுரித்துக் காட்டியுள்ளனர். தந்தை பெரியார் அவர்கள் பிள்ளையார் பிறப்பு குறித்து மூன்று அருவருப்பான அடல்ட்ஸ் ஒன்லி கதைகளின் கோமாளித்தனத்தையும், ஆபாசத்தையும் வெட்டவெளிச்சமாக்கியுள்ளார். (Hindu Festivals-Periyar E.V. Ramasami, Periyar Self-Respect Propaganda Institution, Madras-1983 PP 17-20)  புராணங்கள் வரலாறுகளல்ல என்பதை பகுத்தறி வுள்ள அறிவியல் நோக்குக்கொண்ட வரலாற்றாளர்கள் அறிவார்கள். ஆயினும் வரலாற்றில் விநாயகர் தோற்றுவிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட வரலாற்றைப்பற்றி ஒரு சில தகவல்களை வாசகர்கள் சிந்தனைக்கு வைக்கவே இந்தக் கட்டுரை.
வரலாற்றில் விநாயகர்:
ரிக் வேத ஆரியர்கள் ஹோம குண்டங்களை உருவாக்கி, நெருப்பில் நெய் சொரிந்து பலிகளை இட்டு மானசீகக் கடவுளரை தமது வேண்டு தலுக்கு இணங்குமாறு தோத்திரம்பாடி வணங்கினர். ஹோத்திரி போன்ற யாக மந்திரங்களை உச்சரித்து யாகங்களை நடத்தும் பூசகர்கள், மந்திரங்களால் தமது மானசீகக் கடவுளர்களின் கவனம் ஈர்க்கப்படும் என நம்ப வைத்தனர். உயிர்ப்பலிகளுக்கோ எல்லையில்லை. ஆனால் அங்கே சிலை வழிபாடோ, கோயில் கலாச்சாரமோ இருக்கவில்லை. எனவேதான் ஆரிய சமாஜத்தை நிறுவி வேதகாலத்திற்குத் திரும்புங்கள் (Back to Vedas) என்று  கூறிய தயானந்த சரசு வதி, உருவ வழிபாட்டை எதிர்த்தார், சடங்குகள் புராணங்களை ஏற்க மறுத்தார்.
ஆனால் வேத காலத்திற்கு முன்பே இங்கு தழைத்திருந்த சிந்து சமவெளி நாகரிகத்தில் உருவ வழிபாடு, லிங்க வழிபாடு, சிவ வழிபாடு, சக்தி வழிபாடு ஆகியவை இருந்ததாக அகழ்வாராய்ச் சிகள் குறிப்பாக அங்கு கண்டெடுக்கப் பட்ட முத்திரைகள் உறுதி செய்கின்றன. சில நூற்றாண்டுகள் வரை சிவலிங்க (சீசனத் தேவர்) வழிபாடுகளை எதிரிகளின் இழிந்த வழிபாட்டு முறைகளாக பழித்துக் கூறி வந்தனர். பின்னர் ஆரியரல்லாதவர்கள் சிலை வழிபாட்டு முறையை படிப்படியாக ஏற்றுக் கொண்டு அவற்றை பிராமணீய மயப்படுத்தினர். வேதகால கடவுளர் சிலருக்கு உருவங்கள் தந்ததோடு, ஆரிய ரல்லாதவர்களிடம் மிகப் பிரபலமாக இருந்த சில கடவுளர்களையும் சுவீ கரித்துக் கொண்டனர். சிவனுக்கும், கந்தனுக்கும், பிள்ளையாருக்கும் திருநீறு பூசப்பட்டு பூணூல்க்ளும் அணிவிக்கப் பட்டன. அந்தக் கடவுளரை வேத-பிராமண பாதுகாவலர்களாகவும் மாற்றினர். பூணூல் அணிந்துகொண்ட வள்ளிமணாளன், தேவசேனாவை (தெய்வானையை)யும் மணந்து பிரா மணருக்கு இனியவன், பிராமணரின் புரவலன் என்ற முறையில் சுப்பிர மணியனுமானான் (சு-பிராமண்ய) பக்தி இயக்கம் இத்தகைய ஒட்டு வேலையை மிக அற்புதமாகச் செய்தது. ஸ்கந்தன், குமாரன் என்று (ஸ்கந்த புராணம், குமார சம்பவம்) வடநாட்டில் பிரபல மான பெயர்களின் பட்டியலில் முருகன் என்பதையோ, சேயோன் என்பதையோ பார்க்கமுடியாமல் போனதில் வியப் பில்லை. ஆனால் சுப்ரமண்யா என்ற பெயர் தென்னாட்டில் மட்டுமே சுருங்கிப் போனது ஏன்? ஏனென்றால் பிராமணனை, பிராமணீயத்தை ஏற்கச் செய்ய வேண்டிய அந்த தேவை, தென்னகத்தில்தான் உணரப்பட்டது; அதைத்தான் பக்தியும் நிறைவேற்றியது.
இந்தப் பின்னணியில் பார்க்கும்போது பிள்ளையார் எப்போது எவ்விடத்தில் தோற்றுவிக்கப்பட்டார் என்பதைச் சற்று பார்ப்போம்.
தந்தை பெரியார் அவர்கள் பிள்ளையார் வடநாட்டிலிருந்து தென்னாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட கடவுள் என்றார் (புராணம்)
அப்டியென்றால் விநாயகர் வேதகாலத்துக் கடவுளா? ஆரியர்களின் ஆதிக்கடவுளரில் ஒருவரா? ரிக் வேதகால ஆரியர்கள் என்ற நூலின் பதினைந்தாவது அத்தியாயம் [தேவர் கள் (மதம்)] என்ற தலைப்பினலானது. அதில் நூலாசிரியர் புகழ்பெற்ற வர லாற்றாசிரியர் ராகுல சாஸ்கிருத்தியா யன் ரிக்வேதக் கடவுளர்களைப் பட்டியலிட்டுள்ளார். முப்பத்து முக்கோடி தேவர்கள் என்றும், 3339 கடவுளர் எனினும் ஓரிருமுறை பொத் தாம் பொதுவாகக் கூறப்பட்டாலும், குறிப்பிடப்படும் தேவர்கள் (கடவுளர்) எண்ணிக்கை 33ஐத் தாண்டவில்லை. அதிதி, வருண, மித்ர, அக்னி, அர்யமா, சவிதா, ரோத்ளி, அஸ்வினிகள், தேயுஸ், ப்ருதிவி, வாயு, பர்ஜன்ய, சரசுவதி, உஷஸ், சோம, இந்திரா, ருத்ர, பிரம்ம, சூர்ய, விஷ்ணு, பூஷன் போன்ற பெயர்களிடையே, சிவனைப் போன்று, கந்தனைப் போன்று, விநாயகரும் இடம்பெறவில்லை.
எனவே விநாயகர் ஆதியில் இருந்த கடவுளல்ல, பாதியில் படைக்கப்பட்ட கடவுளரே. விஷ்ணு வழிபாட்டின், சிவ வழிபாட்டின் ஆரம்ப நூற்றாண்டு களில்கூட (கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை) விநாயகக் கடவுள் அவதரிக்க வில்லை. தமிழகத்தில் சங்க நூற்களில் சேயோன்-மாயோன்-வேந்தன்-வருணன் பட்டியலில் பிள்ளையார் இடம் பெறவில்லை. சங்கம் மருவிய சிலப்பதி காரத்திலும், சூரியனையும், திங்களையும், மாமழையையும் போற்றிப் பாடிய போதும் அங்கு விநாயகர் இடம் பெற வில்லை. சிலம்பில் கூறப்படும் சதுக் கத்துப் பூதம் பிள்ளையார்தான் என்று சிலர் ஆர்வ மிகுதியால் கூறினாலும் சதுக்கத்து பூதம் பெததுவிடக் கடவுள் (பூதம்-சிறுதேவதை என்ற பொருளைத் தரும்) என்று விளக்க முடியும். எனவே சிலப்பதிகார க்லத்திலும் கூட விநாயகர் வழிபாடு இங்கே இருக்கவில்லை. பாலும் தெளிதேனும் பாகும் பருப்பு மிவை நாலும் லஞ்சமாகக் கொடுத்து சங்கத் தமிழ் மூன்றும் த் என்று துங்கக் கரிமுகத்தானிடம் வியாபாரம் பேசிய அவ்வை சங்ககாலத்து அதியனைப் பாடிய அவ்வை அல்ல. சங்க காலத் திற்கு பின்னர் வந்த அவ்வைதான் சங்கத் தமிழை குறிப்பிட்டிருக்க முடியும். சங்க என்ற சொல்லை சங்கப் புலவர்கள் கையாண்டது இல்லை.
புத்த விநாயகர் - வேத விநாயகராக்கப்பட்ட மோசடி வரலாறு (2)
நரசிம்மவர்மன் என்றும் ஏழாம் நூற்றாண்டுப் பல்லவன், சாளுக்கியப் புலிகேசியைப் பழிவாங்க பரஞ்சோதி தலைமையில் படையனுப்பினார் எனவும் அப்படை சாளுக்கியப் படையை வென்று சாளுக்கியத் தலை நகரைச் சூரையாடியது என்றும், இப்போரிலே இரண்டாம் புலிகேசி இறந்தான் என்றும் தமிழக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. வ்தாபியும், அதன் அருகிலிருந்த அய்கோளும் சாளுக்கிய சிற்ப கட்டிடக்கலைகளின் சிகரங்களாக இருந்தன என்றும், வாதாபியில் காணப்பட்ட யானைத்தலையும் மனித உடலும் கொண்ட கணபதிக் கடவுளின் கலை யழகு சிறுத்தொண்ட நாயனார் என்று பின்னர் அறியப்பட்ட பரஞ்சோதியை பரவசப்படுத்தியது. எனவே அந்த கணபதி சிலையை பெயர்த்து வந்து சோழநாட்டிலிருந்த தனது ஊரில் நிறுவி கோவிலமைந்தான் என்றும் கூறப்படுகிறது. அந்த வாதாபி கணபதி தான் தமிழ்நாட்டில் கணபதி வழிபாட்டுக்கு அச்சாரமிட்டது என்றும் கூறப்படுகிறது. அதாவது தக்காணப்பகுதியில் ஏற்கெனவே அறிமுகமாகியிருந்த ஒரு பிராமணீயக் கடவுள் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தில் நுழைக்கப்பட்டார். படிப்படியாக அனைத்து மக்களில் உள்ளம் கவர்ந்த கடவுளானார் என்ற கருத்து இங்கு நம்முன் வைக்கப்படுகிறது.
நமது கேள்விகளில் ஒரு சில:
விநாயகர் பிராமணக் கடவுள் தானா? வடக்கில் யானைமுகன் (கஜமுகன்) வழிபாடு எப்போது துவங்கியது?
இந்தியத் துணைக் கண்டத்தின் மிகப் புராதனமான சமயக் கட்டிடங்கள் சிற்பங்கள் பௌத்தத்திற்கு உரியவை.
இன்றைய அளவில் அசோகரால் நிறுவப்பட்ட (பௌத்த) ஸ்தூபிகளும் தூண்களும்தான் மிகத் தொன்மை யானவை. பௌத்த கட்டிடங்கள் பெரும்பாலும் மூன்று வகைப்படும்: 1) ஸ்தூபம் 2) விகாரம் மற்றும் 3) சைத்தியம் என்பவை.
ஸ்தூபம் அல்லது ஸ்தூபி நடுகல், வீரக்கல் போன்ற நினைவுச் சின்னம். புத்தர் அல்லது அவரதுமுக்கிய சீடர் களின் உடற்பகுதிகள் புதைக்கப்பட்டு அவற்றின் மீது எழுப்பப்படும் கட்ட டங்கள். இவைகளை நினைவுச் சின்னங் களாக, மரியாதைக்குரிய சின்னங்களாக எடுத்துக் கொள்ளவேண்டும். பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் அவற்றில் சில வழிபாட்டுக் கோயில்கள் என்று மாற்றம் பெற்றன. விகாரம் என்பது துறவியர் வாழ்விடம். அவரது மக்கள் தொண் டிற்கான அறப்பணிகளின் மய்யம் என்பதாக அவை அமைந்தன.
சைத்தியம் என்பது தியான (மன ஒருமைப்பாட்டுப்) பயிற்சிக்கான இடம் பின்னர் இவை சமூகப் பிரார்த்தனை மய்யங்களாகவும் மாறின. இத்தகைய கட்டடங்களில் ஏராளமான சிற்ப வேலைப்பாடுகள் உள்ளன. அசோகரது தூண்களிலும் பல்வேறு மனித-விலங்கு உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
கி.மு. முதலாம் நூற்றாண்டிற்கு பிறகுதான் கருடச் சின்னங்கள் விஷ்ணு வுடன் தொடர்புபடுத்தி சிற்பங்களில் இடம் பெறலாயின. காளை (ரிஷபம்) சிந்துவெளி நாகரிகத்தில் மட்டுமல்ல, ஜைனமத மரபுகளிலும் ரிஷபதேவர் ஏறும் ஆதிநாதருடனும் தொடர்பு படுத்தி சித்தரிக்கப்பட்டது.
ஆனால் யானைமுகனை குப்தர் காலம் வரையில் காணமுடியவில்லை. அதுவரையில் அஸ்வமேதம், வாஜ பேயம், ராஜசூயம் போன்ற யாகங் களையே மய்யப்படுத்தியிருந்த பிரா மணீயம் குப்தர் காலத்திலிருந்துதான் சிலைகளையும் கோயில்களையும் மய்யப்படுத்துவதாக மாறியது. இதனால் யாகங்களால் புறக்கணிக்கப்பட்டிருந்த பலர், சிலை வழிபாட்டுப் பண்பாட்டை உடையவராக இருந்த பிராமணீயத்திற்கு வெளியே இருந்த வெகு மக்கள் மீது சமயத்தின் பெயரால் பிராமணீயத்தின் ஆதிக்கத்தை நிறுவ முடிந்தது. இந்தப் போக்கின் தென்னகப் பதிப்புதான் ஆழ்வார்களும் நாயன்மார்களும் நடத்திய பக்தி இயக்கம். பிராமணர்கள் புதிய கடவுளரைப் படைப்பதைவிட, ஏற்கெனவே மற்றவர்களால் படைக்கப் பட்டிருந்த உருவக் கடவுளரை ஏற்று அவற்றை பிராமணீயப்படுத்துவதே எளிதானது, வீரியமுள்ளது என்று உணர்ந்து அத்தகைய தத்து எடுக்கும் பணியில் மும்முரமானார்கள். சிவன் - வேதங்களைக் காப்பாற்றும் சிவனா னான்.  பிரணவ மந்திரத்தின் நாயகன் - சாம்பலுடன் பூணூலையும் அணி வித்தார்கள் கொற்றவை - காளி சிவனுக்கு உடலில் ஒரு பாதியானாள். அவளைக் கொண்டே அவளைப் படைத்தவர்களை (மகிஷாசுரன் போன்ற மேய்ச்சல் நாகரிகத் தலைவர்களை) கொலை செய்வித்தனர். மாலவன்-திருமால்-விஷ்ணு என பரிணாம மாற்றம் பெற்றார். ரிக் வேதத்தின் கருமைநிற அன்னியர்களான (கிருஷ்ண)வரின் மேய்ச்சல் நாகரிகத்தின் கண்ணன் என்ற மாயோன், விஷ்ணு வின் அவதாரக் கிருஷ்ணனாக்கப்பட் டான். நப்பின்னை ராதையாக மாறி னாள். அவன் மூலமாகவே அவனை உருவாக்கி வழிபட்டு வந்தவர்களை சூத்திரர்களாக்கினான். ஜைன ரிஷபதேவரின் கைலாயம் சிவனது தலை மையகம் ஆக்கப்பட்டது. ரிஷபதேவரின், ரிஷபச் சின்னம் சிவனது நந்தியானது.
சரி, விநாயகர் விவகாரம் எப்படி?
அதை அறிவதற்கு முன் ஒரு சில தகவல்கள்:
சங்கராச்சாரியார் அகச் சமயம் என்று ஆறு வழிபாட்டு முறைகளுக்கு அங்கீகாரமளித்தார் (ஷண்மதம்) (1) சிவ வழிபாட்டைக் கொண்ட சைவம் (2) விஷ்ணு வழிபாட்டைக் கொண் வைஷ் ணவம் (3) சக்தி வழிபாட்டைக் கொண்ட சாக்தம் (4) தூய வழி பாட்டைக் கொண்ட சௌரமம் (5) குமாரஸ் (குமரன்-கந்தன்) வழிபாட் டைக் கொண்ட கௌமாரம் மற்றும் (6) கணபதி வழிபாட்டைக் கொண்ட கணபதியம்.
பிராமணீயமே படைத்த பிரம்மனும், பிரம்மமும் இதில் இல்லை. பிராமணர் அல்லாத கடவுள் பட்டியலில் பிரம்மன் இருக்கவில்லை. சூரிய வழிபாடு வேதத்தில் இருந்தாலும் அது பாப்புலர் கடவுளாகவில்லை. சூரியனைத் தவிர்த்துவிட்டாலும் மற்ற அய்ந்து கடவுளரும் பிராமணர் அல்லாதவர் களால் படைக்கப்பட்டிருந்த கடவுளர் கள். மற்ற கடவுளருக்கு முந்தைய காலத்தில் குறிப்புகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ காணப்பட்டன. ஆனால் கணபதிக்கு அப்படிப்பட்ட பூர்வாசிரமக் குறிப்புகள் எங்கே? மற்றொன்று,
பல்லவர் சோழர் காலத்தில் சிவ னுக்கு, திருமாலுக்கு எனக் கோயில்கள் எழுப்பப்பட்ட அளவிற்கு மற்ற நான்கு கடவுளருக்கும் எழுப்பப்படவில்லை. மற்ற கடவுளர்கள் சிவன் கோயில்களில் துணைப் பிரகாரங்களில் உப தேவதைகளாக்கப்பட்டனர். முருகனது படைவீடுகளைக் குறிப்பிடும் திருமுரு காற்றுப் படையின் காலத்தைப்பற்றிய குழப்பம் இனியும் தீரவில்லை. ஆனா லும் அவரது படைவீடுகள், (அவை விஜயநகர காலத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டன) தமிழக எல்லைக் குள்ளேயே முடங்கிப் போயின. ஆனால் அந்தக் கடவுளும் பிராமணியத்தை, வைதீகத்தைக் காப்பாற்றி (அ) சூர பத்மர்களை (பத்மாசூரனை = பத்மா+அசுரன் மாற்றிப் போட்டார் சூரபத்மன்) அசுரர்களைக் கொல்கிறான்.
சங்கரர் வாழ்ந்த 8ஆம் நூற்றாண் டில் கணபதி வழிபாடு துவங்கிவிட்டது என்பது விளங்குகிறது. ஆனால் அவருக்கு (படை) வீடு எதுவுமில்லை. தெருமுனை, ஆற்றங்கரை, அரச மரத்தடி, பிடித்துவைத்த சாணி இவையே அவரது வாசஸ்தலங்கள். கணேச சதுர்த்தி எனப்படும் விநாயகர் பிறந்தநாளில், சாணியாலும், களிமண் ணாலும் ஆன பிள்ளையார்கள் குளம், கிணறு, ஏரி, கடல் போன்ற நீர் நிலை களில் அழிக்கப்படுவார்கள். ஆடிப் பெருக்கில் ஏடுகள் அழிக்கப்பட்டதைப் போல. சிவனுக்கு எருதையும், விஷ்ணு வுக்கு கருடனையும், சக்திக்கு சிங்கத் தையும், சூரியனுக்கு குதிரைகளையும், கந்தனுக்கு மயிலையும் வாகனப் படுத்தியவர்கள், அழுக்கிலே உருவாக்கப் பட்டதாக புராணிப்பட்ட கஜமுகனுக்கு மட்டும் இழிவான இருட்டிலே வாழும் எலியை வாகனமாக்கினர். யானைத் தலை-பானை வயிறு, ஒடிந்த கொம்பு, ஒரு கோமாளித்தனமான கலவை (மற்ற ஐந்து கடவுளருக்கும் ஒட்டு உருவம் இல்லை. அழகிய முகம், பரந்த மார்பு, நெடிய உடல், இரண்டுக்கு மேற்பட்ட கரங்கள், ஒட்டிய வயிறு) ஏன் இப்படி?
ஒரு ஒதுக்கப்பட்ட, விரட்டப்பட்ட நிலையில் பிள்ளையார் எப்படி நீண்ட காலம் தொடர்ந்தார்?
சிவனுக்குப் பிள்ளை, கந்தனுக்குத் தமையன், சுந்தரரின் சின்ன வீட்டிற்கு சிவபெருமான தூது சென்றதைப்போல, கந்தனின் காதலுக்கு பிள்ளையார் உதவி செய்வது எல்லாம் பிற்சேர்க்கை.
இதை விளங்குவதற்கு பௌத்த வழிபாட்டு வரலாற்றைப் புரட்ட வேண்டும்.
பெயர் விளக்கம் : ஒப்பீடு:
பிள்ளையாருக்கு விநாயகர், விக் னேஸ்வரன், கணபதி, கணேசன், கஜமுகன், கஜபதி என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்.
கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பு வரையில் இப்பெயர்களில் எந்த பிராமணீயக் கடவுளும் இல்லை. ஆனால் இப்பெயர்கள் எல்லாம் தேரவாத, மகாயான பௌத்த நூற்களிலும், மரபுகளிலும் இடம் பெற்றன. இப்பெயர்கள் அனைத்தும் கௌதம புத்தரைக் குறித்தன.
நாயக் என்றால் தலைவன், விநாய கன் என்றால் மிகச்சிறந்த உன்னதமான தலைவன். மகாயானம் தோன்றும்வரை புத்தர் கடவுளாக்கப்படவில்லை. மாறாக நல்ல தலைவன், நல்லாசிரியர் என்றே அறியப்பட்டார்.
புத்தரது தத்துவங்கள் துக்க உண்மையை விளக்குகிறது. உலகில் மனிதர் அனுபவிக்கும் துன்பங்கள் மாயை அல்ல, உண்மையே என்றார். துன்பத்திற்கு காரணம் விதியோ ஆண்டவன் கட்டளையோ அல்ல; மனிதனின் துன்பத்திற்கு மனிதனே காரணம்; காரணங்களைத் தெளிந்து அவற்றை நீக்கிவிட்டால், துன்பத்திலி ருந்து, வினைகளின் விளைவுகளுக்கு அதாவது விக்கினத்திலிருந்து விடுதலை பெறமுடியும் என்று உபதேசித்தவர் புத்தர். விக்கினத்தை நீக்கும் ஈசன்-ஈசுவரன் என்ற பொருளில் விக்னேஸ் வரன் என்றும் அழைக்கப்பட்டார்.
கணபதி: கணம் என்றால் இனக்குழு என்று பொருள்படும். வேதங்களிலேயே இரண்டுவிதமான அரசியல்: சமூக அமைப்புகளைக் காண்கிறோம். பிரா மணனால் அங்கீகரிக்கப்பட்ட மரபுவழி மன்னரை மய்யமாகக் கொண்ட பிரிவு ஜனம் எனப்பட்டது. குல குடும்பத் தலைவர்களது கூட்டு சபையால் தேர்வு செய்யப்பட்ட தலைவர்களால் ஆளப்படும் பிரிவு (ஒருவகைக் குடியரசு அல்லது பிரபுக்கள் ஆட்சி) கணம் எனப்பட்டது. கணத்தின் தலைமைக்கு உரியவர்கள் கணத்தின் அதிபதி, கணத்தின் பதி என்ற பொருளைத்தரும் கணபதி என்ற சிறப்பைப் பெற்றனர். புத்தர் பிறந்த சாக்கியப் பிரிவு குடியரசு முறையைக் கொண்ட கணம் ஆகும். கணத்தின் தலைவர் என்ற முறையிலும், பௌத்த பிட்சுக்கள் என்ற கணத்தின் தலைவர் என்ற முறையிலும் புத்தரை கணபதி என்றும் அழைத்தனர். ஈசன் என்பதும் தலைவன் அல்லது கடவுள் என்ற பொருளில் வருவது. கணத்தின் ஈசன் கணேசன் ஆவார். கஜபதி: கஜமுகன் என்பதற்கான விளக்கத்தை பௌத்தத் தொன் மங்களிலிருந்து பெறமுடியும். கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில்தான் பௌத்த பீடகங்களுக்கு எழுத்து வடிவம் தரப்பட்டது. அதுபோன்றே மகாயான மும் உருவாகி, புத்தரை கடவுளாக்க முனைந்தது. கடவுளாக்கப்பட்டால் அற் புதங்களை இணைக்க வேண்டுமல் லவா? புத்தர் மரிக்கப் போவதை எங்கோ இருந்த அச்த முனிவர் ஞானத்தால் அறிந்து மாயா தேவியிடம் கூறினாராம்.




Monday, September 17, 2012

சிவன் கன்னத்தில் உதித்தவனாம் வினாயகன்!


                                                    - உடுமலை சித்தன் என்கிற பி.வி. ராமசாமி
இந்த அகோர விநாயகர் விழாவிற்குப் பெயர்தான் விநாயகர் சதுர்த்தி முற்காலப் பெண்கள் இதனை விநாயக சவுத்தி - என்பர். இதற்கு வேதியப் புரோகிதர் இட்ட பெயர் சங்கட ஹரசதுர்த்தி விரதம். ஆவணி மாதம், சதுர்த்தி விரதம், ஆவணி மாதம், கிருஷ்ண பட்சம் சதுர்த் தியில் கைக்கொள்ள வேண்டியது.
பொன் முதலியவற்றால், (இப்போது களிமண்) கணேச திருவுருவம் செய்து, கலசம் வைத்து, ஆவாகித்து விநாயகர் (சக்தி), அந்தச் செம்புக்குள் புகுந்து கொள்ளச் செய்து, சந்திரனுக்கு அர்க்கியம் கொடுத்து, பூசித்து, கணேசரை நோக்கி, தமது சங்கஷ்டம் (சங்கடம் - கஷ்டங்கள்) நீக்க வேண்டி, பலகாரங்களும் மற்றும் கொழுக் கட்டை, சுண்டல், வடை, பொறி கடலை, பழம், தேங்காய் வைத்துப் பூசிப்பது.
இப்படி கந்தமூர்த்தியால் (விநாயகர் தம்பி கந்தன் அண்ணனுக்கு பிரச்சாரம்) ரிஷிகளுக்குக் கூறப்பட்டது. பின்னர் கிருஷ்ணனால் (மாமன் மருமக னுக்குப் பிரச்சாரம்) பாண்டவருக்குக் கூறப்பட்டது - இது புராண விளக்கம்.
கொழுக்கட்டை ஏன்?
விநாயகன் சிறுவனாக இருந்தபோது, சில ரிஷிகளிடம் விஷமம் செய்தானாம். அவர்கள் இவனைப் பிடித்து, தூணில் கட்டிப் போட்டனராம். பின்னர் அவர் யாரென அறிந்து, விடுவித்து மோதகம் (கொழுக்கட்டை) கொடுத்து அனுப்பின ராம். அது முதல் விநாயகருக்கு கொழுக் கட்டைப் படையல் போட்டு பூசை செய்யப்படுகிறதாம்.
யானைக்குப் பச்சரிசி, தேங்காய் வெல்லம் கலந்து உருண்டை உருண்டை யாக உருட்டி கவளம் கவளமாய் கொடுத்து, விழுங்கச் செய்வது வழக்கமாயிற்றே. இதன்படி திருகல் தேங்காய், வறுகடலைத் தூள், வெல்லக் கூட்டு (பூரணம்) வைத்து பச்சரிசி மாவுக் கொழுக்கட்டைகள் யானைத் தலைப் பிள்ளையாருக்கும் விருப்ப உணவாக்கப்பட்டதா?
இவர் பெருச்சாளியை வாகனமாகக் கொண்ட மர்மம் என்ன? யானைப் பசி என்பது அடங்காத பெருந்திண்டிப்பசி. யானை வயிற்றுப் பிள்ளையாருக்கு பெரும் திண்டி ஓயாது தேவைப்பட்டதா? இதனைச் சமாளிக்க, கள்ளக் கடத்தலில் வல்லதான பெருச்சாளியின் உதவியைத் தேடிக் கொண்டாரோ? கஜாயர் என்பதும் இவருக்குப் பட்டம் - கச்சாயம் என்ற வெல்லக் கூட்டு அரிசி மாவு பணியாரத் துக்கும் கஜாயர் என்ற பெயருக்கும் தொடர்புண்டோ?
தோப்புக்கரணம்
பிள்ளையார் முன், பக்தர்கள் எனப்படுபவர்கள் நின்று காதுகளை, கைமாறிப் பிடித்துக் கொண்டுத் தோப்புக்கரணம் போடுவதும், நெற்றியில் (தலையில்) குட்டிக் கொள்வதும் முன்னர் வழக்கம். (இப்போது மிக சொற்பமானவர்) இப்படி ஏன் செய்கிறார்கள் என்பதற்குரிய ஒரு புராணப் புனைச் சுருட்டுக் கதை -கஜமுகாசுரன் (இவனும் விநாயகருக்குப் போட்டியாக, யானை முகத்துடன் பிறந்த வனா?) இந்திரன் முதலிய தேவர்களைப் பிடித்து, தன் முன் நிற்க வைத்து, தலையில் குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் போடச் செய்தானாம். விநாயகர் அந்த கஜமுகா சுரனை அழித்தாராம்.
இந்த அசுரன் சாகும் முன் - தன் முன் இந்திரன் முதலியவர்கள் தோப்புக்கரணம் போட்டதும், தலையில் குட்டிக் கொண் டதும் நீடிக்கச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டானாம். (தேவர்களுக்கு அவமான நினைவுக்குறி!) இதன்படி விநாயகர், தன்னைக் கும்பிடுபவர்கள் இப்படித் தன் முன் தோப்புக்கரணம் போடவும் தலையில் குட்டிக் கொள்ளவும் கேட்டுக் கொண்டாராம்.
இதனால் விநாயக பக்தர்களும் இப்படிச் செய்து வருகிறார்களாம். இது தோல்வி அடிமைத் தனத்தை ஒப்புக் கொள்ளும் அவமான - தண்டனையல்லவா? இதைச் செய்வதால், இதில் என்ன பக்தியும், மனிதர்களுக்குத் தொடர்பும் இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்.
அசுரன், இந்திராதிகளை அவமானப் படுத்த, தண்டிக்க தோப்புக்கரணம் போடச் செய்தான். மனித பக்தர்கள் இப்படித் தோப்புக்கரணம் போட்டு, தலையில் குட்டிக் கொண்டால், தங்களைத் தாங் களே அவமானப்படுத்திக் கொள்வதும், தண்டித்துக் கொள்வதும் ஆகாதா?
இந்திரன் முதலிய தேவர்கள் கஜமுகா சுரன் முன் இப்படிச் செய்ததை விநாயகர் முன் பக்தர்கள் என்பவர்கள் செய்வதென் றால், விநாயகரையும் அசுரனையும் ஒன்றாக் கருதுகின்றனரா?
இந்தப் பிள்ளையார் தன்னைக் கும் பிடும் மாணவர்களுக்கு முத்தமிழ் அறிவு ஊட்டுவது வெறும் கட்டுக்கதை என்பது உலகறிந்த உண்மை. இப்படித் தமிழறிவுக் குப் பதிலாக, மாணவர்களுக்கு அவமான, தண்டனை முறைதானா பிள்ளையாரால் மாணவர்களுக்குக் கிடைத்த பலன்? பிள்ளையாரிடம் தமிழ் கற்றுக் கொடுக்கக் கேட்டதற்கு, தண்டனை போலும், துவக்கப் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள், மாணவர்களை இப்படிக் காதுகளைப் பிடித்துக் கொண்டு தோப்புக் கரணம் போடச் செய்வது!
சதுர்த்தி என்றால்...?
சதுர்த்தி என்ற சொல்லுக்கு, அகராதிப் பொருள் - நான்காம் திதி (நாள்); திரும ணத்தில் நான்காம் நாள் அனுஷ்டிக்கும் நோன்பு.
சதுர்த்தி அறை - திருமணத்தில் நான் காம் நாள் இரவு மணமகனும் மணமகளும் கூடும் அறை.
அருள்பெற குறுக்கு வழி
கணபதி தானம் - நூறு கழஞ்சு பொன்னில் கணபதியின் திருவுருவம் விதிப்படி செய்வித்து, வித்தியேசுவரர், (படிப்புச்சாமி) திக்குப்பாலகர்கள் இவர்களுக்கு நடுவில் சிவலிங்கம் தாபித்து, பூசித்து, எட்டு குண்டம் அமைத்து, அக்கினி காரியம் செய்து (ஓமத்தீ வளர்த்து, தூபதீபம் காட்டுதல்); எழுவர் பிராமண ஸ்திரீகளை அவர்கள் புருடருடன் பூசித்து, ஆடையணி கொடுத்து, பிராமணருக்கு (பொன்சிலை) தானம் செய்வதாகும்.
(இதனால் வரவுக் கணக்கு பார்ப்பனப் பெண்களுக்கும் அவர்கள் மூலம் புருடர்களுக்கும், செலவுக் கணக்கு இப்படிப் பொன்சிலை செய்து பூசைகள் நடத்தியவர்களுக்கு)
திடீர்ப் பிள்ளையார்
கணபதிபற்றிய விஷயம் ஆரிய மத வேதங்களிலோ, தமிழகத்தில் சங்க நூல்களிலோ இல்லை.
பவுத்தாயண தர்ம சூத்திரம் போன்ற ஆரிய மொழி நூல்களில் இந்த விநாயகரை மனிதருக்கு இடையூறுகளை உண்டாக் கும் பூதம் (வேதாளம், பிரம்ம ராட்சசன், இருளன், மாடன், கருப்பன்) என்றுள்ளது. இது விளைக்கும் கேடுகளிலிருந்து தப்ப வழி சாந்தியாகம் என்றும் கூறப்பட் டுள்ளது.
விநாயகருக்கு தூமகேது என்றும் பெயர். தூமகேது நட்சத்திரம் தோன்றி னால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் கேடு விளையும் என்பர் இந்த பவு ராணிகர்களே. இதிலிருந்து இந்த விநாயகரைக் கும்பிட்டால் - பார்த்தால் கேடு விளையும் என்று அவர்களே ஒப்புக் கொள்வதாகவில்லையா?
இவ்விதம் முதலில் விக்கினம் செய்ப வராகக் கற்பனை செய்யப்பட்ட உருவமே, பின்னர் விக்கினத்தை நீக்கும் சாமி யாகவும் அறிவிற்கும் படிப்புக்கும் ஆதிகர்த் தாவாகவும் கருதப்பட்டார். இது உறுதிப் பட்ட - பண்பட்ட அறிவாளர் செயலாகுமா?
பக்த தமிழர்கள் கடிதம் கணக்கு முதலியவை எழுதத் துவங்கினாலும் தலைப்பில் பிள்ளையார் சுழி போடுகிறார் களே - எதற்கு? எழுதுவதற்கு இந்த விநாயகர் விக்கினம் (தடை) செய்வார் - அறிவுத் தடுமாற்றத்தை உண்டாக்குவார் என்ற கற்பனை பயத்தாலா? இப்படிப் பிள்ளையார் சுழி போடாமல், பிற மதத் தினர் - இந்துக்களில் சைவர்கள் என்பவர் களிலும் கூட கோடானுகோடி பேர் கடிதங் களும், கணக்குகளும் எழுதுகிறார்களே - தப்பும் தவறும் நேரிடுகிறதே?
தோன்றிய காலம்
கணபதியின் சிற்பம் முதல் இரண்டாம் நூற்றாண்டில்தான் அரைகுறையாக உருவகப்படுத்தப்பட்டது. நான்காம் நூற்றாண்டில்தான் முழு உருவமும், உறுப்புகளும் அளித்தனர் என்பது சிற்பக் கலைஞர் கணிப்பு, பின்னர் பலவகை உருவங்களில் - உட்கார்த்திருத்தல், நடனமாடுதல், பெண்களைத் தழுவிக் கொண்டிருத்தல் முதலிய உருவங்களில் தீட்டப்பட்டன.
முதலில் வடக்கில், அய்ந்து வெவ்வேறு உருவப் பிள்ளையாக இருந்து பின்னர் அய்ந்து தலைப் பிள்ளையாராக்கப்பட்டார். கணேசனி என்ற பெண் உருவத்தோடும் (விஷ்ணு பெண்ணாகி - ரிஷிகளிடம் பிள்ளைகள் பெற்ற கதைக்கு இது திறமைப் போட்டி போலும்) சில சமயம் பைரவ அம்சத்தோடும் (பைரவன் என்று பெயருள்ள அப்பனான சிவனுக்குப் போட்டி?) பெருச்சாளி வாகனத்தின் மேல் உட்கார்ந்திராமல் மயில் (தம்பி கந்தனுக்குப் போட்டி?) தவளை, ஆமை முதலிய வாகனங்களிலும் அமர்ந்தும் உருவமாக அமைத்தனர். பிள்ளைக்கறி சமைத்து பார்ப்பனத் துறவிக்கு விருந்து வைத்த சிறுத் தொண்ட நாயனாரின் மாமியார் ஊரான திருச்செங்காட்டாங்குடி விநாயகருக்கோ, யானை முகம் நீக்கப்பட்டு மனித முகம் தரப்பட்டுள்ளது.
விநாயகர் யானைமுகம் பெற்ற கதையை நம்பாமலோ, பிற மதத்தினர் நையாண்டி செய்ததைக் கண்டோ, இப்படி மனிதமுகப் பிள்ளையார் சிலை செய்து வைத்துக் கொண்டனர் போலும்.
பெரும்குடும்பி பிரம்மச்சாரி
கணபதி நிரந்தர பிரம்மச்சாரி - தாயைப் போல அழகான பெண்ணைத் தேடியபடி, பெண்கள் தண்ணீருக்கு வரும் கிணற்று மேட்டிலும், ஆற்று மேட்டிலும் உட்கார்ந்திருக்கிறார் என்பது ஊரார் பேச்சுக்கதை. ஆனால் அவர் மடிமேல், சக்தியை அமர்த்திக் கொண்டு, வல்லப (சக்தி) கணபதியாக இருக்கிறார் என்றே அவரது அத்தியந்த பக்தி மதத்தினராக காணபதர் கூறுகிறார்.
கணபதி அறிவையும் பயனையும் தருவதால், அவருக்கு புத்தி, சித்தி என்ற தேவிகளும் க்ஷேமம், லாபம் என்று புதல்வர்களும் இருக்கிறார்கள் என்கிறது மற்றொரு புராணம், தென்னாட்டில் சித்தி - புத்தி ஆலிங்கன விநாயகருக்கு ஆலயங்கள் இருக்கின்றனவாம். இந்த கணபதி - பிள்ளையார் எல்லா இடங்களி லும் - கிணறு - குளம் - ஆற்றங்கரைகளி லும், சந்துக்கள், தெருக்கள், கோவில் முன்னணியிலும் இருப்பதால், மற்ற சாமிகளைவிட அதிகமான பூசையும் பெறுவதாக பக்தர்கள் பெருமைப்பட்டுக் கொள்வர். அர்ச்சகர் - தட்சணைத் தொல்லை இல்லாமல் இலவச தரிசன சாமி என்பதால் தாராளமாக பலர் கும்பிட வாய்க்கிறது போலும்!
இத்துடன், ஆவணி மாத வளர்பிறை நான்காம் நாள் (சதுர்த்தி) விநாயகர் (இயற்கைக்கு முரணான முறையில்) பிறந்து வைத்த நாளாகக் கொண்டு பண்டிகை நடத்துகிறார்கள். இவரை அன்று கும்பிடுகிறவர்களுக்குக் கிடைக் கும் பலன் எப்படியிருந்தாலும் இவரது அலங்கோலக் களிமண் பொம்மைகளால் களிமண் பாண்டத் தொழிலாளர்களுக்கும் கடலை, பொரி, தேங்காய், பூ வியாபாரி களுக்கும் கொழுத்த வருவாய் கிடைக் கிறது - கண் கண்ட பலன்? - அவ்வளவு தான். பூசை போட்டவர்களுக்கோ, ஆற்றில், குளத்தில் கடலில் காசைக் கரைக்கின் றனர் - மண்ணுப் பிள்ளையார்களை அவற் றில் போட்டுக் கரைத்துவிடு கிறார்கள். குழந்தைகளுக்கு கொழுக் கட்டை கடலை, பொரி, பழம் கூடுதல் வருமானம்.
பிறந்த கதைகள்! சிரிப்பானி!
ஒரு காலத்தில் சிவமூர்த்தியும் பிராட்டி யும் நந்தவனத்துச் சித்திர மண்டபத்தில் எழுதியிருந்த ஆண் - பெண் யானை களைப் பார்க்க அவற்றினின்றும் கசமுகர் தோன்றினார்.
(அபிதான சிந்தாமணி)
(கண்ணால் பார்த்தாலும் கற்றுச் சித்திரம் மனிதப் பிள்ளை பெறச் செய்யும் மாயமந்திரமா?) பிரதம மகா சிருட்டியில் சிவமூர்த்தியின் திருக்கண்டத்து உதித் தவர் பிள்ளையார்.
(அபிதான சிந்தாமணி)

Saturday, July 7, 2012

பகுத்தறிவு வினாக்கள்



  • உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்?
  • நடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா?
  • குழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்? ஏன்?
  • எல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்?
  • எல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்?
  • ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்?
  • அவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்?
  • அன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு?
  • முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்?
  • ஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்?
  • மயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்?
  • நோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்?
  • எல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா? தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை?
  • அய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே! தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்?
  • அக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்?
  • பச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா?
  • சிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா?

திருமண மந்திரமும்-திதி மந்திரமும்


இந்து திருமண மந்திரமும் அதன் பொருளும்

மந்திரம்:
ஸோம ப்ரதமோ விவித கந்தர்வ விவிவத உத்தர!
த்ருதியோ அக்னிஷ்டே பதி துரியஸ்தே மநுஷ்ஐயா!!
ஸோமோ ததத் கந்தர்வாய
கந்தர்வோ ததத் அக்னயே!
ரயிம்ச புக்ராம் சாசாத் அக்னிர் மஹ்யம்
அதோ இமாம்
பொருள்: அதாவது மணப்பெண்ணை சோமன் முதலில் மனைவியாக அடைந்தான். பிறகு கந்தர்வன் அடைந்தான். இவளுடைய மூன்றாவது கணவன் அக்னி, நான்காவது கணவன் மனித சாதியில் பிறந்தவன்.
சோமன் உன்னை (மணப்பெண்ணை) கந்தர்வனுக்குக் கொடுத்தான். கந்தர்வன் அக்னிக்குக் கொடுத்தான். அக்னிதேவன் இவளுக்குச் செல்வத்தையும் குழந்தையையும் கொடுத்த பிறகு எனக்குத் தந்தான்.... என்பதே புரோகிதர் கூற அதை திருப்பி மணமகன் கூறும் மந்திரத்தின் பொருள்.
இம்மந்திரத்தின் வெளிப்படையான அர்த்தம் என்ன? இந்து மதப்படி திருமணம் செய்து கொள்கின்ற ஒருவரின் மனைவி பலரால் அனுபவிக்கப்பட்ட ஒரு பரத்தை (விபச்சாரி) என்றும், இந்த பெண் (மணப்பெண்) வேறொருவனிடம் குழந்தை பெற்றுக் கொண்டே அவனுக்கு மனைவியாகிறாள் என்றும் இந்து மதம் கூறுகின்றது.
ஆதாரம்: காஞ்சி சங்கராச்சாரியார் எழுதிய தெய்வத்தின் குரல் - பாகம் 2 - பக்கம் 874
எனவே இந்துமதப்படி திருமணம் செய்துக் கொண்டால் உன் மனைவி ஒரு விபச்சாரி என்று பொருள்.

திதி மந்திரமும் அதன் பொருளும்

மந்திரம்:
என்மே மாதா ப்ரலுலோபசரதி
அன்னவ் வ்ரதா தன்மே ரேதஹா
பிதா வ்ருந்த்தாம் ஆபுரண்யஹா அவபத்யநாம...
பொருள்: நான் யாருக்குப் பிறந்தேன். என் அப்பா யாரென தெரியாது. மற்றவர்கள் சொல்வதால் நான் இன்னாருக்குத்தான் பிறந்தேன் என்பதை நம்ப வேண்டியுள்ளது. அது அம்மாவுக்குத்தான் தெரியும். அப்படிப்பட்ட அம்மாவுக்கு என் அஞ்சலியை கொண்டு போய் சேர்ப்பீர் என்பது இதன் பொருள்.
இம்மந்திரத்தின் வெளிப்படையான அர்த்தமென்ன?
தன் தாயானவள் சந்தேகத்திற்கு உரியவள். தன் கணவனுக்கு உண்மையாக நடக்காதவள். மாற்றானிடம் உடல் தொடர்பு வைத்திருந்தவள் என்ற அடிப்படையில் இந்த மந்திரம் சொல்லப் படுகின்றது. இதைத்தான் மந்திரம் ஓதும் புரோகிதர் சொல்ல திதி கொடுக்கும் மகன் திருப்பி சொல்கின்றான்.
ஆதாரம்: அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாத்தாசாரியார் எழுதிய இந்து மதம் எங்கே போகிறது...
பாகம் -1 - பக்கம் 157, நக்கீரன் வெளியீடு.
எனவே இந்துமதப்படி பெற்றோர்களுக்கு நீ திதி கொடுத்தால் உன் தாய் ஒரு விபச்சாரி என்று பொருள். இதைத்தான் இந்து மதம் கூறுகிறது.

Saturday, June 23, 2012

நினைவு நாள்: 18.07.1919 திராவிட இயக்க இலெனின் டி.எம். நாயர்


புலவர் குறளன்பன்
கல்விக்களம்: கேரள மாநிலம் பாலக்காட்டை ஒட்டித் திருத் என்றொரு சிறு நகரம்.. அதன் அருகில் உள்ள ஊர் தாரவாட். அங்கு பிறந்தவர் தான் நம்முடைய மாதவன் நாயர் அவர்கள்.
அவருக்குப் பிறப்பும், பள்ளிப் படிப்பும் மட்டும்தான் கேரளம். மற்றபடி அவர் கல்லூரிக் கல்விக்கு நாடிய இடம் சென்னை மாநிலக் கல்லூரி. பின்னர் மருத்துவம் கற்கப் போன இடம் இங்கிலாந்து. கற்றதும் திருப்பி வராமல் இங்கிலாந்தில் கால் கொண்டு மருத்துவமனை ஒன்றை நடத்திப் பெரும் பொருள் ஈட்டிய கருத்தாளர்.
காதல் களம்: தன்னுடைய தாயகமாய் அவர் கருதிய சென்னைக்குத் திரும்பிய ஆண்டு 1897. பண வெறி மருத்துவராய் வாழ்ந்த அவர் பொதுப் பணி புரிய விரும் பினார் பேராய (காங்கிரஸ்) கட்சியில் புகுந்தார்.
பேராயக் கட்சியின் பார்ப்பனத் தலைமை வழக்கம் போல திராவிடரான நாயரையும் புறக்கணித்தது. தியாகராயர் திராவிட இயக்கத்திற்குத் திரும்பியது போல நாயரும் திரும்பினார்.
வாழ்வுக்களம்: வகுப்புவாரி உரிமை: கோவையில் 19.8.1917ஆம் நாள் திராவிடர் இயக்க மூத்த அமைப்பான தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் நடத்திய மாநாட்டில் நம்முடைய நாயர் முன்னிலை யராய் நின்று கருத்துரையாற் றினார்.
சென்னை வந்த மாண்டேகு செம்சுபோர்டு அவர்கள் (15.12.1917) தியாகராயர் தலைமை தாங்கிய வரவேற்புக் குழுவில் இடம் பெற்று வகுப்பு வாரிப்படி கல்வி, வேலையில் ஒதுக்கீடு தருமாறு வலியுறுத்தி விண்ணப்பித்தார்.
மாண்டேகு செம்ஸ்போர்டு ஆரியச் சார்பு அன்னிபெசண்டு, சி.பி. இராமசாமி அய்யர் பேச்சில் மயங்கிச் சாய்ந்ததை அறிந்து பிரிட்டன் பாராளுமன்றம் சென்று மாண்டேகு செம்ஸ் போர்டு அறிக்கைக் கருத்தாடலில் (விவாதம்) பங்கேற்று வகுப்புவாரி உரிமையை வலியுறுத்தி வந்தார்.
நடுவுநிலை: சென்னை நகராட்சியில் ஒரு தீர்மானம், கொண்டு வந்தவர் தியாகராயர். அவர்நம் நாயரின் நண்பர். நயன்மைக் (நீதி) கட்சியில் கூட்டுப் பணியாளர். அப்படிப்பட்ட அவர் கொண்டு வந்த தீர்மானம். திருவல்லிக் கேணி பார்த்தசாரதி கோவில் குளத்திற்கு வரி வாங்காமல் தண்ணீர் தர வேண்டும் என்பதாகும்.
வருவாய் கோவில்களுக்கு நிறைய வரு கிறது. வரி கட்டுவதுதான் முறை என்று கூறி நாயர் மறுத்து விட்டார். நண்பருக்காக நயன்மையை விட்டுத் தராத நடுவு நிலையராய் நின்றார்.
போலி பத்தி: மதச் சார்பில் லாத பகுத்தறிவாளராய் இங்கிலாந்திலிருந்து தென் நாட்டிற்கு வந்தவர். பிறகு மனம் மாறிப் பிரம்ம ஞான சபையின் தலைமைப் பொறுப்பேற்றவர். அதன்பின் கண்ணன் மறுபிறப்பு எடுக்கப் போவதாகக் கதை அளந்தவர். அளவில்லாமல் பொய்யை விற்றுப் போலியாய் பத்தி (பக்தி) வேடமிட்டு வாழ்ந்து வந்த பெண்மணி அன்னி பெசண்ட் ஆவார்.
சமுதாய வீதியில் குறிக்கோள் இல்லாமல் கும்மாளம் போட்டு அலைந்த அவரின் அழுக்குச் செயற்பட்டினை ஆங்கில நூல் ஒன்றின் வாயிலாகத் தோலுரித்துக் காட்டிய வீறு நம் தா.மா. நாய ருக்கே உரிய தனித்திறனாகும்.
வெற்றிக்களம்: தலைநகர் சென்னையில் நம்முடைய பெரியார் திடல் அமைந்துள்ள வேப்பேரிப் பகுதியில் எத்திராசு முதலியார் இல்லத்தில் 20.11.1916 ஆம் நாள் நடைபெற்ற பார்ப்பனர் அல்லாதார் கூட்டத்தில் தா.மா. நாயர் தென்னாட்டு பிராமணர் அல்லாதார் நலனுக்காக என் உயிரையும் தருவேன் - என்று தெரிவித்தபடி இலண்டன் பாராளுமன்றம் கூட்டுக் குழு விடம் வேண்டுகோள் முன் வைக்க விழைந்த காலத்தில் (18.07.1917) வாழ்க்கை நிறைவுச் சூழலுக்குத் தள்ளப்பட்டுத் தன் உயிரைத் தர நேரிட்டு விட்டது.
அரசியல், பொருளியல், குழுகாயவியல் என்னும் மூன்று தளங்களிலும் அவர் ஆற்றிய பணி அனைத்தும் மிக மிக அருமையானவை.
அவர் போலும் அஞ்சாமை, நடுவு நிலைமை உடைய அறிவுப் பணியாற்ற நாம் நம் இளையரை எழுப்பி அமைவோமாக.
                                                                  விடுதலை 23-6-2012 ஞாயிறுமலர்

யஜுர் வேதத்தில் பசுவைக் கொன்று யாகம்!


சமஸ்கிருதத்தில் யாகத்துக்குப் பெயர்    தமிழில் பொருள்
1. கோஸவம்    பசுமாடு காளைமாடு இவைகளைக் கொல்லும் யாகம்
2. வாயவீய ஸ்வேதபக    வாயு வேதனைக்காக வெள்ளைப் பசு யாகம்
3. லத்ஸோப கரணம்    கன்றுக்குட்டியை கொலை செய்து நடத்தும் யாகம்.
4. அஷ்டதச பசு விதானம்    பதினெட்டு பசுக்களைக் கொலை செய்து நடத்தும் யாகம்
5. ஏகாதசீன பசுவிதானம்    பதினொன்று பசுக்களை கொல்லும் யாகம்
6. க்ராமாரண்ய பசு ப்ரசம்ஸா    நாட்டிலும் காட்டிலும் உள்ள பசுவைக் கொன்று யாகம் செய்தல்.
7. உபாகரண மந்த்ரம்    யாகத்தில் கொல்லப்படும் பசுவைச் சுத்தி செய்யும் மந்திரம்.
8. கவ்ய பசுவிதானம்    பசு மாட்டைக் கொன்று நடத்தும் யாகம்
9. ஆதித்ய தேவ தாகபசு    சூரிய தேவதைக்கு பசு யாகம்
- மத விசாரணை நூல். பக்கம் 79,80 -சிவானந்த சரஸ்வதி
பசுவதைத் தடைச் சட்டம் கோரும் பார்ப்பனீயமே! இதற்கென்ன பதில்?

நுழைவுத்தேர்வு நீக்கத்தால் பெற்ற பலன்


1984இல் இதே நாளிலே.... 
திராவிடர் கழக வரலாற்றுப் பாதையில் அநேகமாக ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு வகையில் 
முத் திரை பதிக்கப்பட்டதாகவே இருக் கும்.
இந்நாளில்தான் 1984இல் எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக அரசு திணித்த நுழைவுத் தேர்வு ஆணையினை எரிக்கும் போராட்டம் 23 இடங்களில் நடத்தப் பட்டது.
எம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்தவரையில் திராவிடர் இயக்கத்தின் சமூக நீதி சிந்தனை யில் மிகவும் பின் தங்கி இருந்தார் என்றே கூற வேண்டும்.
அதன் தீய விளைவு தான் - அவரின் நுழைவுத் தேர்வு திணிப்பும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீட்டில் வருமான வரம்பும் கொண்டு வந்தது.
நுழைவுத் தேர்வு என்னும் மாயையை மக்கள் மத்தியில் தோலூரித்துக் காட்டியது கழகம்.
திராவிடர் கழகத்தின் அழுத்த மான தொடர் நடவடிக்கைகளால் அம்மையார் ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்தபோது நுழை வுத் தேர்வு ரத்து செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டது. திராவிடர் கழகத் தலைவர் சொன்ன ஆலோசனைப்படி கல்வி நிபுணர் குழு அமைத்து அவர்களின் ஆலோசனைப்படி அந்த ஆணை பிறப்பிக்கப்பட்டு இருந்தால், ஆணை நீதிமன்றத்தால் ரத்தாகி இருக்காது.
கலைஞர் அவர்கள் டாக்டர் ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை அடிப்படையில் நுழைவுத் தேர்வை ரத்து செய்ததால் உச்சநீதி மன்றம் வரை அந்த ஆணை நிலை பெற்றது. தமிழ்நாட்டின் இன்றைய நிலையில் நுழைவுத் தேர்வு கிடை யாது.
ஆனால் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருக்கக் கூடிய கபில்சிபல் அய்ந்து நட்சத்திர கலாச்சாரத்தின் சுகவாசி! அவர் விடும் மூச்சுக்கூட மூன்று நட்சத்திர தகுதியை உடையதாக இருக்கக் கூடும்.
அவர் ஒரு கனவைக் கண்டிருக் கிறார். இளங்கலை முதல் (பி.ஏ., பி.எஸ்.சி., உட்பட) அகில இந்திய நுழைவுத் தேர்வை நடத்த வேண்டு மாம். இது அவர் கனவாம்.
கனவான்களின் கனவுகளுக் கெல்லாம் காலம் காலமாக ஒடுக் கப்பட்ட இந்த நாட்டு மக்கள் தானா கிடைத்தார்கள்?
போட்டித் தேர்வுக்கும், நுழைவுத் தேர்வுக்கும் இடையே உள்ள வேறு பாட்டைக்கூட புரிந்து கொள்ளாத படிப்பு எதற்கு பிரயோசனம்?
நுழைவுத் தேர்வை நடத்தி னாலும் முழு சமநிலை என்பது கட்டுக்கதைதான். ஏனென்றால், சரியான விடையைத் தேர்ந்தெ டுப்பதைவிட கோன்பனேகா குரோர்பதி தொலைக்காட்சி நிகழ்ச்சி போல அனுமானத்தின் அடிப்படையில் விடைகளை டிக் செய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.கே. மிஸ்ரா, சம்பத்குமார் ஆகி யோர் அடித்துச் சொன்னார்களே பிரபல வழக்கறிஞராக இருந்த கபில்சிபலுக்கு இது ஏன் புரிய வில்லை?
என்ன செய்வது! என்ன படித் திருந்தாலும், மேல் நாடு சென்று மாட்டுக்கறி தின்று இருந்தாலும் பார்ப்பனர்களின் மனப்பான்மை என்ற ஒன்று இருக்கிறதே - அது ஜென்மத்தோடு பிறந்த ஜீவ சுபாவ மாக அல்லவா போய்விட்டது!
ஒடுக்கப்பட்ட மக்கள் தோள் களில் கிளர்ச்சி  எரிமலைகளைத் தூக்குவதன் மூலம்தான் ஆதிக்க புரிகளின் அஸ்திவாரத்தை அஸ்த மனம் செய்ய முடியும்.
ரகசியம் புரிகிறதா?
2010ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரியில் திறந்த போட்டியில் இடம் கிடைக்கப் பெற்ற விவரம் இதோ:
மொத்த இடங்கள் 460
இதில் பிற்படுத்தப்பட்டோர்    300
மிகவும் பிற்படுத்தப்பட்டோர்    72
தாழ்த்தப்பட்டோர்    18
முசுலிம்கள்    16
உயர்ஜாதியினர்    54
(இந்த 54-இல் பார்ப்பனர் அல்லாத உயர் ஜாதி யினரும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது).
200-க்கு 200 மதிப்பெண் பெற்றோர் -    8.
இதில் பிற்படுத்தப்பட்டோர்  - 7
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - 1
உயர்ஜாதியினர் பூச்சியம்
நுழைவுத் தேர்வு இல்லாமல் நடத்தப்பட்டதால்  சமூக நீதியின் சிகரத்தில் நம் மக்கள் கொடியேற்றினர்.
இந்த நிலையை, நிலைகுலையச் செய்யத்தான். வஞ்சக நோக்கோடு - சூழ்ச்சி வலையோடு பின்னப் படுவதுதான் நுழைவுத் தேர்வு - எச்சரிக்கை! எச்சரிக்கை!
                                                                                                                                                        - விடுதலை 22.6.2012