Wednesday, July 3, 2013

விவேகானந்தரும் விவேகானந்தா கல்லூரியும் - சில உண்மைகள் - 2



இந்து மதப் பரப்பாளர் விவேகானந்தரும் சென்னை விவேகானந்தா கல்லூரியும் - சில உண்மைகள் - 2

அ.கருணானந்தன், வரலாற்றுத் துறை தலைவர் (ஓய்வு),
விவேகானந்தா கல்லூரி,
சென்னை.
விவேகானந்தர் பாதையில் கல்லூரி நிர்வாகம் செல்கிறதா?
இப்போதையக் கேள்வி இது தான்...
விவேகானந்தரது விருப்பத்திற்கு இசைவாகத்தான் அவரால் உருவாக் கப்பட்ட ராமகிருஷ்ணா மிஷன், நடந்து கொள்கிறதா? விவேகானந்தரது லட்சியப்படிதான் ராமகிருஷ்ணா மிஷன், விவேகானந்தா கல்லூரி நிர்வாகம் செயல்படுகிறதா?. விவே கானந்தர் பெயரைத் தாங்கியுள்ள கல்லூரி, விவேகானந்தரது லட்சியங் களை வென்றெடுக்கும் வகையில் அவரால் உருவாக்கப்பட்ட ராம கிருஷ்ணா மிஷனது கல்லூரி விவே கானந்தரின் விருப்பப்படி செயல்பட வேண்டும் என்று தான் நாமும் விரும் புகிறோம். ஆனால் விவேகானந்தர் விரும்பிய சூத்திர யுகம், சூத்திர எழுச்சிக்கு முரணாகவும், எதிர்ப்பாக வும் இக்கல்லூரி 67 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. பார்ப்பன சுயநலமிகளின் கோட்டையாகவே இன்றும் தொடர்கிறது என்பது வேதனையானது, வெறுக்கத்தக்கது, கண்டிக்கத்தக்கது, எதிர்க்கத்தக்கது.
விவேகானந்தா கல்லூரி பார்ப்பனர் கல்லூரியா?
விவேகானந்தர் கல்லூரி  பொதுச் சொத்து அக்கிரகாரச் சொத்தாக மாற்றப்பட்ட மோசடியின் சின்னம்.
1946-இல் இக்கல்லூரி துவக்கப் பட்டது. இக்கல்லூரி பார்ப்பனர்களுக் காக, பார்ப்பனர்களால் பார்ப்பனர் களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட கல்லூரி என்பதற்கான ஒரு போலி யான மாயை உருவாக்கப்பட்டிருந்தது. அது ஒரு மோசடி. இக்கல்லூரியை துவக்க நிதி திரட்டியது மதராஸ் எஜிகேஷன் சொசைடி என்ற குழு. இதில் சுப்பராய அய்யர் செயலாள ராகவும், அல்லாடி கிருஷ்ணசாமி போன்ற பல பார்ப்பனர்கள் உறுப்பினர் களாகவும் இருந்தனர் என்பது உண்மை; ஆனால் எத்திராஜீலு முதலியார் போன்ற பிராமணரல்லா தோரும் இதில் இருந்தனர். பார்ப்பனரை விட பார்ப்பனரல்லாதோரிடமிருந்து அதிகமாக நிதி திரட்டப்பட்டது. கல்லூரி நடத்தும் பொறுப்பு சங்கரமடம் போன்ற பார்ப்பனருக்கு மட்டுமே உரிய ஒன்றிடம் கொடுக்கப்படவில்லை. பார்ப்பனர் மட்டுமே என்ற வரையறையில்லாத, கீழ் ஜாதியினருக்கு தொண்டு செய்வதற் கென்றே உருவாக்கப்பட்ட ராமகிருஷ்ணா மிஷனிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த சமூக நோக்கத்திற்காகவே நடத்தப்பட்டு வந்த ராமகிருஷ்ணா (மாணவர்) இல்ல வளாகத்தின் ஒரு பகுதியை கல்லூரிக்கு ஒதுக்கினர். அங்கு பார்ப்பனரல்லாத நாட்டுக் கோட்டை நகரத்தாரால் 1921-இல் மாணவர் இல்லத்திற்கு என கட்டித் தரப்பட்ட நாட்டுக் கோட்டை நகரத்தார் வித்யாசாலை என்ற பள்ளிக்கட்டடம் கல்லூரிக்கு என ஒதுக்கப்பட்டது. பின்னர் சென்னை மாகாண அரசினால் சிடி இம்ப்ரூவ்மெண்ட் டிரஸ்டிடமிருந்து சி.அய்.டி.காலனி பகுதியில் பெரும் நிலம் (மனைகள்) கல்லூரி மைதானத்திற் காகவும், கல்லூரி விடுதி அமைக்கவும், மிக மிகச் சொற்ப விலையில் (அதிலும் பெரும்பகுதியை அரசே தந்துவிட்டது) தரப்பட்டது.
பல்கலைக்கழக மானியக் குழு தந்த நிதியைப் பயன்படுத்தி (Matching Grant) கல்லூரி மாணவர் விடுதியின் ஒரு கட்டடமும், கல்லூரி நூலகக் கட்டடமும் பெறப்பட்டது. பார்ப்பனரல்லாத நல்லி குப்புசாமிச் செட்டி, ஓபுல் ரெட்டி போன்ற கொடையாளர்களிடமிருந்து கிடைத்த கொடையில் அரங்கங்களும் புதுக்கட்ட டங்களும் எழுந்தன. மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் மாநில, மத்திய அரசுகளிடமிருந்து நிதிக் கொடைகளை இவ்வாறு பெற்றது மட்டுமல்ல, மாநில அரசிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை மாதந் தோறும் ஊதிய மானியமாகவும் பெற்று வருகின்ற விவேகானந்தா கல்லூரி எப்படி ஒரு பார்ப்பனக் கல்லூரியாக இயங்க முடியும்?
எனவே இது மக்கள் வரிப்பணத் திலிருந்து ஒதுக்கப்படும் அரசின் மாநில உதவியிலும், பொதுமக்கள் கொடையிலும் இயங்கும் கல்லூரி. பாமர மக்கள் சேவைக்கென விவேகானந்தரால் உரு வாக்கப்பட்ட ராமகிருஷ்ணா மிஷனால் நிர்வகிக்கப்படும் கல்லூரி. ஒரு பொதுச் சொத்து; மக்கள் சொத்து.
நீதி - நியாயத்திற்குப் புறம்பான பார்ப்பன சாதி ஆதிக்கம்
இந்த பொதுச் சொத்து, பொதுக்கல்வி நிறுவனம் அது துவக்கப்பட்ட காலம் முதல் இன்று வரையில் 67 ஆண்டுகளாக நடைமுறையில் ஒரு இந்து அமைப்பாக என்று கூட இல்லாமல் ஒரு பார்ப்பன நிறுவனமாகவே இருந்து வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் தகவல்கள் கீழே தரப்படுகின்றன.
கல்லூரி துவக்கப்பட்ட 1946-ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை கல்லூரி நிர்வாகக் குழுத் தலைவர்களாக அய்ந்து பேர் இருந்துள்ளனர். அவர்களது பெயர்கள் பின்வருமாறு:
சுவாமி கைலாசானந்தா (1946 - 1971), திரு என்.சுப்ரமணியன் (1971 - 80), முனைவர் சி.ராகவாச்சாரி (1980 - 86), பேராசிரியர் டி.எஸ்.சதாசிவம் (1986 - 2001), சுவாமி கவுதமானந்தா (2001 முதல்)
சர்வம் பார்ப்பன மயம்
இவர்களில் இடைப்பட்ட மூவரும் பார்ப்பனர்கள். முதலாமவரும், இன்றுள் ளவரும் சன்னியாசிகளானாலும் பூர்வா சிரமத்தில் (துறவறம் மேற்கொள்ளும் முன்னர்) அதாவது பிறப்பால் பார்ப் பனர்களே. இதைப் போன்று இந்த 67 ஆண்டு காலத்தில் கல்லூரிச் செயலாளர் களாக ஒன்பது பேர் இருந்துள்ளனர்.
திரு எம்.சுப்பராய அய்யர், திரு. எஸ்.பார்த்தசாரதி அய்யங்கார், திரு. என்.சுப்ரமணியன், சுவாமி நிஷ்க மானந்தா, சுவாமி அமிருதானந்தா, சுவாமி சத்யப் பரியானந்தா, சுவாமி ஆத்மகானந்தா, சுவாமி அபிராமானந்தா, சுவாமி சுகதேவானந்தா
இவர்களில் சுவாமி நிஷ்கமானந்தா (1970 - 1976)-வைத் தவிர அனை வரும் பார்ப்பனர்களே. பொது நிதியில் அரசு மானியத்தில் இயங்கும் இக்கல்லூரியில் 14 பேர் கல்லூரி முதல்வர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர். இன்றுள்ளவர் இக்கல் லூரியில் 15-ஆவது முதல்வர் அந்தப் பட்டியல் பின் வருமாறு:
டி.எஸ்.சர்மா, என்.சுந்தரம் அய்யர், டி.ஆர்.ராகவ சாஸ்திரி, டி.என்.சேஷாத் திரி, ஜி.வெங்கட்டராமன், முனைவர் என்.வெங்கட சுப்ரமணியன், முனைவர் வே.கணேசன், முனைவர் வி.தியாக ராஜன், முனைவர் பி.ஆர்.விட்டல், பி.நடராஜன், முனைவர் எஸ்.ராம ரத்னம், முனைவர் ஸி.வி. சுப்ர மணியன், ஜி.சிறீனிவாசப்பிரபு, முனைவர் எஸ்.சுவாமிநாதன் இந்த ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி முதல் கல்லூரி நிர்வாகத்தால் கல்லூரி முதல்வராக நியமனம் பெற்றி ருப்பவர். முனைவர் கே.சிறீனிவாசன்.
இவர்கள் அனைவரும் பார்ப்பன சிரேஷ்டர்கள் முனைவர் பட்டம் பெற்ற வருக்கு கல்லூரி முதல்வர் தேர்வில் முன்னுரிமை என்ற நிலையிலும், அந்த முன்னுரிமை விதியைத் தளர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்ட பி.நடராஜன், ஜி.சிறீனிவாசப்பிரபு போன்றவர்களும் பார்ப்பனர்களே. பார்ப்பனர்களை மட்டுமே கல்லூரி முதல்வராகத் தேர்வு செய்வது என்பது ராமகிருஷ்ணா மிஷன் நிர்வாகத்தின் கொள்கை முடிவாக உள்ளது.
சூத்திரர் யுகம் என்ற விவேகானந் தரது கனவு என்னவாயிற்று? காயஸ்தராகப் பிறந்த அந்த துறவியின் கனவு என்றுமே கனவாகவே நீடிக்க வேண்டும் என்பது தான் அவரது துறவுப் பரம்பரையினரின் சாதி வர்ண வேட்கை போலும்.
(தொடரும்)
                                                                                                                                                                                விடுதலை 2.7.2013

No comments:

Post a Comment