Sunday, June 16, 2013

பி அண்ட் சி ஆலை வேலை நிறுத்தம் - அவதூறுக்குப் பதிலடி! - 3

பி அண்டு சி ஆலை வேலை நிறுத் தத்தில் இதுவரை நிகழ்ந்தவற்றில் ஜாதி, இந்துக்கள், முஸ்லிம்கள், ஆதி திராவிடர் என்று வேற்றுமை பார்க் காமல் தொழிலாளர் என்கிற முறையில் ஒட்டு மொத்தமாக பங் கேற்று வந்தனர். 1921 ஜூன் 20-ஆம் தேதி வேலை நிறுத்தத்திற்கு தொழிலாளர்கள் ஆயத்த மாகி இருந்தனர். ஆனால் அதற்கு முதல் நாள் ஜூன் 19-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை இரவு நிலைமை வேறாக இருந்தது. பக்கிங்காம் ஆலையின் ஆதி திரா விட தொழிலாளர்களின் கூட்டம் புளியந்தோப்பு பகுதியில் கூட்டப்பட்டது. அக்கூட்டத்திற்குத் ஆதிதிராவிடத் தலைவரான எம்.சி. ராஜாவும், சுவாமி தேசிகானந்தாவும் முன் நின்றனர், உதவித் தொழில் துறை ஆணையாளரும் உடனிருந் தார். அவர் பெயர் சுந்தராச்சாருலு. இக்கூட்டத் தில் அனுதாப வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வதில்லை என்று முடி வெடுக்கப்பட்டது. அரசும், ஆலை நிரு வாகமும் இணைந்தே இப் பிளவை உண்டாக்கினர். எம்.சி.ராஜா இதற்கு துணை நின்றார்.
இந்நிலைமைக் குறித்து வெகுண் டெழுந்து திரு.வி.க.,
... இந்நாளில் எம்.சி.ராஜா வேலை நிறுத்தத்தை உடைத்தெறிய ஊக்கங் கொண்டு முன் வந்ததன் நோக்கத்தை அறிய விரும்புகின்றோம், வேலை நிறுத்த காலத்தில் தலைகாட்டிய சிறீமான் எம்.சி.ராஜா தொழி லாளர்கள் 11ஙூ  மணி நேரம் வேலை செய்து வருந்திய காலத்தில் எங்கே சென்றிருந்தார்? தொழிலாளர் இருண்ட காலத்தில் எங்கே சென்றி ருந்தார்? தொழிலாளர் மலக்குப் பையில் அழுத்தப்பட்ட காலத்தில் எங்கே இருந்தார்? பகலில் உணவு கொள்ளப் போதிய நேரம் பெறாது சாப்பிட்டதும் சாப்பிடாமலும் கை கழுவியும், கை கழுவாமலும் மில்லுக் குள் ஓடித் தொழிலாளர் வருந்திய போது எங்கே நண்ணினார்?
தொழிலாளர் சங்கத்தை அமைத் துக் கொண்டு, நியாயக்கிளர்ச்சி செய்து வேலை நேரத்தைப் பத்து மணியாகவும் பகல் உணவு கொள் நேரத்தை ஒரு மணியாகவும் செய்து கொண்டு, வேறு பல நன்மைகளை பெற்று வரும் இந்நாளில் ஆதி திராவிடர் பெயரை முழங்கிக் கொண்டு வேலை நிறுத்தத்தைக் குறைக்க வீர வார்த்தை பேசுவது நியாயமோ? என்று எழுதினார்.
- நவசக்தி நாளிதழ் (25.6.1921) தலையங்கம்
ஆக, வேலை நிறுத்தம் கெடுவதற்கு எம்.சி.ராஜா முக்கிய காரணமாக இருந் திருக்கிறார் என்பது திரு. வி.க.வின் எழுத்துகளிலிருந்தும் பிற ஆய்வு நூல்களிலிருந்தும் காணக்கிடைக்கிற செய்திகளாகும். முதலில் வேலை நிறுத்தத்திற்கு எதி ராக செயல்பட்ட எம்.சி.ராஜா பின்னர் 1930ஆம் ஆண்டு களில் இது குறித்து அவர் வருத்தப்பட்டும் இருக்கிறார் என்று  பதிவுகள் கூறுகின் றன. ஆதி திராவிட தலை வர்களில் ஒருவரான ராவ் பகதூர் மதுரைப் பிள்ளை இது குறித்து எம்.சி.ராஜா வின் அணுகுமுறையை ஏற்க வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அது குறித்து அவர்கள் வெளியிட்ட கருத்துக்களையெல்லாம் இக்கட்டுரை யில் இணைத்தால் கட்டுரை மிக நீண்டதாக ஆகிவிடும், ஆகவே அவற்றை நாம் இங்கே வெளியிட விரும்பவில்லை. அவையெல்லாம் ஆவணங்களாக பதிவாகி இருக்கின்றன,
ஆலை வேலை நிறுத்தத்தில் ஏற்பட்ட இக்குழப்பங்களில் போலீஸ் பாதுகாப்பும், வழிக்காவலும் வேலை நிறுத்தத்திற்கு எதிராக இருந்தவர்களுக்குத்தான் சாதகமாக இருந்தது. ஆனாலும் இந் நிலைமைகள் குறித்து எல்லாம் 1921 மே இறுதியில் வெளிவந்த சுதர்மா எனும் ஏடு கீழ்க்காணும்படி எழுதி இருக்கிறது.
... தொழிலாளர் நெடும் போராட் டத்திற்குத் தயாராகி வருகின்றனர். போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கு ஆதிதிராவிடரைத்தான் கம்பெனி நம்பியுள்ளது. ஏழை ஆதிதிராவிட தொழிலாளர் வேலைக்குத் திரும்ப வேண்டிய நிலையும் ஏற்படும். இதனால் வேலை நிறுத்தம் முறிவதோடு சங்க ஒற்றுமையும் குலையும், பிரித்தாளும் சூழ்ச்சி கையாளப்படும் என்பது வெளிப் படை பக்கிங்காம் ஆலையில் சென்ற முறை ஏற்பட்ட வேலை நிறுத்தத்தில் இதே போல் மிரட்டினர், இம்முறை இது வெறும் மிரட்டலாக முடியுமா, இல்லையா என்பது ஆதிதிராவிடரைப் பொறுத்துள்ளது
எம்.சி.ராஜாவினால் ஆதிதிராவிடர் கள் வேலை நிறுத்தத்திலிருந்து விலகி இரு ஆலைகளுக்கு கொஞ்சம் கொஞ்ச மாகச் செல்லத் தொடங்கினர். இதன் விவரத்தை எயிலிஸ் கமிட்டியின் அறிக்கை கீழ் காணும் விதத்தில் எடுத்து கூறுகிறது. இந்த எயிலிஸ் கமிட்டி என்பது என்ன? என்பது குறித்து பின்னர் ஓர் இடத்தில் குறிப்பிட்டு இருக்கின்றோம்.
இவ்வாறு இரண்டு மாதங்களில் வேலை நிறுத்தம் உடைவதற்கு எம்.சி. ராஜா காரணமாக இருந்தார். ஜூலை 11-ஆம் நாளிலிருந்தே ஆலைகளின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது. வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து நடத்த திரு. வி.க.வுக்கு ரூபாய் ஒரு இலட்சத்தை காங்கிரஸ் கமிட்டி கொடுத்தது என்று மெயில் எழுதியது. அவதூறான இச் செய்தியை எதிர்த்து வழக்குத் தொட ருவேன் என்று திரு. வி.க. கூறியதால் மெயில் அச்செய்தியைத் திரும்பப் பெற்றது. இதனால் வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களிடையே பதற்றம் ஏற் படுவது இயல்பே. இதனால் தொழி லாளர் வாழும் குடிசைப் பகுதிகளில் தீ வைப்பு நிகழ்வுகள் நடந்தேறின. ஆதிதிராவிடர்கள் வாழ்ந்த பகுதி களிலும் தீவைப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. இவற்றை விசாரிப்பதற்காக எயிலிஸ் கமிட்டி அமைக்கப்பட்டது. 1921 ஜூன் 29-ஆம் தேதியிலிருந்து பெரம்பூர் வட்டத்தில் நிகழ்ந்த குழப்பங்களை விசாரிக்கவே இக்கமிட்டி நியமிக் கப்பட்டது.
இக்குழுவில் சட்டமன்ற உறுப்பினர்களான ஆர்.வேங்கடரத் தினம் நாயுடு, ராவ்பகதூர் நரசிம்ம மாச்சாருலு உறுப்பினர்களாக இருந் தனர். இக்குழுவின் முன் செல்ல திரு. வி.க. மறுத்துவிட்டார். எல்லா ஜாதிகளும் தொழிலாளர் களாகப் பணியாற்றிய நிலையில் சங்கம் வேலை நிறுத்தம் மேற்கொண்டபோது எம்.சி.ராஜா ஏற்படுத்திய பிளவே பெருங்குழப்பங்களுக்கு காரணமா யிற்று. ஹோம் ரூல் இயக்கத்தின் அன்னி பெசண்ட் அம்மையாரின் பேச்சும் வாடியா விலகி அய்ரோப்பா சென்றதற்குப் பிறகு முற்று பெற்று விட்டது எனலாம். தலைமை பொறுப்பில் திரு.வி.க.வே இயங்கினார் காங்கிரஸ் விடுதலை இயக்கமாக இயங்கிய காலகட்டமாதலால் திரு. வி.க. காங்கிரஸ்காரராக இருந்தும் உழைத்தும் சங்கத்திற்கு நிதி உதவியோ தொழிலாளர்களுக்கு வேறுவித தார்மீக ஆதரவோ வழங்க வில்லை. வழங்குவதாகக் கூறி செய் யவும் இல்லை என்று எழுதினால் இன்றும் சரியானது என்று கருது கின்றோம். அடுத்து நீதிக்கட்சி இக்கட்சி அப்போதுதான் இரட்டை ஆட்சி முறையின் கீழ் சென்னை மாகாணத்தை ஆண்டு கொண்டு இருக்கிறது. எப்படி மாறுகிறது என்றால் நிதி, இராணுவம், போலீஸ் மூன்றையும் ஆங்கிலேயர் வைத்துக் கொண்டு இதரதுறைகளை இந்தியர் களுக்கு வழங்கியது தான் இரட்டை ஆட்சி முறை. இந்நிலையில்தான் இரண்டு பெரிய கலவரங்கள் சென்னை மாகாணத்தில் உண்டாயின 1) பி அண்டு சி ஆலை வேலை நிறுத்தம் 2) மலையூரில் மாப்பிள்ளை கலகம், நாம் அவற்றில் பி அண்டு சி ஆலை வேலை நிறுத்தத்தைத்தான் இங்கே பார்த்து வருகின்றோம்.
இப்போது நாம் பின்னி அண்டு கர்நாடிக் ஆலை வேலை நிறுத்தம் பற்றிய விவரங்களை மிகச்சுருக்கமாக மேலே எடுத்து கூறி இருக்கின்றோம், இனி தோழர் அருள் எழுதியுள்ள வற்றைப் பார்ப்போம்.                      
                                                                                                                                         (தொடரும்) விடுதலை 15.6.2013

No comments:

Post a Comment