Wednesday, July 3, 2013

விவேகானந்தரும் விவேகானந்தா கல்லூரியும் - சில உண்மைகள் - 3



இந்து மதப் பரப்பாளர் விவேகானந்தரும் சென்னை விவேகானந்தா கல்லூரியும் - சில உண்மைகள் - 3

அ.கருணானந்தன்,
வரலாற்றுத் துறை தலைவர் (ஓய்வு),
விவேகானந்தா கல்லூரி,
சென்னை.
தொடரும் பூர்வாசிம வக்கிரங்கள்
துறவிகளுக்கு ஜாதியோ, பூணூலோ இல்லை என்பது கற்பிதம். துறவியானபின் காவி உடை மாற்றமும் வெறும் பெயர் மாற்றமும்தான் நடை பெறுகின்றன. மனமாற்றம் நிகழ்வ தில்லை. சன்னியாச வேடத்தில் ஜாதி வெறியர்களாகவே தொடர்கிறார்கள், ஜாதி ஆதிக்கத்திற்காகவே பார்ப்பன ஆதிக்கச் சுரண்டலுக்காகவே தங்கள் பொறுப்புகளை (தவறாகப்) பயன் படுத்துகிறார்கள் என்பதற்கு விவே கானந்தா கல்லூரி ஓர் ஒப்பற்ற முன்னுதாரணமாகத் திகழ்கிறது.
ராமகிருஷ்ணா மிஷனின் நிர்வாகச் ஜாதி வெறி எத்தகைய அத்துமீற லுக்கும் கூச்சமின்றிப் போகும் என் பதற்கு ஓர் எடுத்துக்காட்டு. ஒரு கல்லூரி முதல்வர் பணி நிறைவு பெற்றபின் அடுத்த முதல்வர் முறை யாகத் தேர்வு செய்யப்படும் வரை யிலான இடைக்காலத்தில் பணியில் மூத்த பேராசிரியர் மட்டுமே பொறுப்பு முதல்வராக இருக்க வேண்டும் என் கிறது அரசு ஆணை. அரசு மானி யத்தில் இயங்கும் விவேகானந்தா கல்லூரிக்கும் இந்த ஆணை பொருந் தும்.
திரிமூர்த்திகள்
1981-ஆம் ஆண்டு முனைவர் என்.வெங்கடசுப்ரமணியன் பணியிலிருந்து விலகிக் கொண்டார். அவருக்கு அடுத்தபடி பணியில் மூத்தவர் ஜம்புநாதன் என்ற வணிக வியல் துறைத் தலைவர்.
அரசு ஆணையின்படி ஜம்புநாதன் தான் பொறுப்பு முதல்வராக வேண்டும். ஆனால் கல்லூரி நிர்வாகிகளின் பார்வையில் அவரிடம் இந்த தற் காலிகப் பொறுப்பிற்குக் கூட ஒரு தகுதிக்குறைவு இருந்தது. ஜம்புநாதன் ஒரு சூத்திரர். தங்கள் கல்லூரியில் ஒரு சூத்திரன் பொறுப்பு முதல் வராவதா- தீட்டுப்படாமல் பார்ப்பனக் கோட்டையைக் காப்பாற்ற என்ன வழி? சாணக்கியம் சிந்தித்து ஒரு தீர்வைக் கண்டது. மூன்று பேர் கொண்ட குழுவை பொறுப்பு முதல்வர்களாக நியமித்தது. ஜம்புநாதனுடன் வி.கே. சீதாராமன் என்ற வரலாற்றுத் துறைத் தலைவர், கே.கணேசன் என்ற பொரு ளியல்துறைத் தலைவர் இந்தக் குழுவின் தலைமையில் பார்ப்பனர் கணேசன். பின்னர் அவரையே முறையான முதல்வராகவும் தேர்வு செய்தனர். பொறுப்பு முதல்வர்களாக மூன்று பேர்களை நியமித்த நிகழ்ச்சி தமிழக வரலாறு காணாத புரட்சி; அல்ல... அல்ல... புரட்டாகும்.
ஜாதிக்கொரு நீதி
இந்த ஆண்டும் பார்ப்பன சாதி வெறிதான் புதிய கல்லூரி முதல்வரை முடிவு செய்தது. முதல்வர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் பார்ப்பனரல் லாத இரு பேராசிரியர்களும் இருந்தனர். தங்களது தகுதிக்களுக்கான சான்று களை பெட்டி பெட்டியாகக் கொண்டு வந்து தேர்வுக்குழுவினர் முன்னால் வைத்தனர். அதில் பொருளியல் துறைத் தலைவருக்கு ஆய்வுச் சான்றுகளும், அனுபவச் சான்றுகளும் அதிகமாக இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் பார்ப்பனத் தகுதி இல்லாத அவரைத் தவிர்ப்பதற்காக கல்லூரிச் செயலாளர் சுகதேவானந்தாவால் (அவரும் பூர்வா கிராமத்தில் கன்னட பார்ப்பனர்) குழு உறுப்பினர்களுக்கு ஒரு கூடுதல் தகவல் தரப்பட்டதாகக்  கூறப்படுகின்றது.
அதாவது அந்த பொருளியல் துறைத் தலைவர் மீது அவர் துறையைச் சேர்ந்த புகார்கள் நிலுவையில் உள்ளதாம். புகாருக்கு உள்ளான ஒருவரை எப்படித் தேர்வு செய்ய முடியும் என்ற சூழல். எனவே நிர்வாகத்தால் கே.சிறீனிவாசனை தேர்வுக்குழு ஏற்கும்படி ஆயிற்றாம். நியாயம்தானே என்று அப்பாவிகள் நினைக்கக்கூடும். ஆனால்கல்லூரிச் செயலாளரால் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்யப் பட்ட தகவல் ஒன்று உண்டு. அதாவது தேர்ந்தெடுக்கப்படவுள்ள சிறீனிவாசன் மீது அவர் துறையின் சக ஆசிரியர் முனைவர் உண்ணிக்கிருஷ்ணன் என் பவர் கொடுத்த கடுமையான புகார்கள் பல நிலுவையிலுள்ளன என்ற தகவல் தேர்வுக்குழுவிற்குத் தரப்படவில்லை. ஒரே குற்றமானாலும் வர்ணத்திற்கு ஒரு நீதி என்ற மனுதர்மத்தை இந்த நவீன யுகத்திலும் செயல்படுத்துவதில் காவி யுடுத்த பார்ப்பனர்கள் எவ்வளவு முனைப்பாக உள்ளனர் என்பது மீண்டும் உறுதிப்பட்டுள்ளது. கடைசி ஒரு பார்ப்பனர் இருக்கும் வரையிலும் கல்லூரி முதல்வர் பதவி வேறு எந்த ஜாதி யினருக்கும் சென்றுவிடக் கூடாது என்ற பார்ப்பன வெறித்தனத்தை ராம கிருஷ்ணா மிஷனிடம், பார்ப்பன ஆதிக் கம் மிக்க கல்லூரி நிர்வாகக்குழுவிடம் காண்கிறோம்.
இதுமட்டுமல்ல, பார்ப்பன நிர்வாகத் தின் வேறு சில புரட்டுகளையும் விவே கானந்தரின் விசுவாசிகள் கவனத்திற் கொள்ள வேண்டும்.
விவேகானந்தர் விருப்பத்திற்கு மாறாக, இன்று அக்கல்லூரி வசதியான பிரிவினரின் புகலிடமாக உள்ளது. லாபம் ஈட்டும் சுயநிதி அடிப்படை மாலைக் கல்லூரி வகுப்புகளுக்கு அதிக கவனம் காட்டப்படுகிறது.
ஒரு மானியம் பெறும் கல்லூரியின் மாலை நேரப் பிரிவிற்கு பொறுப்பாளராக பகல் நேரக் கல்லூரியின் அனுபவம் மிக்க மூத்த போராசிரியரை நியமிப்பதுதான் நடைமுறையாகும். இவ்வாறு நியமிக் கப்படுபவர்களெல்லாம் பார்ப்பனர்களே. இப்போது மாலை வகுப்புகளுக்குப் பொறுப்பாளராக சுவாமி போதாத் மானந்தா என்ற துறவி, அவரது உதவி யாளர்களாக இருவர், சிறீராம் மற்றும் மணிகண்டன் என்பவர்கள் உள்ளனர். இவர்கள் முறையான பகல் நேர கல்லூரிப் பேராசிரியர்களோ அனுபவத்தில் மூத்த வர்களோ அல்லர். ஆனாலும் இருவருமே பார்ப்பனர்கள்.
கூடுதல் ஊதியம், பார்ப்பனீய ஏகபோகம்
2003-லிருந்து இக்கல்லுரி தன் னாட்சி உரிமை பெற்றுள்ளது. இதில் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் கூடுதல் ஊதியத்தில் நியமிக்கப் படுவார் (மாதம் 10,000 ஆயிரம் ரூபாய்)
இதுவரை இவ்வாறு கூடுதல் ஊதியத்துடன் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியாகப் பணியாற்றியவர்கள் பட்டியல் பின் வருமாறு:
1) முனைவர் அபிராம சுந்தரம் 2) முனைவர் என்.எஸ்.வெங்கட சுப்பிரமணியன்
3) முனைவர் ரங்கதுரை
4) முனைவர் கனகசபேசன் நாகராஜன்
5) முனைவர் வாசன்ரமணன்
6) முனைவர் ராமச்சந்திரன்
அனைவருமே பார்ப்பனர்கள் அதனாலேயே இவர்களை விட பணியில் மூத்தவர்கள் புறக்கணிக்கப் பட்டார்கள். அதிக நிதி, கூடுதல் ஊதியம் பெற்றும் கூட தேர்வுச் சீர் திருத்தம் குறித்து கருத்தரங்கம், ஆய்வு போன்ற எதையும் இந்தப் பார்ப்பன சிரேஷ்டர்கள் நடத்தவில்லை. பொதுப்பணத்தை பார்ப்பனர்களே அனுபவிப்பதற்கு இந்த வாய்ப்புகளை நிர்வாகம் ஏற்படுத்திக் கொடுக்கிறது. பொதுப் பணத்தை பார்ப்பனர் எடுத்துச் செல்வதற்கு வசதியாக சுகதேவா னந்தா தலைமையிலான இன்றைய நிர்வாகம் பல புதுமையான (புதுப்) பதவிகளை உருவாக்கியுள்ளது.
தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரிக்கு உதவியாக சிறப்பு அதிகாரி இந்தப் பொறுப்பு (?) ஓய்வு பெற்ற சமஸ்கிருதப் பேராசிரியர் பார்ப்பனர் வாசன் ரமணனுக்குத்தான் அளிக்கப்படு கிறது. வாரத்தில் ஓரிரு முறை கவுரவ வருகை தருவதற்காக இவருக்கு பல ஆயிரங்கள் மாத ஊதியமாக வழங்கப்படுவதாகத் தெரிகிறது.
இதைப் போன்று இப்போது கல்லூரி முதல்வராகத் நியமிக்கப் பட்டுள்ள சிறீனிவாசனுக்கும் கூடுதல் ஊதியத்தில் ஓர் ஆலோசகர், அவரும் ஒரு பார்ப்பனர், ஓய்வு பெற்ற கல்லூரி முதல்வர் சுவாமிநாதன். இவருக்கும் மாத ஊதியம் பல ஆயிரங்கள் இவர் முதல்வராக இருந்தபோது வந்த தேசிய மதிப்பீட்டுக்குழு (NAAC) இவரைப் போன்றவரை வைத்துக் கொண்டு எப்படி கல்லூரியை நடத்து கிறீர்கள் என்று விமர்சனம் செய்தது ஊரறிந்த ரகசியம். இவர்தான் இன்றைய ஆலோசகர்.
- (தொடரும்)
                                                                                                                                                                                 விடுதலை 3.7.2013

No comments:

Post a Comment