Friday, March 11, 2011

நீதிக் கட்சி இயக்கத்தின் 1917ஆம் ஆண்டு செயல்பாடுகள் - தொடர் கட்டுரை



நமது கடந்த காலம்
நல்லது, பெரியோர்களே, இங்கே நாம் சந்தித்துக் கொண்டோம். எனவே நாம் பேசிக்கொள்வோம். எனக்கு அளிக்கப்பட்டுள்ள தலைப்பு நமக்கு உடனடியாகத் தேவைப்படும் அரசியல் கண்ணோட்டம் என்பது.  அதைப் பற்றி விவாதிக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால்,  உங்களின் கடந்த காலத்தைப் பற்றி நீங்கள் சற்று சிந்திக்க வேண்டும். கடந்த காலத்தில் நமது அரசியல் நிலை என்னவாக இருந்தது? கடந்த கால அரசியலை, உங்களில் இளைஞர்களாக உள்ள சிலரால் நெருக்கமாகக் காண இயலாமல் போயிருக்கலாம். நமது கடந்த கால அரசியல் நிலை என்னவாகத்தான் இருந்தது என்பதை உங்களில் பெரும்பாலோர் நினைவு வைத்திருக்கலாம். நமது அரசியல் நிலையில் முன்னேற்றம் தேவை என்று இந்தியர்களாகிய நாம் எப்போதுமே ஆங்கிலேயரைக் கேட்டுக்கொண்டே வந்துள்ளோம்.  நமது கோரிக்கை களைக் கேட்டு ஆங்கிலேய அரசும் அவ்வப்போது அரசியல் சலுகைகளை நமக்கு அளித்து வந்துள்ளது. நம் நாடு நேரடியாக ஆங்கிலேய ஆட்சியின் கீழ் 1857 ஆம் ஆண்டு வந்தது.  இந்திய அரசைப் பொறுத்தவரை, 1861 முதல் இந்தியாவை ஆள்வது பற்றி தொடர்ந்து சட்டங்கள் பல இயற்றப் பட்டு வந்துள்ளன. முடிவாக 1909 ஆம் ஆண்டு சட்டமும் நிறைவேற்றப்பட்டது. ஆங்கிலேய அரசின் கீழ் நம் நாடு நேரடி ஆட்சிக்கு வந்தவுடன், இந்தி யாவில் இந்தியர்களின் சுயஆட்சி என்ற ஒரு நடைமுறையையும் அவர்கள் அறிமுகப்படுத்தினர். அந்த சுய ஆட்சி யினையும் அவர்கள் அவ்வப்போது மாறுதல்களுக்கு உட்படுத்தி மேம் படுத்தி  வந்துள்ளனர். எனவே நமது கடந்த கால நிலை இதுதான்.  நாம் அரசியல் சலுகைகளைக் கேட்டு வருகிறோம்; அரசும் அவ்வப்போது நமக்கு அரசியல் சலுகைகளை அளித்து வருகிறது. நாம் கேட்ட சலுகைகள் அனைத்தையும் நமக்கு அரசு வழங்கி யிருக்கிறது என்று நான் சொல்ல மாட்டேன்.  எந்த ஒரு நாட்டிலும் அவ்வாறு நடக்க முடியாது.  அரசு அளிக்க விரும்பும் சலுகைகளை விட சற்று அதிகமான சலுகைகளைத்தான்  மக்களும் கேட்டு வருவார்கள்.  ஆனால் நீங்கள் படிப்படியாக முன்னேற்றம் பெற்று வருகிறீர்கள் என்பது உறுதிப் படுத்தப் பட்டு, உங்களின் அரசியல் நிலை எப்போதுமே முன்னேற்றப் பாதையில் வளர்ச்சியே அடைந்து வந்திருக்கிறது, எப்போதும் பிற்போக்குத்தனத்தை அடையவில்லை என்பதைக் காணும்போது அது நமக்கு மனநிறைவை அளிப்பதாக இருக்கிறது. சமீப காலம் வரை நமது நிலை பற்றி நாம் அனைவரும் மனநிறைவு கொண்டவர் களாகவே இருந்து வந்துள்ளோம். 1909 இல் நமக்கு அளிக்கப்பட்ட மிண்டோ-மார்லி சீர்திருத்தங்கள் எனும் சலுகைகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்நாட்டில் வரவேற்கப்பட்டன என் பதை நான் நினைத்துப் பார்க்கிறேன். இந்நாட்டில், இந்தச் சீர்திருத்தத்துக் காக மிண்டோ-மார்லி பிரபுக்களுக்கு நன்றி தெரிவித்து இந்த மன்றத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் நானும் கலந்து கொண்டிருக்கிறேன். சென் னையில் உள்ள எனது அரசியல் சகாக்கள் பலரும் அக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினர். ஆனால், தாங்கள் விரும்பியவை அனைத்தும் தங்களுக்கு அளிக்கப் படவில்லை என்று அவர்களில் பலர் பேசினர்.  அவ்வாறு கூறியவர்களில் நானும் ஒருவன். ஆனால் இச் சலுகைகள் ஒரு தவணை என்பதை நாம் அனைவரும் ஒப்புக் கொண்டோம். தொடர்ந்து நாம் கோரிக்கைகளை முன் வைப்பது என்றும் அடுத்த தவணையில் என்ன கொடுக்கப்படுகிறதோ,அதனைப் பெற்றுக் கொள்வது என்றும் நமது மனங்களை நாம் தயார் செய்து கொண்டோம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு பெரிய மாற்றம் திடீரென இந்திய அரசியல் நிலையில் ஏற்பட்டுள்ளது. மேற்கொண்டு நாம் ஆலோசனை செய்யும் முன், இப்புதிய அரசியல் இயக்கத்தின் ஆணிவேர் வரை சென்று, இந்த இயக்கம் தோன்று வதற்கான காரணங்கள் எவை, அவற்றை நியாயப்படுத்தும் சூழ்நிலை என்ன, அவை வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் என்ன ஆகியவை பற்றி நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.  இந்தப் பொருள் பற்றி எந்த முடிவும் மேற்கொள்ளும் முன், இவற்றைப் பற்றி ஆராய்ந்து பார்த்து மன நிறை வளிக்கும் பதில் ஒன்றை நீங்கள் காண வேண்டும். அண்மையில் தோன்றிய இந்த இயக்கத்தை (இது வன்முறைசார்ந்த இயக்கம் என்பது எனது கருத்து) ஆங் கிலேய பொதுமக்கள் ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது என்பதை உங்களால் காட்ட முடிந்தால்,  அதுவே நமது உடன டியான அரசியல் கண்ணோட்டமாகும். அந்த இயக்கத்தை ஆங்கிலேயப் பொது மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பு இல்லை என்பதை மெய்ப்பிக்க நான் இங்கே வந்துள்ளேன். அப்படியானால் வேறு ஒரு உடனடியான அரசியல் கண் ணோட்டத்தைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும்.
அயர்லாந்து நாட்டிற்கான சுய ஆட்சி
பெரியோர்களே, அயர்லாந்தில் ஹோம் ரூல் இயக்கம் நடந்து வருவது பற்றிய கடுமையான கருத்து வேறுபாடு ஏற்பட் டிருந்த ஒரு காலத்தில் இங்கிலாந்து நாட்டில் நான் மாணவனாக இருந்துள் ளேன் என்பதால், சுயஆட்சி (ஹோம் ரூல்) என்னும் கூப்பாடு பற்றி நானும் நன்கு அறிந்துதான் உள்ளேன். அரசியல் களத்தில் நான் இருந்த அந்த அய்ந்து ஆறு ஆண்டு காலத்தில்  ஹோம் ரூலைத் தவிர வேறு எதனைப் பற்றியுமே கேள்விப்படவில்லை. எங்கு பார்த்தாலும் ஹோம் ரூல்தான்.  எந்த அரசியல் கூட்டமாக இருந்தாலும், வேறு என்ன பொருள்கள் பற்றி பேசப்பட்டாலும், அயர்லாந்துக்கான ஹோம் ரூல் பற்றிய பேச்சு அங்கு கட்டாயம் இருக்கும்.  எனவே இங்கிலாந்தில் அப்போது இருந்த ஹோம் ரூல் இயக்கம் என்பதைப் பற்றி நான் நன்கு அறிந்தவனாகவே இருந்தேன். ஆனால், இந்தியாவிலும் இதே கூச்சலைக் கேட்ட போது,  உண்மையில் அது நம்பிக்கையுடன் எழுப்பப்பட்ட கோரிக்கை என்று தொடக் கத்தில் என்னால் கருத இயலவில்லை. ஹோம் ரூல் என்னும் சுயஆட்சி அளிக்கப்படுவதற்கான நிபந்தனைகள், சூழ்நிலைகள் ஆகியவை பற்றி முழுமை யாக எவருமே அறிந்திருக்கவில்லை. அவ்வாறு அறிந்திருந்தால்,  அதற்கான குரல் எழுப்ப எவருமே முன் வந்திருக்க மாட்டார்கள். அயர்லாந்தில் இருந்த சூழ்நிலைகளும் கூட சுயஆட்சிக்கு ஏற்ற வையாக இருக்கவில்லை. ஆனால்,   நீண்ட நாட்களாக இருந்து பின்னர் நீக்கப் பட்ட அயர்லாந்து நாட்டு நாடாளுமன்றம் மீண்டும் தங்களுக்கு வேண்டும் என்பது ஒன்றே அயர்லாந்துக்காரர்களின் போராட்டம் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அயர்லாந் தில் நீண்ட காலமாக நாடாளுமன்றம் இருந்து வந்தது. ஆனால் 1800 ஆம் ஆண்டு இணைப்புச் சட்டத்தின் மூலம் அது நீக்கப்பட்டது. இந்த இணைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த காலம் முதல், அயர்லாந்துக்காரர்கள் அமைதியாக இல்லாமல், இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற அவர்கள் ஏதோ ஒரு வழியில் போராடிக் கொண்டு இருந்தனர்.  பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக் கத்தில் உண்மையில் அந்தப் போராட்டம் ஹோம் ரூல் இயக்க வடிவத்தைப் பெற்றி ருக்கவில்லை. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் அவர்கள் ஹோம் ரூல் இயக்கத்தை உருவாக்கினர்.  கத்தோலிக் கர்களின் முன்னேற்றம் மற்றும் அவர்களது இதர கோரிக்கைகளுக்கான போராட்டம் உண்மையில் அவர்களிடமிருந்து எடுக்கப் பட்ட நாடாளுமன்றம் தேவை என்ற ஹோம் ரூலுக்கான கோரிக்கையே ஆகும்.
இந்தியாவில் உள்ள சூழ்நிலைகள்
இந்தியாவைப் பொறுத்தவரை, ஹோம் ரூல் என்பது முற்றிலும் மாறுபட்ட ஒரு பிரச்சினையாகும். நமக்கு இதற்கு முன் நாடாளுமன்றம் என்று ஒன்று இருந்த தில்லை. உண்மையான பொருளில் சுய ஆட்சி என்ற ஒன்றை நாம் பெற்றிருந் தோமா என்பதும் எனக்குத் தெரியாது. பண்டைய இந்து அரசர்களின் ஆட்சிக் காலத்தைக் குறிப்பிட்டு, அப்போதிருந்த அற்புதமான வசதிகளை, சலுகைகளை, வாழ்க்கை முறையை இன்றைய 20 ஆம் நூற்றாண்டின் ஏமாற்றம் அளிக்கும் வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப் பேசுவதே ஒரு புதுமையான பாணியாக ஆகிவிட்டது. பண்டைய இந்தியாவில் இருந்த சுயஆட்சி முறையே சிறந்தது என்றும், அதனால் நாம் அதைக் கேட்கிறோம் என்று சில நேரங்களில் நமக்குக் கூறப்பட்டது. எனக்குத் தெரிந்தவரை, பண்டைய இந்தியாவில் நாம் கொண்டிருந்த சுய ஆட்சி என்னவென்றால், தனிப்பட்ட கிராமங்களில் இருந்த பஞ்சாயத்துகள் தான்.  இந்த பஞ்சாயத்துகளின் கூட் டமைப்பு என்ற எது ஒன்றும் உருவாகவே இல்லை. ஒரு கிராமத்திலிருந்து இன் னொரு கிராமத்துக்கு சரியான தகவல் போக்குவரத்து வசதிகள் அந்நாள்களில் இல்லாமல் இருந்ததே இதற்குக் காரணம். ஒவ்வொரு கிராமமும் தன்னிறைவு பெற்றதாக விளங்கியது. பண்டைய இந்தியாவில் இதைத் தவிர வேறு எந்தவகை சுய ஆட்சி முறையும் நடைமுறையில் இருந்ததாக அதிகார பூர்வ ஆவணங்கள் எவற்றிலும் எங்கும் குறிப்பிடப்பட்டு இருக்கவில்லை.  வாதத்துக்காக, பண்டைய இந்தியாவில் சுய ஆட்சி முறை இருந்தது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். இன்று உங்களின் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்து நீங்கள் வெகு தூரம் விலகி உள்ளீர்கள். சுயஆட்சிக்கான ஆற்றலை அவர்களிடமிருந்து நீங்கள் பெற்றிருக்கிறீர்கள் என்பதைக் காட்ட உங்களிடம் எதுவுமே இல்லை. அத் தகைய ஆற்றலை உங்கள் முன்னோர் களிடமிருந்து நீங்கள் பெற்றிருந்தால், உங்களது நகராட்சிகள் இன்னும் மேன்மையாக நிருவகிக்கப்பட்டு இருக்க வேண்டும். சிறு நகராட்சிகளைத் திறமை யாக நிருவகிக்கும் வழிமுறைகளைக் கற்றுக்கொள்ள உங்களுக்கு நீண்ட காலம் தேவையில்லை. இந்தியாவில், நமக்கு சுய ஆட்சி தேவை என்றால் அதற்கான பயிற்சியும் நமக்கு அவசியம் தேவை. அதற்கான தகுதியை நாம் பெற்று, அதற்குத் தேவையான நமது பண்புகளை வளர்த்துக் கொண்டு, அதன் பின் சுய ஆட்சியைத் தொடங்க வேண்டும். மேலும், ஒற்றுமையாக, எந்த வித வேறுபாடுகளும் அற்ற ஒரே ஒரு நாடாக உள்ள நாடு ஒன்றுக்குதான் சுயஆட்சி என்பதைத் தர இயலும். இந்த பாடத்தை அயர்லாந்து ஹோம் ரூல் இயக்கத்திலிருந்து நீங்கள் கற்றுக் கொள்கிறீர்கள். ஒரு காலத்தில் நாடாளுமன்றம் இருந்த அந்த நாட்டிற்கு, சுயஆட்சி பெறுவதற்கான தகுதிகள் அனைத்தும் இருந்த போதிலும்,  சுயஆட்சி பெறும் நிலையில் இருந்து அவர்கள் வெகு தொலைவில் உள்ளனர். ஏன்? அயர்லாந்தின் சில பகுதிகளில் குடியேறி வாழும் பிராட்டஸ்டன்ட் கிறித்துவர்கள் தவிர, மொத்த அயர்லாந்தினரும் கத்தோலிக் கக் கிறித்துவர்கள் என்பதுதான் இதன் காரணம். பெரியோர்களே, அந்த ஒரே ஒரு காரணத்துக்காக அயர்லாந் தினால் சுயஆட்சியைப் பெற இயல வில்லை என்பதை அறிந்து கொள்ளுங் கள். இங்கிலாந்து நாட்டின் மக்கள் அவையில் நடக்கும் விவாதங்கள் அனைத்தையும் பார்த்தால், பிராடஸ் டன்டுகள் வாழும் உல்ஸ்டர் பகுதியை ஆட்சி செய்யும் வகையில் கத்தோலிக்கர் வாழும் அயர்லாந்து சுய ஆட்சியைப் பெறும் என்று நான் கருதவில்லை. சுயஆட்சிக்குத் தேவையான மற்றொரு நிபந்தனையான இதுவும் நம் நாட்டிற்கு பொருந்துவதாக இல்லை. ஹோம் ரூலுக்கான மூன்றாவது தேவை என்ன வென்றால், தங்களது வாக்குரிமையை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தும் அளவுக்கு கல்வியிலும் அறிவிலும் மக்கள் முன்னேற்றம் பெற்ற நாடாக அது இருக்கவேண்டும் என்பது. நமது நாட்டின் மிகப் பெரும்பான்மையான மக்கள் அந்த அளவுக்கு முன்னேற்றம் பெற்றவர்களாக இல்லை. அதனால், சுய ஆட்சி பெறுவதற்குத் தேவையான சூழ்நிலைகள், நிபந்தனைகளை முழு மையாக அறிந்து கொண்ட எவரும், இந்தியாவுக்கு சுயஆட்சி தேவை என்று கூற முன்வரமாட்டார்கள்.
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்
(தொடரும்)

No comments:

Post a Comment