Thursday, July 4, 2013

விவேகானந்தரும் விவேகானந்தா கல்லூரியும் - சில உண்மைகள் -4



இந்து மதப் பரப்பாளர் விவேகானந்தரும் சென்னை விவேகானந்தா கல்லூரியும் - சில உண்மைகள் -4

                                                                                                                                                                                அ.கருணானந்தன்,
                                                                                                                                       வரலாற்றுத் துறை தலைவர் (ஓய்வு),                      
                                                                                                                                                                 விவேகானந்தா கல்லூரி,
                                                                                                                                                                                                  சென்னை.
சட்டத்தை மீறி சூத்திர சம்காரம் தனியார் கல்லூரி ஒழுங்காற்றுச் சட்ட விதிகளின்படி கல்லூரிக் குழுவிற்கு இரண்டு பேராசிரியர்கள் பணிமூப்பு அடிப்படையில் நியமிக்கப்பட வேண்டும். இன்றைய நிலையில் விவேகானந்தா கல்லூரியில் முதல்வருக்கு அடுத்தபடி பணியில் மூத்தவர் சூத்திரரான முனைவர் உன்னிக் கிருஷ்ணன்பிள்ளை இதுவரையில் 67 ஆண்டு வரலாற்றில் சமஸ்கிருதத் துறையில் பணியாற்றிய பார்ப்பனரல்லாத பேராசிரியர் இவர் ஒருவர் தான். அதனாலேயே அந்தத் துறையில் பார்ப்பனீய வெறியர்களின் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளார். அவரைத் தனிமைப்படுத்துவதும், அவமானப்படுத்துவதும் தொடர்கின் றன.
சமஸ்கிருதத்துறையின் முறை கேடுகளை எதிர்த்தும், துறைத் தலைவரும் இன்றைய கல்லூரி முதல் வருமான சிறீனிவாசனின் முறை கேடுகளை எதிர்த்தும் இவர் பல புகார்களை நிர்வாகத்திடம் அளித் துள்ளார். விவேகானந்தரின் அத்வைத வேதாந்தம் புறக்கணிக்கப்பட்டு பார்ப்பனீய கிருஹ்ய சூத்திரம், அர்த்த சாஸ்திரம், சிருங்கார காவியங் களுக்கு சிறப்பிடம் தருவதை எதிர்த் தும் நீண்ட கடிதங்களையும் எழுதி னார். பார்ப்பனரல்லாதார், பார்ப்பன ஏகபோக சமஸ்கிருத துறையில் இருக்கலாமா? அதுவும் சமஸ் கிருதத்தில் உண்மையாகவே புலமை யுடைய சூத்திரர் இருக்கலாமா? ஆகவே அவருக்கு கல்லூரிக்குழு உறுப்பினர் பொறுப்பு மறுக்கப்பட்டது.
ஆகஸ்டில் பணி ஓய்வு பெறவுள்ள வருக்கு கல்லூரிக் குழு உறுப்பினர் பதவியா? என்று நியாயம் கற்பிக்கும் கல்லூரிச் செயலாளர் சுகதேவானந்தா என்ற பார்ப்பனீயம் கல்வி ஆண்டு முடியும் வரை அவர் பணியில் தொடர முடியும் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது செயலரின் பதில் பார்ப் பனீயச் சதியை வெளிப்படுத்தியது. உன்னிக்கிருஷ்ணன் மீது குற்றங் களைச் சாட்டி, விசாரணை நிறுவி அவரை பணியில் நீடிக்காமல் செய்ய முடியும் என்ற விளக்கம் பார்ப்பனீய வக்கிரத்தின் வெளிப்பாடல்லவா? ஆகஸ்டில் ஓய்வு பெற உள்ளவருக்கு கமிட்டி உறுப்பினர் பதவி வேண்டிய தில்லை என்றால், பணி ஓய்வு பெறவுள்ள தருணத்தில் குற்றச்சாட்டு, விசாரணை மட்டும் எப்படிச் சரியாகும்? சூத்திரர் மீதான பகை உணர்ச்சி - பழி உணர்ச்சிக்கு எல்லை இல்லையா?
இக்கல்லூரியில் தமிழ் மொழிப்பாடம் உண்டு, தமிழ் இலக்கியம் இல்லை. படிப்பதற்கு போதுமான எண்ணிக்கையில் மாணவர்கள் வரவில்லை என்ற காரணம் காட்டி தெலுங்கு மற்றும் இந்தி மொழித் துறைகளை மூடிவிட்டவர்களின் கல்லூரி யில் சமஸ்கிருதத் துறையில் மாணவர்கள் எண்ணிக்கை எவ்வளவு? சமஸ்கிருத இலக்கியத்துறையில் ஆசிரியர்கள் எண்ணிக்கையை விட மொத்த இலக்கிய மாணவர்கள் எண்ணிக்கை குறைவு. அந்தத் துறை பார்ப்பன ஆசிரியர்களுக் குத் தான் உயர் பதவிகளில் முன்னுரிமை, முழு உரிமை. இன்றைய கல்லூரி முதல்வர் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி, அவரது சிறப்பு அதிகாரி அனைவரும் சமஸ்கிருதப் பேராசிரியர்கள்.
யாரால் சமூக மாற்றம்
இன்று கல்லூரியில் ஆசிரியர்கள் - மாணவர்களில் பார்ப்பனர் அல்லாத வர்கள் பெரும்பான்மையாக இருப்பதற்கு ராமகிருஷ்ணா மிஷன் நடத்தும் கல்லூரி நிர்வாகத்தின் சமூக அக்கறை காரண மல்ல. 1980-க்கு பின் மாணவர் சேர்க்கை, ஆசிரியர் நியமனத்தில் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை மாநில அரசு கட்டாய மாக்கியதனால் தான் இந்த மாற்றம் நிகழ்ந்தது. அதுவரையில் மாணவர் சேர்க்கையிலும், ஆசிரியர் நியமனத்திலும் பார்ப்பனீய ஏக போகமே நீடித்தது. 1986-இல் தான் முதன் முதலாக தலித் ஆசிரியர்கள் நியமனம் நடந்தது. அப்படி நியமனம் பெற்ற இரு தலித் ஆசிரியர் களில் ஒருவருக்கு அந்த ஆண்டு இறுதியில் பணிநீக்க ஆணை வழங்கப் பட்டது. ஆசிரியர் அமைப்பின் ஆறுமாதப் போராட்டத்திற்குப் பிறகு, அரசு தலையிட்டதன் விளைவாக அந்தப் பணி நீக்க ஆணை ரத்து செய்யப்பட்டது.
அரசின் சலுகை யு.ஜி.சி.யின் உதவி கொண்டு விரிவாக்கம் செய்யப்பட்ட கல்லூரி மாணவர் விடுதி, பிற்பட்ட, தலித் பிரிவு மாணவர்கள் எண்ணிக்கை பெருகியபோது, தனியார் விடுதியாக் கப்பட்டு, நலிந்த பிரிவு மாணவர்களுக்கு விடுதி எட்டாமல் செய்யப்பட்டது. கீழ் ஜாதியினருக்கு முதலில் கல்வி என்ற சுவாமி விவேகானந்தரின் குறிக்கோள் என்னவாயிற்று?
அது மட்டுமல்ல, பகல் கல்லூரியில் மானியம் பெறும் வகுப்புகளுக்கு அரசு ஆணைகளின் விளைவாக இட ஒதுக் கீட்டின்படி மாணவர்களைச் சேர்க்கின்ற நிர்வாகம், மாலை வகுப்புகளில் இட ஒதுக்கீட்டைப் புறக்கணிப்பது மட்டுமல்ல, ஏழை மாணவர்களுக்கு எந்தவிதச் சலுகையும் தருவதில்லை. தமிழ் வழிக் கல்வி மாணவர்களுக்கு நுழையவும் வாய்ப்பில்லை. இதுதான் விவேகானந்தர் வலியுறுத்திய தரித்திர நாராயண சேவையா?
துவேஷமல்ல, சமூக நீதி, சமநீதி
சுவாமி விவேகானந்தரின் அனைத் துக் கருத்துகளையும் அப்படியே அங்கீகரிப்பது இயலாமற் போகலாம். அவரது ஆன்மீக விளக்கங்களில், வரலாற்றுப் புரிதல்களில் நம்மைப் போன்றவர்களுக்கு ஒப்புதல் இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் அவரது தேச பக்தியில், நலிந்தவர்களை மய்யப்படுத்திய சமூக நீதித் திட்டங்களில் அனை வருக்கும் மிகுந்த மரியாதையும் ஒப்புதலும் உள்ளன. அந்த சமூகநீதி செயல் பாடுகளை அவரால் உருவான ராம கிருஷ்ணா மிஷனும், அதனால் நிர்வகிக்கப்படும் விவேகானந்தரின் பக்தர்களிடம் மட்டுமின்றி, நல்லெண்ணம் கொண்ட அனைத்து மக்களிடமும் உள்ளது. சங்கரமடம் போன்ற பார்ப் பனர்களுக்கு மட்டுமே உரிய மடமாக ராமகிருஷ்ணா மடத்தை விவேகானந்தர் அமைக்கவில்லை. மடத்தில் சேருவதற்கு துவிஜராகத்தான் இருக்க வேண்டும் என்ற தகுதியை அவர் புகுத்தியதில்லை. அத்தகைய ராமகிருஷ்ணா மடத்தின் துறவிகள், பூர்வாசிரமத்தில் பார்ப்பனராக இருந்தாலும், மிஷனின் திட்டங்களிலும், செயல்பாடுகளிலும், பூர்வாசிரம சாதிப்பற்றோ, ஜாதி வெறியோ இன்றி ஸ்தாபகரான விவேகானந்தரது பாமர மக்களின் மீதான பரிவையும், அவர்களது முன் னேற்றத்தையும் முன்னிலைப்படுத்திய தாகவே இருக்கும், இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதிலும், வலியுறுத்து வதிலும் என்ன தவறு இருக்க முடியும்? இது பார்ப்பனத் துவேஷமல்ல. பொதுச் சொத்தை ஜாதிச் சொத்தாக வக்கிரப் படுத்துவதை எதிர்ப்பதுதான்.
ஜாதிச் சொத்தல்ல, பொதுச் சொத்து
சுவாமி விவேகானந்தரின் 150-ஆவது ஆண்டைக் கொண்டாடும் வேளையில் வித்யா பீடம் என்னும் பெயரில் விவேகானந்தா கல்லூரியை நிர்வாகம் செய்யும் சென்னை ராம கிருஷ்ணா மிஷன், இக்கல்லூரி ஒரு குறிப்பிட்ட மேல் ஜாதியினரின் தன் னலக் கூடாரமாக இயங்காமல் விவேகானந்தரின் சமூக - கல்வி லட்சியங்களை நிறைவேற்றுகின்ற ஒரு பொது நிறுவனமாக இயங்க வேண் டும். இது தொடர்பாக 11.5.2013 அன்று இந்து நாளிதழில் வெளியான ஒரு நீதிமன்றத்தீர்ப்பை மிஷனின் கவனத் திற்குக் கொண்டு வர விரும்புகிறோம்.
“The management and administration of the affairs of a public charitable trust cannot be left entirely to the members of a family, as though it is a private family business concern”
ஒரு பொது அறக்கட்டளை (டிரஸ்டின்)யின் மேலாண்மையும் நிர்வாகமும், ஏதோ ஒரு தனிப்பட்ட குடும்பத்தின் வியாபார விவகாரம் போன்று, ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் உறுப்பினர்களிடம் முழுமையாக விட்டுவிட முடியாது
இதில் ஒரு குறிப்பிட்ட குடும்பம் என்பதை ஒரு குறிப்பிட்ட ஜாதி என்று விரிவுபடுத்தினால் இந்த நீதிமன்றத் தீர்ப்பு விவேகானந்தா கல்லூரி நிர்வாகத்திற்கும் பொருந்தும் என்றே கூற முடியும்.
சென்னை ராமகிருஷ்ணா மிஷனும், வித்யா பீடத்தின் செயலாளரும் நிலை மையை மாற்றுவார்களா?
விவேகானந் தரின் மேலான விருப்பத்தை நிறை வேற்றுவார்களா? விவேகானந்தரை வழிபாட்டுச் சிலையாக மாற்றுபவர்கள், அவரது சீரிய நோக்கங்களை பலி பீடத்தில் புதைத்து விடக்கூடாது என்ற பாமர மக்களின் எதிர்பார்ப்பை இனியாவது புரிந்து கொள்வார்களா?
(நிறைவு)
விடுதலை 4.7.2013

No comments:

Post a Comment