Sunday, December 5, 2010

கொள்கைக்கா- வருமானத்திற்கா?

கும்பகோணத்தில் ஆர்.சி. வெங்கட்ராமன் என்ற பெரியவர் ஒருவர் இருந்தார். தந்தை பெரியார் அபிமானி. 1928-_இல் குற்றாலத்திற்குக் குடும்பத்துடன் சென்று தங்கி இருந்தார். தந்தை பெரியார் அவர்களும் அந்தக் காலகட்டத்தில் குற்றாலம் சென்று தங்கினார். ஒரு நாள் காலை குற்றாலத்தில் மத்தாளம் பாறைபாட்டையில் தந்தை பெரியார், குடந்தை ஆர்.சி. வெங்கட்ராமன், தந்தை பெரியாரின் மாப்பிள்ளை ஆகிய மூன்று பேரும் பேசிக் கொண்டு சென்றார்கள். அப்பொழுது குடந்தை ஆர்.சி. வெங்கட்ராமன் தந்தை பெரியாரிடம் கூறினார். நமது குடிஅரசு இதழுக்கு ஒரு லட்சம் சந்தாதாரர் சேரும்வரை இராமாயண ஆராய்ச்சி போன்ற கட்டுரைகளை நிறுத்தி வைப்பது நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது என்று கூறினார். உடன் வந்த மாப்பிள்ளையும் இந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டு இதைப் பெரியார் ஏற்க மறுக்கிறார் என்றும் கூறினார். அதற்குத் தந்தை பெரியார் புன்னகையுடன் பதில் கூறினார். நான் வருமானத்தை முன்னிட்டு பத்திரிகை நடத்தவில்லை; ஒரே ஒரு சந்தாதாரர் மட்டும் இருந்தாலும் நான் எனது கொள்கையைத் தெரிவித்தே தீருவேன். இதுவரை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நம் மக்கள் அறியாமையில் மூழ்கி இருந்தது போதாதா என்று பளிச் சென்று பதிலளித்தார்.

- குடந்தை ஆர்.சி. வெங்கட்ராமன் எழுதிய கட்டுரையிலிருந்து விடுதலை 17.5.1959

சத்தியமூர்த்தி அய்யர் - எஸ். இராமநாதன் சண்டை

ஒத்துழையாமை சட்டவிரோதம் என்று கூறி, காந்தியைக் கைது செய்யச் சொன்ன 
சீனிவாச அய்யங்காரும், பஞ்சாப் அட்டுழியத்தை ஆதரித்து செங்கல்லால்
 அடித்தவர்களைக் குண்டாலடித்தார்கள் வெள்ளையர்கள் _ இதிலென்ன தவறு?
 என்று கூறிய பெசன்டு அம்மையும் டையரும், ராட்சசியும் அல்லவா? என்று 
பதிலடி கொடுத்தார் எஸ். இராமநாதன்.1923-_ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் 
தமிழ்நாடு காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது, மாநாட்டிற்குத் தலைவர்
 தந்தை பெரியார் காரிய கமிட்டிக் கூட்டத்தில் திருவாளர் சத்தியமூர்த்தி அய்யர் 
நீதிக்கட்சித் தலைவர் பி. தியாகராய செட்டியாரை டையர் என்றும். பனகல் அரசரை,
 இராட்சசன் என்றும் வருணித்தார். இதனைப் பொறுக்காமல் எஸ். இராமநாதன்
 எழுந்து பதிலடி கொடுத்தார்.

எஸ். இராமநாதன் அவர்களின் இந்த வார்த்தைகளை வாபாஸ் வாங்க வேண்டும் 
என்று பார்ப்பனர்கள் குதித்தனர்.சத்தியமூத்தி அய்யர் சொன்னதை வாபஸ் 
வாங்கினால் இராமநாதனையும் வாபஸ் வாங்கச் சொல்லுகிறேன் என்றார்
 தலைமை வகித்த பெரியார், 
அன்றிலிருந்தே பெரியார் பார்ப்பனர்களுக்கு விரோதியாகிவிட்டார்.

No comments:

Post a Comment