Thursday, July 4, 2013

விவேகானந்தரும் விவேகானந்தா கல்லூரியும் - சில உண்மைகள் -4



இந்து மதப் பரப்பாளர் விவேகானந்தரும் சென்னை விவேகானந்தா கல்லூரியும் - சில உண்மைகள் -4

                                                                                                                                                                                அ.கருணானந்தன்,
                                                                                                                                       வரலாற்றுத் துறை தலைவர் (ஓய்வு),                      
                                                                                                                                                                 விவேகானந்தா கல்லூரி,
                                                                                                                                                                                                  சென்னை.
சட்டத்தை மீறி சூத்திர சம்காரம் தனியார் கல்லூரி ஒழுங்காற்றுச் சட்ட விதிகளின்படி கல்லூரிக் குழுவிற்கு இரண்டு பேராசிரியர்கள் பணிமூப்பு அடிப்படையில் நியமிக்கப்பட வேண்டும். இன்றைய நிலையில் விவேகானந்தா கல்லூரியில் முதல்வருக்கு அடுத்தபடி பணியில் மூத்தவர் சூத்திரரான முனைவர் உன்னிக் கிருஷ்ணன்பிள்ளை இதுவரையில் 67 ஆண்டு வரலாற்றில் சமஸ்கிருதத் துறையில் பணியாற்றிய பார்ப்பனரல்லாத பேராசிரியர் இவர் ஒருவர் தான். அதனாலேயே அந்தத் துறையில் பார்ப்பனீய வெறியர்களின் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளார். அவரைத் தனிமைப்படுத்துவதும், அவமானப்படுத்துவதும் தொடர்கின் றன.
சமஸ்கிருதத்துறையின் முறை கேடுகளை எதிர்த்தும், துறைத் தலைவரும் இன்றைய கல்லூரி முதல் வருமான சிறீனிவாசனின் முறை கேடுகளை எதிர்த்தும் இவர் பல புகார்களை நிர்வாகத்திடம் அளித் துள்ளார். விவேகானந்தரின் அத்வைத வேதாந்தம் புறக்கணிக்கப்பட்டு பார்ப்பனீய கிருஹ்ய சூத்திரம், அர்த்த சாஸ்திரம், சிருங்கார காவியங் களுக்கு சிறப்பிடம் தருவதை எதிர்த் தும் நீண்ட கடிதங்களையும் எழுதி னார். பார்ப்பனரல்லாதார், பார்ப்பன ஏகபோக சமஸ்கிருத துறையில் இருக்கலாமா? அதுவும் சமஸ் கிருதத்தில் உண்மையாகவே புலமை யுடைய சூத்திரர் இருக்கலாமா? ஆகவே அவருக்கு கல்லூரிக்குழு உறுப்பினர் பொறுப்பு மறுக்கப்பட்டது.
ஆகஸ்டில் பணி ஓய்வு பெறவுள்ள வருக்கு கல்லூரிக் குழு உறுப்பினர் பதவியா? என்று நியாயம் கற்பிக்கும் கல்லூரிச் செயலாளர் சுகதேவானந்தா என்ற பார்ப்பனீயம் கல்வி ஆண்டு முடியும் வரை அவர் பணியில் தொடர முடியும் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது செயலரின் பதில் பார்ப் பனீயச் சதியை வெளிப்படுத்தியது. உன்னிக்கிருஷ்ணன் மீது குற்றங் களைச் சாட்டி, விசாரணை நிறுவி அவரை பணியில் நீடிக்காமல் செய்ய முடியும் என்ற விளக்கம் பார்ப்பனீய வக்கிரத்தின் வெளிப்பாடல்லவா? ஆகஸ்டில் ஓய்வு பெற உள்ளவருக்கு கமிட்டி உறுப்பினர் பதவி வேண்டிய தில்லை என்றால், பணி ஓய்வு பெறவுள்ள தருணத்தில் குற்றச்சாட்டு, விசாரணை மட்டும் எப்படிச் சரியாகும்? சூத்திரர் மீதான பகை உணர்ச்சி - பழி உணர்ச்சிக்கு எல்லை இல்லையா?
இக்கல்லூரியில் தமிழ் மொழிப்பாடம் உண்டு, தமிழ் இலக்கியம் இல்லை. படிப்பதற்கு போதுமான எண்ணிக்கையில் மாணவர்கள் வரவில்லை என்ற காரணம் காட்டி தெலுங்கு மற்றும் இந்தி மொழித் துறைகளை மூடிவிட்டவர்களின் கல்லூரி யில் சமஸ்கிருதத் துறையில் மாணவர்கள் எண்ணிக்கை எவ்வளவு? சமஸ்கிருத இலக்கியத்துறையில் ஆசிரியர்கள் எண்ணிக்கையை விட மொத்த இலக்கிய மாணவர்கள் எண்ணிக்கை குறைவு. அந்தத் துறை பார்ப்பன ஆசிரியர்களுக் குத் தான் உயர் பதவிகளில் முன்னுரிமை, முழு உரிமை. இன்றைய கல்லூரி முதல்வர் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி, அவரது சிறப்பு அதிகாரி அனைவரும் சமஸ்கிருதப் பேராசிரியர்கள்.
யாரால் சமூக மாற்றம்
இன்று கல்லூரியில் ஆசிரியர்கள் - மாணவர்களில் பார்ப்பனர் அல்லாத வர்கள் பெரும்பான்மையாக இருப்பதற்கு ராமகிருஷ்ணா மிஷன் நடத்தும் கல்லூரி நிர்வாகத்தின் சமூக அக்கறை காரண மல்ல. 1980-க்கு பின் மாணவர் சேர்க்கை, ஆசிரியர் நியமனத்தில் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை மாநில அரசு கட்டாய மாக்கியதனால் தான் இந்த மாற்றம் நிகழ்ந்தது. அதுவரையில் மாணவர் சேர்க்கையிலும், ஆசிரியர் நியமனத்திலும் பார்ப்பனீய ஏக போகமே நீடித்தது. 1986-இல் தான் முதன் முதலாக தலித் ஆசிரியர்கள் நியமனம் நடந்தது. அப்படி நியமனம் பெற்ற இரு தலித் ஆசிரியர் களில் ஒருவருக்கு அந்த ஆண்டு இறுதியில் பணிநீக்க ஆணை வழங்கப் பட்டது. ஆசிரியர் அமைப்பின் ஆறுமாதப் போராட்டத்திற்குப் பிறகு, அரசு தலையிட்டதன் விளைவாக அந்தப் பணி நீக்க ஆணை ரத்து செய்யப்பட்டது.
அரசின் சலுகை யு.ஜி.சி.யின் உதவி கொண்டு விரிவாக்கம் செய்யப்பட்ட கல்லூரி மாணவர் விடுதி, பிற்பட்ட, தலித் பிரிவு மாணவர்கள் எண்ணிக்கை பெருகியபோது, தனியார் விடுதியாக் கப்பட்டு, நலிந்த பிரிவு மாணவர்களுக்கு விடுதி எட்டாமல் செய்யப்பட்டது. கீழ் ஜாதியினருக்கு முதலில் கல்வி என்ற சுவாமி விவேகானந்தரின் குறிக்கோள் என்னவாயிற்று?
அது மட்டுமல்ல, பகல் கல்லூரியில் மானியம் பெறும் வகுப்புகளுக்கு அரசு ஆணைகளின் விளைவாக இட ஒதுக் கீட்டின்படி மாணவர்களைச் சேர்க்கின்ற நிர்வாகம், மாலை வகுப்புகளில் இட ஒதுக்கீட்டைப் புறக்கணிப்பது மட்டுமல்ல, ஏழை மாணவர்களுக்கு எந்தவிதச் சலுகையும் தருவதில்லை. தமிழ் வழிக் கல்வி மாணவர்களுக்கு நுழையவும் வாய்ப்பில்லை. இதுதான் விவேகானந்தர் வலியுறுத்திய தரித்திர நாராயண சேவையா?
துவேஷமல்ல, சமூக நீதி, சமநீதி
சுவாமி விவேகானந்தரின் அனைத் துக் கருத்துகளையும் அப்படியே அங்கீகரிப்பது இயலாமற் போகலாம். அவரது ஆன்மீக விளக்கங்களில், வரலாற்றுப் புரிதல்களில் நம்மைப் போன்றவர்களுக்கு ஒப்புதல் இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் அவரது தேச பக்தியில், நலிந்தவர்களை மய்யப்படுத்திய சமூக நீதித் திட்டங்களில் அனை வருக்கும் மிகுந்த மரியாதையும் ஒப்புதலும் உள்ளன. அந்த சமூகநீதி செயல் பாடுகளை அவரால் உருவான ராம கிருஷ்ணா மிஷனும், அதனால் நிர்வகிக்கப்படும் விவேகானந்தரின் பக்தர்களிடம் மட்டுமின்றி, நல்லெண்ணம் கொண்ட அனைத்து மக்களிடமும் உள்ளது. சங்கரமடம் போன்ற பார்ப் பனர்களுக்கு மட்டுமே உரிய மடமாக ராமகிருஷ்ணா மடத்தை விவேகானந்தர் அமைக்கவில்லை. மடத்தில் சேருவதற்கு துவிஜராகத்தான் இருக்க வேண்டும் என்ற தகுதியை அவர் புகுத்தியதில்லை. அத்தகைய ராமகிருஷ்ணா மடத்தின் துறவிகள், பூர்வாசிரமத்தில் பார்ப்பனராக இருந்தாலும், மிஷனின் திட்டங்களிலும், செயல்பாடுகளிலும், பூர்வாசிரம சாதிப்பற்றோ, ஜாதி வெறியோ இன்றி ஸ்தாபகரான விவேகானந்தரது பாமர மக்களின் மீதான பரிவையும், அவர்களது முன் னேற்றத்தையும் முன்னிலைப்படுத்திய தாகவே இருக்கும், இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதிலும், வலியுறுத்து வதிலும் என்ன தவறு இருக்க முடியும்? இது பார்ப்பனத் துவேஷமல்ல. பொதுச் சொத்தை ஜாதிச் சொத்தாக வக்கிரப் படுத்துவதை எதிர்ப்பதுதான்.
ஜாதிச் சொத்தல்ல, பொதுச் சொத்து
சுவாமி விவேகானந்தரின் 150-ஆவது ஆண்டைக் கொண்டாடும் வேளையில் வித்யா பீடம் என்னும் பெயரில் விவேகானந்தா கல்லூரியை நிர்வாகம் செய்யும் சென்னை ராம கிருஷ்ணா மிஷன், இக்கல்லூரி ஒரு குறிப்பிட்ட மேல் ஜாதியினரின் தன் னலக் கூடாரமாக இயங்காமல் விவேகானந்தரின் சமூக - கல்வி லட்சியங்களை நிறைவேற்றுகின்ற ஒரு பொது நிறுவனமாக இயங்க வேண் டும். இது தொடர்பாக 11.5.2013 அன்று இந்து நாளிதழில் வெளியான ஒரு நீதிமன்றத்தீர்ப்பை மிஷனின் கவனத் திற்குக் கொண்டு வர விரும்புகிறோம்.
“The management and administration of the affairs of a public charitable trust cannot be left entirely to the members of a family, as though it is a private family business concern”
ஒரு பொது அறக்கட்டளை (டிரஸ்டின்)யின் மேலாண்மையும் நிர்வாகமும், ஏதோ ஒரு தனிப்பட்ட குடும்பத்தின் வியாபார விவகாரம் போன்று, ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் உறுப்பினர்களிடம் முழுமையாக விட்டுவிட முடியாது
இதில் ஒரு குறிப்பிட்ட குடும்பம் என்பதை ஒரு குறிப்பிட்ட ஜாதி என்று விரிவுபடுத்தினால் இந்த நீதிமன்றத் தீர்ப்பு விவேகானந்தா கல்லூரி நிர்வாகத்திற்கும் பொருந்தும் என்றே கூற முடியும்.
சென்னை ராமகிருஷ்ணா மிஷனும், வித்யா பீடத்தின் செயலாளரும் நிலை மையை மாற்றுவார்களா?
விவேகானந் தரின் மேலான விருப்பத்தை நிறை வேற்றுவார்களா? விவேகானந்தரை வழிபாட்டுச் சிலையாக மாற்றுபவர்கள், அவரது சீரிய நோக்கங்களை பலி பீடத்தில் புதைத்து விடக்கூடாது என்ற பாமர மக்களின் எதிர்பார்ப்பை இனியாவது புரிந்து கொள்வார்களா?
(நிறைவு)
விடுதலை 4.7.2013

Wednesday, July 3, 2013

விவேகானந்தரும் விவேகானந்தா கல்லூரியும் - சில உண்மைகள் - 3



இந்து மதப் பரப்பாளர் விவேகானந்தரும் சென்னை விவேகானந்தா கல்லூரியும் - சில உண்மைகள் - 3

அ.கருணானந்தன்,
வரலாற்றுத் துறை தலைவர் (ஓய்வு),
விவேகானந்தா கல்லூரி,
சென்னை.
தொடரும் பூர்வாசிம வக்கிரங்கள்
துறவிகளுக்கு ஜாதியோ, பூணூலோ இல்லை என்பது கற்பிதம். துறவியானபின் காவி உடை மாற்றமும் வெறும் பெயர் மாற்றமும்தான் நடை பெறுகின்றன. மனமாற்றம் நிகழ்வ தில்லை. சன்னியாச வேடத்தில் ஜாதி வெறியர்களாகவே தொடர்கிறார்கள், ஜாதி ஆதிக்கத்திற்காகவே பார்ப்பன ஆதிக்கச் சுரண்டலுக்காகவே தங்கள் பொறுப்புகளை (தவறாகப்) பயன் படுத்துகிறார்கள் என்பதற்கு விவே கானந்தா கல்லூரி ஓர் ஒப்பற்ற முன்னுதாரணமாகத் திகழ்கிறது.
ராமகிருஷ்ணா மிஷனின் நிர்வாகச் ஜாதி வெறி எத்தகைய அத்துமீற லுக்கும் கூச்சமின்றிப் போகும் என் பதற்கு ஓர் எடுத்துக்காட்டு. ஒரு கல்லூரி முதல்வர் பணி நிறைவு பெற்றபின் அடுத்த முதல்வர் முறை யாகத் தேர்வு செய்யப்படும் வரை யிலான இடைக்காலத்தில் பணியில் மூத்த பேராசிரியர் மட்டுமே பொறுப்பு முதல்வராக இருக்க வேண்டும் என் கிறது அரசு ஆணை. அரசு மானி யத்தில் இயங்கும் விவேகானந்தா கல்லூரிக்கும் இந்த ஆணை பொருந் தும்.
திரிமூர்த்திகள்
1981-ஆம் ஆண்டு முனைவர் என்.வெங்கடசுப்ரமணியன் பணியிலிருந்து விலகிக் கொண்டார். அவருக்கு அடுத்தபடி பணியில் மூத்தவர் ஜம்புநாதன் என்ற வணிக வியல் துறைத் தலைவர்.
அரசு ஆணையின்படி ஜம்புநாதன் தான் பொறுப்பு முதல்வராக வேண்டும். ஆனால் கல்லூரி நிர்வாகிகளின் பார்வையில் அவரிடம் இந்த தற் காலிகப் பொறுப்பிற்குக் கூட ஒரு தகுதிக்குறைவு இருந்தது. ஜம்புநாதன் ஒரு சூத்திரர். தங்கள் கல்லூரியில் ஒரு சூத்திரன் பொறுப்பு முதல் வராவதா- தீட்டுப்படாமல் பார்ப்பனக் கோட்டையைக் காப்பாற்ற என்ன வழி? சாணக்கியம் சிந்தித்து ஒரு தீர்வைக் கண்டது. மூன்று பேர் கொண்ட குழுவை பொறுப்பு முதல்வர்களாக நியமித்தது. ஜம்புநாதனுடன் வி.கே. சீதாராமன் என்ற வரலாற்றுத் துறைத் தலைவர், கே.கணேசன் என்ற பொரு ளியல்துறைத் தலைவர் இந்தக் குழுவின் தலைமையில் பார்ப்பனர் கணேசன். பின்னர் அவரையே முறையான முதல்வராகவும் தேர்வு செய்தனர். பொறுப்பு முதல்வர்களாக மூன்று பேர்களை நியமித்த நிகழ்ச்சி தமிழக வரலாறு காணாத புரட்சி; அல்ல... அல்ல... புரட்டாகும்.
ஜாதிக்கொரு நீதி
இந்த ஆண்டும் பார்ப்பன சாதி வெறிதான் புதிய கல்லூரி முதல்வரை முடிவு செய்தது. முதல்வர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் பார்ப்பனரல் லாத இரு பேராசிரியர்களும் இருந்தனர். தங்களது தகுதிக்களுக்கான சான்று களை பெட்டி பெட்டியாகக் கொண்டு வந்து தேர்வுக்குழுவினர் முன்னால் வைத்தனர். அதில் பொருளியல் துறைத் தலைவருக்கு ஆய்வுச் சான்றுகளும், அனுபவச் சான்றுகளும் அதிகமாக இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் பார்ப்பனத் தகுதி இல்லாத அவரைத் தவிர்ப்பதற்காக கல்லூரிச் செயலாளர் சுகதேவானந்தாவால் (அவரும் பூர்வா கிராமத்தில் கன்னட பார்ப்பனர்) குழு உறுப்பினர்களுக்கு ஒரு கூடுதல் தகவல் தரப்பட்டதாகக்  கூறப்படுகின்றது.
அதாவது அந்த பொருளியல் துறைத் தலைவர் மீது அவர் துறையைச் சேர்ந்த புகார்கள் நிலுவையில் உள்ளதாம். புகாருக்கு உள்ளான ஒருவரை எப்படித் தேர்வு செய்ய முடியும் என்ற சூழல். எனவே நிர்வாகத்தால் கே.சிறீனிவாசனை தேர்வுக்குழு ஏற்கும்படி ஆயிற்றாம். நியாயம்தானே என்று அப்பாவிகள் நினைக்கக்கூடும். ஆனால்கல்லூரிச் செயலாளரால் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்யப் பட்ட தகவல் ஒன்று உண்டு. அதாவது தேர்ந்தெடுக்கப்படவுள்ள சிறீனிவாசன் மீது அவர் துறையின் சக ஆசிரியர் முனைவர் உண்ணிக்கிருஷ்ணன் என் பவர் கொடுத்த கடுமையான புகார்கள் பல நிலுவையிலுள்ளன என்ற தகவல் தேர்வுக்குழுவிற்குத் தரப்படவில்லை. ஒரே குற்றமானாலும் வர்ணத்திற்கு ஒரு நீதி என்ற மனுதர்மத்தை இந்த நவீன யுகத்திலும் செயல்படுத்துவதில் காவி யுடுத்த பார்ப்பனர்கள் எவ்வளவு முனைப்பாக உள்ளனர் என்பது மீண்டும் உறுதிப்பட்டுள்ளது. கடைசி ஒரு பார்ப்பனர் இருக்கும் வரையிலும் கல்லூரி முதல்வர் பதவி வேறு எந்த ஜாதி யினருக்கும் சென்றுவிடக் கூடாது என்ற பார்ப்பன வெறித்தனத்தை ராம கிருஷ்ணா மிஷனிடம், பார்ப்பன ஆதிக் கம் மிக்க கல்லூரி நிர்வாகக்குழுவிடம் காண்கிறோம்.
இதுமட்டுமல்ல, பார்ப்பன நிர்வாகத் தின் வேறு சில புரட்டுகளையும் விவே கானந்தரின் விசுவாசிகள் கவனத்திற் கொள்ள வேண்டும்.
விவேகானந்தர் விருப்பத்திற்கு மாறாக, இன்று அக்கல்லூரி வசதியான பிரிவினரின் புகலிடமாக உள்ளது. லாபம் ஈட்டும் சுயநிதி அடிப்படை மாலைக் கல்லூரி வகுப்புகளுக்கு அதிக கவனம் காட்டப்படுகிறது.
ஒரு மானியம் பெறும் கல்லூரியின் மாலை நேரப் பிரிவிற்கு பொறுப்பாளராக பகல் நேரக் கல்லூரியின் அனுபவம் மிக்க மூத்த போராசிரியரை நியமிப்பதுதான் நடைமுறையாகும். இவ்வாறு நியமிக் கப்படுபவர்களெல்லாம் பார்ப்பனர்களே. இப்போது மாலை வகுப்புகளுக்குப் பொறுப்பாளராக சுவாமி போதாத் மானந்தா என்ற துறவி, அவரது உதவி யாளர்களாக இருவர், சிறீராம் மற்றும் மணிகண்டன் என்பவர்கள் உள்ளனர். இவர்கள் முறையான பகல் நேர கல்லூரிப் பேராசிரியர்களோ அனுபவத்தில் மூத்த வர்களோ அல்லர். ஆனாலும் இருவருமே பார்ப்பனர்கள்.
கூடுதல் ஊதியம், பார்ப்பனீய ஏகபோகம்
2003-லிருந்து இக்கல்லுரி தன் னாட்சி உரிமை பெற்றுள்ளது. இதில் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் கூடுதல் ஊதியத்தில் நியமிக்கப் படுவார் (மாதம் 10,000 ஆயிரம் ரூபாய்)
இதுவரை இவ்வாறு கூடுதல் ஊதியத்துடன் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியாகப் பணியாற்றியவர்கள் பட்டியல் பின் வருமாறு:
1) முனைவர் அபிராம சுந்தரம் 2) முனைவர் என்.எஸ்.வெங்கட சுப்பிரமணியன்
3) முனைவர் ரங்கதுரை
4) முனைவர் கனகசபேசன் நாகராஜன்
5) முனைவர் வாசன்ரமணன்
6) முனைவர் ராமச்சந்திரன்
அனைவருமே பார்ப்பனர்கள் அதனாலேயே இவர்களை விட பணியில் மூத்தவர்கள் புறக்கணிக்கப் பட்டார்கள். அதிக நிதி, கூடுதல் ஊதியம் பெற்றும் கூட தேர்வுச் சீர் திருத்தம் குறித்து கருத்தரங்கம், ஆய்வு போன்ற எதையும் இந்தப் பார்ப்பன சிரேஷ்டர்கள் நடத்தவில்லை. பொதுப்பணத்தை பார்ப்பனர்களே அனுபவிப்பதற்கு இந்த வாய்ப்புகளை நிர்வாகம் ஏற்படுத்திக் கொடுக்கிறது. பொதுப் பணத்தை பார்ப்பனர் எடுத்துச் செல்வதற்கு வசதியாக சுகதேவா னந்தா தலைமையிலான இன்றைய நிர்வாகம் பல புதுமையான (புதுப்) பதவிகளை உருவாக்கியுள்ளது.
தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரிக்கு உதவியாக சிறப்பு அதிகாரி இந்தப் பொறுப்பு (?) ஓய்வு பெற்ற சமஸ்கிருதப் பேராசிரியர் பார்ப்பனர் வாசன் ரமணனுக்குத்தான் அளிக்கப்படு கிறது. வாரத்தில் ஓரிரு முறை கவுரவ வருகை தருவதற்காக இவருக்கு பல ஆயிரங்கள் மாத ஊதியமாக வழங்கப்படுவதாகத் தெரிகிறது.
இதைப் போன்று இப்போது கல்லூரி முதல்வராகத் நியமிக்கப் பட்டுள்ள சிறீனிவாசனுக்கும் கூடுதல் ஊதியத்தில் ஓர் ஆலோசகர், அவரும் ஒரு பார்ப்பனர், ஓய்வு பெற்ற கல்லூரி முதல்வர் சுவாமிநாதன். இவருக்கும் மாத ஊதியம் பல ஆயிரங்கள் இவர் முதல்வராக இருந்தபோது வந்த தேசிய மதிப்பீட்டுக்குழு (NAAC) இவரைப் போன்றவரை வைத்துக் கொண்டு எப்படி கல்லூரியை நடத்து கிறீர்கள் என்று விமர்சனம் செய்தது ஊரறிந்த ரகசியம். இவர்தான் இன்றைய ஆலோசகர்.
- (தொடரும்)
                                                                                                                                                                                 விடுதலை 3.7.2013

விவேகானந்தரும் விவேகானந்தா கல்லூரியும் - சில உண்மைகள் - 2



இந்து மதப் பரப்பாளர் விவேகானந்தரும் சென்னை விவேகானந்தா கல்லூரியும் - சில உண்மைகள் - 2

அ.கருணானந்தன், வரலாற்றுத் துறை தலைவர் (ஓய்வு),
விவேகானந்தா கல்லூரி,
சென்னை.
விவேகானந்தர் பாதையில் கல்லூரி நிர்வாகம் செல்கிறதா?
இப்போதையக் கேள்வி இது தான்...
விவேகானந்தரது விருப்பத்திற்கு இசைவாகத்தான் அவரால் உருவாக் கப்பட்ட ராமகிருஷ்ணா மிஷன், நடந்து கொள்கிறதா? விவேகானந்தரது லட்சியப்படிதான் ராமகிருஷ்ணா மிஷன், விவேகானந்தா கல்லூரி நிர்வாகம் செயல்படுகிறதா?. விவே கானந்தர் பெயரைத் தாங்கியுள்ள கல்லூரி, விவேகானந்தரது லட்சியங் களை வென்றெடுக்கும் வகையில் அவரால் உருவாக்கப்பட்ட ராம கிருஷ்ணா மிஷனது கல்லூரி விவே கானந்தரின் விருப்பப்படி செயல்பட வேண்டும் என்று தான் நாமும் விரும் புகிறோம். ஆனால் விவேகானந்தர் விரும்பிய சூத்திர யுகம், சூத்திர எழுச்சிக்கு முரணாகவும், எதிர்ப்பாக வும் இக்கல்லூரி 67 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. பார்ப்பன சுயநலமிகளின் கோட்டையாகவே இன்றும் தொடர்கிறது என்பது வேதனையானது, வெறுக்கத்தக்கது, கண்டிக்கத்தக்கது, எதிர்க்கத்தக்கது.
விவேகானந்தா கல்லூரி பார்ப்பனர் கல்லூரியா?
விவேகானந்தர் கல்லூரி  பொதுச் சொத்து அக்கிரகாரச் சொத்தாக மாற்றப்பட்ட மோசடியின் சின்னம்.
1946-இல் இக்கல்லூரி துவக்கப் பட்டது. இக்கல்லூரி பார்ப்பனர்களுக் காக, பார்ப்பனர்களால் பார்ப்பனர் களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட கல்லூரி என்பதற்கான ஒரு போலி யான மாயை உருவாக்கப்பட்டிருந்தது. அது ஒரு மோசடி. இக்கல்லூரியை துவக்க நிதி திரட்டியது மதராஸ் எஜிகேஷன் சொசைடி என்ற குழு. இதில் சுப்பராய அய்யர் செயலாள ராகவும், அல்லாடி கிருஷ்ணசாமி போன்ற பல பார்ப்பனர்கள் உறுப்பினர் களாகவும் இருந்தனர் என்பது உண்மை; ஆனால் எத்திராஜீலு முதலியார் போன்ற பிராமணரல்லா தோரும் இதில் இருந்தனர். பார்ப்பனரை விட பார்ப்பனரல்லாதோரிடமிருந்து அதிகமாக நிதி திரட்டப்பட்டது. கல்லூரி நடத்தும் பொறுப்பு சங்கரமடம் போன்ற பார்ப்பனருக்கு மட்டுமே உரிய ஒன்றிடம் கொடுக்கப்படவில்லை. பார்ப்பனர் மட்டுமே என்ற வரையறையில்லாத, கீழ் ஜாதியினருக்கு தொண்டு செய்வதற் கென்றே உருவாக்கப்பட்ட ராமகிருஷ்ணா மிஷனிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த சமூக நோக்கத்திற்காகவே நடத்தப்பட்டு வந்த ராமகிருஷ்ணா (மாணவர்) இல்ல வளாகத்தின் ஒரு பகுதியை கல்லூரிக்கு ஒதுக்கினர். அங்கு பார்ப்பனரல்லாத நாட்டுக் கோட்டை நகரத்தாரால் 1921-இல் மாணவர் இல்லத்திற்கு என கட்டித் தரப்பட்ட நாட்டுக் கோட்டை நகரத்தார் வித்யாசாலை என்ற பள்ளிக்கட்டடம் கல்லூரிக்கு என ஒதுக்கப்பட்டது. பின்னர் சென்னை மாகாண அரசினால் சிடி இம்ப்ரூவ்மெண்ட் டிரஸ்டிடமிருந்து சி.அய்.டி.காலனி பகுதியில் பெரும் நிலம் (மனைகள்) கல்லூரி மைதானத்திற் காகவும், கல்லூரி விடுதி அமைக்கவும், மிக மிகச் சொற்ப விலையில் (அதிலும் பெரும்பகுதியை அரசே தந்துவிட்டது) தரப்பட்டது.
பல்கலைக்கழக மானியக் குழு தந்த நிதியைப் பயன்படுத்தி (Matching Grant) கல்லூரி மாணவர் விடுதியின் ஒரு கட்டடமும், கல்லூரி நூலகக் கட்டடமும் பெறப்பட்டது. பார்ப்பனரல்லாத நல்லி குப்புசாமிச் செட்டி, ஓபுல் ரெட்டி போன்ற கொடையாளர்களிடமிருந்து கிடைத்த கொடையில் அரங்கங்களும் புதுக்கட்ட டங்களும் எழுந்தன. மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் மாநில, மத்திய அரசுகளிடமிருந்து நிதிக் கொடைகளை இவ்வாறு பெற்றது மட்டுமல்ல, மாநில அரசிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை மாதந் தோறும் ஊதிய மானியமாகவும் பெற்று வருகின்ற விவேகானந்தா கல்லூரி எப்படி ஒரு பார்ப்பனக் கல்லூரியாக இயங்க முடியும்?
எனவே இது மக்கள் வரிப்பணத் திலிருந்து ஒதுக்கப்படும் அரசின் மாநில உதவியிலும், பொதுமக்கள் கொடையிலும் இயங்கும் கல்லூரி. பாமர மக்கள் சேவைக்கென விவேகானந்தரால் உரு வாக்கப்பட்ட ராமகிருஷ்ணா மிஷனால் நிர்வகிக்கப்படும் கல்லூரி. ஒரு பொதுச் சொத்து; மக்கள் சொத்து.
நீதி - நியாயத்திற்குப் புறம்பான பார்ப்பன சாதி ஆதிக்கம்
இந்த பொதுச் சொத்து, பொதுக்கல்வி நிறுவனம் அது துவக்கப்பட்ட காலம் முதல் இன்று வரையில் 67 ஆண்டுகளாக நடைமுறையில் ஒரு இந்து அமைப்பாக என்று கூட இல்லாமல் ஒரு பார்ப்பன நிறுவனமாகவே இருந்து வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் தகவல்கள் கீழே தரப்படுகின்றன.
கல்லூரி துவக்கப்பட்ட 1946-ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை கல்லூரி நிர்வாகக் குழுத் தலைவர்களாக அய்ந்து பேர் இருந்துள்ளனர். அவர்களது பெயர்கள் பின்வருமாறு:
சுவாமி கைலாசானந்தா (1946 - 1971), திரு என்.சுப்ரமணியன் (1971 - 80), முனைவர் சி.ராகவாச்சாரி (1980 - 86), பேராசிரியர் டி.எஸ்.சதாசிவம் (1986 - 2001), சுவாமி கவுதமானந்தா (2001 முதல்)
சர்வம் பார்ப்பன மயம்
இவர்களில் இடைப்பட்ட மூவரும் பார்ப்பனர்கள். முதலாமவரும், இன்றுள் ளவரும் சன்னியாசிகளானாலும் பூர்வா சிரமத்தில் (துறவறம் மேற்கொள்ளும் முன்னர்) அதாவது பிறப்பால் பார்ப் பனர்களே. இதைப் போன்று இந்த 67 ஆண்டு காலத்தில் கல்லூரிச் செயலாளர் களாக ஒன்பது பேர் இருந்துள்ளனர்.
திரு எம்.சுப்பராய அய்யர், திரு. எஸ்.பார்த்தசாரதி அய்யங்கார், திரு. என்.சுப்ரமணியன், சுவாமி நிஷ்க மானந்தா, சுவாமி அமிருதானந்தா, சுவாமி சத்யப் பரியானந்தா, சுவாமி ஆத்மகானந்தா, சுவாமி அபிராமானந்தா, சுவாமி சுகதேவானந்தா
இவர்களில் சுவாமி நிஷ்கமானந்தா (1970 - 1976)-வைத் தவிர அனை வரும் பார்ப்பனர்களே. பொது நிதியில் அரசு மானியத்தில் இயங்கும் இக்கல்லூரியில் 14 பேர் கல்லூரி முதல்வர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர். இன்றுள்ளவர் இக்கல் லூரியில் 15-ஆவது முதல்வர் அந்தப் பட்டியல் பின் வருமாறு:
டி.எஸ்.சர்மா, என்.சுந்தரம் அய்யர், டி.ஆர்.ராகவ சாஸ்திரி, டி.என்.சேஷாத் திரி, ஜி.வெங்கட்டராமன், முனைவர் என்.வெங்கட சுப்ரமணியன், முனைவர் வே.கணேசன், முனைவர் வி.தியாக ராஜன், முனைவர் பி.ஆர்.விட்டல், பி.நடராஜன், முனைவர் எஸ்.ராம ரத்னம், முனைவர் ஸி.வி. சுப்ர மணியன், ஜி.சிறீனிவாசப்பிரபு, முனைவர் எஸ்.சுவாமிநாதன் இந்த ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி முதல் கல்லூரி நிர்வாகத்தால் கல்லூரி முதல்வராக நியமனம் பெற்றி ருப்பவர். முனைவர் கே.சிறீனிவாசன்.
இவர்கள் அனைவரும் பார்ப்பன சிரேஷ்டர்கள் முனைவர் பட்டம் பெற்ற வருக்கு கல்லூரி முதல்வர் தேர்வில் முன்னுரிமை என்ற நிலையிலும், அந்த முன்னுரிமை விதியைத் தளர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்ட பி.நடராஜன், ஜி.சிறீனிவாசப்பிரபு போன்றவர்களும் பார்ப்பனர்களே. பார்ப்பனர்களை மட்டுமே கல்லூரி முதல்வராகத் தேர்வு செய்வது என்பது ராமகிருஷ்ணா மிஷன் நிர்வாகத்தின் கொள்கை முடிவாக உள்ளது.
சூத்திரர் யுகம் என்ற விவேகானந் தரது கனவு என்னவாயிற்று? காயஸ்தராகப் பிறந்த அந்த துறவியின் கனவு என்றுமே கனவாகவே நீடிக்க வேண்டும் என்பது தான் அவரது துறவுப் பரம்பரையினரின் சாதி வர்ண வேட்கை போலும்.
(தொடரும்)
                                                                                                                                                                                விடுதலை 2.7.2013

விவேகானந்தரும் விவேகானந்தா கல்லூரியும் - சில உண்மைகள்



இந்து மதப் பரப்பாளர் விவேகானந்தரும் சென்னை விவேகானந்தா கல்லூரியும் - சில உண்மைகள்




 அ.கருணானந்தன், வரலாற்றுத் துறை தலைவர் (ஓய்வு),
 விவேகானந்தா கல்லூரி,
 சென்னை.

விவேகானந்தர் விழாக்கள்
சுவாமி விவேகானந்தரின் 150-ஆவது ஆண்டு விழா கொண் டாட்டங்கள் நாடெங்கும், ஏன் உல கெங்கும் கொண்டாடப்படுகின்றன. தமிழக அரசும் தன் பங்கிற்கு ராம கிருஷ்ண மடத்திற்கு பலவற்றை வாக்களித்துள்ளது. தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களே விவேகானந்த இல்ல விழாவில் கலந்து கொண்டு உரையாற்றி உள்ளார், மிக்க மகிழ்ச்சி. சென்னை விவேகானந்தா கல்லூரி நிர்வாகமும் தனக்கே உரிய முறையில் தொடர்ந்து 15-ஆவது முறையாக ஒரு பார்ப்பனரையே கல் லூரி முதல்வராக நியமித்து விவே கானந்த விழாவைக் கொண்டாடி யுள்ளது. இந்தத் தருணத்தில் ராமகிருஷ்ண மிஷனால் நடத்தப்படும் சென்னை மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரி நிர்வாகத்தின் வேதனைக்கும், கண்டனத்திற்கும் உரிய போக்கினை அரசு மற்றும் பொதுமக்கள் குறிப்பாக சுவாமி விவேகானந்தரிடம், அவரது லட்சியங்களிடம் ஈடுபாடு கொண்ட வர்களின் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டியுள்ளது.
ராமகிருஷ்ணா மிஷன் எதற்காக உருவானது?
விவேகானந்தரை தேசபக்தத் துறவி என்று சிறப்பிக்கிறார்கள். அவரால் தான் ராமகிருஷ்ண மடம், துறவியர் அமைப்பாக உருவாக்கப்பட்டது. துறவுடன் நின்றுவிடாமல் தனது சமூக லட்சியங்களை நிறைவேற்றவும் ஆதரவற்ற இந்தியாவின் நலிந்த சமூகத்தினருக்கு தொண்டாற்றவும் ராமகிருஷ்ண மிஷன் என்ற அமைப் பினையும் நிறுவினார். (1897, மே முதல் நாள்). அந்த ராமகிருஷ்ண மிஷனால், விவேகானந்தரின் சமூக மாற்றக் கனவுகளை நிறைவேற்ற மாணவர் இல்லம் முதலில் உருவானது.
விவேகானந்தரின் சமூக நீதி
விவேகானந்தரின் சமூகம் மற்றும் கல்வி பற்றிய கருத்துக்களையும், லட்சியங்களையும் ஒரளவிற்கு உள்வாங்கிக் கொண்டால்தான், அவரால் உருவான ராமகிருஷ்ண மிஷன், அவரது நோக்கங்களுக்கு ஏற்ப செயல்படுகிறதா என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். அவரது கருத்துக்களையும், லட்சியங் களையும் ராமகிருஷ்ணமட வெளியீடு களே தெளிவுபடுத்துகின்றன. அவற் றில் சிலவற்றைக் கீழே தருகிறோம்.
புரோகித - பார்ப்பன ஆதிக்கம்
இந்தியாவில் உள்ள தீமைகள் அனைத்திற்கும் வேராக இருக்கின்ற ஒரே விஷயம் ஏழைகளின் நிலைமை.... புரோகித ஆதிக்கமும், அன்னியரின் ஆக்கிரமிப்பும் நூற்றாண்டுகளாக அவர்களை கீழே தள்ளி மிதித்து வந்துள்ளன.
எனது பாரதம், அமரபாரதம். இராம கிருஷ்ண மடம் வெளியீடு சென்னை 2005
இங்கு புரோகித ஆதிக்கம் என்று விவேகானந்தர் குறிப்பிடுவது பார்ப்பன ஆதிக்கத்தைத்தான் என்பதை பின்வரும் விவேகானந்தரின் சொற்களில் அறி கிறோம்.
பார்ப்பனர்கள் ஆளும்போது, பிறந்த குலத்தைக் காரணமாகக் கொண்டு, பார்ப்பனர்களைத் தவிர மற்ற அனைவரும் ஒதுக்கப்படுகிறார்கள். புரோகிதர் களுக்கும் அவர்களது சந்ததிகளுக்கும் எல்லாவித பாதுகாப்புகளும் அளிக்கப் படுகின்றன. அவர்களைத் தவிர, வேறு யாருக்கும் எந்த அறிவும் கிடைக்க வழி யில்லை; அவர்களைத் தவிர வேறு யாருக்கும் அறிவைப் போதிப்பதற்கான உரிமையும் இல்லை,
- அதே புத்தகம் பக்கம் 75
இத்தகைய பார்ப்பன ஏகபோகச் சதியை மேலும் கடுமையாக விவேகானந் தர் சாடுகிறார்.
புரோகிதத்துவம் (அதாவது பிரா மணீயம் அல்லது பார்ப்பனீயம்) இந்தி யாவைப் பீடித்த ஒரு சனியன். பார்ப்பனர் களும், சத்திரியர்களும் செய்த கொடுங் கோன்மை கூட்டுவட்டி போட்டு அவர்கள் தலையிலேயே மறுபடியும் விழுந்திருக் கிறது. ஆயிரம் ஆண்டுகள் அடிமைத் தனமும் இழிவும் தான் அவர்கள் கர்ம வினையின் பலன்
- அதே புத்தகம் பக்கம் 38 -39
தென்னிந்தியாவில் சத்திரியர்கள் இருந்ததில்லை என்பதை விவேகானந் தரே வேறொரு தருணத்தில் கூறி யுள்ளார். எனவே இங்கே சீரழிவின் முழுப்பொறுப்பும் பார்ப்பனர்களுக்கே உரித்தாகிறது. அதிலும் கல்வித் துறை யில் பார்ப்பனச் சதியை விவேகானந் தரால் சீரணிக்க இயலவில்லை.
ஆணவம், அரசு ஆணை இவற்றின் துணையுடன் விரல்விட்டு எண்ணக் கூடிய சிலரிடம், எல்லா கல்வியும் புத்தி நுட்பமும் உடைமையாக்கப்பட்டதுதான் இந்தியாவின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் (பக்கம் 39)
தேசியப் பெரும்பாவம்
இதனை ஒரு தவறு என்று தட்டிக் கழிக்க விவேகானந்தர் விரும்பவில்லை. பெரும் பாவம் என்று அடையாளப்படுத்து கிறார்.
சாதாரண மக்களைப் புறக்கணித் தது நமது தேசியப் பெரும் பாவம் என்று நான் கருதுகிறேன். நமது வீழ்ச்சிக்கு அதுவும் ஒரு காரணம். (பக்கம் 47)
தேசத்தின் சீரழிவிற்கு யார் காரணம், எது காரணம் என்பதை மிகத் தெளி வாகவும், திடமாகவும் எடுத்துரைத்த விவேகானந்தர், அதற்கான தீர்வையும் மிக விரிவாகவே கூறியுள்ளார்.
நமது நாட்டின் தாழ்ந்த வகுப்பின ருக்குச் செய்ய வேண்டிய ஒரே சேவை கல்வி அளிப்பது:
இழந்த தனித்துவத்தை மீண்டும் பெறச் செய்வதற்கு முதலில் நாட்டு மக்களுக்குக் கல்வியை அளியுங்கள்... சமுதாய சீர்த்திருத்தத்திற்குக் கூட முதலில் நாம் செய்ய வேண்டிய கடமை மக்களுக்குக் கல்வியை அளிப்பது தான்.
கல்வியில் முன்னுரிமை யாருக்கு?
மக்களுக்குக் கல்வி என்று பொத் தாம் பொதுவாகக் கூறிவிடாமல் யாருக்கு கல்வியில் முன்னுரிமை தர வேண்டும் என்பதைப் பற்றியும் விவேகானந்தர் மிகத் துல்லியமாக விளக்கியுள்ளார். அவரது சொற்களிலேயே அவற்றைக் காண்போம். இயற்கையில் சமமில்லாத நிலை இருக்கலாம். ஆனாலும் அனைவருக்கும் சம வாய்ப்புகள் இருக்க வேண்டும். சிலருக்கு அதிகமாகவும் சிலருக்குக் குறைவாகவும் தான் வாய்ப்புகள் அமையும் என்றால், பலசாலிகளை விட பலவீனர் களுக்குத்தான் அதிகமான வாய்ப்புகள் தரப்பட வேண்டும். அதாவது கல்வி கற்பித்தல் சண்டாளனுக்கு எவ்வளவு அவசியமோ அவ்வளவு பார்ப்பனனுக்குத் தேவையில்லை. பார்ப்பனனின் மகனுக்கு ஓர் ஆசிரியர் தேவையானால் சண் டாளனின் மகனுக்குப் பத்து ஆசிரியர் கள் தேவை. அதாவது இயற்கை யாருக்குப் பிறவியிலேயே கூர்மையான அறிவைத் தந்து உதவவில்லையோ அவனுக்கு அதிக உதவியளிக்க வேண்டும். ஒரு பொருள் மிகுதியாக உள்ள இடத்திற்கு அந்தப் பொருளையே கொண்டு செல்வது பைத்தியக்காரத் தனம் அல்லவா?
- நாகரீகமும் சமுதாயக் கோட்பாடும் ராமகிருஷ்ண மட வெளியீடு பக்கம் 96
சண்டாளர் போன்றவர்களுக்கு இயற்கை பிறவியிலேயே கூர்மையான அறிவைத் தரவில்லை என்ற விவே கானந்தரின் புரிதலில் நமக்கு உடன் பாடு இல்லை. சூத்திர பஞ்சமர்களுக்கு வாய்ப்புகள் தராமல் தடுத்தது பார்ப் பனிய வக்கிரம் என்பது நமது அனு பவம். ஆனாலும் புறக்கணிக்கப்பட்டு வந்த வெகு மக்களுக்குத்தான் முன் னுரிமை வேண்டும் என்ற விவே கானந்தரின் சமூக நீதியைப் போற் றியே ஆக வேண்டும் நடைமுறைப் படுத்தியே ஆக வேண்டும்.
பார்ப்பனர்களுக்கு வேண்டுகோள்
சமூக நீதிக் கல்விக்கு பார்ப் பனர்கள் எதிர்ப்பாக இருக்கிறார்கள், இருப்பார்கள் என்பதை நன்றாக உணர்ந்து கொண்ட விவேகானந்தர் அவர்களிடம் பின் வருமாறு கூறினார்:
ஏ பார்ப்பனர்களே! பரம்பரை கார ணமாக பார்ப்பனர்களுக்கு கீழ்ஜாதி யினரைவிட நன்றாகப் படிக்கின்ற திறமை இருக்கின்றது என்றால், பார்ப்பனர்களின் படிப்பிற்காக எந்தப் பணமும் இனி செலவழிக்காதீர்கள். எல்லாவற்றையும் கீழ்ஜாதியினருக் காகச் செலவிடுங்கள். உதவியற்றவர் களுக்குக் கொடுங்கள். ஏனெனில் அவர்களுக்குத் தான் எல்லா செல் வமும் தேவைப்படுகிறது. பார்ப்பனர் பிறவியிலேயே அறிவாளி என்றால் எந்த உதவியும் இல்லாமல் அவனே படித்துக் கொள்ள முடியும். பிறவி யிலேயே அறிவாளி அல்லாத பிறர் எல்லா போதனைகளையும் ஆசிரி யர்களையும் பெறட்டும். இதுதான் நான் புரிந்துகொண்ட நீதியும் பகுத் தறிவுமாகும்.
- நாகரீகமும் சமுதாயக் கோட்பாடும் பக்கம் 97.
இது தந்தை பெரியாரின் வார்த்தை களல்ல; விவேகானந்தரின் வார்த் தைகள். சமநீதி-சமவாய்ப்பு என்பதை விவேகானந்தர் என்ற துறவி பின் வருமாறு வலியுறுத்துகிறார்.
எல்லோருக்கும் வாய்ப்புக் கொடு; பிறகு
இறைவனின் விருப்பப்படி ஆகட்டும்
இறைவனையும், இறைவனின் விருப்பத்தையும் உறுதி செய்ய முடியாது. ஆனால் விவேகானந்தரது விருப்பம், லட்சியம் என்ன என்பது தெளிவாகி விட்டது.
(தொடரும்)
                                                                                                                                                                                 விடுதலை 1.7.2013