Saturday, July 7, 2012

திருமண மந்திரமும்-திதி மந்திரமும்


இந்து திருமண மந்திரமும் அதன் பொருளும்

மந்திரம்:
ஸோம ப்ரதமோ விவித கந்தர்வ விவிவத உத்தர!
த்ருதியோ அக்னிஷ்டே பதி துரியஸ்தே மநுஷ்ஐயா!!
ஸோமோ ததத் கந்தர்வாய
கந்தர்வோ ததத் அக்னயே!
ரயிம்ச புக்ராம் சாசாத் அக்னிர் மஹ்யம்
அதோ இமாம்
பொருள்: அதாவது மணப்பெண்ணை சோமன் முதலில் மனைவியாக அடைந்தான். பிறகு கந்தர்வன் அடைந்தான். இவளுடைய மூன்றாவது கணவன் அக்னி, நான்காவது கணவன் மனித சாதியில் பிறந்தவன்.
சோமன் உன்னை (மணப்பெண்ணை) கந்தர்வனுக்குக் கொடுத்தான். கந்தர்வன் அக்னிக்குக் கொடுத்தான். அக்னிதேவன் இவளுக்குச் செல்வத்தையும் குழந்தையையும் கொடுத்த பிறகு எனக்குத் தந்தான்.... என்பதே புரோகிதர் கூற அதை திருப்பி மணமகன் கூறும் மந்திரத்தின் பொருள்.
இம்மந்திரத்தின் வெளிப்படையான அர்த்தம் என்ன? இந்து மதப்படி திருமணம் செய்து கொள்கின்ற ஒருவரின் மனைவி பலரால் அனுபவிக்கப்பட்ட ஒரு பரத்தை (விபச்சாரி) என்றும், இந்த பெண் (மணப்பெண்) வேறொருவனிடம் குழந்தை பெற்றுக் கொண்டே அவனுக்கு மனைவியாகிறாள் என்றும் இந்து மதம் கூறுகின்றது.
ஆதாரம்: காஞ்சி சங்கராச்சாரியார் எழுதிய தெய்வத்தின் குரல் - பாகம் 2 - பக்கம் 874
எனவே இந்துமதப்படி திருமணம் செய்துக் கொண்டால் உன் மனைவி ஒரு விபச்சாரி என்று பொருள்.

திதி மந்திரமும் அதன் பொருளும்

மந்திரம்:
என்மே மாதா ப்ரலுலோபசரதி
அன்னவ் வ்ரதா தன்மே ரேதஹா
பிதா வ்ருந்த்தாம் ஆபுரண்யஹா அவபத்யநாம...
பொருள்: நான் யாருக்குப் பிறந்தேன். என் அப்பா யாரென தெரியாது. மற்றவர்கள் சொல்வதால் நான் இன்னாருக்குத்தான் பிறந்தேன் என்பதை நம்ப வேண்டியுள்ளது. அது அம்மாவுக்குத்தான் தெரியும். அப்படிப்பட்ட அம்மாவுக்கு என் அஞ்சலியை கொண்டு போய் சேர்ப்பீர் என்பது இதன் பொருள்.
இம்மந்திரத்தின் வெளிப்படையான அர்த்தமென்ன?
தன் தாயானவள் சந்தேகத்திற்கு உரியவள். தன் கணவனுக்கு உண்மையாக நடக்காதவள். மாற்றானிடம் உடல் தொடர்பு வைத்திருந்தவள் என்ற அடிப்படையில் இந்த மந்திரம் சொல்லப் படுகின்றது. இதைத்தான் மந்திரம் ஓதும் புரோகிதர் சொல்ல திதி கொடுக்கும் மகன் திருப்பி சொல்கின்றான்.
ஆதாரம்: அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாத்தாசாரியார் எழுதிய இந்து மதம் எங்கே போகிறது...
பாகம் -1 - பக்கம் 157, நக்கீரன் வெளியீடு.
எனவே இந்துமதப்படி பெற்றோர்களுக்கு நீ திதி கொடுத்தால் உன் தாய் ஒரு விபச்சாரி என்று பொருள். இதைத்தான் இந்து மதம் கூறுகிறது.

Saturday, June 23, 2012

நினைவு நாள்: 18.07.1919 திராவிட இயக்க இலெனின் டி.எம். நாயர்


புலவர் குறளன்பன்
கல்விக்களம்: கேரள மாநிலம் பாலக்காட்டை ஒட்டித் திருத் என்றொரு சிறு நகரம்.. அதன் அருகில் உள்ள ஊர் தாரவாட். அங்கு பிறந்தவர் தான் நம்முடைய மாதவன் நாயர் அவர்கள்.
அவருக்குப் பிறப்பும், பள்ளிப் படிப்பும் மட்டும்தான் கேரளம். மற்றபடி அவர் கல்லூரிக் கல்விக்கு நாடிய இடம் சென்னை மாநிலக் கல்லூரி. பின்னர் மருத்துவம் கற்கப் போன இடம் இங்கிலாந்து. கற்றதும் திருப்பி வராமல் இங்கிலாந்தில் கால் கொண்டு மருத்துவமனை ஒன்றை நடத்திப் பெரும் பொருள் ஈட்டிய கருத்தாளர்.
காதல் களம்: தன்னுடைய தாயகமாய் அவர் கருதிய சென்னைக்குத் திரும்பிய ஆண்டு 1897. பண வெறி மருத்துவராய் வாழ்ந்த அவர் பொதுப் பணி புரிய விரும் பினார் பேராய (காங்கிரஸ்) கட்சியில் புகுந்தார்.
பேராயக் கட்சியின் பார்ப்பனத் தலைமை வழக்கம் போல திராவிடரான நாயரையும் புறக்கணித்தது. தியாகராயர் திராவிட இயக்கத்திற்குத் திரும்பியது போல நாயரும் திரும்பினார்.
வாழ்வுக்களம்: வகுப்புவாரி உரிமை: கோவையில் 19.8.1917ஆம் நாள் திராவிடர் இயக்க மூத்த அமைப்பான தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் நடத்திய மாநாட்டில் நம்முடைய நாயர் முன்னிலை யராய் நின்று கருத்துரையாற் றினார்.
சென்னை வந்த மாண்டேகு செம்சுபோர்டு அவர்கள் (15.12.1917) தியாகராயர் தலைமை தாங்கிய வரவேற்புக் குழுவில் இடம் பெற்று வகுப்பு வாரிப்படி கல்வி, வேலையில் ஒதுக்கீடு தருமாறு வலியுறுத்தி விண்ணப்பித்தார்.
மாண்டேகு செம்ஸ்போர்டு ஆரியச் சார்பு அன்னிபெசண்டு, சி.பி. இராமசாமி அய்யர் பேச்சில் மயங்கிச் சாய்ந்ததை அறிந்து பிரிட்டன் பாராளுமன்றம் சென்று மாண்டேகு செம்ஸ் போர்டு அறிக்கைக் கருத்தாடலில் (விவாதம்) பங்கேற்று வகுப்புவாரி உரிமையை வலியுறுத்தி வந்தார்.
நடுவுநிலை: சென்னை நகராட்சியில் ஒரு தீர்மானம், கொண்டு வந்தவர் தியாகராயர். அவர்நம் நாயரின் நண்பர். நயன்மைக் (நீதி) கட்சியில் கூட்டுப் பணியாளர். அப்படிப்பட்ட அவர் கொண்டு வந்த தீர்மானம். திருவல்லிக் கேணி பார்த்தசாரதி கோவில் குளத்திற்கு வரி வாங்காமல் தண்ணீர் தர வேண்டும் என்பதாகும்.
வருவாய் கோவில்களுக்கு நிறைய வரு கிறது. வரி கட்டுவதுதான் முறை என்று கூறி நாயர் மறுத்து விட்டார். நண்பருக்காக நயன்மையை விட்டுத் தராத நடுவு நிலையராய் நின்றார்.
போலி பத்தி: மதச் சார்பில் லாத பகுத்தறிவாளராய் இங்கிலாந்திலிருந்து தென் நாட்டிற்கு வந்தவர். பிறகு மனம் மாறிப் பிரம்ம ஞான சபையின் தலைமைப் பொறுப்பேற்றவர். அதன்பின் கண்ணன் மறுபிறப்பு எடுக்கப் போவதாகக் கதை அளந்தவர். அளவில்லாமல் பொய்யை விற்றுப் போலியாய் பத்தி (பக்தி) வேடமிட்டு வாழ்ந்து வந்த பெண்மணி அன்னி பெசண்ட் ஆவார்.
சமுதாய வீதியில் குறிக்கோள் இல்லாமல் கும்மாளம் போட்டு அலைந்த அவரின் அழுக்குச் செயற்பட்டினை ஆங்கில நூல் ஒன்றின் வாயிலாகத் தோலுரித்துக் காட்டிய வீறு நம் தா.மா. நாய ருக்கே உரிய தனித்திறனாகும்.
வெற்றிக்களம்: தலைநகர் சென்னையில் நம்முடைய பெரியார் திடல் அமைந்துள்ள வேப்பேரிப் பகுதியில் எத்திராசு முதலியார் இல்லத்தில் 20.11.1916 ஆம் நாள் நடைபெற்ற பார்ப்பனர் அல்லாதார் கூட்டத்தில் தா.மா. நாயர் தென்னாட்டு பிராமணர் அல்லாதார் நலனுக்காக என் உயிரையும் தருவேன் - என்று தெரிவித்தபடி இலண்டன் பாராளுமன்றம் கூட்டுக் குழு விடம் வேண்டுகோள் முன் வைக்க விழைந்த காலத்தில் (18.07.1917) வாழ்க்கை நிறைவுச் சூழலுக்குத் தள்ளப்பட்டுத் தன் உயிரைத் தர நேரிட்டு விட்டது.
அரசியல், பொருளியல், குழுகாயவியல் என்னும் மூன்று தளங்களிலும் அவர் ஆற்றிய பணி அனைத்தும் மிக மிக அருமையானவை.
அவர் போலும் அஞ்சாமை, நடுவு நிலைமை உடைய அறிவுப் பணியாற்ற நாம் நம் இளையரை எழுப்பி அமைவோமாக.
                                                                  விடுதலை 23-6-2012 ஞாயிறுமலர்

யஜுர் வேதத்தில் பசுவைக் கொன்று யாகம்!


சமஸ்கிருதத்தில் யாகத்துக்குப் பெயர்    தமிழில் பொருள்
1. கோஸவம்    பசுமாடு காளைமாடு இவைகளைக் கொல்லும் யாகம்
2. வாயவீய ஸ்வேதபக    வாயு வேதனைக்காக வெள்ளைப் பசு யாகம்
3. லத்ஸோப கரணம்    கன்றுக்குட்டியை கொலை செய்து நடத்தும் யாகம்.
4. அஷ்டதச பசு விதானம்    பதினெட்டு பசுக்களைக் கொலை செய்து நடத்தும் யாகம்
5. ஏகாதசீன பசுவிதானம்    பதினொன்று பசுக்களை கொல்லும் யாகம்
6. க்ராமாரண்ய பசு ப்ரசம்ஸா    நாட்டிலும் காட்டிலும் உள்ள பசுவைக் கொன்று யாகம் செய்தல்.
7. உபாகரண மந்த்ரம்    யாகத்தில் கொல்லப்படும் பசுவைச் சுத்தி செய்யும் மந்திரம்.
8. கவ்ய பசுவிதானம்    பசு மாட்டைக் கொன்று நடத்தும் யாகம்
9. ஆதித்ய தேவ தாகபசு    சூரிய தேவதைக்கு பசு யாகம்
- மத விசாரணை நூல். பக்கம் 79,80 -சிவானந்த சரஸ்வதி
பசுவதைத் தடைச் சட்டம் கோரும் பார்ப்பனீயமே! இதற்கென்ன பதில்?

நுழைவுத்தேர்வு நீக்கத்தால் பெற்ற பலன்


1984இல் இதே நாளிலே.... 
திராவிடர் கழக வரலாற்றுப் பாதையில் அநேகமாக ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு வகையில் 
முத் திரை பதிக்கப்பட்டதாகவே இருக் கும்.
இந்நாளில்தான் 1984இல் எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக அரசு திணித்த நுழைவுத் தேர்வு ஆணையினை எரிக்கும் போராட்டம் 23 இடங்களில் நடத்தப் பட்டது.
எம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்தவரையில் திராவிடர் இயக்கத்தின் சமூக நீதி சிந்தனை யில் மிகவும் பின் தங்கி இருந்தார் என்றே கூற வேண்டும்.
அதன் தீய விளைவு தான் - அவரின் நுழைவுத் தேர்வு திணிப்பும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீட்டில் வருமான வரம்பும் கொண்டு வந்தது.
நுழைவுத் தேர்வு என்னும் மாயையை மக்கள் மத்தியில் தோலூரித்துக் காட்டியது கழகம்.
திராவிடர் கழகத்தின் அழுத்த மான தொடர் நடவடிக்கைகளால் அம்மையார் ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்தபோது நுழை வுத் தேர்வு ரத்து செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டது. திராவிடர் கழகத் தலைவர் சொன்ன ஆலோசனைப்படி கல்வி நிபுணர் குழு அமைத்து அவர்களின் ஆலோசனைப்படி அந்த ஆணை பிறப்பிக்கப்பட்டு இருந்தால், ஆணை நீதிமன்றத்தால் ரத்தாகி இருக்காது.
கலைஞர் அவர்கள் டாக்டர் ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை அடிப்படையில் நுழைவுத் தேர்வை ரத்து செய்ததால் உச்சநீதி மன்றம் வரை அந்த ஆணை நிலை பெற்றது. தமிழ்நாட்டின் இன்றைய நிலையில் நுழைவுத் தேர்வு கிடை யாது.
ஆனால் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருக்கக் கூடிய கபில்சிபல் அய்ந்து நட்சத்திர கலாச்சாரத்தின் சுகவாசி! அவர் விடும் மூச்சுக்கூட மூன்று நட்சத்திர தகுதியை உடையதாக இருக்கக் கூடும்.
அவர் ஒரு கனவைக் கண்டிருக் கிறார். இளங்கலை முதல் (பி.ஏ., பி.எஸ்.சி., உட்பட) அகில இந்திய நுழைவுத் தேர்வை நடத்த வேண்டு மாம். இது அவர் கனவாம்.
கனவான்களின் கனவுகளுக் கெல்லாம் காலம் காலமாக ஒடுக் கப்பட்ட இந்த நாட்டு மக்கள் தானா கிடைத்தார்கள்?
போட்டித் தேர்வுக்கும், நுழைவுத் தேர்வுக்கும் இடையே உள்ள வேறு பாட்டைக்கூட புரிந்து கொள்ளாத படிப்பு எதற்கு பிரயோசனம்?
நுழைவுத் தேர்வை நடத்தி னாலும் முழு சமநிலை என்பது கட்டுக்கதைதான். ஏனென்றால், சரியான விடையைத் தேர்ந்தெ டுப்பதைவிட கோன்பனேகா குரோர்பதி தொலைக்காட்சி நிகழ்ச்சி போல அனுமானத்தின் அடிப்படையில் விடைகளை டிக் செய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.கே. மிஸ்ரா, சம்பத்குமார் ஆகி யோர் அடித்துச் சொன்னார்களே பிரபல வழக்கறிஞராக இருந்த கபில்சிபலுக்கு இது ஏன் புரிய வில்லை?
என்ன செய்வது! என்ன படித் திருந்தாலும், மேல் நாடு சென்று மாட்டுக்கறி தின்று இருந்தாலும் பார்ப்பனர்களின் மனப்பான்மை என்ற ஒன்று இருக்கிறதே - அது ஜென்மத்தோடு பிறந்த ஜீவ சுபாவ மாக அல்லவா போய்விட்டது!
ஒடுக்கப்பட்ட மக்கள் தோள் களில் கிளர்ச்சி  எரிமலைகளைத் தூக்குவதன் மூலம்தான் ஆதிக்க புரிகளின் அஸ்திவாரத்தை அஸ்த மனம் செய்ய முடியும்.
ரகசியம் புரிகிறதா?
2010ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரியில் திறந்த போட்டியில் இடம் கிடைக்கப் பெற்ற விவரம் இதோ:
மொத்த இடங்கள் 460
இதில் பிற்படுத்தப்பட்டோர்    300
மிகவும் பிற்படுத்தப்பட்டோர்    72
தாழ்த்தப்பட்டோர்    18
முசுலிம்கள்    16
உயர்ஜாதியினர்    54
(இந்த 54-இல் பார்ப்பனர் அல்லாத உயர் ஜாதி யினரும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது).
200-க்கு 200 மதிப்பெண் பெற்றோர் -    8.
இதில் பிற்படுத்தப்பட்டோர்  - 7
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - 1
உயர்ஜாதியினர் பூச்சியம்
நுழைவுத் தேர்வு இல்லாமல் நடத்தப்பட்டதால்  சமூக நீதியின் சிகரத்தில் நம் மக்கள் கொடியேற்றினர்.
இந்த நிலையை, நிலைகுலையச் செய்யத்தான். வஞ்சக நோக்கோடு - சூழ்ச்சி வலையோடு பின்னப் படுவதுதான் நுழைவுத் தேர்வு - எச்சரிக்கை! எச்சரிக்கை!
                                                                                                                                                        - விடுதலை 22.6.2012

Wednesday, March 14, 2012

திரு.வி.க. பார்வையில் திராவிடர், திராவிடம், திராவிட நாடு - 3

- முனைவர் பேரா. ந.க.மங்களமுருகேசன்

இந்தியா என்பது பெரிய நாடு. இதில் பல திறப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள் என்றா லும் இந்நாட்டில் இரண்டு பெரிய கலாச்சாரங்களே அடிப் படைக் கலாச்சாரங்களாகக் காணப்படுகின்றன. இவை இரண்டும் பெரிதும் முரண்பட்ட கலாச்சாரங்களாகவும்  இருந்து வருகின்றன. இவற்றுள் ஒன்று ஆரியச் கலாச்சாரமாகும். மற் றொன்று திராவிடக் கலாச்சார மாகும். வடநாட்டில் பெரும் பாலும் ஆரிய கலாச்சாரமும், தென்னாட்டில் பெரும்பாலும் திராவிட கலாச்சாரமும் நிலவி வருகிறது.
இவற்றுள் ஆரியக் கலாச் சாரம் சுரண்டலையும் ஏமாற்று தலையும் அடிப்படையாகக் கொண்டிருப்பதால் அதைப் பின் பற்றி வருபவர்கள் தமது சுரண்டு தலுக்காக அந்நிய நாடுகளை ஆக்கிரமிக்கும் எண்ணம் கொண்டு முயற்சி செய்து வரு கிறார்கள். திராவிட கலாச்சாரம் சமதர்மத்தை, சோஷலிசத்தை அடிப்படை யாகக் கொண்டதாக இருப்பதால் அதைப் பின்பற்று பவர்கள் பிறர் சுரண்டலை ஒழித்துச் சுதந்திரமாக வாழ விழைகிறார்கள். எனவேதான் பிரிந்து வாழ நினைக்கிறார்கள்.
ஒரு காலத்தில் தமிழ்நாடு மிகமிக உயர்ந்திருந்தது. பிறகு ஆரியத்தின் சுரண்டலுக்கு ஆட்படவே இன்று மிகமிகத் தாழ்ந்துவிட்டது.
சுரண்டலுக்கு உள்ளாக்கிய வடநாடு மிகமிக உயர்ந்து நிற்கின்றது இன்று.
திராவிடம் தனித்து வாழமுடியுமா? என்று இன்று  கேட்பது போல் அன்றும் கேட்டார்கள். இன்று சிலர் கூறுவது போலக் கேரளம் கேட்கவில்லை, கன்ன டம் காது கொடுக்கவில்லை, ஆந்திரம் ஆதரிக்கவில்லை. அப்படியிருக்கையில் திராவிடம் என்ற பேச்சு எதற்கு? அதுவும் இப்போது எதற்கு என்று கேட்பது போல அன்றும் கேட்டவர்கள் இருந்தனர். எனவே அவர்களுக்கும் திராவிடர் கழகமோ தந்தை பெரியாரோ பதில் கூற வேண்டாத அளவுக்குத் திரு.வி.க. கேள்வியையும் கேட்டுப் பதிலையும் கூறி னார். இத்தகைய அருமையான விளக்கம் கூறிய திரு.வி.க. இன்றும் திராவிடர் மனத்தில் இருக்கிறார். எண்ணத்தில் என்றும் நிறைந்து நிற்கிறார்.
இன்று சிலர் கேட்கிறார்கள், திராவிட நாடு பிரிந்தால் தனித்து வாழமுடியுமா? என்று. நிச்சயமாகத் தனித்து வாழமுடியும். இன்றைய நிலையைக் காட்டிலும் பன்மடங்கு உயர்நிலையில் வாழ முடியும் என்று அதி திடமாகச் சொல்வேன். இந்நாட்டில் எதுதான் இல்லை? மலைகள் இல்லையா?  இருபுறமும் கிழக்குத் தொடர்ச்சி மலையும், மேற்குத் தொடர்ச்சி மலையும் இருக் கின்றனவே. செழிப்பான நெல் விளையும் நிலப் பரப்பில்லையா?  எரிமலைச் சாம்பல் நிரம்பிய இயற்கை வளம் பொருந்திய மண்ணல்லவோ இந்நாட்டு மண். அதில் என்ன விளையாது?  ஆறுகள் இல்லையா?  இந்நிலப் பரப்பை வளம் செய்ய, அதற்கும் குறைவில்லாத வகை யில் கோதாவரியுண்டு, கிருஷ்ணா வுண்டு, காவிரி உண்டு, பாலாறு உண்டு, பெண்ணையாறு உண்டு, இன்னும் எத்தனை வேண்டும்?  உலோகங்கள் இல்லையா?  கோலார் தங்க வயல்கள் எந் நாட்டைச் சேர்ந்தவை?  அய்தராபாத்தி லுள்ள மணிமலைகள் எந்நாட்டைச் சேர்ந்தவை? அந்த மணிமலைகளை வெட்டி எடுப்போமானால் இந்த அகண்ட உலகத்தையே விலைக்கு வாங்கிடலாமே, இந்நாட்டில் என்ன இரும்புக்குத்தான் குறைவா?  கவலையோடு பூமியைத் தோண்டிப் பார்த்து ஆராய்ச்சி நடத்தி வந்தால் இந்நாட்டில் எதுதான் கிடைக் காது என்று நினைக்காதீர்கள். எல்லாம் கிடைக்கும்.! கிடைக்காவிட்டால்தான் என்ன?  மற்ற மேலை நாடுகளைப் போலக் கிடைத்த உலோகத்தைக் கொண்டு  நமக்குத் தேவையான உலோகத்தைச் செய்து கொள்ள முடியாதா?  எல்லா உலோகப் பொருள்களும் ஒரே மூல தாதுப் பொருள்களிலிருந்து தான் உண்டா கின்றன. எனவே ஒன்றோடு ஒன்றைச் சேர்ப்பதன் மூலமோ அல்லது ஒன்றிலி ருந்து மற்றொன்றைப் பிரிப்பதன் மூலமோ எப்பொருளையும் உண்டாக்கிக் கொள்ள முடியும் விஞ்ஞான முறைப்படி என்று கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, நாம் என்ன சோடைகளா? ஒரு பொருளை வேறு நாட்டை எதிர்பார்த்துக் கொண்டிருக்க.
இவ்வளவு இயற்கை வளங்கள் நிறைந்த நாட்டில் வாழும் எங்களுக்குப் பிழைக்கும் வழிதானா தெரியாது? வாணிபம் செய்யத் தெரியாதா?  அல்லது துறைமுகங்கள்தான் இல்லையா?  எங் களுக்கு  முதன் முதலாகக் கப்பல் வழி வாணிபம் நடத்தியவர்கள் திராவிடர் களாயிற்றே. உலகம் உணரா முன்னமே உள்நாட்டு நகரத்திற்கும் கடற்கரையோர நகரத்திற்கும் வெவ்வேறு பெயர் கொடுத்து வழங்கியவர்களாயிற்றே தமிழர்கள். பட்டினமும், பட்டணமும் என்கிற இரு சொற்கள் எத்தனையோ காலமாகத் தமிழ்நாட்டில் வெவ்வேறு பொருளுடன் வழங்கி வருகின்றனவே. ஆங்கிலம் வந்த பிறகு இவ்வேற்றுமை கூடச் சிலருக்கு மறைந்து போயிருக்கும். சென்னைப் பட்டினம் என்பதற்குப் பதிலாக சென்னைப் பட்டணம் என்று தானே பலர் வழங்கி வருகின்றனர். ஹிந்தி வருமுன்னரே இந்நாடென்றும் ஹிந்தி வந்த பிறகு என்னவாகும் என்று சொல்லவும் வேண்டுமோ?  இன்று விசாகப்பட்டினம் என்கிற ஒரு இடத்தில் தான் கப்பல்தளம் இருக்கிறதென்றால் திராவிட நாடு பிரிவினையானதும் எத்தனையோ விசாகைகளைக் காண முடியுமே.
எத்தனையோ வழிகளில் இந்நாட்டில் தலை விரித்தாடிக் கொண்டிருக்கும் தரித்திரத்தை எங்களால் போக்கிக் கொள்ள முடியுமே. தனித்தியங்கும் நாடுகளைப் பிரித்துத் தனியாக இயங்கும்படிச்செய்து ஏதோ சொற்ப அதிகாரங்களை மட்டும் மேலெழுந்த வாரியாக மத்திய சர்க்காருக்கு வைத்துக் கொள்வதைவிட்டு இமயம் முதல் குமரி வரை ஒரே ஆட்சியின் கீழ் கொண்டு வரவேண்டுமென்று பாடுபட்டு வரு கிறார்களே?  அது சாத்யமா?  யோசித்துப் பார்த்தார்களா?  வங்காளத்தை ஒன் றாக்க முடிகிறதா?  அய்க்கிய மாகாண மக்களுக்குச் சமாதானம் சொல்ல முடிகிறதா?  எங்கே இருக்கிறது ஒற்றுமையும் ஒருமைப்பாடும். காங்கிரஸ் காரர்களிடையேயாவது காணப்படுகிறதா ஒருமைப்பாடு?  இவர்கள் கூறும் இந்தியாவில் ஒருமைப்பாடு இருக்கிறதா?
                                                                                                                                                                        - விடுதலை 14.3.2012

திரு.வி.க. பார்வையில் திராவிடர், திராவிடம், திராவிட நாடு - 2

- முனைவர் பேரா. ந.க.மங்களமுருகேசன்
திராவிட என்கிற சொல் பிராமி மொழியிலும் இருக்கிறது. பிராமி மன்னன் நிக்கலஸ் ஆட்சிச் சரித்திரத்தில் திராவிடர்களைப் பற்றிய குறிப்பு காணப்படு கிறது. ஸ்மிருதியிலும், பஞ்ச திராவிடம்  என்று குறிக்கப்பட்டிருக்கிறது. மலையாளம், தமிழகம், ஆந்திரம், கேரளம் அவற்றோடு மராத்தி தேசம் ஆகிய அய்ந்து திராவிடங்கள் குறிப்பிடப்பட்டி ருக்கின்றன. மலையாள தேசத்தில் பிறந்து வளர்ந்து வடமொழி கற்று சவுந் தர்யலகரி என்ற சமஸ்கிருத நூல் எழுதிய சங்கராச்சாரியாரும் அப்புத்தகத்தில் திராவிடர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள் ளார். எல்லையப்பர் அவர்களின் மொழி பெயர்ப்பின் மூலம் நாம் இதை அறிய லாம் என்று கூறுவதோடு,
சுமார் 55 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்த சபாபதி நாவலர் என்கின்ற தமிழ்வாணரால் எழுதப்பட்ட திராவிட பிரகாசிகா என்கின்ற நூலிலும் திராவிடம் என்கிற வார்த்தைக்குப் பல ஆதாரங்கள் காட்டப் பட்டிருப்பதைப் பார்க்கலாம் என்றும் இதுவரை எவரும் சுட்டிக் காட்டாத புதிய தகவலைக் கூறுகிறார். சென்னையில் நடைபெற்ற திராவிட இயக்க நூறாவது ஆண்டுத் தொடக்க விழாவில் தலைவர் கலைஞர் இரவீந்திரநாத் தாகூரின் ஜனகண பாடலில் திராவிட என்ற சொல்லாட்சி இடம் பெற்றிருப்பதைப் பாடிக் காட்டினார்.
திரு.வி.க.வோ விடுதலை பெற்ற அடுத்த ஆண்டிற்கு அடுத்த ஆண்டில் 1949இல் தமது உரையில் இன்று இந்நாட்டின் தேசியப் பாட்டாக வழங்கி வரும் ஜனகணமனவிலும் கவி ரவீந்திர நாத் தாகூர் அவர்கள் திராவிட உட்கல வங்கா என்ற வரியில் திராவிட நாட்டைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம்  என்று கூறுகையில் சிந்திப்பவர்கள் கருத்து ஒரே திசை நோக்கிச் செல்லும் என்பது சான்றாகிறது.
மேலும் அவர் அழுத்தந்திருத்தமாக, திராவிட நாடு என்று ஒரு நாடு தொன்றுதொட்டு இருந்து வந்திருக்கிற தென்பதற்கு இவ்வாதாரங்களே போதும் என நினைக்கிறேன். இத் திராவிட நாட்டுக்கு எல்லை குறிப்பது மிகச் சிரமமான காரியம் அல்ல. சரித்திரமே சுலபமாக நிர்மாணித்துவிடும் எந்தெந்தப் பகுதிகள் திராவிட நாட்டைச் சேர்ந்தவை என்று.
எனவே திராவிடம் என்று ஒரு பகுதி இருந்து வருகிறது என்பது பற்றியோ அல்லது அதன் எல்லையைக் குறிப்பிடு வது பற்றியோ யாரும் நம்மோடு சர்ச் சைக்கு வர முடியாது என்று எல்லை குறித்த சர்ச்சைக்கும் கூட முற்றுப் புள்ளி வைக்கிறார்.
நம் திராவிடப் பண்பாடு வேறு, ஆரியப் பண்பாடு வேறு - அடிப்படையிலேயே ஒட்டாது. இரண்டுக்கும் உள்ள தொலைவு அதிகம் என்று கூறும்போது, தாம் தூம் தையாதக்கா என்று சில ஆரிய, வைதீக ஆதரவாளர்கள் குதி, குதியென்று குதித்து, ஆரியமாவது, திராவிடமாவது, எல்லாம் ஒன்று கலந்து விட்டது என்றெல்லாம் கூறி வருவதை அறிவோம்.
அவர்களுக்கு இன்றைக்கு அறுபது ஆண்டுகளுக்கு முன்னே - அருமை யான விளக்கத்தைத் தமிழ்த் தென்றல் கூறி ஆரியம் வேறு, திராவிடம் வேறு என்று தெள்ளத் தெளிவாகக் கூறுகிறார்.
நாம் கூட ஆரியர்களில் சிலர் - சில நடிகர்கள் - பார்ப்பனர்கள் - பகுத்தறிவு பேசுவதுகண்டு, பூணூல் மேல் வெறுப் பாகப் பேசுவது கண்டு ஏமாந்துவிடுவது உண்டு. எனவேதான் தமிழர் தலைவர் ஆசிரியர், எந்தப் பார்ப்பானாவது, கட வுள் மறுப்புக் கொள்கையைக் கூறினால் ஏமாந்துவிடாதீர்கள். ஏனென்றால் அவனுக்குக் கல்லிலும், செம்பிலும் கடவுள் இல்லை என்பது நம்மைவிட அவனுக் குத்தான் நன்றாகத் தெரியும். ஆனால் வகுப்புரிமைக் கோட்பாட்டை இடஒதுக் கீட்டினை ஏற்கிறானா என்று பாருங்கள். அப்போது தெரியும் அவன் உண்மையான ஆரியனா, திராவிட ஆதரவாளனா என்று தெரியும் என்று கூறுவார்.
சென்னையில் நடைபெற்ற திராவிடர் நூற்றாண்டு விழாக் கூட்டத்தில் உரை யாற்றிய பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் ஆரியன் யார்? திராவிடன் யார்? என்று கண்டறிய வேறோர் அளவு கோலை எடுத்து வைத்தார். பிறப்பொக் கும் எல்லாவுயிர்க்கும் என்ற கோட் பாட்டை எவனொருவன் ஏற்கிறானோ அவன்தான் திராவிடன். பிறவியில் வேற் றுமை பாராட்டி நிற்பவன் ஆரியன் என்று.
இவ்வாறான சிந்தனைகள் 60 ஆண்டுகளுக்குப் பிறகு நம்மவர்களுக்கு அளவு கோல் வைத்திடத் தோன்றியுள் ளது. ஏன் தமிழன் என்று கூறாமல் திராவிடன் என்று கூற வேண்டியதற்கும் முன்பு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் குறிப்பிட்டார்.
தமிழ் பேசுவதாலேயே, தமிழ் நாட்டில் பிறந்ததாலேயே திராவிடன் என்று கூறுவோமேயானால் கல்கியும், கவிஞர் வாலியும் கூடத் தமிழர் என்று கூறும் இடம் உண்டு. ஆனால் திராவிடர் என்று தங்களை அவர்கள் கூறுவார்களா? திருஞான சம்பந்தர் திராவிட சிசு என்று அழைக்கப்பட்டாலும், இவர்கள் அழைத் துக் கொள்ள மாட்டார்கள்.
தந்தை பெரியார் நம்மை ஏன் பார்ப் பனர் அல்லாதார் என்று எதிர்மறையாக அழைத்துக் கொள்ள வேண்டும்?  சூத் திரர் எனும் இழி மொழியால் அழைத்துக் கொள்ள வேண்டும் என்று சிந்தித்துப் பார்ப்பனர் அல்லாதார் அனைவரும் திராவிடர் என்று வகுத்தார் என்பது வரலாறு. அதனாலேயேதான் சுயமரி யாதைத் திருமணம் எனும் பார்ப்பனர் மேற்கொள்ளாத, பார்ப்பனர் உயர்வாகக் கருதிக் கொள்கின்ற பார்ப்பனீயத் திருமண முறை ஒழித்த திருமண ஏற் பாட்டை வலியுறுத்தி லட்சக் கணக்கில் அவற்றைத் தலைமையேற்று நடத்தி வைத்தார்.
அத்திருமணங்களை ஏற்பு செய்து அண்ணாவின் ஆட்சி சுயமரி யாதைத் திருமணம் செல்லுபடியாகும் சட்டம் நிறைவேற்றியபோது அகம் மகிழ்ந்து தம் கனவு நிறைவேறியது கண்டு வாழ்நாளிலேயே கண்டு மகிழ்வுற்றார். இந்தப் பின்னணியில் அன்றே திரு.வி.க. இரண்டு பண்பாடுகளும் எதிர் எதிரானவை. ஒன்றுக் கொன்று ஒட் டாதவை என்று தெளிவுபடுத்தி இரண் டையும் வேறுபடுத்திக் காட்டும் அருமை யான விளக்கத்தை அளித்தது இன்றும் நமக்கு ஆரியப் பண்பாடு எது?  திராவிடப் பண்பாடு எது? என்று பகுத்துப் பிரித்துக் காட்டுகிறது.
                                                                                                                                                                            - விடுதலை 13.3.2012

திரு.வி.க. பார்வையில் திராவிடர், திராவிடம், திராவிட நாடு - 1

- முனைவர் பேரா. ந.க.மங்களமுருகேசன்
தந்தை பெரியார், திரு.வி.க., வ.உ.சி. ஆகிய மூவரும் தேசியத் திலகங்கள் - நம்மவர்கள் - திராவிடர்கள். இந்திய விடுதலைப் போர் வரலாறு ஆயினும், இந்தியச் சமூக சீர்திருத்த வரலாறு ஆயினும், பொதுவான இந்திய வரலாறு ஆயினும்  - அவற்றைத் தீட்டுவோர் - எடுத்து இயம்பி வரலாற்றுக்குக் கட்டியம் கூறுவோர் இவர்களை ஒதுக்கிவிட்டு, புறந்தள்ளி அல்லது புறக்கணித்து வரலாறு வரைவார்களேயாயின் - வரைந்து படித்து இருப்பார்களேயாயின் அது உண்மையான வரலாறும் அன்று - ஏன் வரலாறே அன்று.
இம்மூவரில் திரு.வி.க., தேசிய இயக் கத்திற்காகவும், தொழிலாளர் இயக்கத் துக்காகவும் மட்டும் உழைத்ததோடு அல்லாமல் தமிழ் மொழி, இன உணர்வு, பெண்மை உயர்வு போற்றியவர்.
அன்னைத் தமிழ், தீந்தமிழ், செந்தமிழ், உயர்தமிழ் என்றெல்லாம் புகழப்படும் தாய்த் தமிழைத் தமிழ் உணர்வாளர் - தமிழ் நெஞ்சத்தவர் - திரு.வி.க. தமிழ் என்று அழைக்கத் தகும் பெருமையினைத் தமிழ்க் குழவிக்கு ஊட்டி வளர்த்த தகைமையாளர்.
மேடைப்பேச்சில் எத்தனை, எத் தனையோ பேர் முத்திரை பதித்திட்டாலும் - சென்ற நூற்றாண்டின் முதல் அரைப் பகுதி திரு.வி.க. தமிழ், அண்ணாதுரை தமிழ் என்று கொஞ்சி மகிழ்ந்தது. அண்ணாவின் அழகுத் தமிழில் ஆண்மை தழைத்தது. திரு.வி.க.வின் தமிழில் தமிழ்த் தென்றல் வீசிப் பெண்மையின் எழிலோங்கியது.
அரசியல் வாணில் பண்பாளர், நயத்தக்க நனி நாகரிகர் - சாது முதலி யார் என்று அழைக்கப்பட்ட திரு.வி.க. தந்தை பெரியார் நட்பு ஆழமும், அகலமும் உடையது. தந்தை பெரியாரை எவ்வளவு சிறப்பாகப் போற்றித் தம் நெஞ்சத்துக் கொண்டு புகழ்ந்துரைத்தார் என்பதற்குத் திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் எனும் அவர்தம்  தன்வரலாறு வாழும் சான்றாகும்.
ஒரு காலை ஒன்றாக நாட்டு விடு தலைக்கு நாளும் உழைத்திட்ட பெரியார் - வைதீகத்தின் சூடு தாங்காமல் வெளி யேறியது போலவே, திரு.வி.க. எனும் பண்பாளருக்குக் காங்கிரசுப் பேரியக்கம் அதன் போக்கின் மாறுபாட்டால் கசந்தது. திரு.வி.க.வும் தந்தை பெரியாரைப் போல மாஜி காங்கிரசுக்காரர் ஆனார்.
தந்தை பெரியார் சுயமரியாதை இயக் கம் கண்டார். திரு.வி.க.வோ இயக்கம் ஏதும் காணாமல் தன் தனி இயக்கத்துடன் நின்று போனார். அவருடைய எழுதுகோல் எழுதிக் குவித்த எழுத்துச் சான்றுகள் - தமிழுக்குத் தமிழன்னைக்கு அவர் அணிவித்த அணிகலன் ஆகிவிட்டன. திரு.வி.க.வின் எழுத்தும், பேச்சும் உள் ளத்தை உருக்கி ஓடச் செய்யும் ஆற்றல் பெற்றன.
1949 இல் திராவிடர் கழகத்தில் இருந்து அண்ணா; பிரிந்து செல்வதற்கு முன் ஈரோட்டில் 19 வது திராவிடர் கழக மாநாடு நடைபெற்றது. அந்நாளில் திராவிட எதிர்ப்புணர்வைத் தூள் தூளாக்கும் அணுகுண்டுகளாகத் திரு.வி.க.வின் பேச்சுக் கந்தகத் துகள்கள் விளங்கின.
தந்தை பெரியாரின் திராவிடர் கழகம் நடத்திய 19ஆவது திராவிடர் கழக மாநாட்டில் திரு.வி.க. உட்கார்ந்து கொண்டு பேசவேண்டிய நிலைக்கு உடல் நலிவுற்று இருந்த வேளையில் திராவிட நாடு படத்தைத் திறந்து வைத்து ஆற்றிய உரை இன்றைய இளம் தலைமுறையினர் படித்துத் தெளிவும், சிந்தனை வளமும் பெறத் துணை புரிபவை. திரு.வி.க., மூத்தவரா? பெரியார் மூத்தவரா?
தலைவர் அவர்களே!  பெரியார் அவர்களே!  தோழர்களே!   தாய்மார்களே!   நேற்று பெரியார் அவர்கள் தெரிவித்தபடி அவரைவிட நான் 6 வயது மூத்தோ னாகவே காணப்படுகிறேன். எனவே உட்கார்ந்து கொண்டு பேசவேண்டிய நிலையில் இருக்கின்றேன். மேலும் இரைந்தோ, விரைந்தோ பேச முடியாமலும் சங்கிலித் தொடர்போல் எழுத்துக்களை வெளியிடுவதற்கு ஞாபக சக்தியில்லாத வனாகவும் இருக்கின்றேன். எனவே இங்கொன்றும், அங்கொன்றுமாகத் தொடர்பற்று என்னால் வெளியிடப்படும் இக்கருத்துக்களை நீங்கள் அத்தொடர்பு களைச் சேர்த்துப் படித்துத் தெளிவு பெற வேண்டுமென்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் என்கிறார் தம் சொற் பொழிவின் தொடக்கத்தில் திரு.வி.க.
திராவிட நாட்டுப் படத்தை நான் திறந்து வைக்க வேண்டுமென்ற விருப் பத்தை என்னிடத்துத் தோற்றுவித்தவர் இவ்வியக்கத் தலைவரும் எனது நெருங் கிய நண்பருமான பெரியார் ஆவார் என்று கூறுகிறார்.
திராவிடர் கழக உறுப்பினர் அல்லாத நான், திராவிட நாட்டுப் படத்தைத் திறந்து வைப்பது பொருந்துமா என்று பல தடவை யோசித்துப் பார்த்தேன். முடிவில் இந் நாட்டு மக்கள் எல்லோருமே திராவிடர் கள்தான், நானும் திராவிடன்தான். எனவே தாராளமாகத் திறந்து வைக்க லாம். அதில் ஒன்றும் தவறில்லை என்கின்ற முடிவுக்கு வந்தேன் என்று முதலில் தென்னகம் திராவிடம் என்பதை உறுதி செய்து கொள்கிறார்.
பின்னர் திராவிடர்கள் என்பதற்கு விளக்கம் கூறத் தலைப்படுகிறார் திரு.வி.க.
திராவிடர்கள் என்பதற்கு என ஆராய்ச்சியில் பல பொருள்கள் தென் பட்டன. அவற்றுள் இரண்டை மட்டும் ஈண்டு எடுத்துக் கூற ஆசைப்படுகிறேன். திராவிடர்கள் என்றால் ஓடுபவர் என்று ஒரு சார்பாரும், ஓட்டுபவர்கள் என்று மற்றொரு சாராரும் கூறுகின்றனர். வடமொழிச் சார்புடையவர்கள் முன்னைய அர்த்தத்தையும், சிவஞான முனிவர் அவர்கள் பின்னைய அர்த்தத்தையும் கூறுகிறார்கள். இவற்றுள் எதைக் கொள்வதென்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். ஓட்டுகிறவர்கள்  என்றால் மாசை, அசுத்தத்தை ஓட்டு கிறவர்கள். மனத்துக்கண் உள்ள மாசை ஓட்டுபவர்கள் என்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டும். மனத்துக்கண் மாசிலனாதல் அனைத் தறன்
என்கிற அறத்தின் வழி நடந்தவர்களே திராவிடர்கள்.
திராவிடம் எனும் சொல்லுக்கு உரிய விளக்கமும் திரு.வி.க. வாயிலாகப் பெறுகிறோம்.
                                                                                                                        - விடுதலை 12.3.2012