Saturday, June 23, 2012

நுழைவுத்தேர்வு நீக்கத்தால் பெற்ற பலன்


1984இல் இதே நாளிலே.... 
திராவிடர் கழக வரலாற்றுப் பாதையில் அநேகமாக ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு வகையில் 
முத் திரை பதிக்கப்பட்டதாகவே இருக் கும்.
இந்நாளில்தான் 1984இல் எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக அரசு திணித்த நுழைவுத் தேர்வு ஆணையினை எரிக்கும் போராட்டம் 23 இடங்களில் நடத்தப் பட்டது.
எம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்தவரையில் திராவிடர் இயக்கத்தின் சமூக நீதி சிந்தனை யில் மிகவும் பின் தங்கி இருந்தார் என்றே கூற வேண்டும்.
அதன் தீய விளைவு தான் - அவரின் நுழைவுத் தேர்வு திணிப்பும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீட்டில் வருமான வரம்பும் கொண்டு வந்தது.
நுழைவுத் தேர்வு என்னும் மாயையை மக்கள் மத்தியில் தோலூரித்துக் காட்டியது கழகம்.
திராவிடர் கழகத்தின் அழுத்த மான தொடர் நடவடிக்கைகளால் அம்மையார் ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்தபோது நுழை வுத் தேர்வு ரத்து செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டது. திராவிடர் கழகத் தலைவர் சொன்ன ஆலோசனைப்படி கல்வி நிபுணர் குழு அமைத்து அவர்களின் ஆலோசனைப்படி அந்த ஆணை பிறப்பிக்கப்பட்டு இருந்தால், ஆணை நீதிமன்றத்தால் ரத்தாகி இருக்காது.
கலைஞர் அவர்கள் டாக்டர் ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை அடிப்படையில் நுழைவுத் தேர்வை ரத்து செய்ததால் உச்சநீதி மன்றம் வரை அந்த ஆணை நிலை பெற்றது. தமிழ்நாட்டின் இன்றைய நிலையில் நுழைவுத் தேர்வு கிடை யாது.
ஆனால் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருக்கக் கூடிய கபில்சிபல் அய்ந்து நட்சத்திர கலாச்சாரத்தின் சுகவாசி! அவர் விடும் மூச்சுக்கூட மூன்று நட்சத்திர தகுதியை உடையதாக இருக்கக் கூடும்.
அவர் ஒரு கனவைக் கண்டிருக் கிறார். இளங்கலை முதல் (பி.ஏ., பி.எஸ்.சி., உட்பட) அகில இந்திய நுழைவுத் தேர்வை நடத்த வேண்டு மாம். இது அவர் கனவாம்.
கனவான்களின் கனவுகளுக் கெல்லாம் காலம் காலமாக ஒடுக் கப்பட்ட இந்த நாட்டு மக்கள் தானா கிடைத்தார்கள்?
போட்டித் தேர்வுக்கும், நுழைவுத் தேர்வுக்கும் இடையே உள்ள வேறு பாட்டைக்கூட புரிந்து கொள்ளாத படிப்பு எதற்கு பிரயோசனம்?
நுழைவுத் தேர்வை நடத்தி னாலும் முழு சமநிலை என்பது கட்டுக்கதைதான். ஏனென்றால், சரியான விடையைத் தேர்ந்தெ டுப்பதைவிட கோன்பனேகா குரோர்பதி தொலைக்காட்சி நிகழ்ச்சி போல அனுமானத்தின் அடிப்படையில் விடைகளை டிக் செய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.கே. மிஸ்ரா, சம்பத்குமார் ஆகி யோர் அடித்துச் சொன்னார்களே பிரபல வழக்கறிஞராக இருந்த கபில்சிபலுக்கு இது ஏன் புரிய வில்லை?
என்ன செய்வது! என்ன படித் திருந்தாலும், மேல் நாடு சென்று மாட்டுக்கறி தின்று இருந்தாலும் பார்ப்பனர்களின் மனப்பான்மை என்ற ஒன்று இருக்கிறதே - அது ஜென்மத்தோடு பிறந்த ஜீவ சுபாவ மாக அல்லவா போய்விட்டது!
ஒடுக்கப்பட்ட மக்கள் தோள் களில் கிளர்ச்சி  எரிமலைகளைத் தூக்குவதன் மூலம்தான் ஆதிக்க புரிகளின் அஸ்திவாரத்தை அஸ்த மனம் செய்ய முடியும்.
ரகசியம் புரிகிறதா?
2010ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரியில் திறந்த போட்டியில் இடம் கிடைக்கப் பெற்ற விவரம் இதோ:
மொத்த இடங்கள் 460
இதில் பிற்படுத்தப்பட்டோர்    300
மிகவும் பிற்படுத்தப்பட்டோர்    72
தாழ்த்தப்பட்டோர்    18
முசுலிம்கள்    16
உயர்ஜாதியினர்    54
(இந்த 54-இல் பார்ப்பனர் அல்லாத உயர் ஜாதி யினரும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது).
200-க்கு 200 மதிப்பெண் பெற்றோர் -    8.
இதில் பிற்படுத்தப்பட்டோர்  - 7
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - 1
உயர்ஜாதியினர் பூச்சியம்
நுழைவுத் தேர்வு இல்லாமல் நடத்தப்பட்டதால்  சமூக நீதியின் சிகரத்தில் நம் மக்கள் கொடியேற்றினர்.
இந்த நிலையை, நிலைகுலையச் செய்யத்தான். வஞ்சக நோக்கோடு - சூழ்ச்சி வலையோடு பின்னப் படுவதுதான் நுழைவுத் தேர்வு - எச்சரிக்கை! எச்சரிக்கை!
                                                                                                                                                        - விடுதலை 22.6.2012

No comments:

Post a Comment