Thursday, December 16, 2010

ஞான சூரியன் - 19

மகாராஷ்டிர தேசத்தைச் சிவாஜிக்கு முன் துலுக்கர்கள் ஆட்சிபுரிந்து வந்தார்கள். அக்காலத்து வேத சாஸ்திரங் களைக் கற்றறிந்த அவ்வூர்ப் பண்டிதர்களுள் நாற்பதுபேர் பிராமணரல்லாதவர்கள். துலுக்க ஆட்சி சிவாஜியின் ஆட்சியாக மாறினதும், பார்ப்பனர்கள் மனுவின் சட்டத்தைக் சிவாஜிக்கு எடுத்துக்காட்டி, மேற்சொன்ன நாற்பதின்மரையும்
1. குமாரிலப்பட்டரும், திருஞான சம்பந்தரும், மாணிக்க வாசகருமென்று ஏட்டில் காணப்படுகிறது. இவர்கள் சமண புத்தர்களைப்பற்றிச் சொல்லும் கெடுதிகளைக் கேட்டால், இக்கெடுதிக்காக அப்புத்தர்களையும் சமணர்களையும் கொலை புரிந்தது பெரும் பிசகென்று சொல்லத்தகும்.
கொல்வித்தனர். இந்தத் துன்பத்தைப் பொறுக்க முடியாத அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த எழுநூறு பேர்கள் அரசனாகிய சிவாஜியிடம் போய் முறையிடவே, அந்த எழுநூறு பேர்களையும் இரக்கம் காட்டாமல் 1வெட்டியெறியச் செய்தனர்.
அன்றியும் மதுரையில் திருமலை நாயக்கர் ஆட்சி புரிந்து வருங்கால், ஸஹஸ்ர சீர்ஷா புருஷ என்ற வேத வாக்கியத்திற்குப் பொருள் தெரிவிக்கும் படி பார்ப் பனரல்லாதானொருவன் அரசனது குருவைக் கேட்கவும், இரக்க மென்பது சிறிதுமில்லாத பார்ப்பனராகிய குரு வானவர், அரசனிடம் சென்று ஒரு முகூர்த்த காலத்திற்குச் 2செங்கோலைத் தன்னிடம் ஒப்புவிக்கும்படி கேட்டுப் பெற்றுக்கொண்டு தன்னிடம் வேதத்திற்குப் பொருள் கேட்டவனை வரவழைத்து, அவனது ஆசனத்துவார வழியாக ஒரு கழுவூசியை உச்சிக்குமேல் பத்து அங்குலம் எழும்பியிருக்கும்படி ஏற்றி, இந்தச் சூத்திரப்பயல் வேதத்திற்குப் பொருள் கேட்டான். சூத்திரர்களுக்கு வேதத்தின் பொருள் இத்தன்மையேயாகும் என்று கூறியதையும், இதைப்போல் நிகழ்ந்த பற்பல கொடுமை களையும் பரம்பரையாகத் தெரிந்து வைத்திருக்கிற அந்தந்த நாட்டுக் குடிகள் இன்னும் நினைத்து வருந்துகின்றார்கள்.
இவ்விதமாகப் பார்ப்பனர்களின் கொடுஞ்செயல்களில் சிலவற்றையும் நாதர்ஷா, மகமது கஜனி, தைமூர் முதலிய துலுக்க அரசர்களின் கொடுஞ் செய்கைகளையும் ஒப் பிட்டுப் பார்த்தால், பார்ப்பனக் கொடுமையின் முன்னால், துலுக்கக் கொடுமைகள் சூரியனுக்குமுன் சிறு மின்மினி போல் தெரியுமென் பதில் சந்தேகமில்லை. சிறிது காலத்திற்குமுன் நம் நாட்டில் பிரிட்டிஷார் ஏற்படுத்திய ரவுலட் சட்டமும் இதற்கு முன் எம்மாத்திரம்? சூத்திரர் களை ஒடுக்கும் பொருட்டுப் பார்ப்பனர்கள் கையாண்டு வந்த ரவுலட் சட்டத்தை சனாதன தருமம் என்ற பெயரால் மறைத்து வைத்துத் தருணத்திற்கேற்றவாறு கையாண்டு வந்தார்கள். பிரிட்டிஷ் ஆட்சியாகிய இக்காலத்தில் உண்மை சிறிதாக வெளிப்பட்டு வரவே, தயானந்த சரஸ்வதி யென்ற பிராமணத் துறவி வெளியில் வந்து, அய்யர் முன்னோர் கள் வேதங்களினுடையவும் ஸ்மிருதி களினுடையவும் உண்மைக் கருத்துகளை 1. இத்தகைய உத்தம நீதி மனு அதருமச் சட்டத்தை நிலைநாட்ட வேண்டுமென்று பேராசையை மனத்தில வைத்துக்கொண்டல்லவா ஹோம்ரூல் வேண்டுமென்று கதறுகிறார்கள்? இச் சூதினை ஒரு சிறிதும் உணராத நம்மவர் களும் சேர்ந்து கொண்டு கூத்தாடுகி றார்களே!
2. அரசுரிமை, அதாவது அரசனது அதிகாரம்.
உணரத்தக்க ஆற்றல் படைத்தவர் களென்று. அவைகளை உணர்ந்தவன் நான் ஒருவனே என்று கூறி ஜனங்களை ஏமாற்றும்படியாகப் பொருள்களை வேதத் திற்குக் கற்பித்து ஆரிய சமாஜம் என்கிற பெயரால் பிரச்சாரம் நடத்தி வருகிறார். சகோதரர்களே! அன்னாரின் உபதேச மொழிகளைக் கேட்டு மோசம் போகவேண்டாம்.
பின்னும்,
யேனகேன சிதங்கேன
ஹிம்ஸ்யாச் சேச்ரேஷ்ட மந்த்யஜ;
சேத்தவ்யம் தத்த தேவாஸ்யதன்
மனோரனுசாஸனம்
பாணிமுத்தமய தண்டம்வா
பாணிச் சேதனமர்ஹதி;
பாதேன ப்ரஹரன் கோபத்
பாதஸ்யச் சேதமர் ஹதி.
ஸஹாஸன மபிப்ரேப்ஸு ருத்க்ரிஷ்ட்டஸ்யா
பக்ரிஷ்டஜ;
கட்யாம் க்ருதாங்கோ நிர்வாஸ்ய:
ஸ்பிசம்வாஸ்யா பகர்த்தயேத்.
அவநிஷ்டீபிதோ தர்ப்பாத்
த்வா வோஷ்டௌ கேதயேந்த்ருப;
அவமூத்ரயதோ மேட்ரமவமர்
சயதோ குதம்.
கேசேஷுக்ருஹ்ணதோ ஹஸ்தௌ
சேதயேதவிசாரயன்;
பாதயோர் தாடி காயாம்ச
க்ரீவாயாம் வ்ருஷணேஹுச
த்வக்பேதக: சதம் தண்ட்யோ
லோஹிதஸ்ய சதர்சக;
மாமஸபேத்தாது ஷண்ணிஷ்கான்
ப்ரவாஸ்யஸத் வஸதி பேதக (மனு)
பொருள்: சூத்திரன் உயர்குலத்தோனை எந்தெந்த அவயவங்களில்
துன்புறுத்துகிறானோ அவனது அந்தந்த அவயவங்களை வெட்டி எறிந்திட வேண்டும். இது மனுவின் 1கட்டளையாகும்.
- (தொடரும்)
ஆக்கம்: சுவாமி சிவானந்த சரஸ்வதி, வெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் முதல் பதிப்பு: 1927 30 ஆம் பதிப்பு : 2010
நன்றி:விடுதலை 16-12-2010

No comments:

Post a Comment